Monday, April 29, 2024

    Vizhiyin Mozhi

    vizhiyin mozhi – 40

    அத்தியாயம் 40 ரேஷன் கொள்ளையில் சந்திரனின் பெயர் லோக்கல் மீடியாக்களில் வெளிப்பட்டதில் உறவுகளின் முன்பு பெரிதும் அவமானமாக இருந்தது. ரைஸ்மில்லில் சந்திரனின் புலம்பலும் வேதனையும் பார்த்த செல்வாவிற்கு அன்புவின் மேல் கோபம் வந்தது. அதிலும் அன்பு கயலை விரும்புவதாகவும், தன் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பான் என்றும் சந்திரன் பெரிதும் பயந்தான். சந்திரனுக்குக் கயலை திருமணம் செய்தாக வேண்டும் என்று...

    vizhiyin mozhi – 39

    அத்தியாயம் 39  கயல், ஜெயந்தி, பூங்கோதை என தோழிகள் மூவரும் கல்லூரி முதல் வருடம் சென்று கொண்டிருந்தனர். கயல் தாவரவியலும்,ஜெயந்தி கணினி அறிவியலும், பூங்கோதை ஆங்கில இலக்கியம் என ஒரே கல்லூரியில் மூன்றுபேரும் வெவ்வேறு பாட பகுதியைத் தேர்வு செய்திருந்தனர்.  ஜெயந்தியைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும், அழைத்து வருவதும் செல்வா தான் உரிமையோடு செய்வான். சில சமயங்களில்...

    vizhiyin mozhi – 38

    அத்தியாயம் 38  சற்று நேரத்திலே கோவிலில் எங்கும் சலசலப்பும், பேச்சுக் குரலிலும் மட்டுமே கேட்க, மேள வாத்தியங்களின் இன்னிசை நின்று விட்டது. முதலில் இராஜமணிக்கத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது பேசவும் இயலாது நின்றனர்.  இராஜமணிகத்தின் மச்சான், "ஏய் யாருடி நீ? எந்த ஊருக்காரி? நீ வந்து என் மாமா மேல பலி சொன்னா நம்பிடுவோமா? உன்னையெல்லாம் சும்மா விடலாமா?" என்றவாறு ஸ்வேதாவின் மீது கையோங்கினான். சட்டென ஓங்கிய அவன் கையை...

    vizhiyin mozhi – 37

    அத்தியாயம் 37 அன்றைய விடியலில் வெகு சீக்கிரமே மேல் எழுந்து விட்ட ஆதவன் என்றுமில்லா பிரகாஷத்தில் ஒளிர்ந்தான். வானிலையில் கூட அத்தனை மாற்றம் விடியலில் கூடல் மறந்து ஜோடி பறவைகள் கூட இரை தேடி பிரிந்தோடின!. விரைந்து வந்தது அந்த விடியல். பூங்கோதை,  சந்திரன்,  செல்வா,  ஸ்வேதா என அனைவரும் வெவ்வேறு எதிர்பார்ப்பின் எண்ணங்களோடு எழுந்தனர். ஆனால் அவர்கள் யாரும் அறிந்திருக்க...

    vizhiyin mozhi – 36

    அத்தியாயம் 36 கயல் இன்னும் அந்த அதிர்விலிருந்து வெளிவரவில்லை. உடல் சோர்ந்து விட, மீண்டும் தலை சுற்றலாகத் தோன்றியது. அன்புவின் தோளில் தலை சாய்த்து விழி மூடியிருந்தவள், "மாமா பாப்பாவுக்கு எதுவும் ஆகாது தானே?" என மென்குரலில் கேட்டாள். மீண்டும் மீண்டும் அதே கேள்வி தான் அவளிடமிருந்து, அப்போது தான் அவனும் உணர்ந்தான். மருத்துவமனைக்குக் கிளம்பும்...

    vizhiyin mozhi – 35

    அத்தியாயம் 35 ஜெயச்சந்திரன் உள்ளே வர, அவனை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள் ஸ்வேதா. அதைக் கவனிக்காதவன், “மாட்டை கட்டிட்டேன் நீ போலாம்” என்றான்.  அவ்வளவு தான் அதீத கோபத்தில் எழுந்து நின்றவள் கீழே இருந்த செம்பை தூக்கி எறிந்தாள். சற்று சுதாரித்தவன் சரியான நேரம் விலகிக் கொள்ள செம்பு கீழே விழுந்து உருண்டது.  “அடியே செம்புல இருந்த கள்ளேங்க,...

    vizhiyin mozhi – 34

    அத்தியாயம் 34 இருவீட்டிலும் திருமண ஏற்பாடுகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதிலும் இராஜமாணிக்கம் தன் ஒற்றை மகளின் திருமணத்தை ஊர் பிரமிக்கச் செய்து கண்குளிர காணும் ஆசையிலிருந்தார்.  திருமணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள் இருக்கும் நிலையில், உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, ஊரில் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கியிருந்தனர்.  இரவு பால் கிளாஸ் எடுத்துக் கொண்டு...

    vizhiyin mozhi – 33

    அத்தியாயம் 33 கோவிலுக்குள் நுழைந்ததும் கயல் உள்ளே பூஜைக்கும் ஸ்வேதாவை அழைக்க, "நீ போ கயல், நான் வந்ததே சுத்தி பார்க்கத் தான். பூஜைக்கு வரல" என்றாள். "இல்ல கோவிலுக்கு வந்துட்டு எப்படி சாமி கூம்பிடாம..." என்னும் போதே,"சாமி தானே, இங்க இருக்குற சாமியை கூப்பிடுறேன்" எனச் சுற்று மண்டபத்தில் இருக்கும் சன்னிதியைக் குறிப்பிட்டுக் கூறினாள்...

    vizhiyin mozhi – 32

    அத்தியாயம் 32 வர தாமதமாகும் என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே சொல்லிவிடுவான். அவசர வேலை என்றால் தகவலாவது சொல்லி விடுவான். ஸ்வேதாவும் எதுவும் சொல்லவில்லை, என்றும் இப்படி நடந்து கொண்டதுமில்லை. விடிவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. சிவகாமி பூஜை அறைக்குள் வேண்டுதலில் அமர்ந்து விட்டார். கயல் வெளிவாசல் திண்ணையில் இரும்புக்கேட்டை...

    vizhiyin mozhi – 31

    அத்தியாயம் 31 ஸ்வேதா சந்திரனுடன் வந்து இறங்கியதையும், பேசிச் செல்வதையும் தெருவிற்குள் நுழையும் போதே இராஜமாணிக்கம் பார்த்தார் ஆனால் எதையும் வெளிக்காட்டவில்லை. பெரியவர்களிடம் பேசியவர் அழைப்பிதழில் யார் யார் பெயர்கள் அச்சிடவேண்டும் எனக் கேட்டு விட்டு, சந்திரனிடமும் பேசி விட்டுச் சென்றார்.  சந்திரனுக்கு வந்த அழைப்புகளை அவன் ஏற்காததால் அடுத்ததாக அனைவரும் செல்வாவை தான் அழைத்திருந்தனர். அவர் செல்லும்...

    vizhiyin mozhi – 30

    அத்தியாயம் 30 மழைச் சாரலில் மரக்கிளையின் மறைவில் இரு காதல் கிளிகள் அலகால் ஒன்றோடு ஒன்று கொத்தி முத்தமிட்டுக் கொண்டு தன்னை மறந்த மயக்கத்திலிருந்தன. அடுத்த காட்சியாக, இருள் சூழ்ந்த அறைக்குள் மெல்லிய தீரைச் சீலைகளை ஊடுருவி வெளிச்சம் சிறிது பரவ, உச்ச கோபத்தில் கண்களை மூடி நின்றிருந்தாள் ஸ்வேதா கோபம் தான் எனினும் கண்களிலிருந்து கண்ணீரும்...

    vizhiyin mozhi – 29

    அத்தியாயம் 29 காலை உணவிற்குப் பின் வாசல் வரை வந்த அன்பு மீண்டும் கயலைக் காண அடுப்பறைக்குள் சென்றான். ஏதோ வேலையாக இருந்தவளை திடீரென பின்னிருந்து அணைத்தவன், "செல்லாம்மா உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். என் ஃப்ரண்ட் ஸ்வேதா வர, கொஞ்ச நாள் இங்க தான் இருப்பா. கீழ் ரூம்மை ரெடி பண்ணி வைக்க சொல்லும்மா"...

    vizhiyin mozhi – 28

    அத்தியாயம் 28  கயலின் பெற்றோர்களால் மகளின் ஆசையை நிராகரிக்க வாய்ப்பின்றி போனது. கயல் அன்புவை காதலன் என்றில்லாது கணவன் என்று கூறி அனைவரின் முன்னிலையில் தாலியையும் காட்டிய பின் அவர்களாலும் தான் என்ன செய்ய இயலும்.  அன்புவிற்கும் சந்திரனுக்கும் பெரிதாக வித்தியாசம் என்பதில்லை. சந்திரன் சற்று நெருங்கிய சொந்தம் அவ்வளவே, இதில் அன்பு குடும்பத்தாருடன் தனிப்பட்ட பகை...

    vizhiyin mozhi – 27

    அத்தியாயம் 27 காலையில் விழித்த பின் தன் இடையை அழுத்திக் கிடந்த அன்புவின் கரத்திலிருந்து அவன் உறக்கம் கலையாமல் மெல்ல விலகி எழுந்தாள். உடலெல்லாம் அழுத்தி, அசதியில் கணமாய் தெரிந்தது. இதமான சூட்டில் வெந்நீரில் குளித்ததில் சற்று அசதி நீங்கியது போலிருந்தது. பூஜை அறைக்குள் சென்று விளக்கேற்றி வணங்கி குங்குமம் இட்டுக்கொண்டாள். மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது....

    vizhiyin mozhi – 26

    அத்தியாயம் 26 ஏனோ சரியாக தூக்கமில்லாமல் அதிகாலையிலே விழித்துக் கொண்டான் சந்திரன். எழுந்து கைகளை முறுக்கி சோம்பல் முறித்தவாறு கீழே பார்க்க, எதிர்வீட்டில் கேட்டிற்கு வெளியே தலையில் கட்டிய டவலோடு குனிந்து ஒரு பெண் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். முகம் பார்க்காமலே அது கயல் தான் என்பதை உணர்ந்து கொண்டான். அன்புவின் வீட்டில் அவன் மனைவி கோலமிடுகிறாள். பலமுறை அன்புவுடன்...

    vizhiyin mozhi – 25

    அத்தியாயம் 25  பஞ்சாயத்திலிருந்து கிளம்பியதும் கல்யாணம் நின்றதில் துக்கம் போல் சில உறவுகள் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பினர்.  மேலும் சிலர், "உடனே பண்ணனும்னு அவசரப்படா இப்படி தான் ஆகும். எதுவும் பொருத்தம் பார்த்து முடிவு பண்ண வேண்டாமா? அதுவும் அந்த புள்ளைக்கு விரும்பமில்லாம, கட்டிட்டாயப்படுத்தியா பண்ணுறது?" என்பது போல் பேசிச் சென்றனர்.  சந்திரன் வீட்டில் யாரும் பதில் சொல்லும்...

    vizhiyin mozhi – 24

    அத்தியாயம் 24 அன்று கயல் தன் காதலைச் சொல்லிய பிறகு அதீத சந்தோஷத்தில் சுற்றினான் அன்பு. அவன் கல்லூரியிலும் வெளியிலும் சுற்றும் காதலர்களை பார்க்கும் போதெல்லாம் கயலின் ஞாபகம் தான்.  இதில் அவன் ரூம்மெட் மனோஜ் வேறு மொபைலில் இரவெல்லாம் அவன் காதலியோடு ஓயாது பேசிக்கொண்டே இருந்தான். காதல் தரும் சந்தோஷத்தை கயலோடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையும்,...

    vizhiyin mozhi – 23

    அத்தியாயம் 23 சந்திரனின் ஆட்கள் கயலைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை என்றும் அன்பு ஊருக்கே இன்னும் வரவில்லை என்றும் தகவல் தர, கயல் எங்குச் சென்றால் எனச் சந்திரனுக்குக் குழப்பமாக இருந்தது.  நண்பகல் நெருங்கி இருக்க, தென்னந்தோப்பில் வந்து அமர்ந்திருந்தான் சந்திரன். வேல்முருகனையும் இன்னும் சந்திக்கவில்லை யாரேனும் கேள்வி கேட்டால் கூட தன்னிடம் பதிலில்லையே என்றெண்ணி...

    vizhiyin mozhi – 22

    அத்தியாயம் 22 இருளில் படிகளிலிருந்து கீழே இறங்கி தரையில் கால் வைக்க, எத்திசைலிருந்தோ எறிந்த மலர்க்கொத்தைப் போல் அவன் மேல் வந்து விழுந்தாள் கயல்.  தன் நெஞ்சோடு புதைந்து கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தவளின் பின்னத் தலையை வருடியவன் பதட்டமுடன், "செல்லம்மா என்னாச்சு?" என்றான்.  மறுநொடி அவனிடமிருந்து விலகியவள் வலதுகையால் அவன் வாயை மூடி, இடது கை விரலை தன்...

    vizhiyin mozhi – 21

    அத்தியாயம் 21  மாலை செல்வா தன் வீட்டிலிருந்து வெளியை வர, அவன் அன்னை லட்சுமி பக்கத்து வீட்டுப் பேச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். அன்புவிற்கும் சிவகாமிக்கும் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி லட்சுமியிடம் கூறுவது செல்வாவின் காதில் விழுந்தது. அதில் அன்பு ஊரிலிருந்து வந்தது விட்டான் என்பதையும் தற்போது தோப்பு வீட்டில் தனியாக உள்ளான் என்பதையும் அறிந்து கொண்டான். யாருமில்லா தோப்பிற்குள் வந்தவன்...
    error: Content is protected !!