Thursday, May 16, 2024

    Vizhiyin Mozhi

    vizhiyin mozhi – 20

    அத்தியாயம் 20 டிஸ்டிக் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே யாரையெல்லாம் தங்களின் செல்வாக்கால் வளைக்க முடியுமோ அவர்களையெல்லாம் வளைத்து தங்களுக்குச் சாதகமாக வைத்திருந்தனர் மேலும் அன்பு இல்லாதது அவர்கள் பக்கம் வலு சேர்த்தது.   டிரவல்ஸ் ரிஜெஸ்டரில் இருந்து தங்கராசுவின் புக்கிங் பதிவுகளை வழக்கறிஞர் கூறியபடி கவனமாக நீக்கினர். நீக்கவில்லை எனில் தங்கராசுவும் சந்திரனும் திருட்டில்...

    vizhiyin mozhi – 19

    அத்தியாயம் 19 அதிகாலையிலே துயிலேந்த ஆதவன் கண் கூசும் படியான பிரகாச ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். அவன் வேகத்திற்கு அசைந்து கொடுத்து பறவைகளும், காகமும் கரைந்தவாறு புதிய விடியலில் புத்துணர்வோடு தங்களின் பணிகளைத் தொடங்கியிருந்தன.  ஆதவன் வெளிச்சத்தோடு சிறு உஷ்ணத்தையும் கலந்து பரப்பிக் கொண்டிருக்க, அதிலும் அசராது உறங்கிக் கொண்டிருந்தான் சந்திரன்.  நள்ளிரவிற்குப் பின் உறங்கினாலும் அதிகாலையில் எழுந்துவிட்ட...

    vizhiyin mozhi – 18

    அத்தியாயம் 18  ஊர் நடுவே அமைந்திருந்த முத்துமாரியம்மன் கோவில், ஒற்றைக்கல் சிறுகோபுரமும், இருவாசல் சுற்றுச்சுவரும் கொண்ட சிறுகோவில். கோவில் முழுவதும் வர்ணம் பூசி,கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியே பந்தல் அமைக்கப்பட்டு, வாழைமரம் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைநிகழ்ச்சிக்கான மேடைகள் ஒருபுறம் அமைந்திருக்க, மைக் செட், ரேடியோக்களில் அம்மன் பாடல்கள் அதிரும் படி ஒலிபரப்பினர். கோவில்...

    vizhiyin mozhi – 17

    அத்தியாயம் 17 அன்றிரவு மாப்பிள்ளை வீட்டு உறவுப்பெண்களும் பூங்கோதையும் ஜெயந்தியை அலங்கரித்துக் கொண்டிருக்க, "பூவு! கயலு எங்கடி?" என்க, "எங்கூட தான் சாப்பிட்டா, தலைவலிக்குனு சொல்லி படுத்துட்டான்னு அத்தை சொன்னாங்க ஜெயந்தி" என்றாள். "அவ முகமே சரியில்ல பூவு, எனக்கென்னவோ இந்த கல்யாணத்துல அவளுக்கு விருப்ப..ம்..மி.." என்னும் போதே லேசாக அவளைக் கிள்ளிய பூவு, உறவுப்...

    vizhiyin mozhi – 16

    அத்தியாயம் 16 என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? சிறுவயதில் விளையாட்டாகப் பேசுகிறான் என்றெண்ணிக் கண்டுகொள்ளாமல் இருந்தேன் ஆனால் இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவன் மாறவில்லை.   அன்று கடையில் கயலைப் பார்த்தான். பின் பள்ளியில் அன்றிரவு அவளிடம் வம்பு பண்ணினான். அதன் பின் சிறுவனிடம் காதல் கடிதம் கொடுத்தனுப்பினான். இன்று கல்யாண வீட்டில் அனைவரும் இருக்கக் கயலை...

    vizhiyin mozhi – 15

    அத்தியாயம் 15 ஜெயந்தியின் திருமண ஏற்பாடுகள் வெகுவிமர்சையா நடைபெற்றது. அந்த ஊரிலே அதுவரை அப்படியொரு திருமணம் நடந்ததேயில்லை என்னும் அளவிற்கு ஏற்பாடுகள் இருந்தது. அவர்கள் வீடு மற்றும் கோவில்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஊரே ஜொலித்தது. கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. மேடை முழுவதும் மலர்களால் அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தனர். மைக்...

    vizhiyin mozhi – 14

    அத்தியாயம் 14 விடுமுறை நாள் என்பதால் மாலை பக்கத்து வீட்டுச் சிறுவன் குமாருடன் தங்கள் தோப்பிற்குச் சென்ற கயல், சிறிது நேரம் சுற்றி விட்டு பின் வீட்டிற்குக் கிளம்பினர். நெடும் உயரமாக, நெருக்கமாக வளர்ந்திருந்த மாமரத்தின் அருகே வர, "ஏய் கயலக்கா நில்லு, மாங்கா பறிச்சுட்டுப் போவும்" என்றான் குமார். "வேண்டாலே. இருட்டிருச்சு, வீட்டுக்குப் போவோம். நேரம்மாச்சுனா எங்க...

    vizhiyin mozhi – 13

    அத்தியாயம் 13 ஊர் பெரியவர்கள் அனைவரும் திருவிழா பற்றிய முடிவெடுப்பதற்காக ஒன்று கூடியிருந்தனர்.   விஜயராகவன் திருமண அழைப்பிதல் வழங்குதல், உறவுகளை அழைத்தல் என ஜெயந்தியின் திருமண ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஆகையால் அவர்களின் குடும்பத்திலிருந்து சங்கரலிங்கம் கிளம்பினார்.  அப்போது தான் வந்த செல்வாவைப் பார்த்தவர், "செல்வா, நான் ஊர்க்கூட்டத்துக்கு கிளம்புறேன். நீயும் சந்திரனை கூட்டிட்டு வந்திடு" என்றார்.  "சரிங்க...

    vizhiyin mozhi – 12

    அத்தியாயம் 12 கயல் கூறியதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், அவள் கேட்டு அவனால் செய்யாமல் இருக்க முடியவில்லை. எனவே இராஜமாணிக்கத்தைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றான்.  உள்ளே செல்லவே, அப்போது தான் தன் அறையிலிருந்து வெளியே வந்த பூங்கோதை, "வாங்க..." ஒற்றைச் சொல்லில் வரவேற்று சமையலறைக்குள் சென்று கொண்டாள். ‘அதிகம் பேசியதில்லை எனினும் சிறு வயதில் அன்பு மாமா என்றுதானே அழைப்பாள்?...

    vizhiyin mozhi – 11

      அத்தியாயம் 11 இரவு தோப்பு வீட்டில் தனிமையில் உறக்கமின்றி உழன்று கொண்டிருந்தான் அன்பு. மழை நின்றிருக்க, மெல்லிய சாரலாய் காற்றில் கலந்து தூவிக்கொண்டிருந்தது. நடுக்கூடத்தில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவனுக்குள் ஆயிரம் சிந்தனையெல்லாம் இல்லை. கயலைப் பற்றிய ஒரு சிந்தனை தான். அவளை அணைத்தபோது பற்றிய தீ இன்னும் உள்ளே எரிவது போன்றிருந்தது. அவள் வாசம், அணைப்பு, முத்தம், இன்னும் இன்னும் வேண்டுமென்று மனம் ஏங்கியது. ஆனால்...

    vizhiyin mozhi – 10

    அத்தியாயம் 10 சந்திரனுக்கும் அன்புவிற்கும் வயதில் வித்தியாசம் நான்கு மாதங்கள், உயரத்தில் வித்தியாசம் நான்கு சென்டி மீட்டர், உருவத்தில் வித்தியாசம் சிறிதளவு நிற வேறுபாடு மட்டுமே.  அண்ணன் தம்பி என்று சொல்லுமளவிற்கு உருவ ஒற்றுமை உண்டு. உடை தான் இருவரையும் வித்தியாசப் படுத்தியது.  குணத்திலும் இருவரும் ஒற்றுமை கொண்டவர்கள் தான். இருவருக்கும் அவர்கள் அன்னைக்குத்தான் முதலிடம் அளிப்பார்கள். பிறருக்கு...

    vizhiyin mozhi – 9

    அத்தியாயம் 09 விடுமுறை நாளில், வயலில் வேலை செய்யும் தந்தைக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு துப்பட்டாவைக் கைகளில் சுற்றியவாறு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள் கயல். வாழைத் தோப்பிலிருந்து வெளியே வந்து சாலையிலிருந்த புல்லட்டின் அருகே செல்ல, கயல் வருவதைக் கவனித்தான் அன்பு. சட்டெனத் தோப்புக்குள் சென்று மறைந்து நின்று கொண்டான். அவள் அருகே வரவே, சட்டென...

    vizhiyin mozhi – 8

    அத்தியாயம் 08 ஜெயந்தியுடன் பேச வேண்டும், விளையாட வேண்டும் என்று ஆசை கொண்ட அன்பு, மாலை அவள் வகுப்பு முடிந்து வெளியே வரும் போதே எதிர் சென்று நின்றான்.   "ஜெயந்தி.." என அழைத்தவாறு அவள் முன்பு ஒரு சாக்லெட்டை நீட்ட, நிமிர்ந்து அவன் புன்னகை முகம் பார்த்தாள். அவள் தயக்கம் அறிந்தவன், "நானும் உனக்கு அண்ணன் தான்,...

    vizhiyin mozhi – 7

    அத்தியாயம் 07 எப்போதும் போல் தன் வேலைகளை முடித்தவள், குளித்து ஒரு இளம் பச்சை வண்ணச் சுடிதாரை அணிந்தாள். நீளமான முடியைப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தைச் சூடி, கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து விட்டு, ஒருபுறம் மல்லிகைச் சரத்தை முன்புறத் தோளில் சரிய விட்டுக் கொண்டு கிளம்பினாள். அவன் வெளியே கிளம்பி விடுவானோ என்ற எண்ணத்தில் அன்னையையும்...

    vizhiyin mozhi – 6

    அத்தியாயம் 06 அந்தக் குரலின் அழைப்பிலே கயலின் உடல் பதறியது. நடுக்கத்துடன் திரும்ப, சாலையில் ஜெயச்சந்திரன் புல்லட்டில் உறுமியவாறு அமர்ந்திருந்தான். வேகமாக நடந்தவள் சாலையில் ஏறி அவன் அருகே சென்று தலை குனிந்தவாறு நின்றாள்.  அவள் அருகில் வர, அவன் கோபப் பார்வையின் அனல் வீச்சு மேலும் கூடியது. "இங்கன உனக்கு என்ன வேல? வேண்டாதவங்க இடத்துல ஆகாத...

    vizhiyin mozhi – 5

    அத்தியாயம் 05  ஆதிநாராயணனும் (அன்புவின் தாத்தா), சங்கரலிங்கமும் (சந்திரனின் தாத்தா) உடன் பிறப்புகள். சிறுவயதில் இருவரும் அண்ணன் தம்பியெனப் பாசமுடன் வளர்ந்தனர். இருவருக்கும் இரு வயது மட்டுமே வித்தியாசம்.   ஆதிநாராயணனுக்கும் சிவகாமிக்கும் முதலில் திருமணமாக, மறு வருடம் சங்கரலிங்கத்திற்கும் ருக்மணிக்கும் திருமணமானது. முதலில் சில வருடங்களுக்கு சிவகாமி, ருக்மணி உறவு நல்ல முறையில் இருக்க, அதன்...

    vizhiyin mozhi – 4

    அத்தியாயம் 04 மருத்துவ மனைக்குள் சென்றதும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றான். அவனுக்கு முன்பே வந்திருந்த சிவகாமி அழுதவாறு அமர்ந்திருந்தார். அவர்கள் அருகே சென்றவன், அங்கிருந்த உறவுகளிடம் தந்தையின் நலம் விசாரிக்க, இருக்கும் சில நிமிடங்கள் அவரின் இறுதி நிமிடங்கள் என உணர்த்தப்பட்டது. மருத்துவர்களும் எந்தவிதப் பொய்யான நம்பிக்கையும் அளிக்கவில்லை. இறுதியாக அவனைப் பார்க்க அனுமதிக்க, உள்ளே...

    vizhiyin mozhi – 3

    அத்தியாயம் 03 நண்பகலாகிய பின்னும் இன்னும் பேப்பரிலிருந்து கவனத்தைத் திருப்பாது அமர்ந்திருந்த சங்கரலிங்கத்தின் அருகே வந்த ருக்மணி, உணவுண்ண அழைத்தார். "இருக்கட்டும் ராகவன் (சந்திரனின் தந்தை) வரட்டும் சேர்ந்து சாப்பிடுறோம்" என்றார்.  லேசாக முறைத்தவர், "இது என்ன புதுசா? அவன் வரவரைக்கும் எதுக்குக் காத்திருக்கீங்க?"என்க,"இன்னைக்கு ஒரு டெண்டர் விஷயமா சந்திரன் போயிருக்கான். அதான் நமக்குக் கிடைச்சதா இல்ல, எதிர்...

    vizhiyin mozhi – 2

    அத்தியாயம் 02 "ம்ம்.. கிளப்பிட்டோம்.. கிளப்பிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" என மொபைலில் கணீர் குரலில் பேசியவாறு வேக நடையோடு படிகளில் இறங்கி வந்தான் ஜெயச்சந்திரன். உணவுண்ண அமர்ந்தவன் மெல்லிய சிரிப்பொலி கேட்கத் திருப்பி பார்த்தான். அவன் தங்கை ஜெயந்தி மொபைலில் தன் வருங்கால கணவரோடு மெல்லிய வெட்க புன்னகை மின்ன பேசிக்கொண்டு இருந்தாள். அவன்...

    vizhiyin mozhi – 1

    விழியின் மொழி - மித்ரா அத்தியாயம் 01 கண்ணெதிரே கருமை எங்கும் சூழ்ந்திருக்க உருவமறியா உயிரை உருக்கும் குரல் ஒன்று "செல்லம்மா.. செல்லம்மா.. செல்லம்மா..." என  எங்கோ தொலைவில் கேட்டது. அதன் முகம் பார்க்க வேண்டும், முயன்றும் முடியவில்லை. மை இருளுக்கும் உருவம் தர இயலாத கருமை சிறு வெளிச்சமுமின்றி. ஆனால் செல்லம்மா என்ற அழைப்பு...
    error: Content is protected !!