Nee En Senthoora
மலர் 16
தன்னுடைய அறைக்குள் சென்று அலமாரியை திறந்தவள் ஜிம்முக்கு ஏதுவான உடைகள் இருக்கின்றதா என கண்களை ஓடவிட்டவள் கறுப்பு நிற லெகீன்சையும், கட்டையாக இருந்த சாக்லேட் நிற ரொப் ஒன்றையும் எடுத்து வைத்து வைத்து விட்டு தூங்குவதற்கு சென்றாள்.
அதிகாலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கவும் அதனை நிறுத்திவிட்டு ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றவளை பத்து நிமிடம்...
மலர் 15
போட்டோவை எடுத்து விட்டு தனது செல்ஃபோனை அங்கிருந்த கல்பெஞ்சில் வைத்தவன், மார்புக்கு குறுக்காக கையை கட்டியவாறு அவளை மேலும், கீழும் அளவெடுப்பதனைப்போல பார்த்துக்கொண்டிருந்தான்.
'இவன் எதுக்கு இப்படி சீன் போடுறான்.' என்றவாறு தன்னை குனிந்து பார்த்தவள் 'கடவுளே' என்றவாறு ஓடிப்போய் அங்கிருந்த கட்டைச்சுவரின் பின் குத்துக்காலிட்டு அமர்ந்தவள், இவன்கூட சண்டை போடுவதில் அவளது கட்டை...
மலர் 14
ஆமாம்… நித்தி… அவன் என் பையன் தானே… அப்போ… அவன் என்னை மாதிரி தான் இருப்பான். பெண்டாட்டி ஒரு தோப்புகரணம் போடச்சொன்னால் இவன் போனசாக பத்து போடுவான்.
அவள் மறுபேச்சு பேசாமல் "சரி மாமா… அத்தை… நான் கிளம்பட்டுமா… ?" என்று கூறியபடி தான் பொருட்கள் கண்டு வந்த பெரிய பையை எடுத்தாள்.
"சரி… பட்டுக்குட்டி...
மலர் 13
அன்றோடு அவன் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து ஒருவாரமாயிற்று. ரெஸ்ட் எடுத்தே அவனுக்கு அலுத்து விட்டது. அதுமட்டுமல்லாது அவனுடைய அம்மா அவன் அடிபட்டிருப்பதை காரணங்காட்டியே" என் பையன் உடம்பில் இருந்து எவ்வளவு இரத்தம் போயிருக்கு…" அதனால பத்தியச்சாப்பாடு தான் தரனும் என்று இதுவரை அவன் சாப்பிடாத உணவை எல்லாம் செய்து அவனுக்கு கொடுப்பதனாலேயே… அவனுக்கு...
மலர் 12
நித்யாவின் சத்தத்தை காணவில்லையே… என கெளதம் திரும்பி பார்க்கவும் செந்தூரும் திரும்பி பார்த்தான்.
பார்த்த இருவருக்கும் அவள் கட்டிலில் சுருண்டு படுத்திருப்பதை பார்த்து ஒருங்கே புன்னகை தோன்றியது.
"உன் மாமன் பொண்ணு 'திட்டி திட்டி'யே களைத்து போயிட்டா போல அதான் தூங்குறாடா… ! நான் வெளியே போய் ரீ வாங்கிக்கொண்டு வருகின்றேன்.அப்புறம் அவளை எழுப்பி தொலைச்சிடாத...
மலர் 11
கோபத்துடன் வெளியே வந்தவள் மாமனை கண்டு இன்னும் முறைத்தபடி 'விறுவிறு' என வெளியேறினாள்.
நித்யா வெளியே போவதை பார்த்த சுப்பிரமணியன் 'இவ எதுக்கு இவ்வளவு கோபத்துடன் போறா…' என யோசித்தவாறு உள்ளே சென்றார்.
அங்கே மகனது கோலத்தை கண்டு சிரிப்புத்தான் வந்தது.
"என்ன...? நடந்தது...? நித்தி ஏன்…? கோபமாக போறா…"
"எனக்கும் தெரியாது உனக்கு விபரம் ஏதும் தெரிய...
மலர் 10
மருமகள் சைகை காட்டவும் அமைதியானவர். மகனை பார்த்து விட்டு, "குடித்து விட்டு எங்கே கொண்டு போய் இடித்தானாம்." என வினவினார்.
"இல்ல… மாமா குடிக்க எல்லாம் இல்லை. சொல்லப்போனால் குறுக்காக விட்ட வண்டியை இடிக்காமல் இருக்க இவர் ஸ்பீடா ஓடிவந்த தன் காரை சட்டென்று சடென்ப்ரேக் போட்டதனால் தான் இந்த விபத்து நடந்தது." என்றாள்.
இதெல்லாம்...
மலர் 09
விழுந்தவள் எழ முடியாது அப்படியே இருக்கவும், உள்ளே சென்று கிளம்பி வந்தவன் முகம் சொல்ல முடியாத உணர்வில் இறுகி கிடந்தது.
என்னடி...நினைத்தாய் என்னைப்பற்றி உனக்கு செலவு பண்ணவும்,உடம்புக்கு சுகத்தை தரவும் ஒரு இளித்தவாயனை பார்த்து கைக்குள் போட்டுக்கொள்ளலாம் என்றா…" என கர்ஜித்தவன்,அவளைப் பார்த்து தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அவளது முகத்தில் விசிறியடித்தான்....
மலர் 08
"ஹலோ மேடம் அவங்க மூன்று பேரும் என் பிரண்ட்ஸ். நீ வந்தவுடன் அவங்க உனக்கு பிரண்ட்ஸ் ஆகணுமா…? ஊர் உலகத்தில் வேற ஆட்களே இல்லை பாரு… உனக்கு பிரண்ட்ஸ் வேணும் என்றால் றோட்ல எத்தனை பேர் திரியுறானுகள் அவங்கள்ள இரண்டு,மூன்று பேரை ப்ரண்ட்ஸ் ஆக்கி தொலைக்க வேண்டியது தானே. எதுக்கு என் ப்ரண்ட்ஸ்சை...
மலர் 07
இவள் சுப்பிரமணியை உலுப்பவும், "என்ன குட்டிம்மா...ஏன்? கார்டிக்கியை திறக்க சொல்கிறாய்."
"என் பூசணி அதற்குள் தான் இருக்கிறது.மூச்சு முட்டி சாகப்போகுது அங்கிள் சீக்கிரம் வாங்கோ." என பதறினாள்.
"அட...ராமா… சீக்கிரமாய் வா குட்டிம்மா. நான் அதை மறந்து விட்டேன்." என்று கூறியபடி இருவரும் கார் அருகினில் சென்று பின்பக்கமாக இருந்த பூசணியை வெளியிலெடுக்கவும் அது இவ்வளவு...
மலர் 06
எல்லாப்பொருட்களையும் வாகனத்தில் ஏற்றி அனுப்பி விட்டு, சுப்ரமணியன் காரில் இருவரும் ஏறினர்.
முக்கால் மணி நேரத்தில் அவர்கள் வரவேண்டிய இடத்திற்கு கார் வந்து கேட்டின் உள்ளே சென்றது.
காருக்குள் இருந்து இறங்கிய நித்யா அந்த இடத்தை வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஏனெனில் அந்த மாடிவீடு இவர்கள் இருந்த வீட்டை காட்டிலும் அழகாக, அம்சமாக,நவீனவசதிகளுடனனும், முன் பக்கம் முழுவதும்...
மலர் 05
அவள் அழுவதையே பார்த்திருந்த சுப்பிரமணி "பார்த்தாயா மார்க்கண்டு உன் பொண்ணு உன்னையே உலகம் என்று இருக்கின்றாள். அவள் இப்படியே இருந்தால் அவள் எதிர்காலம் என்னவாகும் என்று நினைத்தாயா? இப்போது பெண்கள் தம் வீடுகளை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக நடமாடுகிறார்கள். புதிய சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறார்கள். நீ என்னடா என்றால் அவளை எதற்கெடுத்தாலும்...
மலர் 04
அவளது எக்ஸாம் எல்லாம் இன்றோடு முடிந்து விட்டது. ஆனால் இன்று நடந்த அதிர்ச்சி சம்பவமே அவளின் உடல், மனம் இரண்டையும் அலக்கழிக்கச்செய்வதாய் இருந்தது.
வீட்டுக்குள் நுழைய போனவள், அவள் வீட்டு வாசலில் நின்ற அந்த ஆவுடி கார்,அவளது வேகத்தை குறைத்து நிதானித்திருந்தது.
'இவ்வளவு பெரிய கார் நம்ம வீட்டுக்கு முன்னாடி நிற்கிறதே…! யாருடையதாக இருக்கும்.ஒருவேளை யாரும்...
மலர் 03
அவள் ஓடிய திசையை பார்த்து தோளை குலுக்கியவன் தன் காரை பின்பக்கமாக திரும்புவதற்காக முனையும் முன்னர் அவளிருந்த சீற்றை திரும்பி பார்க்க, சீற் இடுக்கினுள் செயின் போல ஏதோ ஒன்று மின்னவும் தன் சீற்றை பின்பக்கமாக வளைத்து அதை எட்டி எடுத்தான்.
அவன் கையினுள் இருந்த தங்க சங்கிலியை சுழற்றி பார்த்தவன், அப்படியே சரிந்து...
மலர் 2
அன்று காலேஜ் முடிந்து அவள் வீட்டுக்கு வரும் போதே சோர்ந்து போயிருந்தாள். இவள் வரவும் பஸ்சும் வர ஏறி இடம் பார்த்து அமர்ந்து கொண்டவள் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டு 'நாளையோடு இந்த எக்ஸாம் எல்லாம் முடிகிறது.றிசல்ட் வரும் வரை அப்பாவோடு நேரத்தை செலவழிக்க வேண்டும்.' என யோசித்து கொண்டிருக்கவும் அவள் இறங்க...
மலர் 01
காலைக்கருக்கலுக்குள் தூக்கத்தில் இருந்து எழுந்த நித்யஸ்ரீ காலை வேலைகளை முடித்துக்கொண்டு அப்பாவிற்கு பழைய சாதத்தை பிரட்டி எடுத்து தூக்குச்சட்டியில் வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக தோட்டத்திற்கு ஓடினாள்.
“அப்பா...அப்பா…. எங்கப்பா இருக்கிறிங்க…”
அவள் குரல் கேட்ட தகப்பன் வாழைக்கு தண்ணீரை திருப்பி விட்ட படியே, “நித்தி நான் செவ்வாழைக்கு தண்ணீர் மாத்தி விடுகி்றேன் கண்ணு இங்கே இந்தப்பக்கமாக...