Konjam Kaathalum Konjam Seendalum
இன்று இவளே சீக்கிரம் போய் அவனுக்காக காத்திருந்தாள். அங்கே அவளை தவிர இன்னும் ஐந்து பேர் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள்.
"எல்லாரும் படிக்க இங்க வாரங்க. நாங்க கதை பேச வாரோம்", என்று நினைத்து கொண்டாள்.
அவனும் வந்தான். அவனை ரசிக்க தூண்டிய மனதை அடக்கினாள் சத்யா. "இவனை எப்படி என்னால விட்டு கொடுக்க முடியும்?", என்று நினைத்து...
"அவ சொல்றது எல்லாம் உண்மை தான் சார்", என்று குறுக்கே புகுந்து பேசினான் ரவி.
அவர்களிடம் எல்லாவற்றையும் விசாரித்து விட்டு "இதெல்லாம் உண்மை தானா கார்த்திக்?", என்று கேட்டார் பிரின்சிபால்.
அப்போது தான் கனவில் இருந்து வெளியே வந்தான் கார்த்திக்.
"ஆமா சார்", என்று ஒப்பு கொண்டான் கார்த்திக்.
"சரி இனி அப்படி செய்யாத. இது தான் கடைசி வார்னிங்....
அத்தியாயம் 9
என்னைப் பிரியும்
வேளையில் வரும் உன்
ஒற்றைக் கண்ணீர் கூட
அழகான கவிதையே!!!
"இந்த பொண்ணுக்கு தான் சார் அடி பட்டிருக்கு. ரொம்ப ரத்தம் வீணாகிட்டு", என்றார் லைப்ரேரியன்.
அவள் கீழே விழாமல் பிடித்திருந்தான் கார்த்திக்.
"இது பர்ஸ்ட் இயர் சத்யா தான? கார்த்திக் அன்னைக்கு உன்னை சஸ்பென்ஷன்ல இருந்து காப்பாத்துன பொண்ணு தான?", என்று கேட்டார் பிரின்சிபால்.
"ஆமா சார்"
"நானே உங்க...
"சீனியர்ஸை அக்கா, அண்ணனு தான் சொல்லணும்? சரி அதை விடுங்க இப்ப எதுக்கு என்னை நிக்க சொன்னீங்க? சொல்லுங்க நான் போகணும்"
"அன்னைக்கு முதல் தடவை உன்னை பாத்த அன்னைக்கே நான் விழுந்துட்டேன் சத்யா"
"என்னது விழுந்துட்டீங்களா? ஹாஸ்பிட்டல் போனீங்களா?"
"ஐயோ நான் விழலை"
"இப்ப தான விழுந்தேன்னு சொன்னீங்க?"
"சத்யா, நான் அதை சொல்லலை. உன் மேல காதலில் விழுந்துட்டேன்னு...
அத்தியாயம் 12
உன்னைத் தீண்டிய
காற்று என்னை
மெதுவாக தீண்டிச்
செல்கிறது காதலுடன்!!!
"ஒரு வேளை ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கலைன்னு திருட்டு கல்யாணம் பண்ண போறானோ?", என்று யோசித்து அம்மா, அப்பாவிடம் "நாளைக்கு கல்யாணத்துக்கு போகணும்", என்று சொன்னான்.
"ஒரு நாளில் என்ன கிஃப்ட் வாங்க? பணமா கொடுத்துறலாம்", என்று சேகர் சொன்ன பிறகு அடுத்த நாள் மூவரும் கிளம்பி போனார்கள். சத்யாவும் வந்தாள்.
கல்யாணம்...
அத்தியாயம் 11
உன் கை விரல் படும்
ஒவ்வொரு தருணமும்
வெந்து சாகிறேன்
நான் பெண்ணே!!!
கீழே வந்தவளுக்கு, தன்னுடைய காதல் தேவகிக்கும், சேகருக்கும் தெரிந்ததில் வெட்கம் வந்தது. சங்கடத்துடன் தேவகி அருகில் சென்று காபி கப்பை வைத்து விட்டு அதை கழுவ ஆரம்பித்தாள்.
அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை வைத்தே "கார்த்திக் எல்லாத்தையும் அவளிடம் சொல்லி இருப்பான்", என்று யூகித்த தேவகி, "என்ன...
அத்தியாயம் 5
என்னைச் சுற்றி
சுழன்று அடிக்கிறது
உன் அழகான பிம்பம்!!!
"இது அதுக்கான நேரம் இல்லை டா கார்த்திக். இடமும் ஒத்து வராது", என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன் "இங்க எல்லார் கிட்டயும் போன் இருக்கும். கொஞ்ச நாளில் உங்க கிளாஸ்ல கூட எல்லாரும் வச்சிருப்பாங்க", என்றான்.
"பையங்க வேணா தைரியமா வச்சிருப்பாங்க. பொண்ணுங்க எல்லாம் செய்ய மாட்டாங்க"
"யார்...
அதற்கு மேல் அவள் வாயை திறப்பாளா என்ன?
அவர்களையே பார்த்து கொண்டிருந்த சேகர் அருகில் சென்ற மேகலா “என்ன சார் இது?”, என்று கேட்டாள்.
மற்ற நேரமாக இருந்தால் “என்ன என்ன சார்?", என்று கேட்டு அவளுக்கு பல்ப் கொடுத்திருப்பார்.
இன்னைக்கு சந்தோசமாக இருந்ததால், “நிச்சயம் பண்ணி பல வருஷம் ஆகுது. இப்ப தான் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு...
அத்தியாயம் 2
காதலாக நீ
பார்க்கும் ஒற்றை
பார்வை கூட என்னை
சுகமாய் சீண்டுமே!!!!
சரி அவனுடன் செல்லலாம் என்று முடிவெடுத்தாள் சத்யா. ஆனால் அவன் எடுத்து வந்த பைக்கை பார்த்து அரண்டே விட்டாள்.
"ஐயோ என்ன இது இப்படி இருக்கு?", என்று கேட்டாள் சத்யா.
"எப்படி இருக்கு? என்னோட பைக்குக்கு என்ன?"
"பின்னாடி உயரமா இருக்கு. இதுல எப்படி உக்கார?"
"அதெல்லாம் உக்காரலாம். நீ ஏறு....
அத்தியாயம் 8
கூட்டத்தில் என்
முகத்தை தேடிய
உன் மெல்லிய படபடப்பை
ரசித்தேன் ஒளிந்திருந்து!!!
அன்று இரவு ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிட அமர்ந்திருந்தாள் சத்யா.
அப்போது அவள் எதிரே யாரோ நிற்பது போல தெரிந்து தலையை நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே அவர்கள் டிபார்ட்மென்ட் செகண்ட் இயர் வைசாலி நின்றிருந்தாள்.
"இப்ப எதுக்கு இவ என்னை இப்படி பாத்துட்டு இருக்கிறா?", என்று உள்ளுக்குள்ளே திகைத்தாலும் அவளை நேர்...
"இது என்ன கும்பலா வந்துருக்காங்க? அவர் ஒருத்தர் தான வருவேன்னு சொன்னார்", என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அங்கு வந்த தேவகி "சத்யா வீட்ல இருந்தா வந்துருக்கீங்க? உள்ள வாங்க. உங்களை பாத்ததுல என் வீட்டுக்காரர் அதிர்ச்சியாகிட்டார்", என்றாள்.
அதன் பின் உபசரிப்பு எல்லாம் நல்லா படியாக நடந்தது.
"தம்பி காலேஜ் போய்டுச்சா?", என்று விசாரித்தார் சண்முகநாதன்.
"இல்லை...
அத்தியாயம் 4
என் ஒவ்வொரு நாள்
உறக்கத்தையும் தின்று
தீர்க்கிறது உன் நினைவுகள்!!!
"ஏன் அப்படி சொன்னாள்? நான் அவளுக்காக ஜஸ்ட்டினை அடிக்கணும்னு அவ நினைக்கிறாளா? இதுக்கு என்ன அர்த்தம்?", என்று புரியாமல் குழம்பினான் கார்த்திக்.
அதன் பின் இதை பற்றி யோசித்து யோசித்து சத்யா அவன் வாழ்வில் முக்கியமானவளாக மாறி போனாள்.
அங்கே ஜஸ்ட்டினும் அதே நிலைமையில் தான் இருந்தான். அவன்...
அத்தியாயம் 3
அழகாக தாலாட்டுகிறது
என் மீது மோதும்
உன் நினைவுகள்!!!
அடுத்த நாள் காலை ஆட்டோ பிடித்து காலேஜ் சென்ற சத்யா, ஹாஸ்டல் முன்னே நிறுத்த சொன்னாள்.
அங்கே விசாரித்து, அவளுக்கு கொடுக்க பட்ட அறைக்கு பொருள்களை எல்லாம் எடுத்து சென்றாள்.
அவளை பார்த்ததும் கோகிலா "வா வா, இனி நாம மூணு பேரும் தான் நாலு வருஷம் ஒண்ணா இருக்கணும்",...
"தெரியலை பா. நாலு பேரும் அவனை சுத்தி வளைச்சிட்டு நின்னாங்க. பாக்க பாவமா இருந்துச்சு. அதான் நான் அவங்க கிட்ட போய், ஒருத்தனை அடிக்க சுத்தி நிக்கறீங்கன்னு திட்டினேன்"
"நீ செஞ்சது சரி தான் பாப்பா. ஆனா காலேஜ் வெளிய இப்படி நடந்ததுன்னா நீ அப்படி எல்லாம் செய்யாம ஒதுங்கி போகணும் சரியா பாப்பா?"
"எங்க எப்படி...
அத்தியாயம் 6
நீ விழி வழி
அனுப்பிய செய்திகள்
என்னை வந்து
சேர்ந்து விட்டது என்னவளே!!!
"என்ன பாப்பா", என்று கேட்டு கொண்டே அவள் பார்வை போகும் திசையில் பார்த்தவன் "சின்ன பூச்சி தான் பாப்பா. அது ஒண்ணும் செய்யாது. இப்ப விரட்டி விட்டுறேன்", என்று சொல்லி கொண்டே அந்த பாம்பை விரட்டி விட்டான்.
ஆ என்று வாயை பிளந்து பார்த்தவள் "கரப்பான்...
அவர்கள் ஒளிச்சு வைக்கும் இடம் நினைவில் வந்தது சத்யாவுக்கு. என்ன சொல்ல என்று தெரியாமல் உதடு கடித்தாள்.
"என்ன டி அமைதியாகிட்ட?"
"அதெல்லாம் வேண்டாமே. இன்னும் கொஞ்ச நாள் தான? ஹாஸ்டல் போன்ல இருந்து வேணும்னா பேசுறேன் பா"
"ஹ்ம்ம் சரி", என்று அரைமனதாக சொன்னான் கார்த்திக்.
சூழ்நிலையை மாற்ற எண்ணியவள் "ஆமா பொண்ணுங்க ஒளிச்சு வைக்கிற இடம் உங்களுக்கு...
அடுத்த செமினார்க்கு சொன்னது போலவே சத்யாவையும், கோகிலாவையும் பொறுப்பாக கூட்டி சென்றது மட்டுமல்லாமல் அவள் எப்படி பேச வேண்டும் என்றும், எதை எல்லாம் செய்ய கூடாது என்றும் பொறுமையாக விளக்கினான்.
ஒரு வாரம் ஊருக்கு போவாள் சத்யா. இல்லை என்றால் சண்முகநாதன் அவளை பார்க்க வருவார். அதுக்கு அடுத்த வாரம் தேவகியும், சேகரும் அவளை பார்க்க வருவார்கள். வரும் போது...
அத்தியாயம் 7
நீ என் அருகில்
இருக்கும் ஒவ்வொரு
நொடியும் என் உயிரை
பரிசிக்கிறது உன் வாசனை!!!
சிரித்து கொண்டே அறைக்கு வந்தான் கார்த்திக். அவனுக்கு எல்லாமே கனவு போல இருந்தது. ஒரே நாளில் கல்யாணம் வரை முடிவானது பிரமிப்பாக இருந்தது.
அவனுடைய சத்யா அவனுக்கே அவனுக்கு இனி சொந்தம். ஏற்கனவே கண்ணீர் வழியாக அவள் காதலை அவனுக்கு உணர்த்தி விட்டாள். இனி வார்த்தையால்...
"என்ன பாக்குற? நம்ப முடியலையா? அன்னைக்கு டிபார்ட்மெண்ட்க்கு போகும் போதே பிரண்ட்ஸ் சொன்னாங்க. ஜஸ்டின் என்னை அடிக்க வெயிட் பண்றான்னு. நாலு கொடுக்கணும் போல தான் இருந்தது. ஆனா அம்மா யாரையும் அடிக்க கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாங்க. அவங்களும் பாவம். காலேஜ் ஆரம்பிச்சு ரெண்டாவது வருஷம் போறதுக்குள்ள மூணு சஸ்பென்ஷன் வாங்கிட்டேன். அம்மாவும் கிட்ட...
"இப்ப போல எங்க டி போற?", என்று கேட்டாள் கிருத்திகா.
"அவ பாத்ரூம் போறா. அதான் பஸ் எடுக்க அரை மணி நேரம் இருக்கே. போயிட்டு வரட்டும்", என்று சொன்ன கோகிலாவை நன்றியோடு பார்த்து விட்டு அவன் அருகில் சென்றாள் சத்யா.
முகம் முழுக்க புன்னகையோடு கண் முன் வந்த அவனுடைய தேவதையை ஆசையாக பார்த்தான் கார்த்திக்.
"கார்த்திக்......