Konjam Kaathalum Konjam Seendalum
அத்தியாயம் 12
உன்னைத் தீண்டிய
காற்று என்னை
மெதுவாக தீண்டிச்
செல்கிறது காதலுடன்!!!
"ஒரு வேளை ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கலைன்னு திருட்டு கல்யாணம் பண்ண போறானோ?", என்று யோசித்து அம்மா, அப்பாவிடம் "நாளைக்கு கல்யாணத்துக்கு போகணும்", என்று சொன்னான்.
"ஒரு நாளில் என்ன கிஃப்ட் வாங்க? பணமா கொடுத்துறலாம்", என்று சேகர் சொன்ன பிறகு அடுத்த நாள் மூவரும் கிளம்பி போனார்கள். சத்யாவும் வந்தாள்.
கல்யாணம்...
"சும்மாவே நமக்கு இங்கிலிஷ் வராது, இதுல முதல் நாளே வா? எப்படி பேச?", என்று நினைத்து மனதுக்குள் ரயில் தட தடத்தது.
ஊர் பக்கம் இருக்கும் ஆர்ட்ஸ் காலேஜில் படிக்க விடாமல் இங்கே வந்து இப்படி மாட்டி விட்ட தன் தந்தையை அன்றைக்கு ஐம்பதாவது முறையாக திட்டி தீர்த்தாள்.
கிருத்திகா முறை வந்தவுடனே, அவள் தைரியமாக எழுந்து...
பறந்த றெக்கையை அடுத்த நிமிசத்தில் வெட்டி போட்டாள் தேவகி.
"சாப்பிட்டுட்டு என்னோட ரூம்ல படுத்துக்கோ மா. உன் மாமா வேற ரூம்ல படுத்துப்பாரு", என்றாள் தேவகி.
அவளுக்கு அம்மா தனி ரூம் கொடுப்பாங்க. அடிக்கடி என்ன வேணும் என்ன வேணும்னு கேக்குற சாக்குல சைட் அடிக்க நினைச்ச கார்த்திக்க்கு கடுப்பானது. "அம்மா சொதப்பிட்டாங்க", என்று மனதுக்குள் பல்லை...
அத்தியாயம் 4
என் ஒவ்வொரு நாள்
உறக்கத்தையும் தின்று
தீர்க்கிறது உன் நினைவுகள்!!!
"ஏன் அப்படி சொன்னாள்? நான் அவளுக்காக ஜஸ்ட்டினை அடிக்கணும்னு அவ நினைக்கிறாளா? இதுக்கு என்ன அர்த்தம்?", என்று புரியாமல் குழம்பினான் கார்த்திக்.
அதன் பின் இதை பற்றி யோசித்து யோசித்து சத்யா அவன் வாழ்வில் முக்கியமானவளாக மாறி போனாள்.
அங்கே ஜஸ்ட்டினும் அதே நிலைமையில் தான் இருந்தான். அவன்...
அத்தியாயம் 6
நீ விழி வழி
அனுப்பிய செய்திகள்
என்னை வந்து
சேர்ந்து விட்டது என்னவளே!!!
"என்ன பாப்பா", என்று கேட்டு கொண்டே அவள் பார்வை போகும் திசையில் பார்த்தவன் "சின்ன பூச்சி தான் பாப்பா. அது ஒண்ணும் செய்யாது. இப்ப விரட்டி விட்டுறேன்", என்று சொல்லி கொண்டே அந்த பாம்பை விரட்டி விட்டான்.
ஆ என்று வாயை பிளந்து பார்த்தவள் "கரப்பான்...
இன்று இவளே சீக்கிரம் போய் அவனுக்காக காத்திருந்தாள். அங்கே அவளை தவிர இன்னும் ஐந்து பேர் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள்.
"எல்லாரும் படிக்க இங்க வாரங்க. நாங்க கதை பேச வாரோம்", என்று நினைத்து கொண்டாள்.
அவனும் வந்தான். அவனை ரசிக்க தூண்டிய மனதை அடக்கினாள் சத்யா. "இவனை எப்படி என்னால விட்டு கொடுக்க முடியும்?", என்று நினைத்து...
அதற்கு மேல் அவள் வாயை திறப்பாளா என்ன?
அவர்களையே பார்த்து கொண்டிருந்த சேகர் அருகில் சென்ற மேகலா “என்ன சார் இது?”, என்று கேட்டாள்.
மற்ற நேரமாக இருந்தால் “என்ன என்ன சார்?", என்று கேட்டு அவளுக்கு பல்ப் கொடுத்திருப்பார்.
இன்னைக்கு சந்தோசமாக இருந்ததால், “நிச்சயம் பண்ணி பல வருஷம் ஆகுது. இப்ப தான் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு...
அத்தியாயம் 9
என்னைப் பிரியும்
வேளையில் வரும் உன்
ஒற்றைக் கண்ணீர் கூட
அழகான கவிதையே!!!
"இந்த பொண்ணுக்கு தான் சார் அடி பட்டிருக்கு. ரொம்ப ரத்தம் வீணாகிட்டு", என்றார் லைப்ரேரியன்.
அவள் கீழே விழாமல் பிடித்திருந்தான் கார்த்திக்.
"இது பர்ஸ்ட் இயர் சத்யா தான? கார்த்திக் அன்னைக்கு உன்னை சஸ்பென்ஷன்ல இருந்து காப்பாத்துன பொண்ணு தான?", என்று கேட்டார் பிரின்சிபால்.
"ஆமா சார்"
"நானே உங்க...
"சீனியர்ஸை அக்கா, அண்ணனு தான் சொல்லணும்? சரி அதை விடுங்க இப்ப எதுக்கு என்னை நிக்க சொன்னீங்க? சொல்லுங்க நான் போகணும்"
"அன்னைக்கு முதல் தடவை உன்னை பாத்த அன்னைக்கே நான் விழுந்துட்டேன் சத்யா"
"என்னது விழுந்துட்டீங்களா? ஹாஸ்பிட்டல் போனீங்களா?"
"ஐயோ நான் விழலை"
"இப்ப தான விழுந்தேன்னு சொன்னீங்க?"
"சத்யா, நான் அதை சொல்லலை. உன் மேல காதலில் விழுந்துட்டேன்னு...
"தெரியலை பா. நாலு பேரும் அவனை சுத்தி வளைச்சிட்டு நின்னாங்க. பாக்க பாவமா இருந்துச்சு. அதான் நான் அவங்க கிட்ட போய், ஒருத்தனை அடிக்க சுத்தி நிக்கறீங்கன்னு திட்டினேன்"
"நீ செஞ்சது சரி தான் பாப்பா. ஆனா காலேஜ் வெளிய இப்படி நடந்ததுன்னா நீ அப்படி எல்லாம் செய்யாம ஒதுங்கி போகணும் சரியா பாப்பா?"
"எங்க எப்படி...
அத்தியாயம் 11
உன் கை விரல் படும்
ஒவ்வொரு தருணமும்
வெந்து சாகிறேன்
நான் பெண்ணே!!!
கீழே வந்தவளுக்கு, தன்னுடைய காதல் தேவகிக்கும், சேகருக்கும் தெரிந்ததில் வெட்கம் வந்தது. சங்கடத்துடன் தேவகி அருகில் சென்று காபி கப்பை வைத்து விட்டு அதை கழுவ ஆரம்பித்தாள்.
அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை வைத்தே "கார்த்திக் எல்லாத்தையும் அவளிடம் சொல்லி இருப்பான்", என்று யூகித்த தேவகி, "என்ன...
"இவ்வளவு நேரம் அப்படி மிரட்டுன? இப்ப இப்படி பம்முற? நான் யாரையோ லவ் பண்ணா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? இப்ப என்னை விரும்புறேன்னு சொன்னது உண்மையா? வாய் தவறி வந்ததா? முழு மனசோட சொன்னியா?"
கைகளை உருவ பார்த்தாள் ஆனால் முடிய வில்லை.
"பதில் சொல்லாம விட மாட்டேன் சத்யா"
"நான் போகணும் விடுங்க"
"ங்கவா? இப்ப கொஞ்ச...
அத்தியாயம் 10
உன்னைப் பற்றிய
அழகான கனவுகள்
காவியமாகிறது என் இதயத்தில்!!!
அந்த பக்கம் "பாப்பா வலி எப்படி டா இருக்கு?", என்று கேட்டார் சண்முகநாதன்.
"இந்த நம்பர் அப்பாவுக்கு எப்படி தெரியும்? நான் பேசும் முன்னாடியே எப்படி கண்டு பிடிச்சாங்க?", என்று யோசித்து, யோசனையை தடை செய்து விட்டு அவரிடம் பேச ஆரம்பித்தாள்.
"வலி இப்ப இல்லை பா. கல்யாணம் முடிஞ்சிட்டா?"
"இப்ப...
அத்தியாயம் 1
நீ விடும்
மூச்சு காற்று கூட
என்னை சுகமாய் தீண்டுமே!!!!
கண்களில் ஒரு மிரட்சியுடன், அந்த இன்ஜினியரிங் காலேஜ் உள்ளே அடி எடுத்து வைத்தாள் சத்யா..
"புது இடம் எப்படி இருக்குமோ? இந்த அப்பா கேட்டாரா? இங்க வந்து சேத்துட்டாரே? நான் இல்ல அவஸ்தை படுறேன். இதுல பையன்களா வேற இருக்காங்க", என்று மனதுக்குள்ளே புலம்பினாள்.
"பெரிய பெரிய கட்டிடமா...
"அவ சொல்றது எல்லாம் உண்மை தான் சார்", என்று குறுக்கே புகுந்து பேசினான் ரவி.
அவர்களிடம் எல்லாவற்றையும் விசாரித்து விட்டு "இதெல்லாம் உண்மை தானா கார்த்திக்?", என்று கேட்டார் பிரின்சிபால்.
அப்போது தான் கனவில் இருந்து வெளியே வந்தான் கார்த்திக்.
"ஆமா சார்", என்று ஒப்பு கொண்டான் கார்த்திக்.
"சரி இனி அப்படி செய்யாத. இது தான் கடைசி வார்னிங்....
அடுத்த செமினார்க்கு சொன்னது போலவே சத்யாவையும், கோகிலாவையும் பொறுப்பாக கூட்டி சென்றது மட்டுமல்லாமல் அவள் எப்படி பேச வேண்டும் என்றும், எதை எல்லாம் செய்ய கூடாது என்றும் பொறுமையாக விளக்கினான்.
ஒரு வாரம் ஊருக்கு போவாள் சத்யா. இல்லை என்றால் சண்முகநாதன் அவளை பார்க்க வருவார். அதுக்கு அடுத்த வாரம் தேவகியும், சேகரும் அவளை பார்க்க வருவார்கள். வரும் போது...
"என் பொண்ணோட நோட்ல இருந்தது. அதான் யாருனு கேட்கலாம்னு பண்ணேன்"
"சாதாரணமாக ஒரு நோட்டில் எழுதி இருந்த நம்பருக்கு யாரும் கால் பண்ணி கேப்பாங்களா?", என்று யோசித்தவனுக்கு பொறி தட்டியது.
"அப்ப என்னோட நினைவா அந்த நோட்டை தூக்கி வச்சிருந்துருக்கா. அதுல தான் மாமனார் கண்டு பிடிச்சிட்டார்", என்று நினைத்து கொண்டவனுக்கு வெளியே உதறலாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே...
"இது என்ன கும்பலா வந்துருக்காங்க? அவர் ஒருத்தர் தான வருவேன்னு சொன்னார்", என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அங்கு வந்த தேவகி "சத்யா வீட்ல இருந்தா வந்துருக்கீங்க? உள்ள வாங்க. உங்களை பாத்ததுல என் வீட்டுக்காரர் அதிர்ச்சியாகிட்டார்", என்றாள்.
அதன் பின் உபசரிப்பு எல்லாம் நல்லா படியாக நடந்தது.
"தம்பி காலேஜ் போய்டுச்சா?", என்று விசாரித்தார் சண்முகநாதன்.
"இல்லை...
அத்தியாயம் 5
என்னைச் சுற்றி
சுழன்று அடிக்கிறது
உன் அழகான பிம்பம்!!!
"இது அதுக்கான நேரம் இல்லை டா கார்த்திக். இடமும் ஒத்து வராது", என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன் "இங்க எல்லார் கிட்டயும் போன் இருக்கும். கொஞ்ச நாளில் உங்க கிளாஸ்ல கூட எல்லாரும் வச்சிருப்பாங்க", என்றான்.
"பையங்க வேணா தைரியமா வச்சிருப்பாங்க. பொண்ணுங்க எல்லாம் செய்ய மாட்டாங்க"
"யார்...
அத்தியாயம் 3
அழகாக தாலாட்டுகிறது
என் மீது மோதும்
உன் நினைவுகள்!!!
அடுத்த நாள் காலை ஆட்டோ பிடித்து காலேஜ் சென்ற சத்யா, ஹாஸ்டல் முன்னே நிறுத்த சொன்னாள்.
அங்கே விசாரித்து, அவளுக்கு கொடுக்க பட்ட அறைக்கு பொருள்களை எல்லாம் எடுத்து சென்றாள்.
அவளை பார்த்ததும் கோகிலா "வா வா, இனி நாம மூணு பேரும் தான் நாலு வருஷம் ஒண்ணா இருக்கணும்",...