Advertisement

“இவ்வளவு நேரம் அப்படி மிரட்டுன? இப்ப இப்படி பம்முற? நான் யாரையோ லவ் பண்ணா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது?  இப்ப என்னை விரும்புறேன்னு சொன்னது உண்மையா? வாய் தவறி வந்ததா? முழு மனசோட சொன்னியா?”
கைகளை உருவ பார்த்தாள் ஆனால் முடிய வில்லை.
“பதில் சொல்லாம விட மாட்டேன் சத்யா”
“நான் போகணும் விடுங்க”
“ங்கவா? இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி சொன்ன டா என்ன ஆச்சு?”
“அது ஒரு கோபத்துல சொன்னது. தெரியாம சொல்லிட்டேன்”
“தெரியாமலா? அப்ப வைசாலி லவ்வை ஏத்துக்கவா?”
அவனிடம் உளறி விட்டோமே என்று வெட்கத்தில் இருந்தவள் அவன் வைசாலி பற்றி பேசியதில் மறுபடியும் பொங்கி விட்டாள்.
“லூசா டா நீ? இன்னொரு தடவை அவளை பத்தி பேசுனா கொன்னுருவேன். நான் சொன்னது உண்மை தான் போதுமா? என்னைக்கு இந்த நெடுமாறனை பாத்தேனோ அன்னைக்கே மனசை பறி கொடுத்துட்டேன். முள்ளு குத்திட்டோன்னு என் காலை எப்ப பிடிச்சியோ அப்பவே நீ தான் மெட்டி போட என் காலை பிடிக்கணும்னு நினைச்சேன் போதுமா? என்னைக்கு உன்னோட கர்ச்சிப்பை துவைச்சு  ஏதோ பொக்கிஷம் மாதிரி பெட்டிக்குள்ள வச்சி பூட்டுனேனோ அப்பவே காலம் முழுக்க உன் துணியை நான் தான் துவைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் போதுமா?”
…..
“எங்க போனாலும் இந்த ஹீரோ கண்ணுக்கு தெரியுறானான்னு தேட ஆரம்பிச்சப்பவே உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா எனக்கு இது காதல் தான்னு தெரியலை. அன்னைக்கு எதிர்பாக்காம உன்னை பாத்தப்ப அப்படி ஒரு அழுகை வந்தது தெரியுமா? இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? உனக்கு தான் என் மேல காதல் இல்லையே. எனக்கு எல்லா உதவியும் செய்ற. இப்ப வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்க. இதெல்லாம் நீ நண்பனா செய்றியான்னு தெரியாது. ஆனா நீ தான் என் மனசுல இருக்க?”
….
“நீ லவ் பண்ணு பண்ணாம போ. ஆனா அவளை லவ் பண்ணவான்னு என்கிட்டே கேக்காத? எனக்கு கஷ்டமா இருக்கு. நீ அவளை லவ் பண்ணு, வேற எவளையும் லவ் பண்ணு.  எனக்கென்ன? ஆனா என்கிட்ட அதை சொல்லாத. நான் ஒத்துக்குறேன், உன்னை லவ் பண்றேன்னு. உன்னை மட்டும் தான் லவ் பண்றேன். உன்னை அவ  லவ் பண்றேன்னு சொன்னப்ப அவ மூக்குல குத்தணும்  போல இருந்தது. இப்ப நீ அவளை பத்தி பேசுறப்ப, உன் குடலை உருவனும் போல இருக்கு. உன் போட்டோ  அவ கிட்ட எப்படி இருக்கலாம்னு வெறி வந்துச்சு. இனியும் நீ யாரையும் லவ் பண்ணா அப்படி தான் வரும். ஆனா அந்த கோபத்தை எப்படி நான் உன்கிட்ட காட்ட முடியும்? எனக்கு மட்டும் தான உன்னை பிடிச்சிருக்கு? உனக்கு பிடிக்கலையே”
” உன்னை பாத்த எல்லா சூழ்நிலையிலும் நான் உன்னை விரும்புறேன். அது மட்டும் இல்லாம அன்னைக்கு உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நீ சொன்னப்ப, லவ்வை சொல்லுவேன்னு அவ்வளவு ஆசை பட்டேன். ஆனா நீ செமினார் பத்தி பேசுற? செமினார் எனக்கு ரொம்ப தேவை பாரு.  எங்க அப்பா கிட்ட இது வரைக்கும் எதுவுமே மறைச்சது இல்ல. ஆனா நீ மனசுல வந்ததை என்னால எங்க அப்பா கிட்ட கூட சொல்ல முடியலை. நீ எழுதி கொடுத்த பேப்பரை ஏதோ லவ் லெட்டர்  மாதிரி தடவிகிட்டு திரியுறேன்”
…..
“இப்படி இருக்கும் போது நீ அவளை பத்தி பேசுற? என்னமும் செஞ்சிக்கோ. நீ இல்லைன்னா நான் ஒன்னும் செத்துர மாட்டேன். எங்க அப்பா எனக்காக தான் உயிர் வாழுறாரு. உன்னை விட எனக்கு அவரு தான் முக்கியம் போ.  நீ அவளை கட்டிக்கோ, நான் எங்க அப்பா கூடவே உன்னையே நினைச்சிட்டு வாழ்ந்துருவேன். நான் போறேன் எங்க ஊருக்கு, போ டா “, என்று  சொல்லி விட்டு அழுத படியே போக பார்த்தாள் சத்யா.
மனதில் இருந்த ஏக்கம் எல்லாத்தையும் வெளியே கொட்டி விட்டதால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
அவளை நகர விடாமல் அவன் பிடி இறுகியது.
“விடு டா, நான் போறேன்”
“ஏய் ரங்கம்மா, நில்லுடி”, என்ற அவனுடைய உற்சாகமான குரலில் கண்ணீரை துடைத்து கொண்டே அவன் முகத்தை பார்த்தாள் சத்யா.
“லவ் லவ்ன்னு சொல்லிட்டு, கிளம்ப போறேன்னு சொல்ற? நீ  சொன்ன காதலை, நான் சொல்ல வேண்டாமா?”, என்று சிரித்தான் கார்த்திக்.
அவனை முறைத்தவள் “நீ தான் அவளை லவ் பண்ணவான்ணு கேக்குறியே”, என்றாள்.
“கூமுட்டை டி நீ.   உனக்கு வார்த்தையால சொன்னா புரியாது. இரு வரேன்”, என்று சொல்லி கொண்டே அவளை இழுத்து அனைத்தவன் அவள் உதடுகளில் அழுந்த முத்தமிட்டான்.
அவள் என்ன என்று உணரும் முன்னரே அவள் இதழ்களை சுவைத்து கொண்டிருந்தான் கார்த்திக்.
கண்களை விரித்து அவனை பார்த்தாள் சத்யா. உதடுகள் சண்டை போட்டு கொண்டிருக்கும் போது, அவள் அதிர்ச்சியான பார்வையை பார்த்த கார்த்திக் கண்ணை மூடு என்னும் விதமாய்  கண்களால் சைகை செய்தான்.
அவன் பார்வையை சந்திக்க முடியாமல் அவள் கண்களும் சொருகியது. அப்படியே இறுக மூடி கொண்டாள். அவள் கைகள் உயர்த்து அவன் கழுத்தில் மாலையாக  கோர்த்தது.
அவள் முதுகில் அலைந்த அவனுடைய கைகள் அவளுடைய இடையை இறுக்கி பிடித்தது.
சிறிது நேரம் கழித்து விட்டவன், “இப்ப புரியுதா என் காதல்?”, என்று கேட்டான்.
அவனை பார்க்க முடியாமல், கால்கள் தள்ளாட நின்றவள் அவனுடைய கை அணைப்பில் தான் விழாமல் நின்றாள். அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கம் தடுத்தது.
“பதில் சொல்லு டி. பிரண்ட்ன்னு நினைச்சிருந்தா இப்படி முத்தம் கொடுத்துருப்பேனா?
“முத்தம் கொடுத்தா காதல் புரியுமா?”, என்று சிறு பிள்ளை தனமாக அவன் முகம் பார்க்காமல் கேட்டாள் சத்யா.
“அப்ப தெரியாதா? நீ என்ன பாப்பாவா? உன் பிரண்ட்ஸ் க்கு  எல்லாம் என்னோட காதல் புரிஞ்சிருக்கு. ஆனா உனக்கு தான் புரியலை. மண்டையில் மசாலாவே இல்லை சத்யா உனக்கு”
புரியாமல் அவனை பார்த்தாள் சத்யா. அனாலும் அவள் மனதில் ஒரு அமைதி வந்திருந்தது. இத்தனை நாள் மனதுக்குள் ஒரே போராட்டமாக அவளை அலைக்கழித்தது. இன்று அவனிடம் கொட்டி விட்ட பின்னர் பாரம் விலகினது போல நிம்மதியாக இருந்தது.
“என்ன புரியலையா? எங்க மறைக்காம உண்மையை சொல்லு. உன்னோட பிரண்ட்ஸ்  என்னை உன்கூட  சேத்து வச்சி பேச மாட்டாங்க? அவங்களுக்கு நான் உன்கூட காதல்ல தான் பழகுறேன்னு  தெரிஞ்சிருக்கு. ஆனா உனக்கு புரியலை. நான் உன் பின்னாடி சுத்துறேன்னு  எங்க  டிபார்ட்மென்ட் முழுக்க பரவிட்டு  இருக்கு. அந்த காதல் உனக்கு புரியலையா டி எருமை? உன்னை பாத்த உடனே ஈன்னு பல்லை காட்டிட்டு உன் முன்னாடி நிக்குறேன். காலை தொட சான்ஸ் கிடைச்சிட்டுன்னு  தொட்டு பாத்தேன். லவ் இல்லைனா  கண்டவ காலை நான் பிடிப்பேனா?”
…..
“டிஸ்பென்சரி இங்க இருக்குனு சொல்லி கூட்டிட்டு தான் போய்ருப்பேன். தரையில உக்காந்து துடைச்சு  விட்டிருக்க மாட்டேன். அப்புறம் உன்னை தொல்லை பண்றான்னு அந்த ஜஸ்ட்டினை சாகுற  அளவுக்கு அடிச்சிருக்க மாட்டேன். காச்சல் அடிக்குதுன்னு பொய் சொல்லி  கையை பிடிச்சு கழுத்துல வச்சிருக்க மாட்டேன். கெல்ப் கேளுன்னு உன் பின்னாடியே தாங்கிட்டு திரிஞ்சிருக்க மாட்டேன் . எப்படா சாயங்காலம் வரும் லைப்ரரில உன்னை பாக்கலாம்னு வாட்சை பாத்துட்டு உக்காந்துருக்க  மாட்டேன”
…..
“நீ இங்கிலீஸ்க்கு பய பட கூடாதுன்னு, உன் தைரியத்தை வளர்க்க செமினார் பத்தி பேசியிருக்க மாட்டேன்.  இது எல்லாம் காதல் இல்லாம என்னால எப்படி செய்ய முடியும்? இதெல்லாம் பிரண்ட்க்கு செய்வாங்களான்னு தெரியாது. ஏன்னா எனக்கு பொண்ணுங்க பிரண்ட் கிடையாது.  காலேஜ்ல கேட்டு பாரு. எந்த பொண்ணு  கிட்டயாவது நின்னு பேசிருக்கேனான்னு? நீ கேன்டீன்ல இருந்து போன்  செஞ்ச ஒரே காரணத்துக்காக அந்த கேன்டீன் நம்பரை உன் நம்பர்னு நினைச்சு  மை லவ்ன்னு சேவ் பண்ணி வச்சிருக்கேன் டி பண்ணி”
“பண்ணியா?”
“ஆமாடி அப்படி தான் சொல்லுவேன். தலைல உனக்கு அடி பட்டதுக்கு, எதுக்கு என் கண்ணுல இருந்து கண்ணீர் வரணும்? இதெல்லாம்  யோசிக்க மாட்டியா? உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு வராம கையோட கூட்டிட்டு வந்துருக்கேன். என் அம்மா அப்பா  உன்னை அவங்க மருமக மாதிரி தாங்குறாங்க.  நான் காதலிக்கிறேன்னு சொல்லாம யாருன்னே தெரியாத ஒரு பொண்ணை  இப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வர எந்த அம்மா, அப்பாவாது விடுவாங்களா? நீ இங்கிலீஸ்ல மட்டும் வீக் இல்லை. உனக்கு மூளையே இல்லை டி”
“நீங்க இதெல்லாம் சொல்லவே இல்லையே”
“சொல்லலை தான். சொல்லலைன்னா உனக்கே தெரியாதா? ஏன் நான் கண்டு பிடிக்கலை, நீ என்னை லவ் பண்றேன்னு”
“எப்படி கண்டு பிடிச்சீங்க?”, என்று சிறு குழந்தை போல் கேட்ட சத்யாவை ரசித்தவன் அவள் மண்டையில் கொட்டினான்.
“அன்னைக்கு பஸ் ஸ்டாண்ட்ல வச்சு  கண்ணுல இருந்து அத்தனை பேர் முன்னாடி உனக்கு, என்னை பார்த்ததும் கண்ணீர் வந்தது சத்யா. என்னை பாத்ததுக்கு அப்படி சந்தோச பட்ட. என்னை விட்டு பிரிஞ்சு போக முடியாம அப்படி கண்ணீர் விடுற? அதுல கண்டு பிடிக்க முடியாதா?”
“நானாவது அழுது புரிய வச்சேன்ல? நீங்க எப்படி புரிய வச்சீங்களாம்? பிரண்டா தான் பழகுன்னேன்னு சொல்லிருவீங்களோன்னு நினைச்சேன்”
“புரிய வைக்கலையோ? சத்யா சத்யான்னு உன் பின்னாடியே தான திரிஞ்சேன்?  அப்புறம் நேத்து உன் முன்னாடி தான அவளை அப்படி திட்டி விட்டேன். என் போட்டோ  உன்கிட்ட தான் இருக்கணும்னு சொன்னேன்ல? அது புரியலையா?”
“புரியலையே”
“நேத்து வீட்ல வச்சு கிஸ் பண்ணேன்ல டி”
“அது இப்ப மாதிரியா? நெத்தில தான…”, என்று உளறி பின் நாக்கை கடித்து கொண்டாள்.
அதில் அவன் கண்கள் மின்னின. “அப்ப உதட்டுல கொடுத்துருந்தா புரிஞ்சிருக்குமா சத்யா? எனக்கே அப்படி தான் தோணுச்சு. முதல் நாளே பயந்துற கூடாதுனு தான் நெத்தில கிஸ் பண்ணேன். இப்ப சொல்லிட்டல்ல? இன்னொரு தடவை என் காதலை புரிய வச்சிரேன்”, என்று சொல்லி கொண்டே அவளை இழுத்து அணைத்து அவள் உதடுகளை சிறை செய்தான் கார்த்திக்.
சிறிது நேரம் கழித்து அவனை தள்ளி விட்டாள் சத்யா. “எங்க ஓட பாக்குற?”, என்று சொன்னவன் அவளை இழுத்து அணைத்து கொண்டான்.
அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள், அவன் முதுகில் கைகளை படர விட்டாள்.
“எப்ப உன் காலை பிடிச்சேனோ, அப்ப தான் என்னை நீ விரும்பியிருக்க சத்யா. ஆனா நீ காலேஜ் குள்ள கால் எடுத்து வச்ச உடனே, என்னையே மறந்து உன்னை பாத்துட்டு இருந்தேன்”, என்ற கார்த்திக்கின் குரலில் அவனை ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்தாள்.

Advertisement