அத்தியாயம் 17
ஜெய் சொன்னது போல அந்த வாரம் சனிக்கிழமை பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்த இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றான். ஜெயராமனும் சந்திரனும் வரவில்லை என்றுவிட, அமுதாவும் காமாட்சியும் மட்டும் வருதாக இருந்தனர்.
“நாங்க தினமும் பார்க்கிறதோ பேசுறதோ இல்லை தான். ஆனா எனக்கு ஒண்ணுன்னா அவன்தான் முதல்ல வருவான். அதே போலத்தான் அவனுக்கு நானும்.”
இருந்த களைப்பில் வந்ததும் எல்லோரும் ஆளுக்கு ஒருபக்கம் உட்கார்ந்து விட, அகல்யா தான் எல்லோருக்கும் உணவு எடுத்து வைத்தாள். எல்லோரும் உண்டுவிட்டு நேரமே படுக்கச் சென்றனர்.
“வேலைக்கு போகாம ஊராடி சுத்திட்டு இருக்கேன். நான் கலக்டர் வேலை பார்க்கலை. வர்ற சம்பளம் போதும்ன்னு இருக்க.”
“மனுஷன் பசியில சாப்பிட வந்தா நிம்மதியா சாப்பிட முடியுதா? “ என ஜெய் குரலை உயர்த்த,
இவனிடம் எதற்கு வாய் கொடுத்தோம் என வெண்ணிலா நினைக்க, அறையில் படுத்திருந்த ஜெயராமனும் அமுதாவும் வந்துவிட அதே போல அகல்யாவும் ராதிகாவும் வந்துவிட்டனர். எதோ சத்தம் போடுகிறான் என்றுதான் தெரியும், என்ன சொன்னான் என யாருக்கும் கேட்கவில்லை.