அத்தியாயம் 16
சிறிது நேரம் சென்று ஜெய் அறைக்கு வந்து பார்த்த போது, வெண்ணிலா படுத்திருந்தாலும் உறங்காமல் தான் இருந்தாள்.
வெண்ணிலா அப்போதைக்கு எதுவும் பேசாமல் குளிக்கச் சென்று விட்டாள். ஜெய்யும் பேசாமல் படுத்துக் கொண்டான்.
“கரண் அத்தானுமே வீட்ல சொன்னாங்கன்னு போலத்தான் இருந்தார். அதனால கல்யாணம் நின்ன போதும் அது எனக்குப் பெரிய பாதிப்பை எல்லாம் உண்டு பண்ணலை. அப்படியிருக்க நான் ஏன் தற்கொலை பண்ணிக்கப் போறேன்? அது எங்க பாட்டி கட்டின கதை.” என்றவள், அன்று நடந்ததையும் விவரித்தாள்.