அத்தியாயம் 14
ஜெய் இருந்த கோபத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பான். ஆனால் அவன் முன்பு வெண்ணிலா நின்ற தோற்றம் அவனைக் கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்னவோ உண்மை.
அமைதியாக இருந்தால் அதுவேறு தப்பான அர்த்தத்தை உண்டு பண்ணிவிடுமோ என அஞ்சியவன், “அம்மாவுக்கு ப்ரெஷர் இருக்கு, அதனால இப்ப அவங்களை எங்கையும் தனியா அனுப்புறது இல்லை. அதோட வெண்ணிலாவும் இப்ப இங்க இருக்கா இல்லையா… நான் என் தங்கையைப் பார்க்க வந்தேன்.” என்றான் யுவராஜ் தெளிவாக.