அத்தியாயம் 24
செவிலியர் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்த மகனை கையில் வாங்கி உச்சி முகர்ந்தவன், “இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா அவளுக்கு ரூம்லையே பிரசவம் ஆகி இருக்கும். என்ன வைத்தியம் பார்க்கிறீங்க நீங்க? அவ வலி அதிகமா இருக்குன்னு சொன்னா தானே.” என ஜெய் அவரிடம் எகிற,