அன்று மாலையே மகேஸ்வரி திரும்ப வேண்டும் என்பதால், காலையே கிளம்பி வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் தான் இருந்தனர். ஆனால் ஜெய் மட்டும் இல்லை. தெரிந்த கதை தானே என வெண்ணிலா மனதில் நினைத்துக் கொண்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
மதிய உணவு தடபுடலாகச் சமைத்திருந்தனர். எல்லோரும் உணவு உண்ண அமரும் நேரம் ஜெய்யும் வந்துவிட்டான்.