Tuesday, August 4, 2026

    Komagal 3

    0

    Komagal 14

    0

    Komagal 7

    0

    Komagal 6 2

    0

    Komagal 4

    0

    கோமகள்

    Komagal 22 1

    0
    22 குழலிக்கு பெங்களூர் திரும்பிச் செல்லும் எண்ணமில்லை. ஆனால் போகாமலும் இருக்க முடியாது. அவள் ஒன்றும் தாய் வீட்டில் இருக்கவில்லையே, அங்கிருந்திருந்தால் ஒரு வேளை அவள் திரும்ப ஊருக்கு செல்லலாமா வேண்டாமா என்று நிச்சயம் யோசித்திருப்பாள்.   இப்போதோ அவளிருப்பது அவளின் மாமியார் வீட்டில் தானே. பெரியாத்தாவின் வீடு அவளின் மாமியாரின் வீடு தானே. அவளின் சின்னத்தை ராகினி...

    Komagal 23 1

    0
      23 இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருக்க மறக்கவில்லை. கயல்விழி தான் மருமகன் வந்திருப்பதை பார்த்துவிட்டு கறிக்குழம்பு வைத்து கொடுத்திருந்தார்.   கணவனுக்கு பிடித்த சமையல் என்பதை குறித்துக் கொண்டாள் குழலி. எல்லாம் கயல்விழியின் செயல் தான் என்றும் புரிந்தது.   சாப்பிட்டு அவள் அனைத்தும் ஒதுங்க வைத்து மாடிக்கு வர இந்தர் அறைக்குள்ளேயே...

    Komagal 23 2

    0
      “எஸ் அங்க இல்லை. ஆல்ரெடி நான் டெம்பரவரி எம்ப்ளாய்யா இருந்தேன் தானே அங்க. என்னை பர்மனென்ட் பண்ணிட்டு மங்கள்யான் ப்ராஜெக்ட்க்கு மாத்தறேன்னு சொன்னாங்க, அதுக்காக தான் நான் யூஎஸ் ட்ரைனிங் எல்லாம் போனேன்”   “எல்லாமே சக்சஸ் தான் ஆனா ப்ராஜெக்ட் பெயிலியர் ஆகிட்டு. டீம்ல நிறைய சேஞ்சஸ் பண்ண நிறைய பேரை மாத்திட்டாங்க, எனக்கு அந்த...

    Komagal 14

    0
    14 மேற்கொண்டு பேச்சை வளர்த்தாது அவள் உடமைகளை எடுத்துக்கொள்ள போக அதற்குமுன் இந்தர் அவள் உடமைகளை கையில் எடுத்திருந்தான்.   “கொடுங்க நான் எடுத்திட்டு வர்றேன்”   “இட்ஸ் ஓகே” என்றவன் முன்னே செல்ல “கேட் பூட்ட வேண்டாமா திறந்தே இருக்கே”   “பாரு உன்கிட்ட பேசிட்டு வந்ததுல அதை மறந்திட்டேன்” என்றவன் வீட்டின் காரிடரின் முன்பு அவர்களின் உடைமைகளை வைத்துவிட்டு வெளியே வந்து...

    Komagal 8

    0
    8 இந்திரஜித்தின் வலது கை ஸ்டியரிங் வீலை வளைத்து வளைத்து திருப்பவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் குழலி. கோபமாக வந்தது அவன் மேல் மட்டுமல்ல அவளின் அன்னையின் மீதும் தான். ‘இத்தனை மாசமா என்னைத் தேடி வந்து பார்க்கணும்ன்னு தோணலை. அவர் வான்னு கூப்பிட்டா நான் போய்டணுமா’ என்று அவள் மனம் கேள்விக் கேட்டது அவளை.   திருவாதவூர் அதுவே அவளின்...

    Komagal 13

    0
    13 “வண்டியை நிறுத்திட்டு என்னைப் பார்க்கிற அளவுக்கு இதுல என்ன இருக்கு. நிஜமாவே உங்க வேலைப்பத்தி எனக்கு முழுசா தெரியாது. நீங்க எதையுமே என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டதில்லையே” என்று அவள் சொல்லும் போது தான் அவனுமே உணர்ந்தான் அதை.   ‘ஆமா எதுவும் சொன்னதில்லை’ என்று ‘ஆபீஸ்ல இருந்து வர லேட் ஆகும், சீக்கிரம் போகணும், இந்த சண்டே...

    Komagal 17

    0
      17 காலை ஆறுமணிக்கே அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பியதால் பத்து மணிக்கே மைசூர் வந்தடைந்திருந்தனர். வரும் வழியிலேயே காலை உணவை முடித்திருக்க அறைக்கு சென்று சிறிது நேரம் இளைப்பாறினர்.   குழலிக்கு ஏதோவொரு குதூகலம் வந்து தொற்றிக்கொள்ள அவள் முகம் புன்னகை முகமாகவே இருந்தது. இந்தரும் அவளுடனே இருந்ததும் கூட அவளை அப்படி உணர வைத்திருக்கலாம்.   மதிய உணவுக்கு பின்...

    Komagal 21 2

    0
      “எனக்கு பிடிச்சிருக்கான்னு நீ கேட்கவேயில்லைன்னு நீங்க சொன்னப்போ கூட நான் ரொம்ப நம்பினேன். நிஜமாவே உங்களுக்கு என் மேல பிரியம் வந்திடுச்சுன்னு”   “அது தான் நிஜம் குழலி”   “இல்லை அப்படியில்லை உங்களை நான் ரொம்ப நம்புனேன். நீங்க அவளை நினைச்சுட்டு தான் என்கூட வாழலைன்னு எனக்கு இப்போ நல்லாவே புரியுதுங்க, புரியுது. என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னா கூட...

    Komagal 2

    0
      2 குழலி வைத்துவிட்டு சென்றிருந்த காப்பியை தூக்கி எறிய மனமில்லாது அருந்தினான் இந்தர். முதல் நாள் காலையில் சாப்பிட்டது தான் அதன் பின்பு உணவென்பதே இறங்கியிருக்கவில்லை அவனுக்கு.   காலையில் அவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.   “சொல்லுங்கம்மா” என்றவாறே போனை எடுத்து காதில் வைத்திருந்தான்.   “எப்பா இந்தர் ஆத்தாவுக்கு ரொம்பவும் சீரியஸா இருக்கு....

    Komagal 3

    0
      3 பெரியாத்தாவின் இறப்பிற்கு பின் அவள் அவ்வீட்டிற்கு செல்லவேயில்லை. கயல்விழி எவ்வளவோ அழைத்தும் அவள் வர மறுத்துவிட்டாள். விடிந்தால் காரியம் அதற்குப்பின் அவரவர் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிடுவர். கயல்விழிக்கு மகளை குறித்த பயம் எழுந்தது. இப்படியே அவள் இருந்துவிடுவாளோ என்று எண்ணி இரவெல்லாம் உறங்காதிருந்தார்.   பொழுது விடிந்த பின்னே மகளின் முன்னே தான் சென்று நின்றார். “என்னம்மா??”   “ஆத்தா...

    Komagal 1

    0
    1 இன்னமும் இருள் அகலாத காலைப்பொழுது தாயும் மகளும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் நித்திரையை கலைக்கவென்றே அதிகாலையில் அலைப்பேசி ஒலியெழுப்பியது.   சத்தம் கேட்டு சட்டென்று கண் விழித்தார் கயல்விழி. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, அலைப்பேசியை எடுக்கவே யோசனை அவருக்கு. அதற்குள் அது அடித்து ஓய்ந்திருந்தது.   இந்த நேரத்தில் போன் என்றால் ஏதோ கெட்ட சேதி என்றே அவரின்...

    Komagal 7

    0
    7 இந்திரஜித் ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள் குழலியை தன் தாயுடன் அனுப்பிவிட்டிருந்தான். சென்னை வந்து ஓரிரு நாட்கள் இருந்தவர்கள் மூன்றாம் நாள் ஊருக்கு கிளம்பியிருந்தனர்.   குழலியை கயல்விழியின் வீட்டில் சென்று விட்டு வந்திருந்தனர் ஸ்ரீனிவாசனும், தரங்கிணியும். இந்திரஜித் ஊருக்கு கிளம்பிய அன்று அவளிடமும் வீட்டினரிடமும் போன் செய்து பேசிய பின்னே தான் ஊருக்கு சென்றிருந்தான்.   அமேரிக்காவிற்கு சென்ற...

    Komagal 15

    0
      15 “க்கா நீ எப்போக்கா இந்த ஏரியாக்கு வந்தே??” என்ற குதூகல குரலில் தெருவில் செல்லும் காய்கறி கடைக்காரன் இவளை பார்த்து குரல் கொடுத்திருந்தான்.   அவளுமே காய்கறி வண்டிக்காரன் குரல் கொடுத்த சத்தம் கேட்டுத்தான் வெளியில் வந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவன் குதூகலம் அவளையும் தொற்றிக்கொண்டது.   பின்னே அருகே எவரையுமே தெரியாது. அவள் அந்த ஏரியாவிற்கு வந்தே ஒரு...

    Komagal 5

    0
    5 குழலியை இந்தரின் அறைக்குள் அனுப்பிவிட்டு தரங்கிணி கீழே சென்றுவிட்டார். திருமணம் என்ற போது கூட வராத பதட்டம் அந்த அறைக்குள் நுழையும் போது அவளுக்கு வந்தது.   நல்ல வேளையாக அறையில் இந்திரஜித் இல்லை. அதை கண்டதும் இழுத்து பிடித்திருந்த மூச்சை நிம்மதியாய் வெளியேற்றியவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.   அறையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை அதுவே அவளை சற்று...

    Komagal 18

    0
        18 குழலி திருவாதவூரில் இருந்தாள். சொந்த ஊருக்கு வந்த போதும் அன்னை மீதிருந்த கோபத்தில் அவள் அங்கு செல்லவில்லை. பெரியாத்தாவின் வீட்டில் தான் இருந்தாள்.   இந்தருக்கும் அவளுக்கும் பேச்சுவார்த்தை இல்லாது போனாலும் அவளின் பிடிவாதத்தை கண்டவன் சொல்லியே விட்டான். “எதுக்கு அடம் பிடிக்கறே?? உங்கம்மா என்ன தப்பு செஞ்சாங்க?? உன் மேல பாசம் வைச்சதை தவிர... அங்க...

    Komagal 20

    0
      20 நான்கு தேர்வு முடிந்திருந்தது குழலிக்கு. தினமும் கயல்விழி வீட்டில் இருந்து தான் அவர்களுக்கு உணவு வருகிறது. ராகினி எப்போதுமே சுறுசுறுப்பில்லாதவர் தான். அதனாலேயே தான் கயல்விழியிடம் பெரிதாய் எந்த ஒட்டுதலும் இல்லாவிட்டாலும் தனக்கு ஒரு வேலை மிச்சமாகிறதே என்று அவர் உணவு கொண்டு வருவதற்கு தடை சொல்லவில்லை.   ‘இந்த மதினி எல்லார்கிட்டயும் வரிஞ்சுகட்டிட்டு சண்டைக்கு போகும்....

    Komagal 12

    0
      12 வண்டியில் ஏறி சிறிது நேரம் தான் விழித்திருந்தாள். வண்டி பைபாஸில் செல்ல ஆரம்பித்ததுமே அவளை அப்படியொரு உறக்கம் ஆட்க்கொண்டிருந்தது.   சீட்டில் இரு காலையும் குறுக்கிக்கொண்டு இருகைகளாலும் காலைக் கட்டிக்கொண்டு தலைசாய்த்து படுத்திருந்தவளின் தோற்றம் எதுவோ செய்ய வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தினான்.   சீட்டை பின்னால் சாய்த்து அவள் கைகளை தளர்த்தி காலுக்கு விடுதலை கொடுக்க உறக்கத்திலேயே...

    Komagal 6 2

    0
    என்னே அங்கு கயல்விழியின் குரல் தான் ஓங்கி ஒலித்தது. மகளுக்கு முன்னே தாய் ஆரம்பித்துவிடுவார் என்பதால் அதிகம் இவள் குணம் வெளியில் வந்திருக்கவில்லை.   கணவனுடன் வசிக்கும் வேளையில் அவளுக்கு தாயுடன் தனித்திருந்தது மட்டுமே நினைவில் இருந்தது. அவளின் சித்தப்பா கயல்விழியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததும் தாயும் மகளும் அவரை விரட்டிவிட்டு விடிய விடிய பயத்துடன்...

    Komagal 21 1

    0
      21 “குழலி எங்கேம்மா போனே?? உன்னை காணலைன்னு பயந்துட்டேன். என்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கலாம்ல” என்றான் அவளருகே நெருங்கியவாறே.   மெல்ல விலகியவள் “ஹ்ம்ம்”   “குழலி என்னாச்சு?? பாரு எவ்வளவு நனைஞ்சு இருக்கேன்னு. சளி பிடிச்சுக்க போகுது” என்று அவள் ஈரக்கூந்தலில் கை வைத்து கோத “கையை எடுங்க” என்றாள் வெடுக்கென்று.   “குழலி”   “கிளம்பலாம் எனக்கு தலைவலிக்குது” என்று அவள் சொல்லவும் ஒரு பெருமூச்சை...

    Komagal 4

    0
      4 “என்ன முடிவு பண்ணுவேன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா??” என்ற இந்தரின் குரலில் மாமியாரும் மருமகளும் குரல் வந்த திசையை நோக்கினர்.   அவனைக் கண்டதும் “அத்தை நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றுவிட்டு அவள் நகர எட்டி அவளின் கரம் பற்றியிருந்தான் அவளுக்கு மாலையிட்டவன்.   தரங்கிணி அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அவர்களே பேசிக்கொள்ளட்டும் என்று. குழலி அவனிடம் இருந்து கரத்தை விடுவிக்க முயன்றவள்...
    error: Content is protected !!