Saturday, May 4, 2024

    காதல் வைபோகமே

    அத்தியாயம் 42 சனி மாலை பயிற்சி பட்டறை  முடிந்தவுடன் , ஆட்டோ பிடித்து ஹோட்டலுக்குச் சென்றாள் இனியா.  வரவேற்பில் விசாரித்து , ரிசர்வ் செய்யப்பட்ட மேஜைக்குச் செல்லும் பொழுது, ஹோட்டல் அமைப்பில் இருந்த பிரைவசிக்கான முக்கியத்துவத்தைப் பார்த்து , அசந்து போனாள் . “தல சரியான ஹோட்டலைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என மனதிற்குள் மெச்சினாள் .  இனியா ஹோட்டலில் நுழைந்ததில்...
    அத்தியாயம் 40 புதன் காலை ஒரு மணிவாக்கில் , போன திங்கள் பிரதமர் வளரும் இளம் தொழிலதபர்களைச் சந்தித்து உரையாடினார் என்பதும் , தமிழ் நாட்டில் இருந்து மீடியா துறை சார்பாக விக்ரமும் , ஐ.டித் துறை சார்பாக மற்றொரு தொழிலதிபர் மட்டுமே பங்கேற்றது , பரபரப்புச் செய்தியாகியது .  இதைப் பார்த்த இனியா கடுப்பானாள் ,...
    அத்தியாயம் 37 அந்த வாரக் கடைசியில் ,  “ருசிக்க ரசிக்க” ஷுட்டிங்கில் ரோஜாவைச் சந்திக்க , “போன் செய்ய தயக்கமாக இருந்தது இனியா…. என மீண்டும் மன்னிப்பு கேட்டாள் .  “பின் டாக்ஸி உடனே கிடைத்ததா ?”   இனியா மழுப்பலாக “ஒன்றும் பிரச்சனை இல்லை அக்கா , நல்லபடியாகப் போய்விட்டேன் . அப்புறம் உங்கள் டான்ஸ் ஷோ எவ்வாறு...
    அத்தியாயம் 34 தன்னைச் சுத்தப்படுத்தி இரவு உடைக்கு மாறி  , வசந்த்துக்கு வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற பதிவைத் தட்டி விட்டுப் படுக்க வந்தாள். கண்னை மூடியதும் , விக்ரமின் சிரித்த முகமே கண்ணில் வந்தது . படக்கெனக் கண்ணைத் திறந்தாள் , தூக்கம் வருமெனத் தோன்றவில்லை . உருண்டு கொண்டே இருந்து , காவியாவின் தூக்கத்தைக்...
    அத்தியாயம் 31 மேலும் சில நாட்கள் செல்ல… , ராம்குமார் உதவியுடன் , இனியா சில விளம்பரங்களில் நடித்து இருந்தாள். “ருசிக்க ரசிக்க” நிகழ்ச்சியும் மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிரி புதிரி வெற்றியானது .   விக்ரம் இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாட , கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி என...
    அத்தியாயம் 28 திங்கள் காலை செயலாளருக்குப் போன் செய்து ,  விக்ரம் ஸாரை சந்திக்க நேரம் கேட்டாள் .  “சரி, ஸாரிடம் பேசிவிட்டுத் தகவல் தெரிவிக்கிறேன்…” என்றாள்.  விக்ரம் வந்தவுடன் , விசயத்தைத் தெரிவிக்க , சந்தோஷமானான் .   ஏற்கனவே மூன்று வாரங்களாக இனியாவைப் பார்க்கமுடியல்லையே என ஏங்கியிருந்தான் . சும்மா சும்மா செட்க்குப் போவது சரியில்லை என்பதாலும் தேவையில்லாத...
    அத்தியாயம் 26 மாலை ஐந்து மணிக்கு விக்ரமைக் காணச் சென்றாள் . இவளை கண்டவுடன் செயலாளர் , அறைக்குள் செல்ல அனுமதித்தாள். அறைக் கதவைத் தட்டியபின்  , உள்ளே நுழைய , இவள் வருவதைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் .  அந்தப் பார்வை அவளை ஏதோ செய்தது . இப்படி யாராவது பார்த்தால் ஒரு அசௌகரியம்...
    அத்தியாயம் 24 விக்ரம் புதிய சேனல் காரணமாக மீண்டும் பெங்களூர் பயணம் மேற்கொண்டிருந்தான். “ருசிக்க ரசிக்க” அடுத்தடுத்த வாரங்கள் ஓளிபரப்பாக, டி.ஆர். பி எகிறிக் கொண்டிருந்தது . மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தத்தடுத்த எபிஷோட்டிற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்து .   அன்றைய  படப்பிடிப்பில் ரோஜா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் .  இனியா அருகே வந்ததும் கட்டிக் கொண்டாள். தனக்கு...
    அத்தியாயம் 21 மீண்டும் ஷுட்டிங் ஆரம்பித்தது… , பரபரப்பாக சமையல் நடந்து கொண்டிருந்தது. இனியா ரோஜாவைப் பார்க்க, அவள் முகம் தெளிந்து இருந்தது ,  பரத் சென்றிருந்தான் . இனியாவிற்கு ஏனோ  நிம்மதியாக இருந்தது. இடைவேளையில் ரோஜா , இனியாவை அழைத்து , “நாம் இன்று சேர்ந்து போகலாம்…” என்றாள் . “உங்களுக்குத் தொந்தரவு இல்லையே அக்கா…” என்று இழுக்க,  “ஒன்றும் பிரச்சனை...
    அத்தியாயம் 18 இரண்டு வாரங்கள் கழித்து , அன்று தான் விக்ரம் சென்னை வந்திருந்தான்.  காலையில் இருந்தே “ இனியாவைக் காணப் போகிறோம்” என மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.  அவனுக்கே இது புது உணர்வாக இருந்தது , இது பிடித்தும் இருந்தது . எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருக்கிறான் . யாரும் இனியாவைப் போல் பாதித்தது இல்லை என்பது...
    அத்தியாயம் 15 அடுத்த எபிஷோட் படப்பிடிப்பிற்கு  விக்ரம் வர , செட்டே பரபரப்பானது.  எல்லோரும் சென்று மரியாதையைச் செலுத்த, சின்ன தலையசைப்புடன் விக்ரம் ஏற்றுக் கொண்டான். இனியா மனதிற்குள் ,” தல திருப்பிச் சொல்லாதோ? கெத்துதான் போ….” எனப்  பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தாள் .  பின் மெதுவாக ஒன்றிரெண்டு பேரே மிச்சமிருக்க , அவன் அருகே சென்று ,“குட் ஈவினிங்...
    அத்தியாயம் 12 இனியா , சேனல் “சி” யில் தன் வேலையை மிகவும் ரசித்தாள் . மிகுவும் சந்தோஷமாக , தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள் . அன்று படப்பிடிப்பு தளத்தில், இனியா  பிரேக்கில் இருக்க , அப்போது அங்கே வந்த ராஜேஷ்,”இனியாம்மா  உங்களை டிஸ்கஷன் அறைக்கு வரச் சொன்னார்கள் “ என்று சொல்ல , “யார் அண்ணா?...
    அத்தியாயம் 10 மேலும் இரு வாரங்கள் ஓடியிருக்க , இனியா படப்பிடிப்பு தளத்தில் நுழைந்தாள்.  வசந்த்  மட்டும் காமிராவை கையில் வைத்து ஏதோ செய்து கொண்டிருக்க , மெதுவாக அருகில் சென்று ’பா…’ என்று பயங்காட்டினாள்.   திடீர் தாக்குதலில் திடுக்கிட்டு , லென்ஸை கீழே போடப் பார்த்து , கடைசி நேரத்தில் பிடித்தான். அவளை முறைத்தபடி , “மவளே… கீழே...
    அத்தியாயம் 8 அடுத்த வாரத்தில் ஒரு நாள் , சாருமதி மேடம் படியில் இறங்கும் பொழுது , கால் புரண்டு விட , கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  மூன்று மாதம் கட்டாயம் ஓய்வு தேவையாக  இருக்க , அவர் விடுப்பு எடுத்தார் . “இனி விக்ரம் ஸாரை அடிக்கடி பார்க்கலாம்.” என்றான் அர்ஜுன் .  “என்ன? “என்று...
    அத்தியாயம் 5   பத்து நாள் கடந்திருக்க , அன்று கார் பார்க்கிங்கில், போர்ஸே கார் நின்று கொண்டிருந்தது.  அது இனியாவுடைய கனவுக் கார் , அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அப்போது காமிராமேன் வசந்த் வர ,” என்னைக் காருடன் வைத்து போட்டோ எடு…” என்றபடி பல போஸ்கள் கொடுக்க , ஒவ்வொன்றுக்கும் அவளைக் கேலி செய்தபடி ,...
    அத்தியாயம் 4  ‘வாவ்…!’ என்று அந்த மேஜையில் இருந்த பேனாவை இனியா எடுக்க ,  “அர்ஜுனிடம் கொடு இனியா” , என்றாள் அனு.  “ஏன்? யாருடையது?” என்று வழக்கம் போல் வம்படிக்க , “விக்ரம் சாரோடது , மிகவும் விலை உயர்ந்தது, அர்ஜுன் கொடுத்து விடுவான்…. “ “ஓ! அவன் பெயர் விக்ரமா….” என மனதில் குறித்துக் கொண்டாள் . பின்,...
    காதல் வைபோகமே…….     சண்முகபிரியா அத்தியாயம் 1 சென்னை அண்ணா நகரில் இருந்த அந்த  வீடு ரணகளமாகிக் கொண்டிருந்தது.  அங்கு நம் கதாநாயகி இனியா , தன்னிடம் இருக்கும் உடைகள் அனைத்தையும் கட்டில் மேல் கடை பரப்பிருந்தாள்.   கவிதா உள்ளே எட்டி பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் நகர்ந்தாள்.  அம்மாவை மறித்து ,” பொண்ணு முதன்முதலில் பெரிய சேனலுக்கு வேலைக்கு போகிறாளே ,...
    error: Content is protected !!