Advertisement
அத்தியாயம் 8
அடுத்த வாரத்தில் ஒரு நாள் , சாருமதி மேடம் படியில் இறங்கும் பொழுது , கால் புரண்டு விட , கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்று மாதம் கட்டாயம் ஓய்வு தேவையாக இருக்க , அவர் விடுப்பு எடுத்தார் .
“இனி விக்ரம் ஸாரை அடிக்கடி பார்க்கலாம்.” என்றான் அர்ஜுன் .
“என்ன? “என்று அனுவும் , இனியாவும் பார்க்க ,
“இரண்டு மூன்று புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிற்குத் தயாராக இருப்பதால், சாருமதி மேடத்திற்குப் பதிலாக விக்ரம் ஸார் பொறுப்பேற்றுக்குக் கொள்வார் என ஒரு டாக் ஓடுகிறது…” என்றான் அர்ஜுன் .
ஏன் பாஸ்? விக்ரம் ஸார் தான் இந்த சேனல் முதலாளி . அவர் ஏன் கிரியேடீவ் கெட்டாக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? வேறு யாரையாவது நியமிக்கலாமே?” என இனியா மிகப் பெரிய சந்தேகத்தைதக் கேட்க ,
‘கிரியேடீவ் சைடில் வேலை செய்ய , விக்ரம் ஸாருக்கு ரொம்ப விருப்பம் , அதான் அவரே இறங்கி விடுவார் . பிஸியாக இருந்தால் மட்டுமே , தவிர்ப்பார். மேலும் ஒரு விதத்தில் நிகழ்ச்சியின் தரத்தையும் தீர்மானிப்பதற்காகத் தான் ”
“ஓ…!” என்று முடித்துக் கொண்டாள் இனியா .
அனைவரும் எதிர்பார்த்த மாதிரி விக்ரம் பொறுப்பேற்றுக் கொண்டான் . புதிய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பினால் , சேனலே பயங்கர பிஸியாக இருந்தது.
ஒரு வாரம் சென்றிருக்க விக்ரம் இவர்களின் படப்பிடிப்பு தளத்திற்கு வர , அவன் கண்கள் இனியாவை தேடியது , அறையின் ஓரத்தில் மேஜையில் தலை வைத்துப் படுத்திருந்தாள்.
யாரும் பார்ப்பதற்கு முன் பார்வையைத் திருப்பியவன் , பின் அர்ஜுனிடம் , படப்பிடிப்பு நிலவரத்தைக் கேட்டுக் கொண்டு நகர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து விக்ரமிற்கு ஏனோ மனம் உந்த , மீண்டும் அதே தளத்திற்குச் சென்றான் , அவர்கள் இருந்த அறையைக் கடக்கும் பொழுது உள்ளே பார்த்தான்.
இனியா சற்று சோர்வுடன் , ஆனால் மெல்லிய புன்னகையுடன் கையில் காபியுடன் இருக்க , அவள் அருகில் உதவியாளர் ராஜேஷ் இருந்தான் , அந்த இடமே ஒரே கேலியும் கிண்டலுமாக இருந்தது.
அங்கிருந்த சூழ்நிலை பார்த்து என்ன நடந்திற்கும் என யூகித்துக் கொண்டான் . பின் அங்கு இருந்து நகர்ந்தான் விக்ரம் .
“எங்களுக்கு தலைவலி வந்தபோது காபி கொண்டு வந்தாயா? இனியாவிற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் கவனிப்பு?” என அர்ஜுன் ராஜேஷிடம் வம்பு செய்ய ,
“ராஜேஷ் என்ன சொல்வது…” என்று தெரியாமல் சிரித்து வைக்க,
அவனைக் காப்பாற்றும் விதமாக உள்ளே புகுந்த வசந்த் ,” நீ போனவாரம் அனுக்கு உடம்பு சரியில்லாத போது பயங்கரமாகக் கவனித்தாயே…. , நாங்கள் ஏதாவது கேட்டோமா?” எனக் கலாய்க்க ,
இனியா ஹைபை செய்தாள் . அந்த இடமே கலகலத்தது .
அடுத்தடுத்த நாட்களில் இனியா பிஸியானாள் . தொடர்ந்து படப்பிடிப்பு இருந்தது , ஒரே நல்ல விசயம் , குழந்தைகள் நிகழ்ச்சி என்பதாலும் , பிரபலங்கள் யாரும் இல்லாததாலும் காலையிலே படப்பிடிப்பு இருந்தது , அவளும் அலுவலக வேலைக்குச் செல்வது போல் சுகமாக வந்து போய்க் கொண்டிருந்தாள்
இவள் ஷோ ஒளிபரப்பான முதல் நாள் , அவள் குடும்பமே டிவி முன்னால் குழுமியிருந்தனர். அனைவரும் ரசித்துப் பார்த்தனர் . இனியா குழந்தைகளிடம் மொக்கை வாங்கும்போது , காவியா ஓட்டித் தள்ளினாள் .
இனியா சிணுங்கியபடி , அப்பாவைப் பார்க்க ,
“உன்னுடைய கனவு, ஆசை அதற்கு நீ போட்ட உழைப்பு எல்லாம் உன் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது நன்றாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள் குட்டிம்மா….. “என்றார் கார்த்திகேயன்.
உடனே வேகமாக வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.
“சாதித்து விட்டாய் குட்டிம்மா , ரொம்ப சந்தோஷம்..” என்று கவிதா நெத்தியில் முத்தமிட்டார்.
காவியா சிரித்தபடி இருக்க ,
உடனே இனியா , “ நாளைக்கு என் தோழிகள் கேட்டார்கள் என ஆட்டோகிராப் வாங்க வருவ தானே…. , அப்போது கவனிச்சுக்கிறேன்..” எனக் கெத்துக் காட்டினாள் . ஆக மொத்தம் அவள் வீ.ஜே. பயணம் இனிதே தொடங்கியது .
திங்கள் முதல் வெள்ளி வரை ‘செல்லமே’ ஷோ ஒளிபரப்பாகியது . குடும்பத்தோடு பார்க்கும் நிகழ்ச்சி எனப் பெயர் பெற்றது .
இனியாவிற்கும் நல்ல ரீச் கிடைத்தது.
அத்தியாயம் 9
இரண்டு மாதங்கள் சென்றிருக்க , இவர்களது நிகழ்ச்சி பெரும் வெற்றியைப் பெற்றது .
விக்ரம் அர்ஜுனை அழைத்து , “சனி இரவு ஹோட்டல் ‘தாஜ்ஜில்’ , ‘செல்லமே’ வெற்றி விழா கொண்டாட்டம் “ என அறிவித்தான்.
இனியா பார்ட்டி விஷயத்தைப் பெற்றோரிடம் தயங்கியபடி கூற ,
அவர்களும் இந்தத் துறையில் இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்தே இருந்தனர்.
ஆதலால் இனியாவிடம் , “உன் எல்லைகள் உனக்கு தெரியும் என நம்புகிறோம். கலந்து கொள்… . ஆனால் கவனமாக இரு..” என எச்சரித்து அனுமதித்தனர் .
“எஸ் , கட்டாயமாக அம்மா . நிச்சயமாகக் கவனமாக இருப்பேன்” .
பின் “திரும்புவதற்கு என்ன பிளான் ? அப்பாவைப் பிக்கப் பண்ண அனுப்பட்டுமா ? என்று கவிதா கேட்க,
“வேண்டாம் அம்மா, வசந்த் டிராப் பண்ணுவான்”
“ஓ.கே. கவனமாக இருக்க வேண்டும்.…” என மீண்டும் எச்சரிக்கை செய்து விட்டு நகர்ந்தார்.
அனைவரும் ஹோட்டலில் குழுமியிருக்க , புளூ ஜீனஸும் , சிகப்பு ஃப்ளாஸி பனியனும் இனியா அணிந்திருந்தாள் .
ரொம்ப அல்டரா மார்டனாகவும் இல்லாமல் அதற்காக கட்டு பெட்டியாகவும் இல்லாமல் அந்த இடத்திற்குப் பொருத்தமாய் இருந்தாள். அழகாக இருந்தாள் .
விக்ரம் வழக்கம் போல் தன் வேக நடையுடன் உள்ளே வந்தான் . “ஹேவ் ஃபன் கய்ஸ் , யு டிஸர்வ் திஸ்…” என்று பாராட்டி விட்டு ,
ஹோட்டல் மேலாளரிடம் நன்றாகக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்திவிட்டு , இனியாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டுக் கிளம்பினான்.
வழக்கம் போல் அர்ஜுன் , தன் P.R.O வேலையை ஆரம்பிக்க , “நாம் ஜாலியாக இருக்க வேண்டுமென்பதற்காக , விக்ரம் ஸார் எப்பவுமே விஷ் பண்ணிவிட்டு , உடனே கிளம்பிடுவார்”.
“ஓ …! பரவாயில்லை , ‘தல’க்கு இவ்வளவு இங்கிதம் தெரியுமா? என இனியா நினைத்தாள் . ஆனால் அதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் அர்ஜுனிடம் , “அவர் ஸடேட்ஸ்க்கு நம்ம கூட பார்ட்டி பண்ணுவாரா ?” என முணங்கினாள்.
“அப்படியெயன்றால் அவர் இன்று வர வேண்டிய அவசியமே இல்லை…” என அர்ஜுன் எதிர்வாதம் செய்தான்.
இனியாவும் வேண்டுமென்றே புறம் பேசுபவள் கிடையாது . ஆகையினால் அதில் இருந்த உண்மையை உணர்ந்து அமைதியானாள்.
பார்ட்டியும் ஆட்டம் பாட்டமெனக் களைகட்டியது. இரவு 12 மணிக்கு அனைவரும் கிளம்பினர் .
இரவு நேரத்தில் பெண்கள் தனியாகச் செல்ல வேண்டாம் என்று அர்ஜுன் அனுவை அழைத்துச் செல்வது என்றும் , வசந்த்துடன் இனியா கிளம்புவது என்றும் முடிவாகி இருந்தது .
திட்டம் போட்டதே அர்ஜுன் என்பதால் , அவன் குஷியாக அனுவைக் கூட்டிக்கொண்டு முன்னே கிளம்பி விட்டான்.
வண்டி எடுப்பதற்காக வசந்த் பார்க்கிங் ஏரியாவுக்குச் சென்றிருக்க , ஹோட்டல் ரிசப்ஷனில் போனைப் பார்த்துக் கொண்டு இனியா காத்திருந்தாள்.
அப்போது அதே ஹோட்டலில் நடந்த தொழிலதிபர் பார்ட்டியை முடித்துக் கொண்டு வந்த விக்ரம், இனியா அமர்ந்திருப்பதைக் கண்டான்.
அளன் மனம் உந்த , அவள் அருகில் வந்து ,”இனியா…” என்று அழைக்க ,
அவன் அருகில் வருவதை உணராது போனில் இருந்தவள் , அருகே குரல் கேட்டுத் திடுக்கிட்டு , அவனை கண்டவுடன் சற்றுத் தடுமாறி நின்றாள்.
அவளை உஷ்ணப் பார்வைப் பார்த்தான் விக்ரம் .
என்னவென்று தெரியாமல் இனியா முழிக்க ,” ராத்திரி 12 மணிக்குத் தனியா உட்கார்ந்து இருக்க.. , சுத்தி என்ன நடக்குது? என்று பார்க்காமல் செல்லைப் பார்த்திட்டிருக்க…?” எனக் காய்ந்தான்.
“இனியா நடப்பது என்ன? “என்று கிறகிக்க முயன்று கொண்டிருக்க ,
“சரி வா , நான் டிராப் பண்ணுகிறேன்” என்றான் விக்ரம் .
ஏற்கெனவே விக்ரம் திட்டியதில் கடுப்பாகியிருந்த இனியா , உடனே , “ வேண்டாம் ஸார் , நான் உட்கார்ந்தால் உங்கள் கார் அழுக்காகிவிடும்..…” என்று திரும்பிக் கொடுத்தாள் .
முதலில் புரியாத பார்வை பார்த்தவன் , உடனே விசயத்தை கிரகித்துக் கொண்டான் .
முகத்தில் ஒரு சுவாரஸ்யம் கூட , “ஸ்மார்ட் ஆன்சர்” என்றான்.
உடனே இனியா ,” நான் எப்போதும் ஸ்மார்ட் தான் என்றாள் ,
பின் அவனை மாதிரியே , “தென் , தேங்குயூ ஸார் . நான் வசந்த்தோடு போய் கொள்கிறேன். “
“தென் , ஓ.கே.” என்று தோளை குலுக்கும் போதே அவன் சிரிக்க , அவளும் கண்ணில் குறும்போடு , கெத்தாக பார்க்க ,
அதற்குள் வசந்த் போனில் வாசலுக்கு வரும்படி அழைக்க , தல எதுவும் பேசுவதற்கு முன் வேகமாக ஒரு தலையசைப்புடன் நகர்ந்தாள்.
அவள் மூச்சிறைக்க வருவதைக் கண்டு , என்ன வென்று விசாரிக்க , அவள் பேசியதை மறைத்து மற்றபடி நடந்ததைக் கூறினாள்.
வசந்த் ஆச்சர்யமாகி , “நம்ம விக்ரம் ஸாரா…? டிராப் பண்ணுகிறேன் என்று சொன்னார்…?” எனத் திரும்பத் திரும்பக் கேட்டான்.
“ஆமாம்…” என்று தலையாட்டியபடி , “இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்குது…” என்பது போல் பார்த்தாள்.
“எனக்கு தெரிந்து இது தான் முதல் முறை… ஸார் டிராப் பண்றேன் கேட்டது…”
“ஓ…! , ஒருவேளை தனியாக இருக்கிறேன்…” என்று கேட்டிருப்பார் ,
“அப்படியே என்றாலும் ஏதாவது ஏற்பாடு தான் செய்வார், டிராப் எனக் கேட்டதெல்லாம் ஆச்சரியம் தான். “
பின் வசந்த் குறும்பாக “உன் ரசிகர் பட்டாளம் ராஜேஷில் ஆரம்பித்து விக்ரம் ஸார் வரை நீளுது போ…” என வழக்கம் போல கலாய்க்க ,
“நானே திட்டு வாங்கிட்டு வந்திருக்கேன் . இதில் அவர் எனக்கு ரசிகர் தான் போ… . கடுப்பைக் கிளப்பாமல் , வண்டியை ரோட்டைப் பார்த்து ஓட்டு”
ஆனாலும் “என்னிடம் மட்டும் ஏன்?” என மனதில் எழுந்த கேள்வியை இனியாவால் தவிர்க்க முடியவில்லை.
அதே நேரம் விக்ரம் மனதிலும் இதே கேள்வி தான் ஓடியது.
“நாம் யாரிடமும் இப்படி கேட்டதில்லையே..! , ஒரு வேளை அவளைத் தேவையில்லாமல் பேசியதால் வந்த குற்றவுணர்வால் இருக்குமோ?” என நினைத்தான்.
பின் “அழுதாளே…. பாவப்பட்ட என்று நினைத்தால்… சரியான கில்லாடி தான் . நேரம் கிடைத்தவுடன் சரியான பதிலடி கொடுத்து விட்டாள்..” என நினைத்தான் .
Advertisement