Thursday, May 16, 2024

    உன்னுள் உனதானேன்

    தனக்கு இத்தனை நாள் மெசேஜ் அனுப்பியது, காதலிப்பதாய் கூறியது, இறுதியாய் மருத்துமனையில் தனக்காக அழுதது அனைத்துமே வெண்பா தான் என்பதில் பல முரண்கள் இருக்கவே செய்தது சூர்யாவிற்கு   "இதை யார் கிட்ட கேக்குறது.. இதுவரைக்கும் வெண்பா கிட்ட எந்த மாற்றத்தையுமே பாக்கலியே.. ஒரு வேலை நாம தான் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கோமோ" எண்ணியவனுக்கு பதில் ஏனோ...
    ஆதியை சந்தித்து, வெற்றி ஸ்வாதி காதலை கூறி, அவனின் பாரத்தை குறைக்க நினைத்தான் சூர்யா.. இந்த  திருமண செய்தி வந்ததில் இருந்தே ஆதி,  அஞ்சலி இருவருக்குள்ளும் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது சூர்யாவால். இருந்த பிரச்சனைகள் அனைத்திற்குமே ஒரு தீர்வு வந்ததை போன்ற உணர்வு சூர்யாவிற்கு. மறுபுறம் வெற்றிக்கு ஸ்வாதி தன்னை விரும்புகிறாள் என்பதே நம்பியும்...
    எதை எதையோ மனதில் போட்டு குழப்பியவன், செல்லும் பாதையின் தடம் புரியாமல் எங்கோ பயணித்து கொண்டு இருந்தான் வெற்றி. குழம்பிய குட்டையாய் கிடக்கும் மனதை அமைதி படுத்த தெரியாமல், கிடந்தவன், "கோவிலுக்கு போவோம். அங்கேயாவது நமக்கு நிம்மதி கிடைக்குதான்னு பாப்போம்" என்று எண்ணியவன் அருகில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்குள் நுழைந்தான், அங்காவது நிம்மதி கிடைக்கும் என்று எண்ணி. கண்ணை...
    வெள்ளை பனி சாலையெங்கும் படர்ந்து, இலைமறை காயாய் பாதை தெரிய, விடியற் காலையோ, மழையோ என்பதும் கூட தெளிவாக புலப்படாத அந்த வேளையில், மனதில் ஏதேதோ எண்ணங்களுடன், அந்த சாலையின் அமைதியோடு நடை பழகி கொண்டு இருந்தான் சூர்யா. இந்த தனிமையும் அதன் இனிமையும் அவனை வெகுவாய் கவர, வழிமேல் விழி பதியாமல் சாலை ஓரங்களில்...
    ஸ்வாதியின் அந்த புரியா நடவடிக்கை சூர்யாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், அவர்களுக்குள் இருக்கும் அந்த சொல்லப்படாத அன்பு அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை. "நேத்து வரைக்கும் சின்ன பிள்ளைங்க மாதிரி ரெண்டு பேரும் விளையாடிகிட்டு தானேடா இருந்தீங்க. கல்யாணம்னு சொன்னதும் தான் ரெண்டு பேரோட காதல் வெளிய வருதா. இருக்கட்டும் இருக்கட்டும். எத்தனை நாளைக்கு தான் நீங்களும்...
    சூரியன் தன் வெப்பம் அனைத்தையும் குறைத்து கொண்டு, நிலவை வரவேற்க, குளுமையை பரவ விட்டு இருந்த அந்த அழகிய அந்தி மாலை பொழுதில், " அஞ்சலி, அஞ்சலி " வீடு மொத்தம் அலசிய படி வந்தான் வெற்றி. "அண்ணா நான் கிச்சன்ல இருக்கேன்" குரல் கொடுத்தவள், சர்க்கரை பொங்கலையும், சுண்டலையும் தனி தனி பாத்திரத்தில் போட்ட படி...
    வெளியில் சொல்ல முடியாத வேதனையில் மருகி கொண்டு இருந்தான் வெற்றி. அதற்கு காரணம் ஸ்வாதி அவனை வம்பிழுக்க செய்த செயல் மட்டும் இல்லை, எத்தனையோ ஆசையுடன் தன் எலி குட்டிக்காக வெற்றி காத்திருக்க, வந்து இறங்கிய ஸ்வாதியின் தோரணை அவனுக்கு ஏமாற்றத்தையே தந்து இருந்தது.  இவை எதையும் வெளியில் சொல்லவும் முடியாமல், உள்ளுக்குள் வைத்து மருகும் அவனை...
    தன் ஆசைத் தீர ஆதிக்கு உணவு பரிமாறுவதும், அவனின் தேவை அறிந்து அதற்கு முன்பே செயல் படுவதும் என்று சுழலாய் இயங்கி கொண்டு இருந்தாள் அஞ்சலி. உணவு முடித்து, இருவருக்கும் தனிமை தர விரும்பிய சிவகாமி, வெண்பாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு புறப்பட, செல்லும் வழியில் இறங்கி கொள்ளுங்கள் என்று அவர்களை தன்னுடன் அழைத்து கொண்டான் சூர்யா....
    எப்போதும் படுத்தவுடன் உறங்கும் பழக்கம் கொண்ட வெற்றிக்கு, ஸ்வாதியும் அவள் குடும்பமும் நாளை வருகிறார்கள் என்ற செய்தியை கேட்ட பின்னர், உறக்கம் ஏனோ எட்டாத கனியாகி தான் போனது. மனம் ஏனோ, நினைக்கவே கூடாது என்று நினைத்த பழைய நினைவுகளை கண்முன்னே காட்ட, வெறுப்பும், கோவமும் அதையும் தாண்டி புரியாத ஒரு உணர்வும் சேர்ந்து வர,...
    நேற்றைய நாள் பொழுதும், ஆதிக்காக அஞ்சலி காத்து கிடந்தும் அவன் வராமல் போக, அதுவே அஞ்சலியை வாட்டவும் ஏங்கவும் வைத்தது. "இன்று நிச்சயம் வந்து விடுவான்" என்று சூர்யா கூறிய போதும் கூட, ஏதேதோ சொல்லி மனதை தேற்றியவளுக்கு, "இந்த ஒரு நாள் பிரிவே இத்துணை துன்பத்தை தருகிறதே. அவ்வளவு ப்ரியம் அவன் மேல் தனக்கு வந்து...
    நேற்றைய நாள் பொழுதும், ஆதிக்காக அஞ்சலி காத்து கிடந்தும் அவன் வராமல் போக, அதுவே அஞ்சலியை வாட்டவும் ஏங்கவும் வைத்தது. "இன்று நிச்சயம் வந்து விடுவான்" என்று சூர்யா கூறிய போதும் கூட, ஏதேதோ சொல்லி மனதை தேற்றியவளுக்கு, "இந்த ஒரு நாள் பிரிவே இத்துணை துன்பத்தை தருகிறதே. அவ்வளவு ப்ரியம் அவன் மேல் தனக்கு வந்து...
    "மாமா சாப்பாடு எடுத்து வெச்சிட்டேன். சாப்பிட வாங்க. உங்க மகன் வர நேரம் ஆச்சு. இன்னும் நீங்க தூங்காம இருக்கறத பாத்தா திட்டுவாரு" கிச்சனில் இருந்து நான்காவது முறையாக பார்வதி குரல் கொடுக்க, அது எதையும் பொருட்படுத்தாமல், மருதநாயகம் ஒரு புறம் அமர்ந்து ஐபேடில் எதையோ நோண்டி கொண்டு இருந்தார். அதே சமயம் வீட்டிற்குள் நுழைந்த ஆதி...
    இரவின் இருள் சூழ காரின் வெளிச்சம் அந்த இருளை கிழித்து கொண்டு வர, அந்த இரவு வேளையில் அந்த வீட்டின் முன் வந்து இறங்கினர் அம்மூவரும். வரும் வழியிலேயே, சூர்யா இல்லத்தில் சிறிது காலம் அஞ்சலி இருக்கட்டும், பின் சமயம் பார்த்து தன் வீட்டில் விஷயத்தை கூறி விடுவதாக ஆதி கூற, சூர்யாவும் சரி என்று விட,...
    யாரும் எதிர் பார்க்காத தருணத்தில் அதிரடியாக தாலியை கட்டி முடித்தான் ஆதி.. அவன் மூன்று முடிச்சிடும் வேளையில், அஞ்சலியின் விழி நோக்க, அதில் சிப்பி முத்துக்களாய் இரண்டு துளி நீர் அவன் கையில் பட, முதல் முறை வாழ்வில் குற்ற உணர்வே அவனை சூழ பெற்றவன், அந்த நொடி முதல் அவளை நேர்பட சந்திப்பதை தவிர்க்கவே...
    "யாரா இருக்கும் இந்த புள்ள? பில்டப் எல்லாம் அதிகமா பண்ணாங்களே அந்த பாட்டி, என்னவா இருக்கும்" என்ற கேள்வியே மூவர் மனதிற்கும் ஓட துவங்கியது. எதையும் அதிகம் கண்டு கொள்ளாத வெற்றி மனதில் கூட, 'பல சோகங்கள் இவள் வாழ்வில் உண்டு' என்று கூறவும், சூர்யா துன்பத்தை எல்லாம் நேரில் இருந்து கண்டவன் தானே தன் வீட்டிற்கு...
    "மடக்கான்பட்டி" கிராமத்திற்குள் சீறி பாய்ந்து சென்றது இந்த மூவரும் சென்ற கார். செல்லும் வழியிலேயே, "ஆதி நாம தங்குற இடம் எங்கடா இருக்கு. நாம வரோம்னு சொல்லிட்டல" ஆதியைக் கேட்ட படி வண்டியைச் செலுத்தினான் சூர்யா. "அதெலாம் சொல்லிட்டேன்டா. இதோ இதான் லொகேஷன்" என்ற படி கூகிள் மாப்பை எடுத்து அவனிடம் நீட்டினான் ஆதி. அது காட்டிய வழியில்...
    மருதநாயகம் வீட்டை விட்டு புயல் வேகத்தில் கார் கிளம்பியது. காரணம் ஒன்பது மணிக்கு திண்டுக்கல் வருவதாக கூறி இருக்க, இப்போதே மணி எட்டை நெருங்க, இதில் வெற்றியை வேறு அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசரம் தான் சூர்யாவிற்கு அதிகம் இருந்தது. அந்த ஊரின் பணக்கார குடும்பம் என்ற பட்டியலில் அடுத்து வருவது வெற்றியின்...
    மனம் மயக்கும் மல்லிகை மனமும், சிணுங்கும் கால் கொலுசின் ஒலியும், தோளை மறைக்கும் கூந்தலும், ஓர பார்வையில் ரசித்தவனின் பார்வை, அவளின் இடை கடந்து கழுத்தை அடைந்து மங்கிய நிலவொளியாய் ஒளிரும் அவளின் பூமுகம், தெளிவாகத் தெரியாத போதும் கூட, அது அவன் மனதில் ஒரு நிம்மதியையும், அமைதியையும் கொடுக்க, அதில் லயித்து இருந்தவனின் கனவைக்...
    டீஸர்: கட்டுப்பாட்டை மொத்தமாக இழந்த சூர்யாவிற்கு கோவமோ, குழப்பமோ எதுவோ தந்த உந்துதலில் காற்றை கிழிக்கும் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது அந்த கார்.. காரினுள் இருந்து கேட்ட விசும்பல்கள் அவனை நிதானிக்க செய்ய, உடனே பிரேக்கின் மீது காலை வைத்தவன், நிறுத்திய வேகத்தில் தான் காரினுள் இருந்த அனைவருமே நிஜத்தை உணர்ந்து, சுயத்தை அறிந்தனர் இங்கு எதையும்...
    error: Content is protected !!