Thursday, August 6, 2026

    நெஞ்சத்தின் நாயகன்

    Nenjathin Naayagan 9 3

    0
    “உன்னைப் பாக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வினோ மா. ஒரு கையாலாகாத அண்ணனா இருக்கேன்ல? உன்னை காலம் முழுக்க கண்ணீர் விட வச்சு பாக்கணும்னு என் தலையெழுத்து போல? வினோ மா, நான் வேணும்னா பிரபா மச்சான் கிட்ட பேசவா டா?”, என்று நடித்தான். “நம்ம பேச்சை அவங்க கேப்பாங்கன்னு நினைக்கிறியா?” “அப்படின்னா அர்ச்சனா...

    Nenjathain Naayagan 8 3

    0
    தானும் அவளை இறுக அணைத்துக் கொண்டு அவள் கூந்தலில் முகம் புதைத்தான். இரவு நேரம், பேச்சற்ற மௌனம், நிலவின் ஒளி என அழகாக இருந்தது அந்த தருணம். அந்த நிலையை கலைக்க இருவருக்குமே மனதில்லை. இந்த அமைதியையும் நிம்மதியையும் எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்கி விட முடியுமா என்ன? அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்? அந்த...

    Nenjathain Naayagan 8 2

    0
    அவர்கள் வந்ததும் வீட்டில் இருந்த மற்றவர்கள் அனைவரும் வாசல் வந்து வரவேற்றார்கள். யசோதா பொதுவாக “வாங்க”, என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டாள். அவளால் இன்னும் அர்ச்சனாவை மருகமகளாக முழு மனதாக அங்கீகரிக்க முடிய வில்லை. ஆனால் மஞ்சுளா மற்றும் அஞ்சலியிடம் நன்றாக பேசினாள். அதை தான் மீனாட்சி மற்றும் அர்ச்சனாவால் தாங்க முடிய...

    Nenjathain Naayagan 8 1

    0
    அத்தியாயம் 8  உந்தன் மூச்சுக் காற்றின் வெப்பத்தை சுமந்து செல்கிறேன் உந்தன் அருகாமையில்!!! அப்போதும் அவன் தயங்க “உங்க கூட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கணும்னு ஆசைப் படுறேன். இன்னும் நாலு நாள் கழிச்சு நிச்சயதார்த்தம். அப்ப தான் உங்களைப் பாக்க முடியும். அதான் சொல்றேன் வாங்க”, என்று அவள் சொல்லியதும் அவன் உருகிப் போனான். இருவரும் காம்பவுண்ட் கேட் திறந்து...

    Nenjathin Naayagan 7 4

    0
    பின் அங்கே இருந்து கிளம்பி அவளை கடைக்கு அழைத்துச் சென்றான். அவள் மறுக்க மறுக்க அவளுக்கு தேவையான பொருள்கள், உடைகள், நகைகள் என வாங்கிக் கொடுத்தான். “எதுக்கு பிரபா இதெல்லாம்? இவ்வளவு வேண்டாமே?”, என்று மறுத்தாள். “நீ ஒரு பொண்ணு அர்ச்சனா. உனக்கு இது புரியாது”, என்று அவன் சொல்ல அவனை குழப்பமாக பார்த்தாள். “நான் கேட்டதுக்கும் நீங்க...

    Nenjathin Naayagan 7 2

    0
    அவனும் வலக் கையை எடுத்து அவளுடைய தலையை ஒரு முறை வருடி விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். இந்த நிமிடம் இருவருக்கும் நிறைவாக இருந்தது. ஆண்டாண்டு காலம் ஒன்றாக வாழ்ந்தது போன்ற உணர்வு எழுந்தது இருவருக்கும். ஒரு இடத்தில் கார் நின்றதும் அவன் தோளில் இருந்து விலகி கண்களைத் திறந்து பார்த்தாள் அர்ச்சனா. “பிரபா...

    Nenjathin Naayagan 7 1

    0
    அத்தியாயம் 7 உன் வார்த்தைகள் சேகரித்து உருவாக்கப் பட்டது தான் எந்தன் காதல் புத்தகம்!!! கார் சென்னைப் போக்குவரத்தில் கலக்க ஏசி காற்று அவளுக்கு மூச்சு மூட்டுவது போல இருந்தது. “என்ன ஆச்சு அமைதியா வர?”, என்று கேட்டான் பிரபாகரன். “உங்களை எப்படிக் கூப்பிடணும்னு யோசிச்சிட்டு வரேன்” “உங்க அம்மா உங்க அப்பாவை எப்படிக் கூப்பிடுவாங்களோ அப்படிக் கூப்பிடு”, என்று அவன் சாதாரணமாக சொல்ல...

    Nenjathin Naayagan 6 3

    0
    “கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்க. ஏன் உனக்கு வர இஷ்டம் இல்லையா?” “நான் அப்படிச் சொன்னேனா?”, என்று அவள் கேட்கும் போதே அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். ஏதேதோ பேச வேண்டும் என்று இருவருக்கும் இருக்கிறது தான். ஆனால் என்ன பேச என்று தெரியாததால் அமைதியாக சாப்பிட்டார்கள். கிளம்பும் போது “நிறைய பேசணும்னு...

    Nenjathin Naayagan 6 2

    0
    உள்ளே வந்தவனைக் கண்டு திகைத்து எழுந்து நின்ற அர்ச்சனா “பிரபா நீங்களா? இது என்ன விளையாட்டு?”, என்று கேட்டாள். சிரிப்பு வந்தாலும் அவன் வந்ததில் அவளுக்குள் ஒரு பரபரப்பு வந்தது. “மேடமை வேற எப்படி பாக்குறது? பெர்ஸ்னலா பேசணும்னு சொன்னா பாக்க முடியாது. அதான்”, என்று சொல்லி அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான். “அதுக்குன்னு இப்படி...

    Nenjathin Naayagan 6 1

    0
    அத்தியாயம் 6  சிற்பி வடித்த சிலை நீயோ? ஓவியன் வரைந்த ஓவியம் நீயோ? எது தான் நீ என்று தேடுகிறேன்!!! “அவளுக்கு எவ்வளவு வன்மம் பாத்தியா டா? என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்தப் பாத்திருக்கா”, என்று வேதனையாக சொன்னார் சொக்கலிங்கம். “பொசஸ்ஸிவ்ல இதெல்லாம் நடக்குறது தான் சொக்கு. இனிமே கவனமா இருக்கணும்னு தான் உன் கிட்ட சொல்றேன். அப்புறம் பிரச்சனை உன்...

    Nenjathin Naayagan 5 3

    0
    “என்னால நம்பவே முடியலை. வேணுவா இப்படி? பாக்க அமைதியா எவ்வளவு நல்ல பையனா இருந்தான்? இப்ப என்ன வீட்டுக்குள்ள கலகத்தை உண்டாக்குறான். தெரியாம வர்ஷினியைக் கொடுத்துட்டோமோ? உன் கல்யாணத்துல பிரச்சனை பண்ணுறதுல அவனுக்கு என்ன லாபம்?” “தெரியாது பா. நேத்து அம்மாவுக்கு கால் வரும் போது அவன் முகத்துல அப்படி ஒரு சந்தோசத்தைப் பாத்தேன். அம்மா...

    Nenjathin Naayagan 5 2

    0
    அடுத்த நாள் காலையில் எப்போதும் போல் எழுந்து அலுவலகம் கிளம்பி கீழே வந்தான் பிரபாகரன். சாப்பிட அமர்ந்தவன் யசோதா முகத்தில் இருந்த கோபத்தில் புருவத்தை உயர்த்தினான். “நேத்து அவ்வளவு தூரம் பேசின பிறகு நல்லா தானே இருந்தாங்க. இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலையே?”, என்று எண்ணி “அம்மா என்ன ஆச்சு? உங்க முகமே சரியில்லை?”, என்று...

    Nenjathin Naayagan 5 1

    0
    அத்தியாயம் 5  உன்னை நெருங்கி வர முயல்கிறேன் உந்தன் நினைவுகளை சுமந்து கொண்டு!!! “இருந்தாலும் என்ன? உங்க கோபம் என்னன்னு சொல்லுங்க”, என்று கேட்டான் பிரபாகரன். “அவ குடும்பம்....?”, என்று இழுத்தாள் யசோதா. “சொக்கலிங்கம் மாமா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா மா? இந்த உலகத்துல அது சகஜம் தானே?” “அதை தப்புன்னு சொல்லலை” “அப்புறம் எது உங்க கண்ணை உறுத்துது?” “அவர் அர்ச்சனா அம்மாவை வேண்டாம்னு...

    Nenjathin Naayagan 4 3

    0
    அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கூட “இவ்வளவு பிரச்சனையோட இந்த கல்யாணம் நடக்கணுமா? இந்த அண்ணன் பிரச்சனையை விட்டுட்டு வேற பொண்ணை மேரேஸ்ஜ் பண்ணிக்கலாமே?”, என்று தான் எண்ணினான். தோட்டத்துக்கு வந்த பிறகு அர்ச்சனா மற்றும் பிரபா இருவரும் அமைதியாக நின்றார்கள். அர்ச்சனா கோபத்தில் இருந்தாள் என்றால் பிரபாவோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது...

    Nenjathin Naayagan 4 2

    0
    “யசோதா பொறுமையா உக்கார்”, என்று சக்கரவர்த்தி சொன்னதும் “என்னங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு. நீங்க பொறுமையா உக்காரச் சொல்றீங்க?”, என்று கேட்டாள். “எனக்கு மரியாதை கொடுக்குறதா இருந்தா உக்கார். இல்லைன்னா வெளிய போ”, என்று சக்கரவர்த்தி சொல்ல “உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க? நமக்கு இந்த சம்பந்தம் வேண்டாம். வாங்க...

    Nenjathin Naayagan 4 1

    0
    அத்தியாயம் 4  என்னவள் கூட ரதியின் இனம் தான் என்னை மன்மதனாக்குவதால்!!! அவளும் தயக்கம் உதறி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அர்ச்சனா. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு தடுமாற்றமாக வந்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம் அவள் மனதில் பதிந்து போனது. “எவ்வளவு அழகா கம்பீரமா இருக்கான்? சினிமா ஹீரோ எல்லாம் இவன் கிட்ட தோத்துருவாங்க போல”, என்று எண்ணினாள். அப்படி...

    Nenjathin Naayagan 3 3

    0
    “அவங்க வந்துட்டாங்க போல. வா”, என்று சொல்லி வாசலுக்கு சென்றார். மொத்த குடும்பமும் காரிலிருந்து இறங்க மீனாட்சி மற்றும் சொக்கலிங்கம் இருவரும் இரு கரம் கூப்பி அனைவரையும் வர வேற்றார்கள். அந்த மரியாதையே யசோதாவுக்கு பிடித்து விட்டது. பிரபாகரனை பார்த்ததும் இன்னும் அதிகமாகவே மீனாட்சிக்கு பிடித்து விட்டது. உள்ளே வரும் போதே சக்கரவர்த்தி காதில் “நல்ல மரியாதை...

    Nenjathin Naayagan 3 2

    0
    இப்போது அவள் தன்னைப் பார்த்ததும் நேற்று அவள் தன்னைப் பார்த்ததை நினைவு கூர்வாளா? இல்லை என் முகத்தை மறந்திருப்பாளா? கட்டாயம் மறந்திருப்பாள். ஒரு நாளைக்கு பல பேரை பார்க்கும் அவளுக்கு என் முகம் மட்டும் எப்படி நினைவிருக்கும்? ஆனா ஒரு நாள் தானே ஆகிருக்கு? கண்டிப்பா மறந்திருக்க மாட்டா? நினைவு வச்சிருந்தா என்னைப் பாத்ததும்...

    Nenjathin Naayagan 3 1

    0
    அத்தியாயம் 3  பாவையவளின் விழி மொழியும் இதழ் மொழியும் படைக்கிறது பல கவிதைகளை!!! “இந்த விஷயம் ரொம்ப நாள் மறைக்க முடியாது தான் பிரபா. ஆனா எல்லாம் முடிவு பண்ணிட்டா உன் அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா. அவ கிட்ட பொறுமையா சொல்லிக்கலாம். உனக்கு ஓகே தானே?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி. “எனக்கு சம்மதம் பா. மேற்கொண்டு பேசுங்க”, என்று அவன்...

    Nenjathin Naayagan 2 4

    0
    வேறு ஒரு ஹாஸ்பிட்டலில் வேலை செய்தாலும் நோயாளிக்கு எது சரியான மருத்துவம் என்று எடுத்துச் சொல்லும் அவளை நினைத்து கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது. “இன்னும் பணத்தை மட்டுமே மதிக்காத நல்ல டாக்டர்ஸ் எல்லாம் இருக்காங்க போல?”, என்று எண்ணிக் கொண்டான். மற்ற படி அவளைப் பற்றி வேறு எண்ணம் எல்லாம் இல்லை. அதே நேரம்...
    error: Content is protected !!