Kaathal Noozhilai
காதல் நூலிழை
அத்தியாயம் 12
உனக்குள் இருக்கும் நான்
காதல் தூரிகையால்
உன் உள்ளத்தில்
வண்ணம் தீட்டுகிறேன்!!!
திருமணம் ஆகி மூன்று மாதம் முடிந்த நிலையில் ராணிக்கு பணம் அனுப்பி வைத்தான் சித்தார்த். அந்த பணத்தை வைத்து ராணியும் மூணு பவுன் செயினை திருப்பி விட்டாள்.
அது மட்டுமல்ல, சித்தார்த்துக்கு ஒரு சீட்டு விழுந்ததும் அந்த பணத்தை அப்படியே ராணி கையில் கொடுத்தான். அந்த...
சிந்து கிளம்பலாம் என்று சொல்ல, “இரு சிந்து என் அத்தை பிள்ளைங்க கூட போட்டோ எடுக்கல?”, என்று சொல்லி இருக்க வைத்தான்.
“அப்ப அவங்களை கூப்பிடுங்க”
“இப்ப வருவாங்க”, என்று சொன்னவன் அவளை தனியே விட்டு விட்டு சென்றும் விட்டான். பின் கால் மணி நேரத்துக்கும் மேலே அவள் அவளுடைய தோழிகளுடன் தான் இருந்தாள்.
பின் அவனுடைய ஐந்து...
காதல் நூலிழை
அத்தியாயம் 13
காதல் என்ற
மயிலிறகால் என் உள்ளம்
வருடி தொல்லை
செய்கிறாயே அன்பே!!!
அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் போனுக்கு மட்டும் அழைப்பாள் பிரேமா. அந்த நேரத்தில் ஏதோ வேலை இருக்கிறது என்பது போல அங்கிருந்து சென்று விடுவாள் சிந்து.
“உன்னை எங்க அக்கா கேட்டா சிந்து. அக்கா பிள்ளைகளும் அத்தை எங்க மாமான்னு கேட்டாங்க”, என்றான் சித்தார்த்.
“உங்க அக்கா...
காதல் நூலிழை
அத்தியாயம் 19
கனவோ கற்பனையோ
நிஜமோ நிழலோ
அனைத்தும் நீயாகினாய்!!!
ஒன்பதரை மணிக்கு சீவி சிங்காரித்து வந்து இறங்கினார்கள் தாயம்மாவும் சுந்தரமும். “எதுக்கு இவ்வளவு லேட்டா வறீங்க? நல்ல நேரம் முடிஞ்சு போச்சு”,என்று சிறு கேள்வி கூட கேட்காத சித்தார்த்தைப் பார்த்து எரிச்சல் வந்தது சிந்துவுக்கு.
“உன் அத்தையை பால் காய்க்க சொல்லு சிந்து. பின்ன எதுவும் சொல்ல போறாங்க”,...
அத்தியாயம் 9
பனித்துளி என்று
தீண்ட நினைத்தேன்
பின் தான் தெரிந்தது
நீ என்னைச் சுடும்
தீப்பொறி என்று!!!
அவளுடைய வீட்டில் இருந்த வரை ராணி செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவே. மற்ற படி இங்கு வந்து தான் அவள் சமையலே செய்கிறாள். முதல் முறை சமைக்கும் போது குழம்பு எப்படி இருக்குமோ? ஏதாவது குறை சொல்வார்களோ என்று பயந்தாள்.
அது காலியாகும்...
அவனுக்கு தெரியும் சிந்து அவனுக்கு கிடைத்த வரம். அவன் இளைப்பாற அவனுக்கு கிடைத்த நிழல். தன்னுடைய அக்கா, குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்க, அண்ணன் வெளிநாட்டில் இருந்தாலும் குடும்ப வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்க, கல்யாணம் முடிக்க வேண்டிய வயதில் தாயம்மாவால் சித்தார்த் மட்டும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருந்தான்.
அவளுக்கு ஹாஸ்பிட்டலுக்கு அலைந்தே அவனுக்கு திருமண வயது...
அத்தியாயம் 15
அழகான உன் பிறை
முகம் கண்டு
என்னுள் மலர்கிறது
பலவண்ண மலர்கள்!!!
பணம் கட்டி முடித்து வந்த சித்தார்த் “வா சிந்து கிளம்பலாம்”, என்று அழைத்தான்.
அவனுடன் கிளம்பி சென்றவள் அமைதியாக சென்றாள். வீட்டுக்கு செல்லும் வரை இருவருக்குள்ளும் மௌனம் தொடர்ந்தது.
இறங்கும் போது “இனி யாருக்கும் பட்ட பேர் வச்சு கூப்பிட மாட்டேன் போதுமா? பிளீஸ் டி. சிரி”, என்றான்...
காதல் நூலிழை
அத்தியாயம் 18
மண்ணில் புதைந்த விதை
போல என்னுள் விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறது
உன் மீதான காதல்!!!
காதல் நூலிழை
ஒரு நாள் “குவாட்ரஸ் கிடைக்காது போல பாப்பா”, என்று ஆரம்பித்தான் சித்தார்த்.
அவன் சொன்னதைக் கேட்டு திகில் அடைந்த சிந்து “என்ன ஆச்சு?”,. என்று கேட்டாள்.
“இன்னைக்கு மேனேஜர் கிட்ட அதை பத்தி பேசுனேன். எல்லாருக்கும் வீடு ஆளாட் பண்ணிட்டோம். வேற வீடு...
அவர் இறந்தது வலி தரக் கூடியதாக தான் இருந்தது. அப்போது அழுதவளை தேற்றியது சித்தார்த் தான். அவருடைய அடக்கம் முடிந்து அடுத்த நாளில் விஸேஷம் வைத்திருந்தார்கள். சமந்தாருக்கு செய்ய வேண்டும் என்பதால் அங்கு வந்தார் சித்தார்த்தின் அப்பா சுந்தரம்.
சிந்துவின் அப்பா சுந்தரம் அன்று கொஞ்சம் குடித்திருந்தார். ஆனால் ஒரு நொடி கூட நிதானம் தவற...
காதல் நூலிழை
அத்தியாயம் 17
காயம் தரும் கத்தி
நீ என்று எண்ணினேன்
அந்த காயத்துக்கு
மருந்தும் நீயே
என்று உணர்த்தி விட்டாய்!!!
பங்சனுக்கு வந்த தாயம்மா சுந்தரம் இருவரும், சிந்துவிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அவளும் அவர்களை பாக்க கூட விரும்பாதவள் போல இருந்தாள்.
கிளம்பும் போது சித்தார்த் மட்டும் அவர்களிடம் கிளம்புறோம் என்று சொல்லி விட்டு வந்தான். ஒரு மணிக்கு...
காதல் நூலிழை
அத்தியாயம் 16
முகிலினை
தூது விட்டேன்
உன் இதயத்தை திருட அல்ல,
உன்னையே திருட!!!
சிந்து கண் விழித்த போது சித்தார்த் தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். முன் தினம் அவள் அருகில் படுக்க வந்தவனை “என்கிட்ட படுக்காத தூரப்போ”, என்று தான் துரத்தியது நினைவில் வந்தது.
கோபத்தை எல்லாம் வெளியே கொட்டி, அழுது தூங்கி என்று மனதும் சமன் பட்டது போல...