உயிரே எனை பிரிந்ததேன்
அத்தியாயம் -34
காலை உறக்கம் கலைந்து எழுந்த சுவாதி இறவு நடந்ததை நினைத்து பெரு மூச்சை வெளியிட்டவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்றாள்.
கீதா புது புடவை சகிதம் கல்யாண பெண்ணாக ரெடியாகி ஏதோ யோசித்து கொண்டு இருந்தாள். அவளை நெருங்கிய சுதி என்ன மேடம் இப்பயே டூயட் பாட போய்டீங்களா?எங்க சுவீஸா?இல்ல காஷ்மீரா? என்று...
அத்தியாயம் -33.
காலையில் அவளது மொபைல் விடாமல் அடிக்கவும் யார் இந்த நேரத்தில் என்று யோசித்து கொண்டே போனை எடுத்தவளை கீதாவின் படபட பேச்சே எதிர் கொண்டது.அவளிடம் பேசி அங்குதான் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் அடுத்த வாரம் வருவதாக சொல்லி வைத்தாள்.தன் அம்மாதான் தனக்கு இப்படி ஒரு வழியை வழங்கினார் என்று யோசித்து குளித்துவிட்டு கீழே...
அத்தியாயம்-32
அர்ஜீன் பேசியதை கேட்ட சுவாதிக்கு கோபம் கண்மண் தெரியாமல் ஏற,அங்கு அர்ஜீன் வைத்திருந்த டீ கப்புகள் கண்ணில்பட அவற்றை எடுத்து தரையில் அடித்தாள்.அர்ஜீன் பேச்சு நின்றவுடன் அவனையே கோபமாக உருத்து விழித்தவள் விரிந்திருந்த தலை முடியை அள்ளி கொண்டையாக போட்டு கொண்டு,அவன் சட்டையை பிடித்து உளுக்கி என்ன சொன்னாய்?மறுபடியும் சொல்.உன்னை நான் திருமணம் செய்து...
அத்தியாயம்-30
ராமை போலீஸ் அழைத்து சென்ற பிறகு சுவாதியை தேடியவன் இறுதியாத கிச்சனில் தாவணி இல்லாமல் இறத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவளை பார்த்து அதிர்ந்து போனான்.வேகமாக அவள் அருகில் சென்றவன் தூக்கி மடியில் படுக்க வைத்து கண்ணங்களை தட்டி அவளை எழுப்ப முயன்றான்.
தனது சட்டையை கழட்டி அவளுக்கு போட்டு விட்டவன். ஏன் டி இப்படி பண்ணுன...
அத்தியாயம்-29
அடுத்த நாள் எப்போதும் போல் லட்சுமியை செக் செய்ய சென்றவன்.சுவாதி வீடு கும்பலாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க சுவாதி அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம் அதனால் இன்றே நிச்சயமும். ஒரு வாரத்தில் திருமணம் என்று ராம் வீட்டில் இருந்து வந்து பேசி சென்றனர் என்று ஒரு வயதான பாட்டி சொல்லிவிட்டு அந்த பொண்ணு...
அத்தியாயம்-27
மறு நாள் யாருக்கும் காத்திராமல் எப்போதும் போல் விடிந்தது.இருவரை தவிர இரவு முழுவதும் தான் மாலதிக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து அர்ஜூனும்,தன் அக்கா காதலித்தவனையா தானும் காதலித்தோம் என்ற குற்ற உணர்ச்சியில் சுவாதியும் வெகு நேரம் அழுதுவிட்டு காலை லேட்டாக எழுந்தனர் ஆளுக்கொரு முடிவுடன்.
சுவாதியிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று அர்ஜூனும்,அஜூ என்று...
அத்தியாயம்-24
சுவாதி சொன்னதையே சொல்லி புலம்பி கொண்டு இருக்க, ஐ.சி.யூ வில் இருந்து வெளியில் வந்த நர்ஸ் சுதிமா யாருங்க வந்துட்டீங்களா பேசண்ட் கூப்பிடறாங்க என்று சொன்னவுடன் இல்ல நான் வரமாட்டேன்,நான் வரமாட்டேன் என்று கத்தி கொண்டே இருந்தவளை பிடித்து அமர வைத்த அலமேலு நீங்க போங்க மேடம் நான் அனுப்புகிறேன் என்று கூறி அவரை...
அத்தியாயம்-23
லட்சுமி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க,தான் ஏன் அந்த கல்யாணத்துக்கு போனோம் என்று நொந்து கொண்டாள் மாலதி.ராம் மாலதியின் வீட்டிற்கு யாரும் போக முடியாதபடி எந்நேரமும் காவலுக்கு ஆளை வைத்தான்.
மாலதியை பார்க்க போன ரம்யாவை மிரட்டினர். அதனால் அவளின் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று ரம்யா அப்பாவின் தங்கை கிராமத்துக்கு அழைத்து...
அத்தியாயம்-21
சுவாதியும்,மாலதியும் சிரிப்பதை பார்த்த ரம்யா எதற்காக டி சிரிக்கறீங்க வருகிற அவசரத்தில் வீட்டில் சாப்பிடாமல் வந்துவிட்டேன்.அதான் அம்மா டீயும் இரண்டு பிஸ்கட்டும் கொடுத்தார்கள் வேண்டாம் என்று சொன்னால் அம்மா மனசு கஷ்டபடுமே என்று நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்று சொன்னவளை பார்த்த சுவாதி
குட்டிமா நல்லா யோசிச்சுக்கோ நீ இந்த சாப்பாட்டு ராமிகூட தான்...
அத்தியாயம்-19
கீதாவின் தெளிவான பேச்சை கேட்டவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை ஏற்று கொள் மனமே.இவள் உனக்கானவள் இல்லை.அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமானவள். இனி இவள் வாழ்வில் தலையிட கூடாது. வேறு ஒருவனை மனதில் நினைத்து கொண்டிருப்பவளை நீயும் நினைப்பது பாவம் என்று தனக்குள் கூறி கொண்டு உன் அண்ணனின் வாழ்வையாவது சீர் செய்.அதுதான் இப்போது...
அத்தியாயம்-17
வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனை,அபியின் அப்பா என்ற குரல்தான் வரவேற்றது.அவனின் குரலில் தனக்குள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தவன் வேகமாக அபியின் அருகில் சென்று அவனை தூக்கி முத்தமிட துவங்கினான்.
என்ன கண்ணா என்ன வேண்டும் உனக்கு இன்னொரு முறை கூப்பிடு என்று கேட்டு மகிழ்ந்தான்.தன் வருத்தத்தை புரிந்து கொண்டு சுவாதி தனக்காக,தன் சந்தோஷத்துக்காக அபியை...
அத்தியாயம்-16
ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியேறிய சுவாதி ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்வதற்குள் சில முடிவுகளை எடுத்தால். அதன்படி வண்டியில் வரும்போதே தன் அக்காவின் பழக்கம் போல் தூங்கிய மகனை கண்ணில் நீருடன் பார்த்தவள் உன்னை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.நாம் இங்கு இனி இருக்க வேண்டாம் என்று கூறி படுக்கையில் படுக்க வைத்தவள்.தன்னுடைய...
அத்தியாயம்-14
கீதா பயத்துடனே இந்த முறையாவது அம்மா கண் விழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அபியை தூக்கி கொண்டு வள்ளியை பார்க்க சென்றாள். அபியை பார்த்த கீதா பாட்டியுடன் பேசு கண்ணா என்னுடன் பேசமாட்டிகிறார்கள் என்றாள் தொண்டை அடைக்க.
அபி வள்ளியிடம் வந்தவன் பாத்தி எந்துதீங்க பாத்தி வீத்துக்கு போதாம். நான் இனி குத் பாயா இதுப்பேன்.கீது...
அத்தியாயம்-12
என்ன......எப்படி அவளை அவளுடைய ஆபிஸில் இறக்கிவிட்டுதானே நான் வந்தேன்.அது மட்டும் இல்லாமல் உங்கள் பிளானை பற்றி இப்போதுதான் என்னிடம் சொன்னீர்கள்.எந்த தைரியத்தில் இப்படி செய்தீர்கள் என்றால் கோபமாக.
உன் தோழியின் நல்வாழ்விற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீ நினைப்பது எனக்கு தெரியும். அதனால் எப்படியும் என் பிளானிற்கு நீ ஒத்து கொள்வாய் என்றும் எனக்கு...
அத்தியாயம்-10
கீதா அபிக்கும் நகுலனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கவும் அவளை ஆச்சரியமாக பார்த்தவன்.என் பெயர் நகுல் என்றவனை நக்கலாக பார்த்து அதுதான் சொல்லிட்டிங்களே என்றவளை கூர்மையாக பார்த்தவன்.என் அண்ணன் பெயர் அர்ஜூன் என்றான்.
ஓஹோ.பிரைம் மினிஸ்டர் தம்பியாடா நீ.
என்ன. நகுலன்.
அட என்னப்பா நீ.பிரைம் மினிஸ்டர் பேர்தானே அர்ஜீன் என்றாள் நக்கலாக.
அவளை கூர்மையாக பார்த்தவன் அபியின்...
அத்தியாயம்-9
கீதாவின் கேள்விக்கு பதிலாக அவனிடம் இருந்து பேசலாம் அதற்குதானே அழைத்து செல்கிறேன். அதற்குள் என்ன அவசரம் என்றான் அலட்சியமான தோள் குலுக்கலுடன்.
அவனின் ஒருமை அழைப்பு மனதை பாதிக்க ஹே நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு போனா என்னடா அர்த்தம்.முதன் முதலில் பார்க்கும் பெண்ணிடம் இப்படிதான் பேசுவியா மரியாதை கொடுத்து பேசு என்றாள்.
ஹோ அப்புடியா டார்லிங்...
அத்தியாயம்-8
ஆறடி உயரத்துடனும் கோதுமை நிறத்துடனும் கூர் நாசியுடன் சற்று முன் குழந்தைகள் விளையாடுவதை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன், இப்போது தன்னை இமைக்காமல் பார்ப்பவனின் பார்வை தன்னுள் அதிர்வை ஏற்படுத்துவதை உணர்ந்தாள். அதை பற்றி மேலும் யோசிக்காமல் ஒதுக்கியவள்.அந்த ரணகனத்திலும் பனை மரத்தில் பாதி இருப்பான் போல என்று கிண்டலாக நினைத்துக்கொண்டாள்.
அபி கீதாவை பிடித்து உளுக்கவும்...
அத்தியாயம்-7
என்ன............... என்று கத்திய கீதா.அபி செல்லம் நாளைக்கு ஸ்கூல்டா என் அம்மாவ கூட சமாளிச்சுருவேன்.உன் அம்மாவ சமாளிக்க முடியாது டா வேற எதாவது என்று சொல்ல போனவளை அபி கூர்மையாக பார்த்தான்.
அப்பா..... யார் பார்வைடா இது இப்புடி பாக்கற என்று மனதுக்குள் நினைத்து கொண்டாலும் இவளும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
கீதாவையே பார்த்த அபி...
அத்தியாயம்-6
அபியின் அழு குரலில் தூக்க கலக்கத்துடனே மாடி ஏறியவள் அங்கு சுதி அபியை அடிக்க கை ஓங்கியதை பார்த்தவள் சுவாதி என்று அழைத்து அவள் செயலை தடுத்தவள் வேகமாக சென்று அபியை கைகளில் தூக்கி கொண்டவள் சுவாதியை முறைத்தாள்.அவள் தூக்கமும் போன இடம் தெரியாமல் சென்றது.அடியே எதுக்கு டி குழந்தையை அடிக்க போற உனக்கு...
அத்தியாயம்-5
அதே நேரம் சென்னையில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கு அந்த தெருவில் இரவு பதினொரு மணி போல் பெரிய பங்களாவின் முன் வந்து நின்ற காரில் இருந்து இறங்கினான் அர்ஜீன்.வீட்டின் உள் நுழையும் போது மிகவும் சோர்வாக உணர்ந்தான்.ஹாலில் உள்ள சோபாவில் தொப்பென்று அமர்ந்தவன் கண்களை மூடி சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.
ஒரு வலை கரம்...