Advertisement

அத்தியாயம்-19

கீதாவின் தெளிவான பேச்சை கேட்டவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை ஏற்று கொள் மனமே.இவள் உனக்கானவள் இல்லை.அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமானவள். இனி இவள் வாழ்வில் தலையிட கூடாது. வேறு ஒருவனை மனதில் நினைத்து கொண்டிருப்பவளை  நீயும்  நினைப்பது பாவம் என்று தனக்குள் கூறி கொண்டு உன் அண்ணனின் வாழ்வையாவது சீர் செய்.அதுதான் இப்போது முக்கியம் என்று அவளை ஒரு அன்னிய பார்வை பார்த்து பேச ஆரம்பித்தான்.

இங்க பாருங்க மேடம் நீங்க சொல்வது சரிதான் இருந்தாலும் நாம் இருவரும் கணவன் மனைவியாக நடிக்க போகிறோம் இதனால் உங்கள் வாழ்வில் எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது.அதனால் நான் உங்கள் காதலனுடன் பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும் அதனால் அவருக்கு போன் செய்யுங்கள் நான் இப்போதே பேச வேண்டும் என்றான்.

கீதாவோ இவன் என்ன லூசா நாம் என்ன சொன்னாலும் நம்புகிறான்.இவனிடம் தான் சொன்னோம் திருமணத்தில் விருப்பம் இல்லை வெளிநாடு போக போகிறேன் என்று,இப்போது காதலிக்கிறேன் என்று கூறுகிறேன் அதையும் நம்புகிறான் என்று எண்ணியவள்.வடிவேலு பாணியில் நீ ரொம்ப நல்லவன் என்று மனதில் கூறி நகைத்தாள் அவளுக்கு அப்போது புரியவில்லை அவள் கூறிய பொய் அவள் வாழ்விலேயே விளையாட போகிறது என்று.

என்ன இருந்தாலும் நகுலன் பன்மையில் அவளுக்கு மரியாதை கொடுத்து,யாரோ போல் பேசியது அவள் மனதை பாதிக்கதான் செய்தது.அவளேதான் அவனை மரியாதை கொடுத்து பேச சொன்னது.ஆனால் அவன் மரியாதை கொடுத்து பேசும் போது ஏன் மனது கஷ்டபடுகிறது என்று யோசித்திருந்தாள்,அப்போதே அவள் வாழ்வு பிரச்சனை இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ.

கீதா இதைபற்றி யோசித்து கொண்டிருக்க.நகுலனோ காதலனைபற்றி பேசியவுடன் கனவு கான ஆரம்பித்துவிட்டாள் போல என்ற கடுப்புடன் அவளை பிடித்து உளுக்கி உன்னிடம்தான் பேசி கொண்டிருக்கிறேன் என்று கடுப்படித்தான்.

கீதாவோ சுய நினைவுக்கு வந்தவள் கையை எடுங்க எனக்கு நன்றாக காது கேட்கும் என்றாள்.இப்போது இவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்து இப்போது அவர் வேலையாக இருப்பார் அதனால் இன்னோரு முறை அவர் பேசும் போது எப்போது பிரியாக இருப்பார் என்று கேட்டு வைக்கிறேன்.அப்போது பண்ணலாம்.என்னை கேள்வி கேட்டது போதும் நான் கேட்டதுக்கு என்ன பதில் என்று கேட்டவளை புரியாமல் பார்த்தான் நகுலன்.

நாம் ஒருவிஷயம் பேசவில்லை நிறைய பேசினோம் அதனால் நீங்கள் எதைபற்றி கேட்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என்று நிமிடத்திற்கு ஒரு ங்கள் போட்டு பேசினான்.

இவன் வேண்டும் என்றே நம்மை வெறுப்பேற்ற இப்படி பேசுகிறான் இருக்கட்டும் நாமும் கண்டுகௌள்ளாமல் இருப்போம் என்னதான் செய்கிறான் என்று பார்போம் என்ற முடிவுடன் எதற்காக கோபபட்டீர்கள் என்று கேட்டேன் என்றாள்.

அது…….. என்று தடுமாறியவன் கல்யாணத்தைபற்றி பேசியவுடன் நீங்கள் எழுந்து வரவும் அம்மா உன்னை ஒரு மாதிரி பார்த்தார்கள் எங்கே அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டதோ என்ற டென்சனில் அப்படி நடந்து கொண்டேன் என்று சமாளித்தான்.வேறு என்ன சொல்வான் நான் கல்யாணத்தைபற்றி பேசியவுடன் உன்முகத்தில் லேசான சிரிப்பாவது இருக்கும் என்று எதிர் பார்த்தேன் ஆனால் நீ உனக்கும் திருமணத்துக்கும் சம்மந்தம் இல்லாதவள்போல் வந்தாய் அதனால் ஏற்பட்ட கோபம் என்றா அவளிடம் சொல்ல முடியும்.

அந்த பேச்சை மாற்றும் விதமாக அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான்.நீ இன்னும் உன் லவ்வரின் பெயர் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்க.

கீதா சற்றும் யோசிக்காமல் சொன்னால் நகுலனை அவள் திட்டிய பெயரான ‘நளன்’என்று.

சரி அவருடன் பேசி மீட்டிங் அரேஞ்ச் பண்ணு. அப்புறம் நாம் காதலித்து திருமணம் செய்ய போகிறவர்கள்.அதனால் மற்றவர்கள் முன்பு நாம் கொஞ்சம் நடிக்க வேண்டி இருக்கும். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.இனி கவனமாக நடந்து கொள் என்று கூறி காரை விட்டு இறங்கி ஹாஸ்பிட்டலுக்குள் சென்றான்.அதை யோசித்து கொண்டிருந்த கீதா ஆட்டோ சத்தம் கேட்டு சுவாதி வந்து விட்டாள் போல என்று வெளியில் எட்டி பார்க்க அவள்தான் படிகளில் ஏறி கொண்டிருந்தாள்.

சுவாதியிடம் திருமண விஷயத்தை எப்போது கூறுவது. சொன்னாலும் திருமணத்துக்கு ஒத்து கொள்வாளா என்ற கவலையோடும்.கடவுளே அவள் ஒத்து கொள்ள வேண்டுமே என்ற வேண்டுதலுடனும் மருத்துவமனை கிளம்பினர்.

ராகவ்விடம் சென்ற சுவாதி அப்பா சாப்பிடலாம் ரொம்ப நேரம் பசி தாங்கமாட்டீர்கள் வாருங்கள் என்று அழைத்து செல்ல. சுந்தரி அவள் கைகளில் இருக்கமாக பிடித்திருக்கும் பேரனை பார்த்து கொண்டிருந்தார்.

ராகவ் சாப்பிட்டு முடித்தவுடன் என்னமா அம்மா ஆசையைபற்றி இருவரும் என்ன முடிவெடுத்து இருக்குறீர்கள் என்று பொதுவாக இருவரையும் பார்த்து கேட்க ஒரே நேரத்தில் இருவரும் முதலில் அவளுக்கு செய்யுங்கள் என்று கூறினர்.

இருவரையும் பார்த்த ராகவ் இருவருக்கும் ஒரே நேரத்தில்தான் திருமணம் யாருக்கு முதலில் என்று கேட்கவில்லை உங்கள் விருப்பம் என்ன என்று மட்டும் கூறுங்கள் என்றவரை அதற்கு மேல் பேச விடாமல் முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று அமைதியாக்கினாள் சுவாதி.

சுவாதியை பார்த்த ராகவ் உன்னை நாங்கள் கஷ்டபடுத்துகிறோம் என்று நினைத்தால் சொல்லிவிடம்மா. உன்னை கம்பல்பண்ண எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.நீ அம்மா அப்பா என்று கூப்பிடுவதால் நாங்கள் உன்னிடம் அதிகமாக இடம் எடுத்து கொள்கிறோம் என்று நீ நினைத்தாலும் சொல்லிவிடம்மா என்று கேட்டார்.

சுவாதி வேகமாக அவர் அருகில் வந்து என்னப்பா என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்.எனக்கு என்று இருக்கும் உறவு உங்களை தவிர யார் இருக்கிறார். இப்படி எல்லாம் பேசி என்னை கஷ்டபடுத்தாதீர்கள் என்று அவர் மடியில் படுத்து அழுதுகொண்டே,

என்னை புரிந்து கொள்ளுங்கள் அப்பா எனக்கு என் மகன் மட்டும் போதும் நான் இப்போது சந்தோசமாகதான் இருக்கிறேன்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது ஆனால் இந்த திருமணம் நடந்தால்தான் நான் சந்தோஷமாக இருக்கமாட்டேன் கஷ்டபடுவேன் பிளீஸ்பா …… நீங்கள்தான் எப்படியாவது இதை அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று கெஞ்சினாள்.

கீதாவோ அப்பா நடந்தால் இருவருக்கும் திருமணம் நடக்கட்டும் இல்லையென்றால் இருவருக்கும் வேண்டாம் எப்படியாவது அம்மாவை சமாளித்து ஆப்ரேஷனுக்கு ஒத்து கொள்ள வைக்கலாம் என்று பிடிவாதமாக கூறிவிட்டாள்.

சுவாதி எவ்வளவோ கெஞ்சியும் வள்ளி பிடிவாதம் பிடிக்க வேறு வழி இல்லாமல் திருமணத்துக்கு சம்மதித்தாள் சுவாதி

அத்தியாயம்-20

சுவாதியின் சம்மதத்தை அர்ஜீனிடம் கீதா சொல்லிவிட்டு,அப்பாடா என்று ஆகிவிட்டது அர்ஜீன் அவளை சம்மதிக்க வாப்பதற்குள் போதும் போதும்  ஆகிவிட்டது என்று பேசி கொண்டே இருக்க அர்ஜீன் தீவிர யோசனையில் இருந்தான்.

கீதா அர்ஜீன் தீவிரமாக யோசிப்பதை பார்த்தவள் அவனை பிடித்து உளுக்கினாள்.

அர்ஜீன்…………………………கீதா.

ஹே எதுக்கு கத்துற.                அர்ஜீன்.

நாபாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன் நீ எதையோ யோசிச்சுட்டு இருந்த அதான் கூப்பிட்டேன் என்று தோள்களை குலுக்கினாள்.

ஹேய் நிறுத்து,நிறுத்து.

நான் என்ன வண்டியா ஓட்டிக்கிட்டு இருக்கேன் நீ நிறுத்துனு சொன்ன உடனே நிறுத்த.

 உன்ன……………அவ பிரண்டுதானே நீ அப்புடிதான் பேசுவ.நான் உனக்கு கொழுந்தனார் என்னோட தம்பியதான் நீ மேரேஜ்பண்ண பேற சோ மரியாதை,மரியாதை.ஒழுங்கா அத்தான்னு சொல்லு இல்ல மாமா…….. மாமு..எப்புடி வேணா கூப்பிடலாம் அது உன் இஷ்டம்.

அதெல்லாம் குடுக்க முடியாது.நான் எவ்ளோ சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீ மரியாததான் முக்கியம்ங்கற மாதிரி பேசிக்கிட்டு இருக்க.

அது சரி உங்ககிட்ட எல்லாம் மரியாதை எதிர்பார்த்தது என்னோட தப்புதான் ஒத்துக்கறேன். மேரேஜ்க்கு ஒத்துக்காம எப்புடி இருப்பா நான்தான் எல்லபக்கமும் செக் வச்சுட்டனே சோ அது எல்லாம் பெரிய மேட்டர் இல்ல நீ போமா போ போய் மரியாதையாக எப்படி பேசுவதுனு ஒரு புக் வந்துருக்கு வாங்கி படி என்று நக்கலாக கூறினான்.

கீதா அவனை முடிந்த வரை முறைத்தவள்.ஹீம்……… என்று கோப மூச்சு வாங்கி கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.வள்ளியின் அறையை நோக்கி நடந்து கொண்டு இருந்தவளின் மனதில் இப்பதான் தெரியுது இந்த அபி பையன் எதுக்கு இவ்ளோ வாய் பேசறான்னு விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்.இது தெரியாம அந்த வள்ளி சேர்க்க சரியில்ல அதுதான் இப்புடி பேசறான்னு என்ன திட்டும் வரட்டும் இந்த வள்ளிக்கு இருக்கு என்று கரித்து கொட்டி கொண்டே சென்றாள்.

இரவு உணவை தயாரித்து கீதாவுடன் மீண்டும் ஹாஸ்பிட்டல் சென்று வள்ளியை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த சுவாதிக்கு எவ்வளவு முயன்றும் தன் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் குமுறி அழ ஆரம்பித்தாள்.

சுவாதி திருமணத்துக்கு சம்மதித்த விஷயம் அறிந்து அவளை பார்க்க வந்த அர்ஜூன் அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்து என்னை மன்னித்துவிடு வது இதுதான் நீ அழும் கடைசி அழுகையாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன். இப்போது நீ என்ன காரணத்துக்காக அழுகிறாய் என்று எனக்கு தெரியும்.நிச்சயம் ஒரு நாள் நான் உண்மையை புரிந்து கொண்டது போல் நீயும் புரிந்து கொள்வாய் அதுவரை நான் காத்திருப்பேன் என்று தனக்குள் சொல்லிகொண்டு வீட்டைவிட்டு வெளியேறியவன் மனதிலும் வீட்டில் அழுது கொண்டிருந்தவளின் மனதிலும் கடந்த காலம் நிழலாடியது.

சுதி எழுந்திரிக்க போகிறாயா?இல்லையா?மணி என்ன ஆகிவிட்டது பார்.அப்புறம் சீக்கிரம் எழுப்ப வேண்டியதுதானே என்று மல்லுக்கு நின்று லேட்டாகிவிட்டது என்று சாப்பிடாமல் போனால் எனக்கு கெட்ட கோபம் வரும் என்று கத்தி கொண்டிருந்தார் சுவாதி,மாலதியின் தாய் லட்சுமி.

அம்மாவின் சத்தம் கேட்டும் படுக்கையைவிட்டு எழ மனம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தவள்.மாலதி யின் அம்மா நான் போய்வருகிறேன் என்ற மெல்லிய குரலில் வாரி சுருட்டி கொண்டு எழுந்து வேகமாக வெளியில் வந்தவள் மாலதி பட்டு சேலை கட்டி தயாராக இருப்பதை பார்த்து அவளை முறைக்க.

அவளோ என்ன மேடம் என் சத்தம் கேட்டு லேட்டாகிவிட்டது என்று பயந்து எழுந்து வந்திருப்பாய் போல இருக்கிறதே என்று கிண்டல் அடித்தாள்.அதை கண்டு கொள்ளாமல்

இன்னைக்கு என்ன சீக்கிரம் கிளம்பிவிட்டாய் வெளியில் செல்வதாக என்னிடம் சொல்லியிருந்தால் நானும் கிளம்பியிருப்பேன்.நீ தனியாகவா போக போகிறாய் என்று அடுக்கடுக்காக பேசியவள் இறுதியில் ஆச்சரியத்தில் முடிக்க.

மாலதியோ அன்பாக அவளை பார்த்து தனியாக போகவில்லை.என் தோழி ரம்யா இல்லை அவள் வருவதாக சொல்லியிருக்கிறாள்.என் கிளாஸ் மேட் சரண்யாவுக்கு இன்று திருமணம் என்று சொன்னேனே உனக்கு நினைவில்லையா என்று கேட்க.சுவாதி அப்போது தான் நிம்மதி அடைந்தவளாக சவகாசமாக மூச்சைவிட்டு அங்கிருந்த இரட்டை சோபாவில் அமர்ந்தவள்.

அது ஒன்னும் இல்ல குட்டிமா நீ எங்கு போனாலும் பாடிகாட் வேலை பார்க்க இந்த லக்ஸ் டார்லிங் என்னையும் சேர்த்து அனுப்புவார்களா,இன்று நீ கிளம்புகிறேன் என்றதும் என் பணிக்கு போட்டியாக யாரும் வந்துவிட்டார்களோ என்று பயந்து போய்விட்டேன் என்றாள்.

மாலதி குறுகுறுவென அவளை பார்க்க கண்டுபிடித்துவிட்டாளோ என்று பயந்து சுவாதி பார்பதற்க்குள் வாசலில் ரம்யாவின் குரல் கேட்க உன் இன்னோரு பாடிகாட் வந்துவிட்டாள் போ என்று கூறினாள்.

சுதியின் வார்த்தையில் வெளியில் மாலதி எட்டி பார்க்க அவள் தோழி ரம்யா வந்திருந்தாள்.அவளை டீலில் விட்டவள் சுதியை குறு குறுவென பார்த்து கொண்டே அவள் இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும் அதனால் அவள் ஒன்றும் குறைந்து போகமாட்டாள்.

ஆமாம்……………….வழக்கமாக நான் எங்காவது கூப்பிட்டாள் என்ன பொண்ணு நீ தைரியமாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணி என் காதை ஒரு வழி செய்துவிட்டு அம்மாவிடம் எதற்காவது பர்மிசன் வாங்கி தர வேண்டும் என்ற டீலுடன்தான் வருவாய். இன்று வாரண்டியராக கேட்கிறாயே ஏதாவது வேலையாக வேண்டுமா என்று கிண்டலாக கேட்க. அவளை பார்த்து முறைத்த சுதி அக்கா பயப்படுவாளே என்று அக்கறையாக கேட்டேன் பார் என்னை சொல்ல வேண்டும் என்று முறுக்கி கொண்டாள்.

சரி சரி சொல்லுமா அம்மாவிடம் எதற்கு பர்மிஷன் கேட்க வேண்டும் என்று கேட்க.

சுவாதி மாலதியை குறும்பாக பார்த்து அது ஒன்னும் இல்ல குட்டிமா எங்க காலேஜ்ல பத்து நாள் டூர் டோடல் தமிழ்நாடு போறாங்க நான் போக வேண்டாம் என்று தான் பார்த்தேன் பிரண்ட்ஸ் எல்லாம் கம்ப்பல் பண்றாங்க.

கடைசி வருஷம் நீ வந்தாதான் நல்ல இருக்கும் என்று.இன்று தான் பெயர் கொடுக்க கடைசி நாள் நைட் சொல்லலாம் என்று பார்த்தேன் நீ தலை வழி என்று சீக்கிரம் படுத்துவிட்டாய். காலையில் சொல்லிக்கலாம் என்று பார்த்தால் நீ கிளம்பிவிட்டாய் என்றாள்.

சற்று நேரம் யோசித்த மாலதி.ஓ கே சுதி நீ டூர் போக ஓகே சொல்லிடு நா அம்மாகிட்ட ஈவ்னிங் வந்து பேசறேன் என்றாள்.

சுவாதிக்கு அம்மாவிடம் பர்மிஷன் வாங்கி தருவதாக சொன்ன மாலதி அவளை குறும்பாக பார்த்து இன்று நான் காலேஜ் வரமாட்டேன் யாருக்கிட்டயும் வம்புக்கு போக கூடாது என்று கூற.அவளை முறைத்தாள் சுதி.

மாலதி அப்படி சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது ஏன் என்றால் காலேஜ் முதல் நாளிலேயே சீனியர்களிடம் மாட்டி அவர்களையே கலாய்த்து காண்டாக்கியவள் இவள் அதனாலேயே இந்த அட்வைஸ்.

போடி போடி இந்த உலகத்துல காசு குடுக்காம, இவ்ளோதான் அப்புடினு சொல்லாம,வாரி வழங்க கூடிய ஒரே விஷயம் அட்வைஸ் அத தவிர வேற எதாவது சொல்லு என்றவள் யானை வழுக்கி விழுந்தால் எறும்பு கூட கிண்டல் பண்ணுமாம் அது போல் இருக்கிறது நீ என்னை கிண்டல் செய்வது இருந்தாலும் காலேஜ் போகவும் உனக்கும் கொஞ்சம் பேச வருகிறதே என்று மாலதியை சுவாதி கிண்டல் அடிக்க.

சுதியை முறைத்த மாலதி என்னமோ இதற்கு முன் நான் பேசாமல் இருந்தது போலவும் காலேஜ் போன பிறகு பேச ஆரம்பித்தது போலவும் நீ சொல்கிறாய் என்று மாலதி வருந்த ஆரம்பித்தாள்.

ம்…………உடனே பீல் பண்ண ஆரம்பித்துவிட்டாயா உன்னை நான் கிண்டல் செய்யாமல் வேறு யார் கிண்டல் செய்வார்கள். இதற்கு போய் பீல் செய்யலாமா.உன் பிரண்டு ஒருத்தி வந்தாளே அவள் வந்த சத்தம் தான் கேட்டது அதற்கு பிறகு என்ன ஆனாள். வா போய் பார்க்கலாம் என்று கூறி வெளியில் வந்தவர்கள் பார்த்த காட்சியில் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தார்கள்.

Advertisement