Advertisement

அத்தியாயம்-17

வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனை,அபியின் அப்பா என்ற குரல்தான் வரவேற்றது.அவனின் குரலில் தனக்குள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தவன் வேகமாக அபியின் அருகில் சென்று அவனை தூக்கி முத்தமிட துவங்கினான்.

என்ன கண்ணா என்ன வேண்டும் உனக்கு இன்னொரு முறை கூப்பிடு என்று கேட்டு மகிழ்ந்தான்.தன் வருத்தத்தை புரிந்து கொண்டு சுவாதி தனக்காக,தன் சந்தோஷத்துக்காக அபியை அப்பா என்று அழைக்க வைத்திருக்கிறாள் என்ற சந்தோஷத்தை முழுதும் அனுபவிக்கும் முன் அங்கு வந்தாள் கீதா.

என்ன அர்ஜீன் நீங்கள் உங்களுக்கு தான் அவளைபற்றி தெரியுமே பிறகு எதற்கு வருத்தபடுகிறீர்கள்.அவளைபற்றி நன்கு தெரிந்தவள் நான் அதனால் இந்த விஷயத்தில் என்னாலும் உணக்கு உதவ முடியாது ஏன் என்றால் அவள் சில விஷயங்களில் ரொம்ப பிடிவாதம்.
உங்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது இருந்தாலும் நீ கொஞ்சம் இல்லை,இல்லை அதிக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றாள்.

நான் வரும் போது கண்ணில் நீருடன் நீ போவதை பார்த்தேன்.அபியிடம் தான் கேட்டு தெரிந்து கொண்டேன். அதான் நான் அவனிடம் உன்னை அப்பா என்று கூப்பிட சொன்னேன் என்றாள்.
நான் குளித்துவிட்டு மதிய சமையல் எடுத்து செல்ல வந்தேன்.சுவாதி ஆட்டோ பிடிக்க போய் இருக்கிறாள். நீங்கள் கொஞ்சம் அவசரபடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
அப்பா எல்லாம் சொன்னார் என்றாள் கீழே பார்த்து கொண்டே.அவள் எதை பற்றி பேசுகிறாள் என்பதை உணர்ந்தவன் அத்தையின் ஆசையும் இதுவே என்னும் போது எதற்கு யோசிக்க வேண்டும் என்றான்.
கீதா எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டால். அவள் மனதில் சுவாதி ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பிய பிறகு நடந்ததை யோசித்து கொண்டு இருந்தாள்.

சுந்தரியிடம் இருந்து சுவாதி குழந்தையை பிடுங்கி கொண்டு சென்றதால் அனைவரும் திகைத்து நிற்க.ராகவ்தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்.

தன்னிலை அடைந்த சுந்தரி அண்ணா என்று அழுது கொண்டே அவரிடம் சென்றவள்.அண்ணா அர்ஜூன் கெட்ட எண்ணத்தில் எந்த விஷயமும் செய்யமாட்டான்.

என் வளர்ப்பைபற்றி சந்தேகபடாதீர்கள் அண்ணா என்று கூறியவள்,நான்கு வருடத்திற்கு முன்பு நாகபட்டினத்திற்கு வேலைக்கு சென்ற அர்ஜூன் திரும்பி வரும்போது இருந்த நிலை அதன் பின்பும் யாருடனும் பேசாமல் அவன் வாழ்ந்த தவ வாழ்வைபற்றி கூறியவள் இப்போது சொல்லுங்கள் அண்ணா ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்திருந்தால் என் மகன் ஏன் பைத்தியகாரன் போல் இவ்வளவு நாட்களை வீணடிக்க வேண்டும்.

சுவாதியிடம் நீங்கள் பேசுங்கள் அண்ணா என் மகனை பழைய அர்ஜூனாக மாற்ற அவளால் மட்டும்தான் முடியும் என்று கூறினாள்.
நகுலன் நேற்று போன் செய்து தான் ஒரு பொண்ணை விரும்புவதாக சொன்னான்.அப்போதே நான் இவன் அண்ணனுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வானோ என்று பயந்தேன்.இப்போது தான் புரிகிறது அண்ணனின் குடும்பத்தை கண்டுபிடித்துவிட்டுதான் தன் வாழ்க்கையை அமைத்து கொண்டிருக்கிறான் என்று.என் மகன்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்றாள்.

ராகவ் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து என்ன அண்ணா நான் பேசிகொண்டே இருக்கிறேன் நீங்கள் எதையோ தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கிறீர்கள் போல என்றவளை பார்த்த ராகவ் இல்லமா சுவாதியை நினைத்தால்தான் கவலையாக உள்ளது.

அபியின் மூன்றாவது பிறந்தநாள் அன்று அர்ஜூனைபற்றி கேட்டு விசாரிக்கிறோம் என்றோம் அதற்கே அவள் வீட்டைவிட்டு சென்றுவிடுவதாக கூறினாள்.எங்களிடம் அர்ஜூனைபற்றி இதுவரை எதுவும் பேசியது இல்லை.நாங்கள் பேசினாலும் பேச்சை திசை திருப்பிவிடுவாள் இல்லை என்றால் எதுவும் பேசாமல் அமைதியாகிவிடுவாள் அதனால் நாங்கள் அர்ஜூன் பேச்சை எடுக்க மாட்டோம்.

அபியின் பிறந்த சான்றிதழ் பார்த்துதான் அர்ஜூன் பெயரே எங்களுக்கு தெரிந்தது. நாங்களும் அந்த பேச்சை எடுத்தால் ஒரு வாரம் வரை யாரிடமும் எதுவும் பேசாமல் அவள் இருப்பதை பார்த்து அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டோம். நீ சொல்வதை பார்த்தால் நாங்கள் அன்றே அவளிடம் பேசி பிரச்சனை என்ன என்று விசாரித்து அவளின் வாழ்வை சரிசெய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது தப்பு செய்துவிட்டோமோ என்றும் தோன்றுகிறது என்று கூறி வருத்தபட்டு கொண்டு இருந்தார்.

ராகவின் வருத்தத்தை பார்த்த சுந்தரி கவலைபடாதீர்கள் அண்ணா அவர்கள் இப்போதுதான் சேர வேண்டும் என்று விதி இருக்கும் போது, நீங்களோ நானோ என்ன செய்ய முடியும் இனி அவர்கள் வாழ்வை சரி செய்வதற்கான் அனைத்து முயற்ச்சிகளையும் நாம் செய்ய வேண்டும் என்று அண்ணனுக்கு ஆறுதல் கூறினாரோ தனக்கே கூறி கொண்டாரோ அவரே அறிந்தது.

சுவாதியின் பின்னால் சென்ற அண்ணனை வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு அவர்களுக்கு மட்டும் மதிய உணவை வாங்கி கொண்டு வந்தான் நகுலன்.

அங்கு இருந்த இறுக்கமான நிலைமையை சரி செய்யும் பொருட்டு சுந்தரியிடம்,சென்று என்ன மா எனக்கு திருமணம் பேச வந்துவிட்டு அண்ணன் குடும்பத்தை கண்டுபிடித்துவிட்டீர்களே என்று போட்டு வாங்கினான்.அவர்களுக்கு உண்மை எப்படி தெரிந்தது என்று அறிந்து கொள்ளும் ஆவலில்.

சுந்தரி சிரித்து கொண்டே சொன்னார் நான் உனக்கு அம்மா டா என்றார்.

ம்மா…………ப்லீஸ் உங்களுக்கு அண்ணனின் விஷயம் எப்படி தெரியும்.

நேற்று நீ போன் செய்து எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறது. அவளின் அம்மாக்கு உடல் நலம் சரியில்லை அதனால் உடனே திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் தயவு செய்து என் மேல் நம்பிக்கை வைத்து எல்லோரும் இங்கு வாருங்கள் மற்ற அனைத்தும் நேரில் பேசிகொள்ளலாம் என்று சொன்னவுடன் எனக்கு பயம் வந்தது என்னமோ உண்மைதான் அதே போல் நீ ஒரு விஷயத்தை மறந்துவிட்டாய்.
என்ன என்று பார்த்த மகனின் தலையை வாஞ்சையாக தடவியவர் அஜூக்கு காய்ச்சல் வந்த அன்று நீ வரும் வரை நான்தான் அவனுடன் இருந்தேன்.எனக்கு அப்போதே லைட்டாக விஷயம் புரிந்தது ஆனால் யார் என்ன என்று ஒன்றும் புரியவில்லை.சில சமயம் அவன் புலம்பல் மனதை உருத்திகொண்டே இருக்கும். இங்கு நம் குடும்பத்தில் உள்ள அனைவரின் சாயலையும் கொண்டிருந்த அபியை பார்த்து கன்பார்ம் செய்து கொண்டேன். அது மட்டும் இல்லாமல் நாகபட்டினத்தில் இருந்து உன் அண்ணன் ஒரு முறை போன் செய்து பேசும் போது இந்த பெயர் விஷயமும் வந்தது அப்போது நான் அவனிடம் சொன்னேன் உன் மகன் பெயரும் எனக்கு பிடித்த பாண்டவர்களின் மகன்களின் பெயர்தான் வைப்பேன் என்று.

நான் சொன்னதை சுவாதி கேட்டிருக்க வேண்டும் அதான் அர்ஜூனின் மகன் அபிமன்யு பெயரை வைத்திருக்கிறாள் என் மருமகள் என்றார்.

இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்க அப்போதுதான் அர்ஜூன் போன் செய்து இருவருக்கும் நாளையே திருமணம் என்றும் அடுத்த வாரத்தில் ஒரு நாள் அத்தைக்கு ஆப்ரேஷன் அர்ஜூனே செய்வதாகவும் அதற்கான ஏற்பாட்டை செய்யும்படியும் சொன்னான்.

அர்ஜூன் சொன்னதை கேட்டு ராகவ் ஒரு பக்கம் மனைவியின் விருப்பப்படி மகள் இப்போதாவது திருமணத்துக்கு சம்மதித்தாலே என்ற சந்தோஷமும் சுவாதி ஒத்து கொள்வாளா என்ற இரு உணர்வுகளுடன் இருந்தார்.
கீதாவோ எந்த உணர்வையும் வெளிகாட்டாமல் ஒரு முறை நிமிர்ந்து நகுலனை பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள் பின் தந்தையின் அருகில் இருந்து எழுந்து நான் வீட்டிற்கு சென்று மதிய உணவு எடுத்துவருகிறேன் என்று வேகமாக அந்த இடத்தைவிட்டு சென்றாள்.

அத்தியாயம்-18

நகுலன் ராகவிடம் மாமா மதியம் அத்தையை நார்மல் வார்டுக்கு மாத்தலாம் என்று சொன்னார்கள் அதை பற்றி விசாரித்துவருகிறேன் என்று கூறி வேகமாக கீதாவை தொடர்ந்து சென்றான்.வெளியில் வந்தவன் கீதாவின் சோர்ந்த நடையை பார்த்து கோபம் கொண்டான்.

வேகமாக அவள் அருகில் சென்று, அவள் கையைபற்றி இழுத்து கொண்டு அவன் காரை திறந்து அவளை தள்ளிவிட்டவன் அவனும் காரினுள் ஏறி அமர்ந்த பிறகு அவளிடம் பொறிய துவங்கினான்.

உன் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாய் உள்ளே திருமண விஷயம் சொல்லும் போது எல்லாம் முடிந்தது என்பது போல் பார்க்கிறாய்.முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன நினைப்பார்கள்.

நான் உன்னை கட்டாயபடுத்தி திருமணம் செய்வதாக நினைக்கமாட்டார்கள் என்று பொறிந்தான்.அவனும் தான் என்ன செய்வான் கல்யாணவிஷயம் கேட்டவுடன் அவன் பார்த்தது கீதாவின் முகத்தைதான் நடிப்புக்காகவாவது சிரிப்பாள் என்று எதிர்பார்த்தான் அது நடக்கவில்லை என்ற கோபமும் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை போல் அவள் பார்த்த பார்வை அவனை அதிக கோபப்படுத்தியது.

கை நீட்டி அவன் பேச்சை தடுத்த கீதா அதுதான் உண்மை என்பதை மறக்க வேண்டாம் என்றாள்.
கீதாவை நெருங்கி அமர்ந்தவன் அவள் கண்களை கூர்மையாக பார்த்து நீ யாரையாவது விரும்புகிறாயா அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறாயா என்று கேட்டான்.

நகுலனின் கேள்வியில் கோபம் கொண்ட கீதா திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அந்த பெண் யாரையும் விரும்பியிருக்க வேண்டுமா இவன் வழியில் சென்றே இவனை கடுப்பேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.ஆமாம் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறினாள்.

கீதாவின் வார்த்தையில் உள்ளுக்குள் நொறுங்கிய நகுலன்.தன் முதல் காதல் ஆரம்பிக்கும் முன்பே முடிந்துவிட்ட கொடுமையை எண்ணி வருந்துவதா இல்லை நான் விரும்பியவள் மனதில் வேறு ஒருவன் இருப்பதை நினைத்து வருந்துவதா என்று ஒரு நிமிடம் செயலற்று அமர்ந்திருந்தான்.

நகுலனின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த கீதாவே நாம் இப்படி சொல்லியிருக்க கூடாதோ என்று யோசித்தாள்.அவன் செய்தது மட்டும் சரியா நான் என்ன செய்கிறேன் எப்படி செய்கிறேன் என்று பார்த்து கொண்டே இருக்கிறான்.இப்போது கூட இவனுக்கு எதற்கு இவ்வளவு கோபம் என்று ஒன்றும் புரியவில்லை என்று தனக்குள் பேசிகொண்டு வெளியே உங்கள் அண்ணன் வாழ்வைபற்றி கவலை படாதீர்கள் சார் உங்களுக்கு உதவி செய்வதில் என் தோழியின் வாழ்வும் உள்ளது.அதனால் உங்களுக்கு தேவையான உதவியை நான் கண்டிப்பாக செய்வேன் என்று கூறினாள்.

கீதா கூறிய வார்த்தையின் தாக்கத்தில் இருந்து ஒரு நிமிடத்தில் தன்னை சரி செய்து கொண்டவன் கீதாவை தீர்க்கமாக பார்த்து எப்படி மேடம் உதவுவீர்கள்.உன் காதலனை விட்டு விட்டு எப்படி என்னை திருமணம் செய்து கொள்வாய் அதற்கு உன் காதலன் ஒத்து கொள்வானா இல்லை அப்படி ஒருவனே இல்லையா என்று கேட்க.

கீதா உண்மையில் அதிர்ந்துதான் போனாள்.என்னடி கீதா உன் பொய்யை இப்படி உடனே கண்டுபிடித்துவிட்டான்.பெரிய பிஸ்னஸ்மேன் இல்லையா அதான் கண்டுபிடித்துவிட்டான்.அவன் என்ன ராகவ்வா நீ என்ன சொன்னாலும் நம்ப அய்யயோ இவன் ஏன் இப்படி பார்க்கிறான் இப்படி பார்பதை பார்த்தால் நமக்கு பேச்சே வராது போலவே என்று யோசிக்க.

நகுலன் பேச ஆரம்பித்தான் சோ…….. நான் சொன்னது போல் பொய்தான் இல்லையா என்று நக்கலாக கேட்டான்.

நகுலனின் கேள்வியில் கீதா ஒரு நிமிடம் அரண்டாலும் மனதினுள் சமாளி டி கீதா எதாவது யோசி என்று யோசித்தவளின் மூளையில் பல்ப் எரிய டக்கென்று சொல்ல ஆரம்பித்தாள்.

மனதில் நகைத்தாலும் வெளியில் கூலாக இங்க பாருங்க சார்,அவர் இப்போது பாரினில்தான் இருக்கிறார்.வேலை விஷயமாக சென்றிருக்கிறார். வருவதற்கு மூன்று வருடங்கள் ஆகும் வந்தவுடன் திருமணம்.அவர் வரும் வரை எல்லோரையும் சமாளிக்க வேண்டுமே அதனால்தான் வீட்டில் எல்லோரிடமும் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சமாளித்து கொண்டு இருக்கிறேன் என்றாள்.

அதுமட்டும் இல்லாமல் என்னால் என் தோழியின் வாழ்க்கை நன்றாக அமையும் என்று நீங்கள் சொன்னதால்தான் நான் இதற்கு ஒத்து கொண்டேன். அவர் பாரினில் இருந்து திரும்ப வருவதற்குள் இங்கு சுவாதி பிரச்சனை தீர்ந்துவிடும் நீங்களும் எனக்கு டைவர்ஸ் குடுத்துவிடுவீர்கள் பிறகு எங்கள் கல்யாணம்தான் என்று ஒரு வழியாக ஒருகதையை உருவாக்கி அவன் நம்புவது போல் சொன்னாள்.

கீதா சொல்வதை கேட்டு நகுலன் யோசனையானான். அவனின் யோசனையான முகத்தை பார்த்த கீதா நம்பிவிட்டானா இல்லையா தெரியவில்லாயே என்று ஓரகண்ணால் அவனை கவனித்து கொண்டிருந்தாள். அவனோ சற்று நேர யோசனைக்கு பிறகு கோபமாக அவள் பக்கம் திரும்பி முதலிலேயே ஏன் என்னிடம் சொல்லவில்லை என்னுடைய பிளான் முழுவது உன்னிடம் சொல்லும்போதே சொல்லியிருந்தாள் வேற பிளான் போட்டு இருக்கலாம். இப்போது சொல்கிறாய் என்று கோபமாக கத்தினான்.

நகுலனின் கோபம் ஏனோ கீதாவிற்கு ஏனோ மனதில் பாரம் ஏற்றியது போல் இருந்தது.ஆனாலும் அது ஏன் என்று யோசித்து தெரியாமல் அந்த எரிச்சலுடனே அவளும் கோபமாக பேச ஆரம்பித்தாள்.நான் தான் உங்களிடம் வேறு பிளான் இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னேனே நீங்கள் கேட்கவில்லை. அது மட்டும் இல்லாமல் எதற்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டும். நீங்கள் யார் சார் எனக்கு நான் சுவாதியிடமே இதைபற்றி இன்னும் சொல்லவில்லை பிறகெப்படி உங்களிடம் சொல்வேன் என்று எதிர் பார்க்கிறீர்கள் சார் என்றாள்.

அதோடு வீட்டிற்கு போறேன் என்று வந்தவளை இழுத்து வந்து உட்கார வைத்துவிட்டு எதற்கு கோபபடுகிறீர்கள் என்று கூட எனக்கு புரியவில்லை என்றவள்,மனதினுள்ளோ கீது செல்லம் வர வர ரொம்ப கதை சொல்கிறாய் உன் கதையை பெரிய பிஸ்னஸ் மேனே நம்பிவிட்டான் நீ கதை எழுத போனால் உன் பிஸ்னஸ் பிச்சுக்கும் போ… என்று தனக்குதானே சபாஷ் போட்டுகொண்டாள்

Advertisement