Advertisement

அத்தியாயம்-30

ராமை போலீஸ் அழைத்து சென்ற பிறகு சுவாதியை தேடியவன் இறுதியாத கிச்சனில் தாவணி இல்லாமல் இறத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவளை பார்த்து அதிர்ந்து போனான்.வேகமாக அவள் அருகில் சென்றவன் தூக்கி மடியில் படுக்க வைத்து கண்ணங்களை தட்டி அவளை எழுப்ப முயன்றான்.
தனது சட்டையை கழட்டி அவளுக்கு போட்டு விட்டவன். ஏன் டி இப்படி பண்ணுன என்ன பத்தி யோசிக்கவே மாட்டியா?ஏன் இப்படி செய்தாய் என்று அவளை உளுக்க வலியில் அவள் முகம் சுளித்தாள். அப்போது அங்கு வந்த ராஜா சார் என்ன சார் இவ்வளவு இரத்தம் போய்விட்டது தூக்குங்கள் சார் சீக்கிரம் ஹாஸ்பிடல் அழைத்து சென்றுவிடலாம் என்றான்.
ராஜா பேசிய பிறகே தன்னிலை இன்றி அழுது கொண்டிருந்த அர்ஜூன் அழுவதற்கான நேரம் இல்லை என்பதை உணர்ந்த அவளை கைகளில் தூக்கி கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தான்.

பிளட் பேங்கில் அவளது குரூப் இரத்தம் கிடைக்காமல் தடுமாறினான்.மரணத்தின் வாசலை மிதித்தவளின் கைகளை பற்றி கொண்டு வதுமா வந்து விடுடா நிஜம் எது நிழல் எது என்று தெரிந்து கொண்டேன்.நான் உன்னோடு சேர்ந்து பல ஆண்டு வாழ வேண்டும் நிறைய குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.நீ இல்லாவிட்டால் எனக்கு வாழ்வே கிடையாது.பத்து தையல் போட்டிருக்கிறது உனக்கு தையல் போடும் போது எவ்வளவு துடித்தேன் தெரியுமா?வந்துவிடுடா என்று கதறினான்.
நீ இல்லை என்றால் நானும் இருக்க மாட்டேன் இது சத்தியம் என்று உறுதியான குரலில் கூற,அந்த குரலில் என்ன இருந்ததோ பிறகு அவளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.
அர்ஜூனே சுவாதியுடன் இருந்து அவளை கவனித்து கொண்டான்.எப்படி கத்தி காயம் ஏற்பட்டது என்று யோசித்து கொண்டு இருந்தவன் தன் மாமாவிற்கு போன் செய்து அந்த ராம் வெளியில் வராமல் இருக்க என்ன சாட்சி வேண்டுமோ அனைத்தையும் தயார் செய்து அனுப்பி வைத்தான்.

ஒவ்வொரு முறை சுவாதியை பெட்டில் பார்க்கும் போதும் அந்த ராமை தன் கையால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தடுக்க முடியாமல் போனது.அப்போது தான் உணர்ந்தான் நிஜ காதல் எது நிழல் எது என்று.சுவாதியை இரத்த வெள்ளத்தில் பார்த்த போது வாழ்வே முடிந்தது போன்ற எண்ணம் தோன்றியதே ஆனால் மாலதி இறந்த செய்தி கேட்டு சக மனிதனாக அவளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தானே தோன்றியது.

நான் பார்த்தது மாலதியாக இருக்கலாம் பழகியது என் சுவாதியுடன்தான்.அவள் தான் என் வாழ்க்கை என்று தெளிவான முடிவெடுத்தான்.
ஒரு மாதம் ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு வந்தவளை வீட்டின் வெறுமை முகத்தில் அடித்தது. அங்கு ஹாஸ்பிட்டலில் தன்னையே சுற்றி சுற்றி வந்து கவனித்த அர்ஜூனின் நினைவு வந்தது.

எதற்காக இப்படி கவனிக்கிறார்.என்னை தொந்தரவு செய்யதீர்கள் என்று எத்தனை முறை திட்டியிருப்பேன், என்னை நர்ஸாக நினைத்து கொள் என்று செய்தானே, ஏன்அஜூ ஏன் இப்படி செய்கிறீர்கள்.நான் கஷ்டபட்டு உங்களையும்,உங்கள் நினைவுகளையும் மறக்க நினைக்கிறேன்.நீங்கள் உங்கள் கவனிப்பாள் என்னை மறக்க விட மாட்டிகிறீர்கள் என்று தனக்குள்ளே பேசி கொண்டு அறையில் அழுது கொண்டு இருந்தாள்.
அஜூ என் மனம் உங்களிடம் தடுமாறி நிற்கிறது என்ற விஷயம் உங்களுக்கு தெரிந்தாள் என்னைபற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்.நீங்கள் ஒரு டாக்டர் வேலையைதான் செய்தீர்கள்,என் நிலையில் யார் இருந்தாலும் நீங்கள் அவர்களை கவனிப்பீர்கள். ஆனால் அந்த விஷயம் எல்லாம் மூளைக்கு தெரிகிறது உங்களை நேசித்த இதயத்திற்கு தெரியவில்லையே என்று புலம்பியவளுக்கு,அவள் மயக்கத்தில் இருக்கும் போது அர்ஜூன் பேசியது நினைவு வராமல் போனது விதியின் சதியே………
நாட்கள் அதன் போக்கில் செல்ல ராமின் மீது மாலதி கொலை வழக்கு,சுவாதி மற்றும் லட்சுமியின் கொலை முயற்சி என பல குற்றத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கபட்டது.ஜெயிலில் கூண்டு புலியாக இருந்த ராம் அந்த சுவாதியை பலி வாங்க தன் கையாட்களின் மூலம் சுவாதியை கடத்தி மும்பையில் தனக்கு தெரிந்த புரோக்கரிடம் விற்க சொன்னான்.

எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்க கூடாது.உன் வாழ்வை நாசமாக்குகிறேன் என்று கருவி கொண்டான்.

ராம் சொன்னதற்கு ஏற்ப அவனின் கையாட்கள் நேரம் பார்த்துகொண்டிருந்தனர்.அந்த நாளும் விரைவில் வந்தது. கோவிந்தனை அன்று அவர்கள் அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து வீட்டில் வந்து விடுவது போல் வந்து அவள் சாப்பிட வைத்திருந்த உணவில் போதை மருந்தை அவளுக்கு தெரியாமல் கலந்துவிட்டு வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர்.அப்போது அவர்களில் ஒருவன் டேய் மருது இது தப்புடா பொம்பள புள்ள பாவம் சும்மாவிடாதுனு சொல்வாங்க என்று சொன்னான்.
டேய் அதெல்லாம் பாத்த காசு பாக்க முடியாது. இனிமேல் பின் வாங்கவும் முடியாது.அந்த ராம் ஒரு அடிப்பட்ட பாம்பு நாம செய்யலனாலும் வேற யாராவது வச்சி செய்யதான் போறான்.அது மட்டும் இல்லாம நமக்கு விஷயம் தெரிஞ்சதால நம்மையும் சும்மா விட மாட்டான்.அதனால பாவம் கூவம்னு உளறாம வா அந்த மரத்துகிட்ட மறஞ்சு நிப்போம்.அந்த மருந்து வேலை செய்ய இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று இருவரும் மறைந்து நின்று கொண்டனர்.
சாப்பிட பிடிக்காமல் தன் அறையில் நடந்து கொண்டிருந்த சுவாதிக்கு மனம் பாரமாக இருந்தது. இருக்காத பின்னே அவள் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததில் இருந்து அர்ஜூன் அவளிடம் பேச முயற்சிக்கிறான்.இவள் அவனுடன் பேசாமல் தவிர்த்து கொண்டே இருந்தாள்.இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தவிர்க்க முடியும் அன்று ஒருநாள் கோவிலில் கையை பிடித்து தடுத்து பேசியது போல் பேச நினைத்தால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தவள் மணி பத்தரை என்று காட்டவும் சரசக்கா சமைத்ததை கொஞ்சமாவது சாப்பிட்டு வைப்போம் இல்லை என்றால் அவர்கள் வருத்தபடுவார்கள் என்று தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

இரண்டு இட்லியை சாப்பிட்டுவிட்டு தூக்கம் வராமல் இருந்தவள் மழைவருவது போல் மண் வாசனை வரவும் மூச்சை நன்கு இழுத்து சுவாசித்து மாடியில் கொஞ்ச நேரம் நிற்போம் என்று மாடிக்கு சென்றாள்.
மாடியில் சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்தவள் பயத்தில் முகம் வெளிறி நின்றாள்.ஆம் அந்த இருவரும் இவர்கள் வீட்டை பார்த்து கொண்டிருப்பது அந்த அரை இருட்டில் கவனித்தாள்.யார் இவர்கள் ஏன் இங்கு என்று யோசித்தவளுக்கு அந்த மழை காற்றிலும் வேர்த்து மயக்கம் வருவது போல் இருந்தது.

தூரல் வேகமாக போட ஆரம்பிக்கவும் அவர்கள் ஓரமாக ஒதுங்கி நிற்பதும் தெரிந்தது.நேரம் ஆகஆக கைகள் எல்லாம் தன் பலத்தை இழந்து எங்கோ பறப்பது போல் உணர்ந்தவள்.தனக்கு என்னவோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

என்ன செய்வது என்று யோசிக்கையில் அவளுக்கு நினைவு வந்தது அர்ஜூன்தான்.உடனே பின்பக்கமாக அர்ஜூன் வீட்டுக்கு சென்று அவரிடம் உதவி கேட்க வேண்டும் என்று தட்டு தடுமாறி நடந்தால் வேகமாக மழை பெய்ததால் அந்த இருவரும் கொஞ்சம் தொலைவுக்கு சென்று ஒதுங்கினர்.
இங்கு அர்ஜூனோ தனக்குள் புலம்பி கொண்டு இருந்தான்.ஏன் டி இப்படி பண்ற ஹாஸ்பிடலில் இருந்து வந்ததில் இருந்து எத்தனை முறை உன்னுடன் பேச வந்தேன்.ஒரு முறையாவது என்னுடன் பேசினாயா? நான் உன்னைதான் காதலிக்கிறேன் உயிரைவிட அதிகமாக.அதை சொல்ல ஒரு சந்தர்பமாவது கொடு டி என்று தனக்குள் புலம்பி கொண்டு இருந்தவன்.மழை வருவது போல் இருப்பதை பார்த்து ராஜாவை கூப்பிட்டான்.

ராஜா……. என்ற அவன் குரலுக்கு வேகமாக வந்தவன்.என்ன சார் என்று கேட்க.

நீங்கள் ஹாஸ்பிட்டல் சென்று ஜன்னல் எல்லாம் சாத்தி இருக்கிறதா எனறு பார்த்துட்டு வாங்க மழை வழுவாக பெய்யும் போல் இருக்கிறது.ரொம்ப குளிராக இருந்தால் அங்கேயே படுத்து கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டு வந்தவன் கண்ணில்பட்டது. அந்த பாட்டில் என்ன இது வெள்ளையாக இருக்கிறது.
இளநீராக இருக்குமோ,நேற்று கேட்ட இளநீரை இன்று கொண்டு வந்து வைத்திருக்கிறான் இந்த ராஜா. இவனை என்ன செய்வது.அட்லீஸ்ட் கொண்டு வந்ததை சொல்லிவிட்டு போனானா அதுவும் இல்லை,காலை வரட்டும் அவனை பேசி கொள்கிறேன். என்று அவனை திட்டி கொண்டே முழுவதையும் குடித்து முடித்தான்.

இளநீர் வீணா போனாதாட்டுக்கு புளிப்பாக இருக்கிறது. ஒரு வேலையும் ஒழுங்காக செய்யமாட்டான் இந்த மடையன் என்று சொல்லி எழுந்தவன் தடுமாறினான்.

அர்ஜூன் அறியாத ஒன்று ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒற்றை பனை மரத்து கள் கிடைக்க அதை குடிக்க ராஜா எடுத்த நேரம் அர்ஜூன் வேலையை சொல்லவும் சரி வந்து குடித்து கொள்வோம் என்று அப்படியே அவன் வைத்துவிட்டு சென்றது.

அர்ஜூன் நடக்கும் போதே தடுமாறி கீழே விழ போனான்.
அச்சச்சோ பூகம்பம் வந்துவிட்டதா?ஏன் வீடு இப்படி ஆடுகிறது என்று புலம்பி கொண்டே நடந்தான்.பின் பக்க கதவு தட்டும் சத்ததில் கதவை திறக்க போனவன் யார் திடீரென்று பின் பக்க கதவை வளைத்து வளைத்து வைத்தது என்று உளறி கொண்டே சென்று கதவை திறந்தான்.
அங்கு சுவாதி மழையில் நன்றாக நனைந்து அரை மயக்க நிலையில் வந்திருந்தாள்.அந்த நேரத்தில் அவளை அங்கு எதிர் பாக்காத அர்ஜூன் வது நீயா?என்று ஆச்சரியமாக பார்த்தான்.

அஜூ அஜூ என்னை காப்பாற்றுங்கள்.என்னே…….. காப்பாத்துங்கள்….. காப்பாத்……….என்று சொல்லி கொண்டே அவனின் மேல் மயங்கி சரிந்தாள்.

அத்தியாயம்-31

சுவாதியை பார்த்தவுடன் ஓரளவு தெளிவான அர்ஜூன்.வது இங்க பாரு மா என்னச்சு?யாரு என்ன செய்தார்கள் என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் மயங்கி இருந்தால் சுவாதி. இவளுக்கு திடீரென்று என்னாச்சு?ஏன் மயங்கிவிட்டாள்?என்று யோசித்து கொண்டே அவளை அழைத்து சென்று ஒரு அறையில் படுக்க வைத்தான்.தனக்கே ஒரு மாதிரி இருப்பதை உணர்ந்தவன் பாத்ரூமிற்கு சென்று நீரை முகத்தில் அடித்து நன்றாக கழுவினான்.அப்போது கொஞ்சம் பரவா இல்லாமல் இருக்கவும் மீண்டும் சுவாதியை பார்க்க சென்றான்.

சுவாதி மழையில் நன்கு நனைந்ததாலும், பழக்கமில்லாத போதை மருந்தின் ஓவர் டோஸாலும் நடுங்கி கொண்டு படுத்திருந்தாள்.உடனே அவளிடம் சென்றவன் முதலுதவி செய்ய வேண்டும் என்று நினைத்தான்.ஆனால் அவளின் ஆடையை மாற்ற நர்ஸ் யாரும் இல்லாததால்,அவனே அவளுக்கு உடை மாற்ற எண்ணி அவளை நெருங்கினான்.

சுவாதியை அருகில் பார்த்தவனுக்கு அவன் சிறு வயதில் கேட்ட இளவரசி கதைகளில் வரும் அந்த அழகான இளவரசி இவளை போல் தான இருந்திருப்பாளோ என்று எண்ண தோன்றியது.
பிறை நிலா போல் நெற்றி வானவில் போல் வளைந்த புருவம்.கூர் நாசி,கொழுகொழு வென்ற கன்னம், மழையில் நனைந்த ரோஜா காற்றில் ஆடுவது போல் அவளது அதரங்கள் குளிரால் நடுங்கி கொண்டு இருந்தது.அதற்கு கீழே சென்ற அவனின் கண்களை இது தவறு என்று அவனின் மனசாட்சி எச்சரிக்க, இவள் என்னுடையவள்.எனக்கானவள்.என்னுடையதை நான் பார்க்கிறேன் என்று அடக்கினான்.அவளின் முழு அழகையும் பார்த்து பித்தம் கொண்டான்.
அவளின் உடையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அருகில் சென்று நனைந்த அவள் தாவணியை எடுத்தான்.சுவாதியோ ஈன சுரத்தில் வேண்டாம் என்னை விட்டு….விட்….என்று புலம்ப அவள் காதருகில் சென்று ஸ்….வது நான்தான் என்று சொல்ல அவள் அப்போது அஜூ …அஜூ என்று சொல்லி கொண்டே நினைவிலந்தாள்.

அவளின் மேலாடையில் கை வைக்கும் போது ஏற்பட்ட கை நடுக்கத்தை சரி செய்து,ஒரு வழியாக அவளுக்கு ஆடையை மாற்றியவன் வேர்த்து விறு விறுத்து போனான்.

எப்பா உனக்கு டிரஸ் மாத்தறத்துக்குள்ள நான் ஒரு வழி ஆகிட்டேன் என்று தன்னுடைய குருத்தாவை அவளுக்கு அணிவித்து நன்கு இழுத்துவிட்டான். அர்ஜூனின் ஆறடி உயரத்துக்கு சரியாக இருந்த அவனுடைய குறுத்தா அவளுக்கு மிகவும் லூசாக இருந்தது.இன்னும் அவள் நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்தவன் சூடாக பால் கொடுப்போம் என்று அதை கொண்டு வந்து குழந்தையை போல் தன்மேல் சாய்த்து புகட்டினான்.ஆனால் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டு நடுங்கினாள்.

ஜன்னல் வழியாக காற்று வேகமாக அடிப்பதால் நடுங்குகிறாளோ என்று அவளை கட்டிலில் படுக்க வைத்தவன் கதவுகள் அனைத்தையும் சாற்றி வந்தான்.பேனை ஆப் செய்து விட்டு இரண்டு மூன்று கம்பளியை அவள் மேல் போட்டான் போதையில் மழையில் நனைந்ததால் அவள் உடலில் சூடு ஏறாமல் நடுங்கி கொண்டே இருந்தாள்.
வெளியில் பெய்த மழையும்,உள்ளே சென்ற போதையும் மதி இழக்க செய்ததுடன்.சுவாதியின் அழகு அவனை நிலை இழக்க செய்து அர்ஜூனின் கட்டுபாடுகளை தகர்த்தெறிய,சுவாதி என்னவள் என்ற உரிமையை எடுத்து கொள்ள வைத்தது.
ஆம் பெரியவர்களின் ஆசிர்வாதம் இல்லை,சிவன் சக்தியின் அம்சமாக இருக்கும் திருமாங்கல்யம் அவளின் கழுத்தில் ஏறாமல்,சுய நினைவு இல்லாமல், இவ்வளவு நாட்கள் தன் தாய் கூட பார்த்திராமல் தன் பெண்மையை பொக்கிஷமாக எவன் கைகளில் முழு மனதுடனும் காதலுடனும் தர வேண்டும் என்று பொத்தி பாதுகாத்து வைத்தாளோ,அவனே அவளது விருப்பம் தெரியாமல் அவள் மீது படர்ந்து அவளை முழுவதுமாக ஆண்டு முடித்தான்.

நாட்டின் கடை கோடியில் பூத்த சுவாதி என்னும் மலர் தலைநகரான சென்னையில் பிறந்து வளர்ந்தவனின் தோளில் மாலையாக மாறியது.வெளியில் மழை தன் ஆதிக்கத்தைகாட்ட உள்ளே அர்ஜூன் சுவாதியிடம் தன் ஆதிக்கத்தைகாட்டி கொண்டு இருந்தான்.
காலையில் கனத்த தன் தலையை கையில் தடவியவள். தன் இடையில் கனமாக ஒரு பொருள் கிடப்பதாக நினைத்து தொட்டு பார்த்தாள்.அது ஒருவனின் கை என்பதை அறிந்து கையை வெடுக்கென தள்ளி துள்ளி எழுந்தாள் அப்போதுதான் உணர்ந்தாள் தன் நிலையை.
போர்வையை நன்றாக சுருட்டி தன்னை மூடி கொண்டவள் பக்கத்தில் பார்க்க இதழில் வசீகர சிரிப்புடன் அர்ஜூன் படுத்திருந்தான்.என்ன முயன்றும் முடியாமல் தன்னிலை நினைத்து அழுதாள்.கைகளை அவள் தள்ளிய வேகத்திலும் சுதியின் விசும்பல் சத்தத்திலும் கண் விழித்த அர்ஜூன் அவள் இருந்த கோலத்தை பார்த்து வேறு புறம் திரும்பி கொண்டான்.

சுவாதியின் விசும்பல் சத்ததில் அவளிடம் பேச வேண்டும் என்று திரும்பியவன் அவள் அதே கோலத்தில் இருப்பதை பார்த்து சா….ரி சாரி வது.ஒரு நிமிடம் நான் இதோ வருகிறேன் என்று அவளை பார்க்காமல் அறையில் இருக்கும் பாத்ரூமில் அவன் இரவு காய போட்ட அவளது உடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.இதை போட்டு கொண்டு வா உன்னிடம் பேச வேண்டும் என்று அறையைவிட்டு வெளியேறினான்.

அறையில் இருந்து சென்றவனையே கண் இமைக்காமல் பார்த்தவள். காப்பாற்றுவாய் என்று உன்னை நம்பி வந்தேன்.ஆனால் நீயும் மற்ற ஆண்களை போல்தான் என்று நிருபித்துவிட்டாய். ஆண்கள் அனைவருமே சந்தர்பவாதிகள்தானா? உன்னை போய் காதலித்தேனே இப்போது அதை நினைத்து வெட்கபடுகிறேன். இந்த நிமிடம் நான் இந்த உலகத்தில் அதிகம் வெறுப்பது உன்னைதான் உன்னை மட்டும்தான்.

அக்காவை காதலித்தவன்.எந்த உரிமையில் என்னை தொட்டான் நானே தேடி வந்ததாலா?எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் என்று மனதுக்குள் கணன்று கொண்டு இருந்தவளின் முன்பு டீயை கொண்டு வந்து வைத்தான்.

அர்ஜூனையே வெறுப்புடன் பார்த்து கொண்டு இருந்தவளை பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல்,தலையை குனிந்து கொண்டு நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம்,நீ இரவு குளிரால் ரொம்ப நடுங்கினாய் என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே,அவன் கொண்டு வந்து கொடுத்த டீ கப் சிலீர்………என்ற சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது.

Advertisement