Advertisement

அத்தியாயம்-6

அபியின் அழு குரலில் தூக்க கலக்கத்துடனே மாடி ஏறியவள்  அங்கு சுதி அபியை அடிக்க கை ஓங்கியதை பார்த்தவள் சுவாதி என்று அழைத்து அவள் செயலை தடுத்தவள் வேகமாக சென்று அபியை கைகளில் தூக்கி கொண்டவள் சுவாதியை முறைத்தாள்.அவள் தூக்கமும் போன இடம் தெரியாமல் சென்றது.அடியே எதுக்கு டி குழந்தையை அடிக்க போற உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா என்று திட்ட ஆரம்பித்தாள்.

சுவாதியோ கோபம் கொஞ்சமும் குரையாமல் அவனை கீழே விடு கீது.சும்மா எதுக்கு எடுத்தாலும் பிடிவாதம் என்ன இது பழக்கம் முளைக்கும் போதே இவ்ளோ பிடிவாதம் ஆகாது.

முதலில் என்ன நடந்தது என்று என்கிட்ட சொல்லு.     கீதா.

என்ன சொல்ல சொல்ற எனக்கு பயங்கரமா தலை வலிக்கிது படுத்து தூங்கடானா அடம்பண்ணிக்கிட்டு இருக்கான்.அதான் ரெண்டு பேரும் நல்லா விளையாடுனிங்க இல்ல.இன்னும் தூங்காமல் அலுச்சாட்டியம் செய்தாள் என்ன அர்த்தம்.இவனிடம் கத்தி கத்தி எனக்கு தலைவலி அதிகமாகதான் ஆகிவிட்டது என்று தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்தாள்.

வள்ளி பேசியது வேறு அவளுக்கு மன உளைச்சலாக இருந்தது.அதன் காரணமாகவே தன் இயலாமையை கோபமாக அபியிடம் காட்டிவிட்டாள்.

சுவாதியை பார்க்க கீதாவிற்க்கு  பாவமாக இருந்தது. சுவாதியின்  முகத்தை பார்த்த கீதாவிற்கு அவள் குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தாள்.சரி நீ தூங்கு நான் அபியை தூங்க வைக்கிறேன் என்று அபியை தூக்கி கொண்டு செண்றவளை சதி நிறுத்தி தேங்ஸ் என்றாள்.அவளை போலியாக முறைத்த கீதா போடி போய் ரெஸ்ட் எடு என்று அபியை தூக்கி கொண்டு கீழே சென்றாள்.

கீதாவின் தோளில் சாய்ந்து இருந்த அபி தேம்பி கொண்டே கண்களை தேய்த்து கொண்டு இருந்தான்.சுதி கொஞ்சம் பொறுமையாக அபியை தட்டி கொடுத்திருந்தாள் தூங்கி இருப்பான் என்றே தோன்றியது.

அபியை பார்க்கவும் பாவமாக இருக்க அவனை மாற்றும் பொருட்டு கீதா அறை கதவை திறந்து வைத்துவிட்டு வாசலருகே அபியை இறக்கினாள். கேள்வியாக பார்த்த அபியை பார்த்து அபிபையா நம்ம மட்டைய போட்டு சொட்டைய முறிக்கிற கேம் விளையாடலாமா ரெடி  என்று சொல்லி முடிப்பதற்க்குள் அபியின் முகம் கீதா நினைத்தது போல் பிரகாசமாக மாறி தலையை ஆட்டினான்.

ஸ்டார்ட் என்று கீதா சொன்ன உடன் வேகமாக இருவரும் ஓடு பெட்டில் படுத்து போர்வையை தலைவரை இழுத்து போர்த்தி கொண்டனர்.

அபிதான் முதலில் மட்டைய போட்டான் இப்ப சொட்டைய முறிக்க போறான் என்றவன் தூங்க கண்களை மூடினான்.கீதாவும் கண்களை மூடி கொண்டாள்.படுத்த கொஞ்ச நேரத்தில் அபி தூங்கிவிட கீதா புரண்டு புரண்டு படுத்து  அரை உறக்கத்திற்கு சென்றாள்.{இந்த கேம் தெரிஞ்சுக்க விரும்பறவங்க யூ டியூப்ல போய் மட்டைய போட்டு சொட்டைய முறிக்கற கேம் ஷின்சன்னு டைப்பண்ணி தெரிஞ்சுக்கோங்கோ….}

கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டாலும் கண்களை திறக்க முடியாத தூக்கத்திற்கு சென்றிருந்தாள்.வந்தது சுவாதி என்று அவளின் தலையை வருடிவிட்டதில் கண்டு கொண்டவளின் முகத்தில் லேசான புன்னகையை வெளிபடுத்தியது. அபியை திட்டுவதும் திட்டிவிட்டு மனது கேட்காமல் அவனை பார்க்க வந்துவிட்டாள் என்று நினைத்தவள் தூக்கத்தை தொடர ஆரம்பித்தாள்.

அபியை அடிக்க போனதை நினைத்து சுவாதிக்கும் மனது கஷ்டமாக இருந்தது.யாரோ மேல் இருக்கும் கோபத்தை மகன் மேல் காட்டிவிட்டதாக எண்ணி குற்ற உணர்வு கொண்டவள் அபியை சமாதானபடுத்த கீதாவின் அறைக்குள் நூழைந்தாள்.அங்கு கீதா, அபி இருவரும் தலை வரை போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்குவதை பார்த்தவளுக்கு சிரிப்புதான் வந்தது.

கீதாவின் அருகில் சென்றவள் போர்வையை கழுத்து வரை இறக்கிவிட்டவள்.அவள் தலையை கோதி கொடுத்தவள் அவள் முகத்தில் தோன்றிய புன்னகையை பார்த்து தானும் புன்னகைத்தவள் அபியின் அருகில் சென்று அவன் தலையையும் கோதிவிட்டவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு திரும்பும் போதுதான் கவனித்தாள் இருவரும் பேன் கூட போடாமல் படுத்திருப்பதை  ஏ.சியை ஆன் செய்து மிதமான அளவு வைத்தவள்.பேன்னை ஆன் செய்து வைத்துவிட்டு கதவை அடைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

  மாலை எழுந்த கீதா அபியை பார்க்க அவன் இன்னும் தூங்கி கொண்டு இருந்தான்.அவனை பார்த்து சிரித்தவள் பாத்ரூமிற்கு சென்று முகம் கழுவி வந்தாள். அதற்குள் அபியும் எழுந்து கொள்ள கீதாவை பார்த்து சிரித்தான்.கீதா அவனை வம்பிழுக்கும் பொருட்டு ஹே……..நான்தான் பர்ஸ்ட் சொட்டைய முறிச்சேன் என்று குதிக்க அபி கோபமாக இல்ல நான்தான் பர்ஸ்ட் என்று குதிக்க கீதாவும்,அபியும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லி கொண்டு இருந்தனர்.

அபி நான்தான் நான்தான் என்று கத்தி கொண்டு இருந்தவன் ஒரு கட்டத்துக்கு மேல் பொருமை இல்லைமல் கீதாவின் தோளில் கைகளை வைத்து உளுக்கி கொண்டு நான்தான் நான்தான் என்று கத்த. கீதாவும் அபியின் தோள்களை பிடித்து லேசாக உளுக்கி கொண்டு நான்தான் நான்தான் என்று கத்தி கொண்டு இருந்தாள்.

அபியை சமாதானபடுத்தலாம் என்று வந்த சுவாதி இருவரையும் பார்ததும் கோபம்தான் வந்தது.இருவரும் விட்டு கொடுக்காமல் நான்தான் என்று சொல்லி கொண்டு இருப்பதை கைகளை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருந்தவள் அவர்கள் இப்போதைக்கு தன்னை கவனிக்க போவதில்லை என்பதை உணர்ந்து.இங்க என்ன நடக்குதி என்று குரலில் வரவழைக்கப்பட்ட குரலில் கேட்க அவளை திரும்பி இருவரும் ஒரு பார்வை பார்த்தவர்கள் அவளுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் தங்கள் சண்டையிடும் வேலையை தொடர.கடுப்பான சுவாதி அம்மா………………………………. என்று கத்தினாள்.

சுவாதியின் அம்மா என்ற சத்தத்தில் இருவரும் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு.ஒரே நேரத்தில் சுதியை திரும்பி பார்த்து ஆப்பண்ணிட்டாயா………………. என்று வடிவேலு பாணியில் எண்ணி கொண்டனர். இருவரும் ஒரே நேரத்தில் அணைத்து கொண்டு வீ ஆர் குட் பிரண்ட்ஸ் யூ நோ என்று ஒரே டோனில் சொல்லி சிரித்தனர்.இவர்களின் சொய்கையை பார்த்த சுதிக்குத்தான் இதில் யார் குமரி யார் குழந்தை என்று குழப்பம் வந்தது போல் இருந்தது. பிறகு இருவரையும் பார்த்து பய் முகம் கழுவி வாங்க காபி குடிக்கலாம் என்று சொல்லி சென்றாள்.

சுதி அந்த பக்கம் சென்றவுடன் நான்தான் என்று மீன்டும் அபி ஆரம்பிக்க சரி சார் நீங்கதான் ஜெயிச்சீங்க நிப்பாட்டிக்குவோம் இதோட எல்லாத்தையும் நிப்பாட்டிக்குவோம் என்று வடிவேலு பாணியில் சொன்னவள் இல்லனா உன் அம்மா என் அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து நம்மை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சிருவாங்க என்று சொன்னவளை பார்த்த அபிக்கும் அது உண்மை என்று தெரிய, ஓ.கே நாளை தீம் பார்க் போகலாம் என்றான்

Advertisement