Advertisement

அத்தியாயம்-10

கீதா அபிக்கும் நகுலனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கவும் அவளை ஆச்சரியமாக பார்த்தவன்.என் பெயர் நகுல் என்றவனை நக்கலாக பார்த்து அதுதான் சொல்லிட்டிங்களே என்றவளை கூர்மையாக பார்த்தவன்.என் அண்ணன் பெயர் அர்ஜூன் என்றான்.

ஓஹோ.பிரைம் மினிஸ்டர் தம்பியாடா நீ.

என்ன.     நகுலன்.

 அட என்னப்பா நீ.பிரைம் மினிஸ்டர் பேர்தானே அர்ஜீன் என்றாள் நக்கலாக.

அவளை கூர்மையாக பார்த்தவன் அபியின் அப்பா பேர் கூட அர்ஜீன்தான் என்றான் அழுத்தமாக.

என்ன இவன் இப்புடி பாக்கறான்.இது….ஆ………… அபி இப்புடிதானே பார்ப்பான் பிடிவாதம் பிடிக்கும்போது என்று நினைத்தவள் இவன் சித்தப்பானா அந்த பார்வை இவன்கிட்ட இருந்துதான் வந்திருக்குமாட்டுக்கு. இது குடும்ப பார்வையாட்டுக்கு என்று நினைத்தாள். தோழியின் வாழ்க்கை சரி செய்துவிடலாம் என்ற நினைவும் தோன்ற முகம் மலர்ந்து போனாள்.

கீதாவின் முகம் மலர்வதை கவனித்தவன்.இப்போது புரிகிறதா நான் யார் என்பது என்று கேட்டவன் நான் எதற்கு உங்களை பார்க்க வந்தேன் என்று புரிந்திருக்கும்.

கீதா வேகமாக தலையை ஆட்டி அர்ஜூன் எப்படி இருக்கிறார்.அவரும் வந்திருக்கிறாரா.அவருக்கும் சுவாதிக்கும் என்ன பிரச்சனை எதனால் அவள் இங்கு வந்து தனியாக கஷ்டபடுகிறாள் என்று படபடவென பொறிய நகுல் ஆச்சரியமாக கீதாவை பார்த்து உங்களுக்கு ஒன்றும் தெரியாதா அண்ணி ஒன்றும் சொல்லவில்லையா என்றான்.

அவள் அழுத்துக்கொண்டே அட போங்க சார்.அதை பற்றி பேசி என்னை கஷ்டபடுத்தாதீங்கனு சொல்லிட்டா.சரி நாமாவது நாகபட்டினம் போய் என்ன நடந்ததுனு விசாரிக்கலாம் என்று அவள் வளைகாப்பு முடிந்தவுடனே வீட்டில் அனைவரிடமும் சென்னையில் புராஜெக்ட் ஒர்க் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

என்னை தனியாக கூப்பிட்டு எந்த ஊர் என்று விசாரித்தாள் நான் சொன்னவுடன்,என் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து குழந்தை மீது சத்தியம் வேலை விசயமாக எங்கு வேண்டுமானாலும் போ என்னைபற்றியோ அவரைபற்றியோ விசாரிக்க கூடாது என்று சொல்லிவிட்டாள்.

அண்ணி அப்படி சொன்ன பிறகு நீங்கள்  என்ன செய்தீர்கள் என்று தன் தாடையை தடவியவாறு யோசனையுடன் கேட்டவன் அவளின் பதிலில் அவளை கேவலமாக பார்த்தான். {அப்புடி என்னப்பா சொன்னா}.

வேறு என்ன செய்வது சத்தியத்தை மீறினால் உம்மாச்சி கண்ண குத்திடும் அதனால் அம்மா சாப்பாடு இல்லாமல் புராஜெக்ட்னு பொய் சொன்னதால எங்கையாவது போகணுமேனு சென்னை போய் ஜாலியா  சுத்திட்டு வந்தேன்.அதுல என்ன ஒரு கவலைனா ஹோட்டல் சாப்பாடுதான் பத்து நாள் காஞ்சுபோய் வந்தேன் என்றாள் சோகமாக.

அம்மா எத்தனையோ முறை அவரைபற்றி கேட்டாங்க வாய தொறக்கவே இல்ல.அபி அப்பாவோட பெயர்கூட எங்களுக்கு தெரியாது. அபியின் பிறந்த சான்றிதழ் பார்த்துதான் அவருடைய பெயரே எங்களுக்கு தெரிந்தது என்றாள் சோகமாக.

அபியின் இரண்டாவது பிறந்த நாள் அன்று அம்மா மீண்டும் அபியின் அப்பா என்று ஆரம்பித்தார்கள். அம்மாவை கை நீட்டி தடுத்தவள் அவரை பற்றி எதாவது விசாரித்தாள் உங்களிடம் கூட சொல்லாமல் எங்காவது சென்று விடுவேன் என்று சொல்லிவிட்டாள். அதன் பிறகு அந்த பேச்சை யாரும் எடுப்பதில்லை.

ஹோ…. இப்ப என்ன செய்வது என்று நகுலன் யோசிக்க ஆரம்பித்தான் ஆனால் அவன் அனுமதி இல்லாமலேயே கீதாவின் நடவடிக்கையைபற்றி ஆராய ஆரம்பித்தான்.

முதலில் எண்ணெயில் போட்ட கடுகாக பொறிந்தாள் அண்ணன் பெயர் சொன்னவுடன் அமைதியாகிவிட்டாள். அவர்கள் வாழ்வை இணைக்க இவள் கண்டிபாக உதவுவாள் என்று தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தவன் பேச ஆரம்பித்தான்.அவர்களுள் என்ன பிரச்சனை என்று எனக்கும் தெரியாது.ஆனால் எனக்கு ஓரளவு கெஸ் இருக்கிறது.

என்ன என்ன.. சீக்கிரம் சொல்லுங்க.         கீதா

அண்ணன் முதன்முதலில் பார்த்து காதலித்தது சுவாதி அண்ணியின் அக்கா மாலதியைதான் என்று சொன்னவுடன்.வாட் என்று கத்திவிட்டாள் பிறகு சுற்றுபுறத்தை அறிந்து சுற்றி முற்றி பார்க்க அனைவரும் அவளையே பார்ப்பதை உணர்ந்து அனைவரிடமும் ஒரு மன்னிப்பை வேண்டி அமர்ந்தவள். ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துவிட்டாள்.

தோழியின் குணத்தைபற்றி அறிந்ததால்.இனி சுவாதியின் வாழ்வை சரிசெய்யவே இயலாதா என்று சோர்ந்து போனாள்.அவளின் அதிர்ச்சியையும் அடுத்து அவள் முகம் யோசனைக்கு சென்று சோர்ந்து போனதை பார்த்து கொண்டிருந்தவன்.

அட செல்ல குட்டி டக்கு டக்குனு ரியாக்க்ஷன் மாத்துரியே.நீ கண்ணுலயே அபிநயம் பிடிக்கிறத பார்த்தா மாமா கண்ட்ரோல் மிஸ் ஆகுது செல்லம் என்று மயங்கினான்.தீவிரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் காரணம் கேட்க.

கீதா சுவாதியின் குணத்தைபற்றி சொன்னாள். மற்றவர்கள் பொருளை தொடவே மாட்டாள் சார். மாலதி கூட இவள் டிரஸ் மாத்தி காலேஜ்கு போட்டு போவாள் ஆனால் பிறகு அவளையே அந்த டிரஸை வைத்துக்கொள்ள சொல்லிவிடுவாள். என்னுடையது எனக்கு மட்டும் தான் என்று எண்ணுபவள். ஆனால் அவள் மீது அதிக பாசம் வைத்திருந்தாள்.அவள் பயந்த சுபாவம் அதனால் எங்கு சென்றாலும் சுதி அவளுடன் காவலுக்கு செல்வாள்.

சுவாதி எப்போதும் மற்றவர்கள் பொருளுக்கு ஆசைபடக்கூடாது என்று நினைப்பவள்.உங்கள் அண்ணன் காதலித்தது மாலதியை என்றால் பிறகு அபி என்று சொல்லவந்தவள் எப்படி சொல்வது என்று நினைத்து நிறுத்திவிட்டாள்.

கீதா என்ன சொல்லவருகிறாள் என்பதை ஊகித்தவன்.எனக்கும் அதுதான் புரியவில்லை. ஆனால் நிச்சயம் என் அண்ணன் தவறான எண்ணத்தோடு எந்த விஷயமும் செய்திருக்கமாட்டார் என்றவன், தவறான நோக்கத்தோடு இருந்திருந்தாள் நிச்சயம் தன்னிலை மறக்கும் அளவு மாறி இருக்கமாட்டார் என்றும் கூறினான்.

கீதா புரியாமல் பார்ப்பதை உணர்ந்தவன். இப்போது இருக்கும் அர்ஜீன் எங்களிடம் இருந்து விலகியே இருக்கிறான்.எப்போதும் ஹாஸ்பிட்டல் நோயாளி என்றே இருக்கிறான்.அவன் சாப்பிடுகிறானா இல்லையா என்பதுகூட எங்களுக்கு தெரிவதில்லை. அவன் தான் பேசவில்லை நாமாக பேசுவோம் என்றால் என்ன கேட்டாலும் ஆமாம் இல்லை என்ற இரண்டு பதில் தான். முகத்தில் எப்போதும் சோகம் உயிரற்ற கண்களுடன் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அவனும் அண்ணியை சேடி கொண்டுதான் இருக்கிறான்.

ஊரில் விசாரித்ததில் உன்னைபற்றி தெரிந்து கொண்டு டெல்லிக்கும் உங்களை தேடி வந்தான்.அங்கு ஆபிஸில் கேட்டதற்கு உங்களைபற்றிய எந்த தகவலும் தர மறுத்துவிட்டனர்.அங்குதான் இருப்பீர்கள் என்று வெயில், மழை என்று பார்க்காமல் அலைந்து காய்ச்சலோடுதான் சென்னைக்கு வந்தான்.

 காய்ச்சலில் விழுந்து எழுந்தவன்தான் அதன் பிறகு அவனை உயிர் இருந்தும் இல்லாமல் நடமாடும் மெஷினாகதான் பார்த்தோம்.இன்னும் சொல்ல போனால் நாங்கள் அவனை பார்ப்பதே அரிதாகி போனது அவனை முழுவதுமாக அவன் வேலையில் அழுத்தி கொண்டான்.இதற்க்கு முன் அவன் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும் இப்போது அந்த அர்ஜீனை தேடி கொண்டே இருக்கிறோம் என்றான் வருத்தமாக.

நகுலன் சொல்வதை கேட்ட கீதா இவர்கள் இருவரும் நிச்சயம் தவறாக புரிந்து கொண்டு பிரிந்திருப்பார்களோ  இவர்களை சந்தித்து பேசவைத்தால்,எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்  என்றாள்.அவளை கிண்டலாக பார்த்த நகுலன் அர்ஜீன் பெயர் கூறியதற்கே வீட்டை விட்டு சென்றுவிடுவேன் என்றவர் அவனை பார்த்தவுடன் வேறு எங்காவது சென்றுவிட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றான்.

பிறகு என்னதான் சார் செய்வது என்றாள் சலிப்பாக. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றான்.

வ்வாட்….. என்று கத்தியவள் முதலில் போல் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்க பக்கத்தில் யாரும் இல்லை அதனால் தான் இப்போது சொன்னேன் என்றான்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தாள் இப்படி கேட்பீர்கள் என்றவள் அவன் பதில் சொல்வதற்கு முன் என்ன சார் நிறைய கதை படிப்பீர்களா இப்படியெல்லாம் அதில்தான் நடக்கும் உண்மையில் நடக்க சாத்திய கூறுகள் குறைவு என்று நக்கலாக சொன்னவள் எழுந்து கொண்டாள்.

 நான் செல்கிறேன்.நீங்கள் உளறுவதை எல்லாம் என்னால் கேட்க முடியாது என்று விறுவிறுவென அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தாள்.பேருந்து நிறுத்தத்துக்கு வந்தவள்  அவனை வசைபாடி கொண்டே இருந்தாள்.

கீதா என்ன செய்வாள்…….

அத்தியாயம்-11

கீதா பேருந்து நிலையத்தில் நின்று நகுலனை திட்டி கொண்டு இருக்க அவளை உரசினார் போல் கார் வந்து நிற்கவும் துள்ளி குதித்து யார் என்று பார்க்க நகுலன் தான்.ஆனால் இம்முறை அவன் முகம் கருத்து இறுகி இருந்தது. வண்டியில் ஏறு என்று வார்த்தைகளை மென்று துப்பினான்.நகுலின் கோபத்தில் ஒரு நிமிடம் திகைத்துதான் போனாள். அடுத்த நிமிடம் இவன் யார் எனக்கு ஆர்டர் போட என்ற வீம்பு எழ முகத்தை திருப்பி பஸ் வருகிறதா என்று பார்க்க ஆரம்பித்தாள்.

கோபமான நகுல் கடவுளே இவளுக்கு அழகையும் திமிரையும் அதிகம் கொடுத்த நீ அறிவையும் பொறுமையையும் கூட கொஞ்சம் சேர்த்து கொடுத்திருக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு அவனும் காரைவிட்டு இறங்கினான்.

 கீதாவின் கையை பிடித்து வா என்றால் வரமாட்டாயா சொல்வதை முழுதாக கேட்காமல் வந்து விட்டு இப்போது அனைவரின் முன்பும் சீன் கிரியேட் செய்யாதே என்றான் கோபமாக.

பேருந்துக்கு நிற்பவர்கள் அனைவரும் தங்களையே பார்பதை உணர்ந்தவள்.நிமிர்ந்து அனைவரையும் பார்த்தாள் அவர்களின் பார்வை கோர்த்திருக்கும் தங்கள் கைகளில் இருப்பதை பார்த்தவள்.இவன் ஒன்று எப்போது பார்த்தாலும் கைகளை பிடித்து கொள்கிறான் என்று நினைத்து கொண்டாள்.

ஒரு வயதான தம்பதி இவர்களை நெருங்கி இங்கே பாரம்மா கணவன் மனைவி என்றாள் சண்டை வருவது சாதாரணம் அதற்காக வீட்டை விட்டு வரக்கூடாது. என்ன சண்டை இருந்தாலும் வீட்டில் வைத்தே பேசி கொள்ள வேண்டும் நாழுபேர் வேடிக்கை பார்க்கும் அளவு நடந்து கொள்ளகூடாது. பார் உன் மேல் கோபம் இருந்தாலும் தம்பி வீட்டில் போய் பேசி கொள்ளலாம் என்று கூப்பிடுகிறது இல்லையா போ மா என்று சொல்ல அவர்கள் சொல்வதை கேட்டு நகுல் சந்தோசபட்டு சிறு சிரிப்புடன் தேங்யூ ஆண்டி என்று கூற கீதாவோ மேலும் கோபமாக அவர்களை முறைத்துவிட்டு காரில் சென்று ஏறினாள். கார் யாரும் இல்லாத இடம் நோக்கி சென்றது.

சாலையின் ஓரமாக காரை நிறுத்தியவன் காரை லாக் செய்தான்.அவன் செய்வதை பார்த்து கீதா முறைக்க பேசும் போது நீ மீண்டும் இறங்கி போய்விட்டாள் என்ன செய்வது உனக்கு பின்னால் வந்து கெஞ்சி கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை என்று விரைப்பாக வெளியில் சொன்னவன் உன்னை கொஞ்சதான் விருப்பம் என்று மனதில் நினைத்து கொண்டான் இவளிடம் கோபமாக பேசினால் தான் வேலையாகும் என்பதை உணர்ந்து.

உன் தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் சொல் நான் உன்னிடம் மேற்கொண்டு பேசவேண்டியதை சொல்கிறேன் இல்லை என்றால் இப்போதே இறங்கி சென்றுவிடு.எனக்கு நான் பேசி முடிக்கும் வரை யார் குறுக்கில் பேசினாலும் எழுந்து சென்றாலும் பிடிக்காது என்று கூறி கார் லாக்கை ரிலீஸ் செய்தான்.

எனக்கும் என் தோழியின் வாழ்க்கையின் மீது அக்கறை இருக்கிறது அதற்காக நீங்கள் கண்டபடி உளருவதை என்னால் அனுமதிக்க முடியாது என்றால் கோபமாக.

என்னை திருமணம் செய்துகொள் என்று கூறுவது இவளுக்கு உளறல் போல் தெரிகிறதா ஏன் இவளுக்கு என்னை பிடிக்கவில்லையா என்று யோசித்தவன்.சரி இவளுக்கு பிடிக்கவில்லை என்றால் அண்ணன் வாழ்வு சரியானதும் இவளுக்கு டைவர்ஸ் கொடுத்துவிடலாம் என்று மனம் கணக்க முடிவெடுத்தவன்.அதை அவளிடம் கூறினான்.

என்ன சார் நீங்க வேறு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்றாள் சலிப்பாக.

இங்கு பார் கீதா கதை என்றாலும் நிஜம் என்றாலும் ஒருவருக்கு பாசம் என்பது பலவீனம்தான்.இங்கு அண்ணியின் பலவீனம் நீதான்.நாம் இருவரும் சேர்ந்தால் இருவரும் அடிக்கடி பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி கொண்டால் அவர்கள் வாழ்வு மாற வாய்ப்பு உள்ளது.இதை தவிர வேறு எந்த பிளானும் அவர்களை மீட்பண்ண வைக்க சிறந்ததாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு வேலை உனக்கு  வேறு ஐடியா தோன்றினால் சொல்.ஆனால் நாம் எடுக்கும் முடிவு சுவாதி அண்ணியை வேறு எங்கும் செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.அதே சமயம் நிச்சயம் என் அண்ணனை திருமணம் செய்து ஒன்றாக இருக்கதான் வேண்டும் இவர்களுக்காக என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் அதை மனதில் வைத்து யோசித்து சொல்லுங்கள் என்றான் கைகளை மார்போடு கட்டி கொண்டு.

நகுலன் அவளையே பார்க்க மனதினுள் கடவுளே இவள எப்புடி கரெக்ட்பண்றதுனு தெரியாம அண்ணன இழுத்தேன் இவ வேற யோசிக்கறாளே,ஒரு ஐடியாகூட உருப்படியா வரக்கூடாது என்று வேண்டி கொண்டான்.

சிறிது நேரம் யோசித்தவள் தூக்கம் வருவது போல் இருக்கவும் கண்களை தேய்த்து கொண்டு மனதுக்குள் பேச ஆரம்பித்தாள்.அடியே கீது உனக்குதான் அதிகமா யோசிச்சா தூக்கம் வந்துருமே இந்த வேலை உனக்கு தேவையா பேசாம அவன் சொன்ன ஐடியாவையே ஓகே பண்ணிடலாமா{ஹி…ஹி..ஹி….எனக்கும் இந்த வீக்னஸ் இருக்கு}, நமக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை இவன் சொல்வது போல் செய்தால் திருமணம் செய்துகொள் என்ற தாயின் தொல்லை குறையும் சுவாதி வாழ்வையும் சரி செய்துவிடலாம் அமெரிக்காவிற்க்கு செல்வதற்கான முயற்ச்சியை மேற்கொள்ளலாம் என்று நினைத்தாள்.

தன்னுடைய லட்சியமாக அவள் நினைத்து கொண்டு இருப்பது அமெரிக்காவிற்கு சென்று அவர்களே வியக்கும் படி வேலை செய்து இந்தியர்களின் திறமையை உலகுக்கு காட்ட வேண்டும் என்பதே அதற்கு திருமணம் தடையாக இருக்கும் என்றுதான் இவள் திருமணத்தை தள்ளி போட்டது.இப்போது இரு பிரச்சனைக்கும் தீர்வு போல் நகுல் சொல்வதால் சந்தோசமாக தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு ஏன் சம்மதித்தோம் ஏன் இந்த திருமணத்தை செய்து கொண்டோம் என்ற கவலையில் தான்,தன்னுடைய கனவை நிறைவேற்ற அமெரிக்கா செல்ல போகிறாள் என்பதை அப்போது அவள் அறியவில்லை.

கீதாவின் சம்மதம் கிடைத்தவுடன் எதன் அடிப்படையில் இந்த சம்மதம் என்று அவளிடமே கேட்டான் பதிலை தெரிந்து கொண்டு.அந்த காரணத்தை அவள் கூறகூடாது என்று அவசரமாக கடவுளுக்கு வேண்டுதல் வைக்க கடவுள் உன்னுடைய வேண்டுதல் நிராகரிக்கபட்டது என்று கூறும் வகையில் அதுதான் டைவர்ஸ் தருவதாக சொன்னீர்களே அதுமட்டும் இல்லை என் தோழியின் வாழ்வில் எனக்கும் அக்கறை இருக்கிறது என்றாள்.

அவன் எந்த காரணத்தை அவள் சொல்ல கூடாது என்று நினைத்தானோ அதே காரணத்தை அவள் கூறவும் தன்னுள் இருகியவன் தன்னுடைய பிளானை சொன்னான்.கேட்டவள் சந்தோஷமாக தலையை ஆட்ட,அவனோ நான் நமது பிளானின் முதல் கட்டமாக இன்னோரு விசயம் செய்துவிட்டேன் என்று கூற ஆச்சரியமாக பார்த்தவள்.என்ன பிளான் என்று கேட்க காலையில் உன் ஆபிஸ்ஸில் இருந்து நாம் வரும்போது அண்ணி நம்மை பார்த்துவிட்டார்கள்.

கீதா நகுலனை பார்த்த சுவாதி என்ன செய்ய போகிறாள்……

Advertisement