Sunday, June 7, 2026

    Yaali

    அத்தியாயம் - 20 அவளை விட்டு எங்கோ சென்ற நந்தன், அவள் எண்ணத்தை உணர்ந்ததுப் போல, இதழ் விரித்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தான்(chuckle). பவளனைப் பற்றிச் சில நிமிடங்கள் நினைத்த அவந்திகா பெருமூச்சுவிட்டாள். பின் அவனை ஒதுக்கிப் பாவனாவும் கார்திக்கும் யாளி உலகம் வந்துவிட்டார்களா என அறிய முடிவெடுத்தாள். முடிவெடுத்ததை ச் செயல்படுத்தும் எண்ணமாகத் தன் கண்கள்...
    அத்தியாயம் - 56 வன்னியும் அவளுடன் இரு காவலர்களும் இருந்த பாதுகாப்பு சக்கரம் பொத்தென்று வெள்ளை புல்வெளி போல் இருந்த சரிவான பனி மலையில் விழுந்தது. அவர்கள் விழுந்த அதிர்வில் நிலைபட்டிருந்த பனிமலை, இளகி அவர்கள் மூவரையும் சரிய விட்டது. இடமாற்றும் சக்கரத்தினுள் இருக்கும் போதே உருவாக்கிவிட்டதால் அந்த பாதுகாப்பு சக்கரம் அத ஆன்மீக ஆற்றல் கொண்ட...
    அத்தியாயம் - 30 அவள் விழி மறைவில் குறும்பு செய்யும் குழந்தைப் போல நந்தனின் இதழ் ஒரு புரமாக விரிந்து அவன் கண்ணில் ஒரு ஒளி வெட்டு ஏற்பட்டு மீண்டது. அதன் பிறகு அவந்திகா, “நந்தன், நான் தூங்க போகிறேன். நீங்க?” என்று பேசாமல், ‘எங்குத் தங்குவதாக இருக்கீங்க?’ என்பது போல அவனைப் பார்த்தாள். அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தவனாகச் சின்னச் சிரிப்பை உதிர்த்து, பவளநந்தன், “இளவரசி, நான்...
    அத்தியாயம் - 19 அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள். அவளது விழிப்பில் நினைவு வந்தவனாக, அவனது கையைப் பின் மீட்டுக் கொண்டான். ஆனால் அவனது கண்கள் அவனது இயலாமையைச் சொல்வது போலச் சிவந்து போயிருந்தது. ஆனால்...
    அத்தியாயம் - 57 வன்னியின் 15வது வயதில்… வன்னி பரி அரசின் குருகுலத்தில் ஒரு மரத்தடியில் மற்ற சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அன்று சந்திரரின் மற்ற சீடர்களுக்கு பாதுகாக்கும் சக்கரத்தை கொஞ்ச ஆன்மீக ஆற்றலில் எப்படி திறம்பட உருவாக்குவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். அதனை செயல்படுத்துவது எப்படி என்று மற்ற பரி யாளி சீடர்களுக்கு வன்னி செய்து...
    Author Note : https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/ முன்னுரை: குதிரையாளியின் வம்சத்தில் இளவரசியாகப் பிறந்து வளர்ந்த வன்னியின் ஆன்மா தவிர்க்க முடியாத காரணத்தினால் அதன் உடலை விட்டுப் பிரிந்தது. யாளி உலத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாததாலும் அவளது ஆயுட்காலம் முடியாததாலும் அவளது ஆன்மா அங்கிருந்து மனித உலகம் வந்துவிட்டது. மனித உலகில் இலக்கற்று சுற்றிக் கொண்டிருந்த அந்த ஆன்மா, வாழ்வதற்கான ஆசை இல்லாததால் ஆயுட்காலம் முடியும் வரை மனித உலகத்தில் இருக்க முடிவெடுத்து அங்கேயே தங்கிவிட்டது. கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக யாளி உலகம் செல்லாமல் மனித உலகில்...
    அத்தியாயம் - 10 முன் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பக்கவாட்டு முகத்தை வெறித்தாள் அவந்திகா. ‘இந்த ஓட்டுநரைப் பார்த்தால் 22லிருந்து 25வயதுக்குள் இருப்பவன் போல இருக்கிறது. பவளனைப் போல, மேகனைப் போல அதே வயது. இவனும் யாளி உலகிலிருந்து வந்திருப்பானோ.' என்று நினைத்தாள். சந்தேகமாக இருந்த அவளது பார்வையை சிறிதும் தளர்த்தாமல், அவனுக்குப் பதில் அளித்தாள் அவந்திகா, “நான் வளைவுகள் வர வர வழிச் சொல்கிறேன். இப்போது நேராகச் செல்லுங்க.” என்றாள். “சரிங்க அம்மா(1)” என்றான் ஓட்டுநர். அவன் காரியமே கண்ணாகத் தானூர்தியை இயக்கியப் போதும், அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் பார்வை அவனை விட்டு மீளவில்லை. அப்படியே, "அது இருக்கட்டும். ஏன் என்னை அவந்திகா என்று அழைத்தீர்கள்? என் பெயரை நான் சொன்னதாக நினைவில்லையே!” என்று நேரடையாகக் கேட்டாள். அவளது கேள்வி அவன் காதில் விழுந்ததற்கு அடையாளமாக அவன் இதழ்...
    அத்தியாயம் - 24 அவளது செயலில் மேலும் இதழ் விரிய, “சரி.” என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான். சத்திரத்தில் அப்போதுதான் உணவு பந்தல் போட ஆரம்பித்திருந்தனர். பாவனாவும் மேகனும் அதிக நேரம் காத்திருக்காமல் பலரோடு அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தனர். வாழை இலையும் அதில் பலவித பலகாரங்களும் வைக்கப்பட பாவனா "இப்படி எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடும்போது...
    அத்தியாயம் - 15 "என்ன?!!" என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது 'எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்' என்றது நெரூடலாக. அவந்திகாவின் திகைப்பை எதிர்பார்க்காத கார்திக் 'தான் நேற்று கண்டது தவறாக இருக்குமோ' என்று நினைத்து, 'அதை அவளிடம் சொல்லலாமா அல்ல வேண்டாமா' என்று தயங்கினான். ஆனால் அவள்...
    அத்தியாயம் -16 அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக். அதன் பிறகு அவந்திகா அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் 30 நிமிடங்களில் அந்த விளையாட்டு பூங்காவிற்கு வந்துவிட்டாள். வந்ததும் பதிவு சீட்டு...
    அத்தியாயம் - 60 வன்னிக்கு மேலும் வியப்பு மேலோங்கியது. 'எனக்காக மகர அரசர் அரசி காத்திருக்கின்றனரா?' என்று மனதுள் நினைத்தாள். இருந்தும் எதுவும் பேசாமல், “வருகிறேன் காவலரே!” என்று குரல் கொடுத்தாள் வன்னி. பின் அவள் அருகில் இருந்த சேவகியை திரும்பி பார்த்து, “நன்றி சேவகி. நீ இப்போது போகலாம். வேறு தேவையிருந்தால் நானே பார்த்துக் கொள்வேன்.”...
    அத்தியாயம் - 31 ஒரு அடிபின் நகர்ந்த போதும், அவந்திகாவை பற்றியிருந்த பிடியை மதியும் முகிலனும் விடவில்லை. எதிரில் இருந்த இருவரையும் பார்வையாலே எரித்து விடுபவன் போலப் பார்த்த பவளநந்தன் தன் வலது கையை உயர்த்தினான். அவன் விரல் நுனிகளிலிருந்து சாம்பல் நிறத்தில் மினுமினுக்கும் ஒளித்துகள்கள் உண்டாகி, சிறியதுமல்லாமல் பெரிதென்றுமல்லாமல் ஒரு முள் போன்ற தண்டாயுதம்(1) உருவானது. அதனைப்...
    அத்தியாயம் -14 தன் கண்மீது அமர்ந்த பட்டாம்பூச்சியின் செய்கையில் உடல் சிலிர்த்து நின்றிருந்தப் போது அவள் அறையின் கதவு தட்டும் சப்தம் கேட்டது. அந்தச் சப்தம் அடங்கும் முன்னே அந்தப் பட்டாம்பூச்சியும் மெதுவாகப் பறந்து திறந்திருந்த சாளரத்தின்(window) வழியாக வெளியில் சென்றுவிட்டது. அது போவதையே பார்த்திருந்தவளின் கவனம் மீண்டும் தட்டப்பட்ட கதவை நோக்கித் திரும்பியது. உடனே எச்சரிக்கை உணர்வுக் கொண்டவளாக, தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள் அவந்திகா. மணி 9 -ஐ கடந்து 5 நிமிடம் ஆகி விட்டிருந்தது. இருந்தும் 'பாட்டு நடனத்திற்கு சென்றவர்கள் அதற்குள் வந்திருக்க கூடுமா! என்ன?' என்று தோன்ற அந்த அறை கதவில் வெளியில் இருப்பவர்கள் யார் என்று அறிய உதவும் சிறு துவாரத்தில் எட்டிப்...
    அத்தியாய்ம் - 9 'தனியாக எங்கே பாவனாவை மேகன் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறான்' என்று அதிர்ந்த அவந்திகா 'எங்கே?' என்று கேள்வியாகப் பாவனாவை பார்த்தாள். அப்போது தன் நாற்காலியிலிருந்து எழுந்த மேகன் "நீ எல்லோரிடமும் சொல்லிவிட்டு வா நான் ஓய்வறை(Restroom) சென்றுவிட்டு வருகிறேன்." என்று எழுந்து அனைவரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அவந்திகாவின் முகத்தில் அவளுக்குத் தான் மேகனுடன் செல்வது பிடிக்கவில்லை என்பதை பாவனா உணர்ந்தாள். அதனால் எப்படி அவந்திகா சம்மதிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பாவனா பதில் சொல்லும் வரையும் காத்திராமல், மேகன் சற்று தொலைவு நகர்ந்ததும், "பாவனா. எங்கே அவருடன் தனியாகச் செல்கிறாய்.?” என்று நேரிடையாகக் கேட்டாள் அவந்திகா ஏற்கனவே அவந்திகாவின் எச்சரிக்கை உணர்வை உணர்ந்த பாவனா அவந்திகாவின் கைப்பற்றி, "அவந்தி… நான்...
    அத்தியாயம் - 64   வன்னி அவனிடம் கேள்வி கேட்கும் முன்னே அவன் மயங்கி, உறங்கியும் விட்டான். வன்னி ஓடிச் சென்று அவன் தரையில் விழாமல் பிடித்துக் கொண்டாள்.   ஆட்டுக்குட்டியாக மாறியதால் முன்பு தோன்றிய மரியாதை மறந்து, “மகர குட்டி, என்ன ஆனது.!” என்று பதறியபடி, அந்த ஆட்டின் கழுத்து வளைவில் தன் ஆட்காட்டி மற்றும் நடுவிரலை வைத்து...
    அத்தியாயம் – 5 பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முகமனாக நன்றி சொல்லிக் கொண்டும் ஓய்வறையின் வாயிலில் ஒரு கண்ணுமாக அவந்திகா காத்திருந்தாள். எவ்வளவு நேரம் அவள் காத்திருந்தாளோ தெரியவில்லை.அறையில் இருந்த அனைவரும் கிளம்பி தனியாளாக அமர்ந்திருக்கும்...
    அத்தியாயம் - 35 இந்தக் கனவு சக்கரத்திற்குள் நந்தனால் அவனது ஆன்மீக ஆற்றலை முழுதும் மீளுருவாக்கம் செய்ய முடியவில்லை. அதனால் நந்தன், அந்தக் கருநிற உருவத்தைக் குறைத்து எடை போடவில்லை. நந்தன், எதிரில் இருந்தவனின் பலம் பலவீனம் அறியும் எண்ணமுடன் அவனை ஆராயும் பார்வை பார்த்தான். ஆனால் முக்காடு மனிதன் அவனையும் சரி, அங்கு மெத்தையில் நினைவற்று படுத்திருந்த அவந்திகாவையும் ஒரு பொருட்டாக எண்ணி திரும்பியும் பார்க்கவில்லை. மாறாகக் குத்துகாலிட்டு...
    அத்தியாயம் - 51 வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75 பரி அரசை சேர்ந்த மனித யாளிகளும் தேர் மற்றும் பறக்கும் சக்கரம் மூலமாக பரி அரசிலிருந்து கிளம்பியிருந்தனர். அவர்கள் தரை...
    அத்தியாயம் – 58 வன்னி பதில் சொல்ல முடியாமல் முகம் சோர்ந்து நின்றாள். அங்கு மீண்டும் சில நிமிடங்கள் அமைதி நிலவியது. வன்னி சந்திரரின் வார்த்தைகளை கேட்ட போதும் அவள் முடிவில் பின்வாங்க ஒரு நொடிக்கூட எண்ணவில்லை போலும். தீர்க்கமாக அதே இடத்தில் எதுவும் சொல்லாமல் முகம் இறுக சந்திரரை பார்த்து நின்றாள். அவள் பிடிவாதமான முகத்தை...
    அத்தியாயம் - 17 அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான். அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர்....
    error: Content is protected !!