Thursday, May 1, 2025

    Yaali

    அத்தியாயம் - 51 வன்னி மாதங்க அரசுக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, பேரரசருக்கு கலை நிகழ்ச்சிகள் காண்பிக்கவும், மாதங்க அரசுக்கு உதவியாக இருக்கவும், பரி அரசின் சார்பாக சுமார் 25 பரியாளிகளும் 75 பரி அரசை சேர்ந்த மனித யாளிகளும் தேர் மற்றும் பறக்கும் சக்கரம் மூலமாக பரி அரசிலிருந்து கிளம்பியிருந்தனர். அவர்கள் தரை...
    அத்தியாயம் - 43 அவந்திகா கண்கள் மூடியதும், அங்குக் கருநிற முக்காடு உருவம் அவள் எதிரே உருவானது. அவந்திகாவின் களைத்து உறங்கிக் கொண்டிருந்த முகத்தைப் பார்த்து அந்தக் கருநிற உருவம், “மாறுவதாக இல்லை. மீண்டும் இறப்பதுதான் உன் விருப்பமென்றால், அதனை நிறைவேற்ற நான் தயார்.” என்றவன், சிவப்பு நிற பழத்தைக் கையில் கோலி உருண்டையை உருட்டுவது போலச் சில முறை உருட்டிப் புன்னகைத்தான். அதே நேரத்தில்...
    அத்தியாயம் - 29 ஆனால் எதிரில் இருந்தவன் பளிச்சென்ற புன்னகையுடன், “இளவரசி, என் முழு பெயர் பவளநந்தன்.” என்றான். பவளனை எதிர்பார்த்து இருந்தவளுக்கு நந்தன் எதிரில் வந்து நிற்க அதிர்ந்து, தலை நிமிர்ந்து எதிரில் புன்னகையுடன் நின்றிருந்தவனை விழி மூடாமல் பார்த்தாள். தன் பெயரைப் பவளநந்தன் என்று பவளனும், நந்தனும் மாறி மாறிச் சொன்ன போதும் இன்னமும்...
    வன்னி கண்கள் மட்டும் தெரியுமளவு முகமூடி அணிந்திருந்த போதும் அவள் பெயரை மாற்றவில்லை. பரி அரசிலிருந்து மகர அரசின் இராஜகுருவிற்கு ஏற்கனவே சந்திரர் வன்னியின் வருகை குறித்து தெரிவித்திருந்தார். வன்னி என்ற பெயரை சொல்லியிருந்த போதும், அவளை, சாதாரண பணிப்பெண் என்றே மகர அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. வன்னி இடமாற்றும் சக்கரத்தில் பரி அரசில் ஏறியதுமே...
    அத்தியாயம் – 41 “என்னவென்று தெரியாமல் இப்படி நிகழ்ந்துவிட்டது அதனால்...” என்றவர் அதற்கு மேலும் பேச முடியாமல் அப்படியே நிறுத்தினார் வேதன். முகிலன், “வேதன். இந்தக் கடிதம் எழுதப்பட்ட கால நிலை மற்றும் எழுதியது விந்தியாதான் என்ற உண்மை நிலை உறுதி செய்யப்பட்டால், அவளது தண்டனையின் தீவிரத்தை குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் முழுதும் தண்டனையிலிருந்து விடுபடுவது கடினம்.” என்று சற்று நிறுத்தி, “விந்தியா எங்கே? அவளது...
    அத்தியாயம் - 57 வன்னியின் 15வது வயதில்… வன்னி பரி அரசின் குருகுலத்தில் ஒரு மரத்தடியில் மற்ற சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அன்று சந்திரரின் மற்ற சீடர்களுக்கு பாதுகாக்கும் சக்கரத்தை கொஞ்ச ஆன்மீக ஆற்றலில் எப்படி திறம்பட உருவாக்குவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். அதனை செயல்படுத்துவது எப்படி என்று மற்ற பரி யாளி சீடர்களுக்கு வன்னி செய்து...
    அத்தியாயம் - 28 சில வினாடி அமைதிக்குப் பின் ஆன்ம இணைப்பில், “இளவரசி…” என்றது பவளனின் குரல். பவளனைத் தொடர்பு கொள்ள நினைத்து அவனை அழைத்துவிட்ட போதும் அவந்திகா, அவன் உடனே தொடர்பில் பேசக் கூடுமென்று எண்ணவில்லை. அதனால் அவன் குரல் கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் முகம் மலர்ந்தது. குரலில் ஒரு பொழிவுடன், “பவளன் உங்களிடம் சிலது...
    அத்தியாயம் - 61 இவர்கள் அனைவரையும் விசாரித்ததில், பொதுவில் இவர்கள் நோய் அறிகுறி படுமுன்பு செய்த ஒரு செயல், விராட்டு மலைக்குச் சென்றதுதான். “விராட்டு மலையா? எங்கிருக்கிறது அந்த மலை? அங்கு அப்படி என்ன செய்ததால் இப்படி ஒரு பிணி(decease) ஒருவருக்கு வந்திருக்கும்.” என்று ஆர்வம் மேலிட வன்னி கேட்டாள். “தூதுவரே! உண்மையில் விராட்டு மலையை, மலை என்பதைவிட...
    அத்தியாயம் - 20 அவளை விட்டு எங்கோ சென்ற நந்தன், அவள் எண்ணத்தை உணர்ந்ததுப் போல, இதழ் விரித்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தான்(chuckle). பவளனைப் பற்றிச் சில நிமிடங்கள் நினைத்த அவந்திகா பெருமூச்சுவிட்டாள். பின் அவனை ஒதுக்கிப் பாவனாவும் கார்திக்கும் யாளி உலகம் வந்துவிட்டார்களா என அறிய முடிவெடுத்தாள். முடிவெடுத்ததை ச் செயல்படுத்தும் எண்ணமாகத் தன் கண்கள்...
    அத்தியாயம் - 7 சின்ன சிரிப்பை உதிர்த்த (chuckle) பவளன், "நிச்சயம் இளவரசி!" என்றான். அவனை மறுமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு, மற்றப் போட்டியாளர்களின் ஓவியத்தைத் திரையில் திரும்பிப் பார்த்த வண்ணம்," ம்ம்...இப்போது போட்டி முடிவைக் கவனிப்போம்" என்றாள் அவந்திகா. “ம்ம்" என்ற பவளனின் கண்கள் மற்றவர்கள் வரைந்த ஓவியத்தில் இல்லை. கவனம் சிதறமால் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் விழிகளின் மீதுதான் விழுந்திருந்தது. ஒருவழியாக போட்டி முடிவுகாள் அறிவிக்கப்பட்டது. மனிதர்கள் அறியாத விழாவாக இருந்தப் பின்பும், நேர்த்தியாக வரைந்ததாலும், அந்த விழாவைப் பற்றிய விளக்கமாக அவந்திகா எடுத்துச் சொன்னவிதமும் அனைவரையும் ஈர்க்க அவர்களுக்கு இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டது. நேற்று வெளியில் வரத் தாமதமானதால் கவலையுற்ற பாவனாவின் முகம் நினைவு வர இந்த...
    அத்தியாயம் - 47 வன்னி கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போக, காவலர்கள் பயந்து அவளை தேட ஆரம்பித்தனர். ஒரு கடையின் பின்னே சுவர் மறைவிலிருந்து அவளது பாதுகாவலர்கள் திண்டாடித் தேடுவதை பார்த்து வன்னி மீண்டும் கிளுக்கி சிரித்தாள். ‘முகிலனை மட்டும் எப்படியாவது உடன் அழைத்துக் கொள்ளலாம். அவன் என்னை பார்க்கிறானா?’ என நோட்டமிட்டாள். ஆனால் அவன் அந்தக்...
    அத்தியாயம் - 15 "என்ன?!!" என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது 'எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்' என்றது நெரூடலாக. அவந்திகாவின் திகைப்பை எதிர்பார்க்காத கார்திக் 'தான் நேற்று கண்டது தவறாக இருக்குமோ' என்று நினைத்து, 'அதை அவளிடம் சொல்லலாமா அல்ல வேண்டாமா' என்று தயங்கினான். ஆனால் அவள்...
    அத்தியாயம் - 55 வன்னி சாரங்கனிடம் பேரரசரின் அறையில் நடந்ததை சொல்லிக்கொண்டு வந்தாள். சாரங்கன் அவள் சொல்வதற்கு, “ம்ம்...” என்று சொல்லிக் கொண்டு அவளை கைகளில் ஏந்தி அறைக்கு வந்து சேர்ந்தான். வன்னி ஒரு பெருமூச்சுவிட்டு, “இளவரசர் சாரங்கன். நல்ல வேளை. பேரரசரின் செயலால், நான் அத்தனை பேர் முன்னிலையில் என் சக்கர நிலை சொல்ல வேண்டிய...
    அத்தியாயம் -16 அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக். அதன் பிறகு அவந்திகா அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் 30 நிமிடங்களில் அந்த விளையாட்டு பூங்காவிற்கு வந்துவிட்டாள். வந்ததும் பதிவு சீட்டு...
    காவலர்களுடன் மதி, நந்தன் மற்றும் முகிலன் மூவரும் கடை வீதியைக் கடந்து அரண்மனை நோக்கி நடந்தனர். இருண்டு விட்ட போதும் ஆங்காங்கே வெள்ளை நிற குழல், வெளிச்சம் பரப்பி அந்தக் கடை வீதியை இன்னும் கோலகலமாகக் காட்டிக் கொண்டிருந்தது. இப்படி முன்னும் பின்னும் காவலர்கள் சூழ நடந்து செல்வது மதிக்கு என்னமோ போல இருந்தது. கூடவே...
    அத்தியாயம் - 23 முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள் பாவனா. அவள் முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட மேகன் தலை குனிந்து சிறிது நிறுத்தி, “தெரியவில்லை.” என்றான் அதனைக் கேட்டதும் கோபமாக அவனை முறைத்து, “தெரியவில்லையென்றால்? என்னை வன்னி என்று நினைத்து அழைத்து வந்துவிட்டாய். கார்திக்கை என்னவென்று எண்ணி அழைத்து வந்தாய்?”...
    அத்தியாயம் - 19 அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள். அவளது விழிப்பில் நினைவு வந்தவனாக, அவனது கையைப் பின் மீட்டுக் கொண்டான். ஆனால் அவனது கண்கள் அவனது இயலாமையைச் சொல்வது போலச் சிவந்து போயிருந்தது. ஆனால்...
    அத்தியாயம் - 45 சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1) ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை. எந்தப் பதிலும் வராததால் திரும்பி அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் மேகன் அறையில் இல்லாததை...
    அத்தியாயம் - 3 அதன்பிறகு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானத்தில் அவந்திகா, கார்திக் இருவரும் ஒரு வரிசையிலும், ரோஷனும் பாவனாவும் ஒரு வரிசையிலும் மற்ற மூவரும் மற்றொரு வரிசையிலும் அமர்ந்திருந்தனர். அவந்திகா சாளர(Window) இருக்கையிலும் அவள் அருகில் கார்திக்கும் அமர்ந்தனர். அவந்திகாவின் சிந்தனை இன்னமும் நடப்புக்கு வரவில்லை. அதனால் பாவனா அவள் அருகில் இல்லை என்பதும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவந்திகாவின் முகம் வெளுப்புற்று இருப்பதை விமானத்தில் ஏறுமுன்பே அறிந்துவிட்ட பாவனா, அவளிடம் அதுகுறித்து பேச எண்ணினாள். ஆனால் அதற்குத் தடங்களாக ‘இந்தக் கார்திக் இப்படி எங்களைப் பிரித்து இருக்கையைப் பதிவு செய்து வைத்திருக்கிறாரே.’ என்ற பொருமலுடன் அவனிடம் இடம் மாற்றி அமரப்...
    அத்தியாயம் – 5 பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முகமனாக நன்றி சொல்லிக் கொண்டும் ஓய்வறையின் வாயிலில் ஒரு கண்ணுமாக அவந்திகா காத்திருந்தாள். எவ்வளவு நேரம் அவள் காத்திருந்தாளோ தெரியவில்லை.அறையில் இருந்த அனைவரும் கிளம்பி தனியாளாக அமர்ந்திருக்கும்...
    error: Content is protected !!