Nenjora Nilavae
நிலவு – 6 (2)
வெண்மதிக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அமர்ந்திருந்தாள். அதிலும் சுகன்யா பேசியது அவளின் நம்பிக்கையை தகர்த்தது.
‘இவங்க எப்படி மறுபடியும் என்னை மருமகளா எடுத்துக்க சம்மதிச்சாங்க?’ குழம்பி தவித்தவள்,
‘இவன் தான் ஏதாவது செஞ்சிருக்கனும். அதுதான் அத்தையும் வேற வழியில்லாம ஓகே சொல்லியிருப்பாங்க’ அவளாகவே முடிவுக்கு வந்தவள் கலைவாணி உள்ளே சென்றதும் மெதுவாக எழுந்து...
நிலவு – 6 (1)
அவனை சந்தித்துவிட்டு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. ஆனாலும் இப்பொழுது நடந்ததை போல படபடப்போடுதான் சுற்றித்திரிய வைத்தான் முரளிதரன் அவனின் நினைப்பிலேயே.
அவனின் அருகாமை கொடுத்த அவஸ்தை. இப்பொழுது நினைத்தலும் உள்ளுக்குள் சிலிர்த்துதான் போனாள் வெண்மதி.
அவளின் முகம் பார்த்து ஈஸ்வரியிடம் தன்மீதான காதலை சொல்லியவனின் மூச்சுக்காற்று இன்னமும் தன் முகத்தில் படருவதை...
“கண்டிப்பா வரட்டும். இந்த கல்யாணம் நடக்காதுன்னு நான் அவங்கட்டையே சொல்லிடறேன்...” முகபாவனையை கொஞ்சமும் மாற்றாது சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,
“என்னன்னு சொல்லுவீங்க?...” என,
“என்ன வேணும்னாலும் சொல்லுவேன்...”
“அதைத்தான் இப்ப என்னிடம் சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுப்பேன்...”
“என்னவேணும்னாலும் சொல்லுவேன். உங்களை பிடிக்காததால வேற ஒருத்தனை லவ் பன்றேன்னு சொல்ல தெரிஞ்ச என்னால, அந்த ஹரியை அவாய்ட் பண்ண உங்களை லவ்...
நிலவு – 5
சுகன்யா வந்து கேட்டு சென்ற பின் முரளிக்கு தூக்கம் பறி போனது. அவரின் கவலையும், வருத்தமும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சந்தேகமும் நூறு சதவிகிதம் நியாயமானதே.
இதனுடன் எத்தனை முறை அவருக்கு இவன் நியாயம் செய்யாமல் போயிருக்கிறான் என்று இவன் மட்டுமே அறிந்த ஒன்று.
அவரின் ஆசையில், கனவில், எதிர்பார்ப்பில் கொஞ்சமும் யோசியாமல் மண்ணை அள்ளி...
“புரிதல் இருந்தா தான் நம்ம வாழ்க்கை பயணம் சிறக்கும்...” குறும்பாய் கூற,
“என்ன நம்ம வாழ்க்கையா? உங்களையே வேண்டாம்னு சொல்றேன்...” என்றவள்,
“இது எதுவும் எனக்கு தேவை இல்லாத விஷயம் முரளி. நான் கேட்க நினைக்கிறது ஒரே விஷயம் மட்டும் தான். எதுக்காக இத்தனை நாள் இல்லாம இப்ப திடீர்னு வந்து என்னை டிஸ்டர்ப் பன்றீங்க?...”
“என்னை விரும்பற...
நிலவு – 4
காரை ஓரம்கட்டிய முரளி “ஹலோ சொல்லுங்க...” என்றதும் மறுமுனையில் பயங்கரமான சிரிப்பு சத்தம் கேட்க,
“ஓகேங்க, சிரிச்சு முடிச்சதும் திரும்ப கால் பண்ணுங்க...” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு.
முரளிக்கு சிரிப்பிலிருந்தே யார் எவரேன தெரிந்துவிட இப்பொழுது சாவகாசமாக போனை எடுத்தான்.
“சிரிச்சு முடிச்சாச்சு போல?...” என்று நக்கலாக...
நிலவு – 3 (2)
வந்தவன் அவள் முன் அதை நீட்ட வாங்காமல் அவனை பார்த்தவள்,
“முதல்ல கீயை குடுங்க. அப்பறம் வாங்கிக்கறேன்...”
“முதல்ல இதை வாங்கி பிரிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் கீயை தரேன்...”
கையில் இருந்த சாவியை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். இப்பொழுது வெண்மதிக்கு திக்கென்று இருந்தது.
இதுவரை பேசிக்கொண்டிருந்தவனின் குரலில் முற்றிலும் மாற்றம். என்னவென...
நிலவு – 3 (1)
எத்தனை முயன்றும் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. ஹேண்ட்பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரை அருந்தியவள் ஸ்கூட்டியை விட்டு இறங்கி தன் முகத்தையும் அலம்பிக்கொண்டாள்.
“ஸ்ட்ராங் வெண்மதி. இதுக்கெல்லாம் அசந்துட்டா அடுத்து வரதையெல்லாம் என்னன்னு சமாளிப்ப? சியரப் கேர்ள்...”
தன்னை தானே தைரியம் செய்துகொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய அவளை...
நிலவு – 2(2)
சிரிப்போடு அவள் முகத்தில் அசடு வழிய சொல்ல,
“அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ ஆபீஸ் கிளம்ப ஆரம்பி. அப்பத்தான் சரியான நேரத்துக்கு போகமுடியும். நித்தமும் சொல்றேன். கேட்டா தானே பூனாபூனான்னு கிளம்புவ...” சொல்லி சென்றவரை முறைக்க முயன்று உதட்டை சுழித்துக்கொண்டாள்.
ஆம், வெண்மதி எங்காவது கிளம்ப வேண்டுமென்றால் அவளிடம் அத்தனை நிதானம் இருக்கும். நிதானத்திற்கே...
நிலவு – 2(1)
தனக்கு மட்டும் கேட்ட அந்த குரலில் திசையை பார்த்தாள் வெண்மதி. பிரம்மை தான் ஆனாலும் மனம் குளிர்ந்து. கண்களுக்கு அத்தனை இதமாய் சுகமாய் இருந்தது.
இது உண்மையாக இருந்து விடகூடாதா? என்று உள்ளம் கிடந்து அடித்துக்கொள்ள சோபாவில் சென்று அமர்ந்தாள் வெண்மதி.
அவனே அருகில் இருப்பதை போன்ற ஒரு பிம்பம். கண்ணில் நீர் அருவியென...
நிலவு – 1(2)
உண்மை தான். வெண்மதியும் ஈஸ்வரியும் பள்ளி கல்லூரி தோழிகள் மற்றுமல்லாது ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் கூட.
வெண்மதியின் இரண்டாம் வயதில் ஈஸ்வரி குடும்பம் குடியிருக்கும் அந்த வீதிக்கு குடிவந்தனர். அவர்கள் வீட்டிற்கு இரு வீடுகள் தள்ளி ஈஸ்வரியின் வீடு.
அருகருகே வசிப்பதால் பரஸ்பரம் பழக்கமாகி நல்லகுடும்ப நண்பர்களாக இருந்தனர். சிறுவயது முதலே ஈஸ்வரி...
நிலவு – 1(1)
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
முழுமுதற்கடவுள் விநாயகனின் துதி கேட்டபடி வெண்மதி விளக்கேற்ற பூஜையை ஆரம்பித்தார் கலைவாணி. நடேசனின் மனமோ பெரும் உவகையில் ஆழ்ந்தபடி பக்தியில் திளைத்திருந்தது.
பலநாள் கனவு இன்று நனவாகப்போகும் மகிழ்வு அவரின் முகத்தில் அப்பட்டமாய் ஜொலித்தது....