Naan Enathu Manathu
அத்தியாயம் ஆறு :
கேசவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அவரின் ஒன்று விட்ட அண்ணன் மூலமாக “கல்யாணம் பேசி முடிச்சா இங்கயே எங்களுக்கு இன்னொரு தொழில் இருக்கு, அதை மாப்பிள்ளைக்கு கொடுக்கறோம்” என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்..
இப்போது ரவீந்திரன் பேசுவதை பார்த்தால் முடியாது போலவே.
அவன் சொன்னது முற்றிலும் உண்மை முன்பிருந்த அவனின் வரிய நிலை தவிர, இப்போது...
“இதென்னடா இப்படி இரு கேள்வி கேட்கறார் இந்த மனுஷன், என் வீட்ல யார் யார் இருக்கான்னு கூட இவருக்கு ஞாபகம் இருக்குமா?” என்ற யோசனை தான் ரவிக்கு.
மூன்று தங்கைகளின் திருமணதிற்கும் அழைத்திருந்தான், ஆனால் கடைசி தங்கை திருமணதிற்கு மட்டும் கேசவன் வந்திருந்தார். அவரும் ஷர்மியையோ சந்தோஷ்சையோ அழைத்து வரவில்லை..
முதல் தங்கைக்கு திருமணம் செய்த...
அத்தியாயம் ஐந்து :
நான்கைய்ந்து மாதங்கள் கடந்து விட்டது.. அப்பாவும் மகளும் பேசிக் கொள்ளவதில்லை.
ரவீந்திரன் அவர்களின் பேப்பர் ஃபாக்டரியை விட்டு முழுவதும் விலகியிருந்தான். அங்கே வேலை தானே செய்தான்.. எனக்கு முப்பது பெர்சென்ட் தேவையுமில்லை, உன்னுடைய வேலையும் தேவையில்லை.. என்று விலகிக் கொண்டான்.
அவன் விலகியது கேசவனிற்கு இழப்பு தான், எந்த வகையில் என்றால் புதிதாய் ஏதாவது...
அத்தியாயம் நான்கு :
மூன்று நாட்களாகவே ஷர்மிளா சற்று சரியில்லை, என்னவோ பிரச்சனை என்று பார்த்தாலே தெரிந்தது. பார்க்கும் எல்லோரிடமும் எரிந்து விழுந்தால், ரவி இதனை உணர்ந்தாலும் கண்டு கொள்ளவில்லை.
சந்தோஷிற்கு என்னவென்று புரியவில்லை, என்ன ஏதும் பிரச்சனையா என்று கேட்டே விட்டான்.
ஒண்ணுமில்லை போ என்று அதற்கும் எரிந்து விழுந்தாள். இன்று என்ன என்று தெரிந்து கொள்ளாமல்...
“ஹேய், ஷர்மி கேட்டுட்டார் போல” என்று சந்தோஷின் தோழி சன்னக் குரலில் சொல்ல,
“கேட்டா கேட்டுட்டு போறான்” என்றாள் அதற்கும் அலட்சியமாய்..
அதனையும் ரவி கேட்டுக் கொண்டு தான் இருந்தான், சாவியை எடுத்துக் கொண்டு அவளின் புறம் சற்றும் திரும்பாமல் அவன் மீண்டும் வாயிலை நோக்கி நடந்து விட்டான்.
அவன் சென்ற பிறகு அவனின் முதுகை வெறித்தவள் “ரொம்ப...
அத்தியாயம் மூன்று :
ரவீந்திரன் தன்னை நடனமாட அழைத்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த மும்முரத்தில் ஷர்மிளாவின் பார்வையை சந்திக்கவுமில்லை கவனிக்கவுமில்லை.
மெதுவாக சந்தோஷை நெருங்கி “அவன் வந்திருக்கான்” என்று ரவியை காண்பித்தாள்.
“நான் தான் உன்னை சீக்கிரமே வீட்டுக்கு போக சொல்லியிருந்தேனே, பாரு அவர் வந்துட்டார்” என சந்தோஷ் சஞ்சலப்பட்டான். பார்ட்டியில் எதுவும் பேசிவிடுவானோ என்ற கவலை அவனிற்கு.
எப்போது...
கணபதியே அருள்வாய்
நான்... எனது... மனது...
அத்தியாயம் ஒன்று :
“காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடி பட...”
என்று பின்னணியில் ஓடிக் கொண்டிருக்க, ஏதோ கணக்கை ஆராய்ந்து கொண்டிருந்தான் ரவீந்திரன், அவன் முன் பொறுமை உடைபடும் விளிம்பில் இருந்தாள் ஷர்மிளா. வந்து அமர்ந்தது தெரிந்திருந்தும் தலையை தூக்கி...