Monday, July 14, 2025

    MKMP Final

    0

    MKMP 18

    0

    MKMP 17

    0

    MKMP 16 2

    0

    MKMP 16

    0

    Mounamae Kaathal Mozhi Pesu

    MKMP 15 2

    0
    வரதன்  செண்பகத்தின் தலையை தடவிக் கொடுத்து,  "நீ சாதிக்க பிறந்தவ. அழக் கூடாது.  பூவாயி  நாம இன்னும்  எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி.  இந்த இரண்டு புள்ளைகளையும் கூட மேல ஏதாவது படிக்க வைக்க முடியுமா பார்க்கலாம்" என்று கூற. நீ  மட்டும் சரின்னு சொன்னா போதுய்யா.  "நம்ம கண்ணன் பொண்டாட்டி எழிலு புள்ள இதுக்கெல்லாம்   பேங்க்ல லோன் வாங்கி...

    MKMP 15 1

    0
    மௌனம் - 15  அந்த சிறிய அழகான கூரை வீட்டில் பூவாயின் குரல் மட்டும்  ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.  "அடியேய்!  செண்பகம்.. செண்பகம்... ஏய்! ராசாத்தி.. அடியேய்! வள்ளி.. எங்குட்டுதே போனாளுக. ஒருத்தியவும் காணல. ஆடு கட்டி கெடக்கு.. அடியேய்!"  என பூவாயி கொடுத்த குரலில், "செண்பகம் எதுக்கும்மா இப்படி கத்தற" எனக் கேட்டுக் கொண்டே...

    MKMP 14

    0
    காதல் மொழி  – 14  "ஏம்மா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அப்பா போய்ட்டாங்க" என்று கேட்க. "உங்ககிட்ட சொல்லிட்டு தான் அவரு செய்யணுமோ.  இது என்ன புது வழக்கம் மலரு.  பெத்த பிள்ளைக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு பாடம் சொல்லித் தருவீகளோ.   எப்போ என்ன பேசணும் என்ன பண்ணனும்னு அவுகளுக்கு தெரியும். ஆடு மாடெல்லாம்...

    MKMP 13

    0
    பகுதி – 13  ஆனந்திற்கு  பயங்கரமாக கோபம் வந்தது. “ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இருக்காதா? இவ்ளோ கேவலமா நடந்துக்கறிங்க.  இப்ப நான் என்ன பண்ணிட்டே. தெரியாம தானே இடிச்சிட்டேன்.  வேணும்னே பண்ண மாதிரி மீதமுட்டையவும் என் கைல வச்சி ஒடைக்கறீங்க.  இப்போ உங்களுக்கு சந்தோசம் தானே கிளம்புங்க” என்றான். எதுக்கு கிளம்பனும். “உடைஞ்ச முட்டைக்கு காசு கொடுங்க.  இல்லையா முட்டைய...

    MKMP 12

    0
    பகுதி - 12  "என்னங்க நான் ஏதோ விளையாட்டா பேசினேன்.  ஆனா நீங்க வெட்டி வீசற மாதிரி பேசுறீங்க. நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன்.  அதுக்கு இப்படி ஒரு வார்த்தையை சொல்றீங்க.  ஏதோ பார்த்தேன்.  பிடிச்சது.  பேசினேன். அவ்வளவுதான். ரொம்ப ஓவரா பண்ணாதீங்க"  எனக் கூறிவிட்டு ஆனந்த்  அவன் வழியில் நடக்க. "ஆனந்தின் செயல் மலருக்கு கொஞ்சம் வருத்தமாக...

    MKMP 11

    0
    பகுதி – 11  தன் தேவதையின் வரவிற்காக காத்திருந்தான் கண்ணன். எழில் மெல்ல அறையின் கதவைத் திறந்து புன்னகை கலந்த வெட்கத்துடன் உள்ளே நுழைந்து கதைவைத் தாளிட்டாள்.  தன் அழகிய விழிகளால் கண்ணனை பார்த்து முகம் சிவந்தாள். 'எழில்' என கண்ணனின் குரல் ஓசை மெல்லியதாக கேட்க. அவனது விழிகளை மெல்ல ஏறெடுத்து பார்த்தாள். கண்ணனோ அவளை தனக்குள் முழுமையாக உள்வாங்கி கொண்டான். அந்த...

    MKMP 10

    0
    பகுதி – 10  "ஆனந்த் திரும்பி அவளை முறைத்துப் பார்த்தான். ஹலோ! மேடம் நான் உங்க ஊருக்கு வேணா புதுசா இருக்கலாம். அதுக்காக சொடக்கு போட்டு கூப்பிடுவிங்களோ.  எனக்கு பேர் வச்சிருக்காங்க மேடம். ஆனந்த்னே நீங்க கூப்பிடலாம் என்றான். திமிரு பிடிச்சவ" என மனதில் நினைத்தான். சின்ன குட்டிய கால ஒடச்சுட்டு அப்படியே நைசா நழுவி போய்ட்டா இதுக்கு வைத்தியம்...

    MKMP 9 2

    0
    நான் சரியாத்தான் புரிஞ்சுகிட்டேன் மாமா. நீங்க தானே என்கிட்ட சொன்னீங்க.  நீ எப்பவும் என் கூடயே இருக்கனும். அப்பதான் நான் ஜெயிக்க முடியும். சாதிக்க முடியும்ன்னு. நீங்களா தான் வந்து எனக்கு இந்த மொபைல் போனை வாங்கி கொடுத்து வார்த்தைக்கு வார்த்தை நான் உன்னை நேசிக்கிறேன்னு சொல்லி அன்ப, பாசத்தை கொட்டி நீங்க நான்...

    MKMP 9 1

    0
    பகுதி – 09  எதிர்பாராமல் விழுந்ததில் இருவருக்கும் சின்ன சின்ன சிராய்ப்புகள் ஏற்பட்டது. மலருக்கு சட்டென்று கோபம் வந்தாலும் தவறு அவன் மேல் இல்லை என்பதை புரிந்து கொண்டவளாய் கைகளை நிலத்தில் ஊன்றி மெல்ல எழுந்து நின்றாள். “அவனும்,  அவளது திராட்சை போன்ற கருவிகளை பார்த்துக்கொண்டே எழுந்து நின்றான். மலர் திட்ட போகிறாள்” என்று எதிர்பார்த்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க. ஜில்லு...

    MKMP 8

    0
    பகுதி – 08 எழில் போகும் வழியில் மலருக்கு போன் பண்ணி வரச் சொன்னாள்.  மலரும் வீட்டில் பெற்றோரிடம் விஷயத்தை கூறிவிட்டு கிளம்ப தயாராக. "மலரின் தாயோ அவளுக்கும் வேல இல்ல. உனக்கும் வேலை இல்ல. நாய்க்கும் வேலை இல்ல அதுக்கு நிக்கவும் நேரமில்லனு சொல்ற கணக்கா உங்க அக்கா சுத்திகிட்டு கெடக்கா.  அவளுக்கு வாயும் கையும் ஓயுதா பாரு" ...

    MKMP 7

    0
    பகுதி - 08  மனமெனும் படகு காதல் என்னும் கடலில் ஊடலெனும் அலை அடித்து தத்தளித்துக் கொண்டிருந்தது. கண்ணனின் சிந்தையில் எழிலின் உருவம் நிழலாட. ஏக்கப் பெருமூச்சி விட்டு உடலின் அனலைத் தணித்துக் கொள்ள பானையில் இருந்த நீரை எடுத்து தொண்டையை நனைத்தான். சில்லென அடிவயிற்றைத் தொட்டது. "அருகில் திரும்பி பார்த்தான். முத்து சற்றே கண்ணயர்ந்து இருக்க. அவனருகில் இருந்த...

    MKMP 6

    0
    பகுதி – 06 "என்ன கண்ணா கேள்வி கேட்கிறேன்ல, நீ கனாக் கண்டு கிட்டு நிக்கிற" என்று ஆச்சி கேட்க. "அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆச்சி"  என கண்ணன் எழிலையே  பார்த்துக் கொண்டு நிற்க. "அங்கு என்னலே பார்வை. சோசியக்காரன் இன்னைக்கி நாள் நல்லா இல்லைன்னு சொல்லிட்டான்லே. அவள இன்னைக்கே மென்னு முழுங்கிடாதலே. இன்னைக்கு ஒருநா  நீ போயி உன் தம்பி...

    MKMP 5 2

    0
    "எனக்கு இது ஒன்னு போதும் மலரு. எப்போதும் என் கூட சந்தோஷமா பேசு. உன்னோட வார்த்தைகள் தான் என்னைய  உற்சாகமாக வச்சிக்கிற   ஊக்க மருந்து. நான் என்னோட இன்டர்வியூக்கான படிப்பை தொடரலாம்னு  இருக்கேன் மலர்.  கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் இந்த முறையாவது ஜெயிக்க முடியும்" என்று முத்து கூற. "தாராளமா படிக்கத் தொடங்குங்க...

    MKMP 5 1

    0
    பகுதி - 05 மலரின் விழிகளில் இருந்து வழிந்தோடிய கண்ணீரால் அவளின் கன்னங்கள் பளபளத்தது. மலரை, முத்து அடித்ததை பார்த்த  ஜில்லு உடனே கோபமாக முத்துவின் மீது தாவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான். மலர் ஜில்லுவை தடுத்தாள்.. ஜில்லு அமைதியாக நிற்க. ஒரு கணம் தான்  தடுமாறி தவறிழைத்ததை எண்ணி  முத்து வருந்தினான். "ஏன் மலரு என்னோட மனச புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற.  என்னோட தவிப்ப...

    MKMP 4 2

    0
    "மாரியம்மாள் நிலக்கடலை பையுடன் கூடவே கேப்பை களியும், பாசிப்பயிறு துவையலும் சேர்த்து  ஒரு தூக்கு வாளியில்  வைத்துக் கொடுத்து மதியம் ரெண்டு உருண்டை சாப்பிடுய்யா.  பொழுது சாய தான வருவ. வயித்தக் காய  போடாதய்யா" என அன்பாக  மகனிடம் பேச. "இதை பார்த்த எழில் அத்தை நானும் வெளியே போகணும்.  கொஞ்சம் வேலை இருக்கு. வர...

    MKMP 4 1

    0
    பகுதி – 04  ஏய்!  நில்லுடி ஒரு ஆம்பள தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு கெடக்க.  கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம நீ பாட்டுக்கு உள்ள போறவ. "ஏன் மாமா இப்படி வண்டி வண்டியா புழுகறீங்க.  உன் பேச்சுக்கு மரியாதை கொடுத்து நீ சொன்னது எல்லாம் கேட்டுட்டு தான உள்ள வந்தேன்"  என்று எழில் கூற. என்னத்தடி கேட்ட. என்ன...

    MKMP 03 2

    0
    "நான் மாமா வீட்டுலேயே சாப்பிட்டேன் டா", என முத்து சொல்ல. "ஓஹோ.  ஆடு பகை குட்டி உறவா"  என முறைத்து விட்டு போனான் கண்ணன். "முத்துவின் தந்தை நாலு வார்த்தை பேசி விட்டு வயலுக்கு சென்றாலும், தாயின் அன்பு மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. மகனுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து வைத்து இன்னொரு வாய் சாப்பிடுய்யா"  என ஊட்டி...

    MKMP 03 1

    0
    பகுதி – 03  "அடேய்!  பேராண்டி,  இப்போ எதுக்குடா இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற.  ஏதோ கொஞ்சம் வயசாயிடுச்சு.  கிழடிதட்டி போச்சு.  அதனால தாங்கிப் புடிக்க முடியல. இந்த மீசை முருகேசன் வாலிபத்தில எம்புட்டு கம்பீரமா இருப்பானு ஊருக்குள்ள கேட்டு பாருலே தெரியும்"  என மீசையை முறுக்கினார். "தாத்தா இந்த வயசுலயும் உங்க குறும்பும், கொழுப்பும் அடங்கவே இல்ல.  திடீர்னு...

    MKMP 2 2

    0
      "நீங்க சொல்றதெல்லாம் சரிதான் மாமா. எனக்கு என்னோட லட்சியம் தான் முக்கியம். அதுகாக எவ்வளவு வேணாலும் கஷ்டப்படுவேன்.  என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் உங்க பொண்ண குடுங்க. இல்லனா உங்க விருப்பம் போல பண்ணுங்க மாமா. ஆனா மலர தவிர யாரும் என் வாழ்க்கைல வரமுடியாது மாமா",   என்று  முத்து கூற "இந்த...

    MKMP 2 1

    0
    பகுதி – 02 உதட்டை சுழித்து பழிப்புக் காட்டியவள், “பார்த்து வரக் கூடாதா மாமா” என்றாள். "பார்த்துகிட்டே தான ஊத்தின. ஒரு சின்ன வித்தியாசம். மஞ்ச தண்ணி ஊத்தாம கழனி தண்ணிய ஊத்திட்ட.  என் மேல  உனக்கு  இன்னும் ஆசை கொஞ்சம் கூட குறையவே இல்லடி தங்கம். எங்க என்ன மறந்திருப்பயோ திரும்ப போராடி காதலை சொல்ல வேண்டி இருக்குமோனு  உன்ன...
    error: Content is protected !!