Sunday, June 15, 2025

    Aasaiaya Kaaththula Thoothu Vittu

    அத்தியாயம் – 22 “இன்னும் என் மேல உங்களுக்கு கோவமா??” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள். “கோவம் எதுக்கு??” “அப்போ ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க??” “நாம பேசியே ஆகணுமா இப்போ??” “என்கிட்ட உங்களுக்கு பேச ஒண்ணுமில்லையா??” “நாம பேசினதே இல்லையா என்ன??” “இதென்ன நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா நீங்க பதிலுக்கு என்னை கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க... நான் கேட்டதுக்கு மட்டும் நீங்க...
    அத்தியாயம் – 2   அவன் பாடலை பாடி முடித்த பின்பு அவளிடத்தில் அசாத்திய அமைதி மட்டுமே. “மேடம் அப்படியே உறைஞ்சு போயிட்டீங்களா என்ன என் பாட்டை கேட்டு??”   “மன்னிக்கணும் டிடி!! உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு, நீங்க ரொம்ப வருஷமா பாட்டு கத்துக்கிட்டு இருக்கீங்களா??”   “இல்லை கேள்வி ஞானம் தான் பீ.எஸ்”   “ஓ!! சூப்பர் டிடி, நீங்க ஏன் இந்த...
    அத்தியாயம் – 21 “என்ன பேசப்போறேன்னு உனக்கு கேட்க விருப்பமில்லையா மிதிலா” என்றார் வேணுகோபால் அமைதியை உடைத்து. “பேசணும்ன்னு சொன்னது நீங்க தானே. அப்போ நீங்களே சொல்லட்டும்ன்னு தான் பேசாம இருக்கேன்” என்றார் அவர் பதிலாய். “மனசே சரியில்லை மிதிலா. நான் செஞ்சது செய்யறது எல்லாம் சரியா தப்பான்னு மனசு கிடந்து அடிச்சுக்குது” “என்னாச்சு தனுஷ் கல்யாணத்தை பத்தி ஏதோ...
    அத்தியாயம் – 24 யாகாஷ் காலணியை வீசி எறியாத குறையாய் கழற்றிவிட்டு அவசர அவசரமாய் உள்ளே ஓடிவந்தான். வந்தபின்னே தான் அவனுக்கு புரிந்தது தனுஷ் தன்னை எதற்கு அழைத்தான் என்று. “இவன் எதுக்குடா இங்க வந்தான். கட்டில்ல வந்து சொகுசா படுத்திருக்கான்” என்றவனுக்கு அப்போது தான் தனுஷை கட்டிக்கொண்டு கதறும் புவனா கண்ணில்ப்பட்டாள். “என்னாச்சு தனுஷ்??” “இவன் யாருன்னு உனக்கு தெரியுமா??”...
    அத்தியாயம் – 5   தனுஷின்சிறு வயதிலேயே அவன் தாய் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார். தந்தையும் வேறு திருமணம் என்ற ஒன்றை நினையாமல் மகனுக்கு தாயுமானவராகிப் போயிருந்தார்.   அவர் வேலைக்கு சென்று விடும் சமயங்களில் அவன் பாட்டியிடம் தான் வளர்ந்தான். அதுவும் அதிக நாட்கள் நிலைக்கவில்லை. பாட்டியும் அவன் நான்காம் வகுப்பு படிக்கும் போதே இறந்து போனார் மூப்பின்...
    அத்தியாயம் – 15   தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம் அதற்கு பதில் சொல்லாமல் இவன் என்ன செய்கிறான் என்று திரும்பி பார்த்தார் வேணுகோபால்.   “மாமா...” என்று சரியாய் அந்நேரம் அவள் அழைக்கவும் ஆச்சரியம் அவருக்கு.   “நீ என்னம்மா இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்கறே??” என்று ஆச்சரியம் கலந்த முகத்துடன் கேட்டவர், “முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல நான் இவனை அனுப்பி இருப்பேன்ல......
    அத்தியாயம் – 23 “என்னம்மா சொல்றே?? நீ என் கூட வர்றியா?? புரிஞ்சு தான் பேசறியாம்மா. இங்க தேவா தனியா இருப்பான்ம்மா. நான் என்ன அங்கவே செட்டில் ஆகப்போறேன்னா சொல்றேன்” “ஒரு வருஷத்துல திரும்பி வந்திடுவேன்ம்மா” என்றார். “உங்களுக்கு உடம்பு வேற சரியில்லை மாமா. நீங்க தனியா இருக்கறது எல்லாம் சரியா வராது. நான் உங்ககூட வருவேன்” என்றாள்...
    அத்தியாயம் – 10   வாயிலிலேயே முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்தார் வேணுகோபால் உடன் யாகாஷும். கையில் ஆரத்தி தட்டுடன் அவர்கள் ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணொருவர்.   தனுஷின் பார்வையில் தந்தை குறித்தான பெருமிதம் அவரின் உற்சாகம் அவனையும் தொற்றிக்கொண்டது. தன்னையுமறியாமல் அவன் பார்வை பின்னால் சென்றது பார்த்தீர்களா என்பது போல்.   மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்....
    அத்தியாயம் – 12   “என்ன யாகாஷ் சொல்றே?? அந்த மாப்பிள்ளை எதுக்கு ஓடினான்னு உனக்கும் தெரியாதா??”   “நீ என்னடா நான் தான் அவனை ஓட வைச்சேன் அப்படிங்குற மாதிரி கேட்கறே...”   “எனக்கு இப்போவரை புரியலைடா எப்படி கல்யாணம் நடந்துச்சுன்னு...”   “அவளுக்கு கல்யாணம் நடக்க போகுதுன்னு உனக்கு முன்னமே தெரியுமா... நீ தெரிஞ்சு தான் அங்க போனியா??”   “அடேய்!! அடேய்!! ஏன்டா!! அங்க...
    அத்தியாயம் – 9   “உள்ள வாங்க மாப்பிள்ளை... உள்ள வா புவி...” என்று மணமக்களை உள்ளே அழைத்தார் கனியமுது.   “பால், பழம் கொடுங்க பொண்ணு மாப்பிள்ளைக்கு...” என்று நெருங்கிய உறவினரொருவர் சொல்ல மணமக்கள் இருவரும் நடந்து முடிந்த நிகழ்வுகளில் இருந்து இன்னமும் வெளி வந்திருக்கவில்லை.   அதற்குள் அடுத்தடுத்த நிகழ்வுகள் தன் போக்கில் நடக்க எதையும் சிந்திக்க நேரமில்லாமல் வேடிக்கை...
    அத்தியாயம் – 1   “ஹலோ வணக்கம் வெல்கம் டு தி ஷோ இது உங்கள் பண்பலைவரிசை 105.7... கேளுங்க கேளுங்க காற்றின் வழி கேட்கும் ஒலி...”   “இது நம்ம நிகழ்ச்சி ஆசையை காத்துல தூதுவிட்டு, நான் உங்க பீ.எஸ் பேசறேன்... நேயர் ஒருத்தர் காத்திட்டு இருக்கார் நம்ம இணைப்புல வாங்க நாம அவரோட லைன்ல இணையலாம்...”   “ஹலோ சொல்லுங்க...
    அத்தியாயம் – 4   அழுத அவள் முகம் அவனை ஏதோ செய்ய அவளை நோக்கி எட்டி நடைப்போட்டான். கேட்கலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பத்தை புறந்தள்ளி “என்னாச்சு??” என்றிருந்தான் அவளிடம்.   அவனை பார்த்ததும் ஏனோ அழுகை அதிகமாய் பொங்க அப்போது தான் அழுது முடித்து அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் எட்டிப்பார்த்து கண்ணில் நீர் துளிர்த்தது அவளுக்கு.   “என்ன ப்ராப்ளம்??”   அதற்கு...
    ஹலோ மக்களே,   மறுபடியும் நானே தான் அடுத்த புதுக்கதையோட வந்துட்டேன்... இப்போ எழுதறதுஎல்லாம் கொஞ்சம் சின்ன கதை தான்... சிறு பூக்களின் தீ(யே)வேதவிர்த்து...   இதுவும் சின்ன கதைன்னு நினைச்சு தான் தொடங்குறேன்... எழுதும் போது தான் எனக்கே தெரியும் சின்னதா போகுதா பெரிசா நீண்டு போகுதான்னு... நாயகன்: தேவ் தனுஷ் என்ற டிடி நாயகி: புவன சக்தி என்ற பீஎஸ் கதையோட...
    அத்தியாயம் – 3   புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்   புவனா இளையராஜாவின் இசைமழையில் நனைந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எப்போதும் எப்எம் கேட்பது தான் வேலையே.   காலையிலேயே அவளுக்கு மிகப்பிடித்த பாடலை கேட்டதில் மனம் மகிழ்ச்சியில் ததும்பிக் கொண்டிருந்தது. வெகு நேரமாக அன்னை அழைக்கும் குரல் கேட்டும் அவருக்கு பதில் கொடுக்காமல் பாடலிலேயே முழ்கி...
    அவன் தந்தையின் அறையில் அவர் அனத்திக் கொண்டிருந்தார். அவர் அன்றைய நாள் முழுக்க வெளியிலேயே இருந்திருக்கிறார். அதிக வெயில் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடலை ஏதோவொரு விதத்தில் அது வருத்த தன்னையும் மீறி உறக்கத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். ‘படுத்ததும் தூங்கிட்டாரு’ என்று எண்ணியவாறே அவர் அருகே வந்தான் தனுஷ். அவர் உறக்கத்தில் சாரி மிதிலா என்று முணுமுணுக்க...
    அத்தியாயம் – 25 மருதமலை முருகன் கோவில் சன்னதி. தம்பதி சமேதராய் நின்றிருந்தனர் அவர்கள். கண்களை இறுக மூடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்கள் வேண்டுதலை இறைவனின் முன் வைத்தனர். பிரார்த்தனை முடிந்து அவர்கள் அனைவரும் வெளியே வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர். “அப்பா இனி நீங்க நாளைக்கே திருச்சி போகலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றான் குறுஞ்சிரிப்புடன். “தேவா...”...
    அத்தியாயம் – 14   வேணுகோபால் தனுஷுடன் வந்த பெண்ணை கண்டு அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.   “தேவா நீ மிதிலாவை எங்கே?? எப்போ?? எப்படி பார்த்தே?? ஏன் மிதிலா எவ்வளோ வருஷம் ஆச்சுல நாம பார்த்து...” என்று தேவாவில் ஆரம்பித்து மிதிலாவில் முடித்தார் அவர்.   “அப்பா அப்பா ரிலாக்ஸ்... நான் இவங்களை ஊட்டில தான் பார்த்தேன்... நான் ஹோட்டல்க்கு இடம்...
    அத்தியாயம் – 16   தனுஷ் அவளை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு கோவை சென்றுக் கொண்டிருந்தான் அவளை அலுவலகத்தில் விடுவதற்காய்... அவன் தினசரிகளில் அதுவும் ஒன்றென ஆக்கி வைத்திருந்தாள் அவன் மனையாள்.   முடியாது என்று அன்று சொன்னவன் தானே கூட்டிச் செல்கிறேன் என்று சொல்ல வைத்த அவளின் மீது அவனுக்கு இன்னமும் கோபம் இருந்தது.   அன்று அவ்வளவு சீன் கிரியேட்...
    அத்தியாயம் – 8   அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் அவள் நினைத்திருக்க அவளின் அன்னை கனியமுது அழைத்துவிட்டார் அவளுக்கு.   “சொல்லுங்கம்மா...”   “யாரு புவனா அது??”   “எதைப்பத்திம்மா கேட்கறீங்க??” என்று அவர் என்ன கேட்க வருகிறார் என்பது தெரிந்தே தெரியாதது போல் கேட்டாள்.   “எவனோ இன்னைக்கு உன்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்னானே... நல்ல வேளை இன்னைக்கு உங்கப்பா...
    அத்தியாயம் – 17   அவள் முகம் இருண்டதை கண்டவர் “என்னாச்சும்மா??” என்று அவளை லேசாய் உலுக்க தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாள் அவள்.   “ஒண்ணும்... ஒண்ணுமில்லை ஆன்ட்டி”   “அப்போ என்னவோ இருக்கு??”   “அதெல்லாம் இல்லை... என்னைப் பத்தியே கேட்டுட்டு இருக்கீங்க... உங்களைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே...” என்று பேச்சை மாற்றினாள் அவள்.   “என்னைப்பத்தி சொல்ல எதுவுமில்லைம்மா... கூட பிறந்தவர் ஒருத்தர் இருக்காரு, அம்மா...
    error: Content is protected !!