Wednesday, July 22, 2026

    குறுந்தொகை காதல் மைந்தா

    “ஏன் இவ தான் படிக்கனுமா? மத்த யாருக்கும் படிக்கத் தெரியாதா?” என்றார் விசாலாட்சி. அவரின் கேள்வியில் பெண்கள் அமைதியாகிவிட, அதுவரை யோசித்துக் கொண்டிருந்த சிவ தீர்த்தா சற்றும் யோசிக்காமல் கும்மிப் பாடலைப் படிக்கத் தொடங்கியிருந்தாள் முறைப்புடன். “பொன்னால பல்லாக்கு, பூவால அலங்காரம்.. முத்தால தாய் உனக்கு முத்தரசி பொங்கலிட்டோம்.. காடு கரை உழுதவனுக்கு கைரேகை மிச்சமடி.. காத்து படியளந்து பட்ட குறை...
    அத்யாயம் 9: ஆதிகேசவன்-சிவ தீர்த்தா  திருமண செய்தி சொந்த பந்தங்களிடமும், அங்காளி பங்காளிகளிடமும் , மாமன் மச்சினன்களிடமும் தீயாய் பரவியிருக்க, அனைவரும் ஆதியின் வீட்டிற்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ஊராரின் வருகை நின்று இப்போது சொந்தங்களின் வருகை.மொத்த சொந்த பந்தமும் ஆதியின் வீட்டில் தான் இருந்தது. ரேணுகா இதற்கு பயந்து தான் ஆதியை வீட்டில் இருக்க சொன்னார்.ரேணுகாவின் அண்ணன்...
    அத்யாயம் 5: சிவ தீர்த்தாவின் திருமண நாளும் நெருங்கியிருந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் எந்த வித பரபரப்புமின்றி எப்போதும் போல் அமைதியாக இருந்த சிவ தீர்த்தாவைப் பார்த்த கவிதாவிற்கு தான் அய்யோ என்றிருந்தது. “நாளைக்கு உனக்கு கல்யாணம் சிவா. கொஞ்சமாவது சந்தோஷமா இரு” என்றாள் கவி. “நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?”...
    அத்யாயம் 2 : தனி ஒருத்தியாக ஐந்து மணி நேரங்கள் உழவை ஓட்டி முடித்திருந்தாள் சிவ தீர்த்தா. இன்னும் கொஞ்சம் மட்டுமே மிச்சமிருக்க, கிருஷ்ணன் வரப்பை வெட்டி சமன் செய்து கொண்டிருந்தார். வானம் மீண்டும் இருட்டுக் கட்டிக் கொண்டு நின்றது. அந்த காலநிலை அவள் மனநிலையை கொஞ்சம் சாந்தமாக்கியிருக்க இப்போது ஒரு ரசனையுடன் ட்ராக்டரை ஓட்டிக்...
    “என்னடி அப்படி பார்க்குற?” என்றாள் சிவா. “என்ன சொல்றதுன்னு தெரியலை சிவா. அவ்ளோ அழகா இருக்க. உன்மேல இருந்து கண்ணை எடுக்கவே முடியலைடி” என்றாள் கவிதா. “ஆரம்பிச்சுட்டியா?” என்றவள், “பாருங்கப்பா இவளை” என்றாள் கிருஷ்ணனிடம். “கவி புள்ள சொன்னது நிஜம் தான்மா. எங்க கண்ணே பட்டிடும் போல” என்றார் கிருஷ்ணன். “இவ்வளவு அழகா இருக்குறதால தான் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்குற...
    குறுந்தொகை காதல் மைந்தா..! அத்யாயம் 1 :   “அம்பிகையே ..ஈஸ்வரியே! எமை ஆளவந்த கோவில் கொண்ட குங்குமக்காரி.. ஓங்காரியே வேப்பிலைக்காரி.. ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி.. வேளையிலே மனசு வச்சோம் முத்துமாரி..நாங்க வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி, ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம்-எமை ஆதரிச்சு வாழ்த்துமடி முத்துமாரி..!” என்ற அம்பிகையின் பாடல் ஊரைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த ஊரே திருவிழாக் கோலம்...
    அங்கே மில்லுக்கு சென்று கொண்டிருந்த விசாகனை வழி மறைத்துக் கொண்டது அவனின் நண்பர்கள் பட்டாளம். “என்ன மச்சான் உன்ன ஆளையே பார்க்க முடியலை. திருவிழா முடிஞ்சதும் ஓவர் பிசி ஆகிட்ட போல” என்றனர் நக்கலாய். “கடுப்பை கிளப்பாம பேசாம போங்கடா அங்கிட்டு. திருவிழாக்கு வந்தோமா போனோமான்னு இல்லாம ஒரண்டையை இழுத்து விட்டது பாத்தாதா?” என்றான் எரிச்சலாய். “இதெல்லாம் ஓவர்டா....
    வீட்டிற்குள் ஜீப் வந்து நின்ற சத்தத்திலேயே புரிந்து போனது ஆதியின் கோபம். இறங்கி வேகமாய் உள்ளே சென்றவனை பின் தொடர்ந்தார் விசாலாட்சி. “ஆதி என்னப்பா ஆச்சு?” என்று ரேணுகா பதட்டத்துடன் வர, “இன்னும் என்ன ஆகணும்மா? இவங்களை யாரு தோட்டத்து பக்கம் வர சொன்னா? பேரு தான் ஊருக்குள்ள பெரிய குடும்பம். செய்றது எல்லாம் பார்த்தா அப்படி...
    “சரி அதை விடுங்க, எங்க உங்க பெரிய பையனை காணோம்? ஒரு பொறுப்பிருக்கா அவங்களுக்கு?” என்றாள் கடுப்பாய். “ஏன்? அவன் பொண்டாட்டி தான நீ? நீயே போன் பண்ணி கேட்க வேண்டியது தான?” என்றார் சிரிப்புடன். “ஏன் கேட்க மாட்டேனா நானு?” என்று முறைத்தவள், அடுத்த நிமிடம் போனை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள். அவளின் அழைப்பை அலைபேசி...
    “பிரச்சனையை முடிச்சுட்டு ஆதி வர்றான்னு நினைக்கிறேன். நடந்ததை அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ” என்ற விசாலாட்சி திரும்பி வாசல் பக்கம் பார்க்க, சிவ தீர்த்தாவுடன் அவன் ஜோடியாக வருவான் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆதிகேசவனையும் சிவ தீர்த்தாவையும் மணக்கோலத்தில் பார்த்த ரேணுகாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. நிஜம் தானா என்பதைப் போல்...
    “என்னடி? பெரிய மனுஷின்ற மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க?” என்று விசாலாட்சி எகிற, “மரியாதை, வயசுக்கு எல்லாம் தர முடியாது. வார்த்தைக்குத் தான் தர முடியும்” என்றாள் பட்டென்று. “சிவா வேண்டாம்மா” என்றார் ரேணுகா. அவரின் முகத்துக்காக வாயை மூடினாள். சிவா அவ்விடத்தை காலி செய்ய, “இவளை என்னதான்மா செய்யறது?” என்ற ஆதிக்கு ஆயாசமாய் வந்தது. “விடு ஆதி, உன்...
    மறுநாள் வீடு வந்த மகனையும் மருமகளையும் பார்த்த ரேணுகாவோ எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் போல் விசாலாட்சி தான் வாயைத் திறந்திருந்தார். “ஏன்ப்பா ஆதி நேத்து வீட்டுக்கு வரலை?” என்றவரின் கேள்வி அவனைத் தேக்க, விசாலாட்சியின் குரலில் முன்பிருந்த அந்த அதிகார தொணி சற்று மட்டுப்பட்டிருந்தது. “தோட்டத்து வீட்லயே தங்கிட்டோம் பாட்டி” என்றவன் ரேணுகாவைப் பார்க்க, “என்னப்பா?”...
    வெளியே செல்வதைப் போல் சென்றிருந்த ஆதியும் அவ்வளவு நேரம் வெளியே தான் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அவள் என்னதான் சொல்கிறாள் என்ற எதிர்பார்ப்பு. முதலில் அவள் பொதுவாக பேசிவிட்டு செல்லவும் ஒரு ஏமாற்றம் மனதிற்குள். மீண்டும் வந்து அவன் நினைத்ததையே வார்த்தை மாறாமல் கூறி சென்றவளை எண்ணி முதன் முறையாக சிரித்துக் கொண்டான் ஆதி...
    அவளின் ருத்ர தாண்டவத்தில் அனைவரும் வாயடைத்து நிற்க, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா  அப்பா வயசுல இருக்குற ஒருத்தரை அடிக்கக் கையோங்குற அளவுக்கு வந்திருப்ப?” என்றார் மேகலை கோபமாய். “ஏன்? பொண்ணு வயசுல இருக்குற என்கிட்ட கேவலமா பேசுனப்போ அமைதியா தான இருந்திங்க. இப்ப மட்டும் என்ன? நீங்கல்லாம் என்ன விதமான மனுஷ ஜென்மங்க?” என்றாள். “எல்லாம் இவளால...
    “இப்பல்லாம் நான் கடவுளுக்கு நன்றி தான் சொல்லிக்கிறேன். ஏன்னு தெரியுமாங்க?” என்றாள் ரேணுகாவிடம். ரேணுகா அவளை கேள்வியாய் பார்க்க, “நல்லவேளை இவங்க என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. நான் என் அப்பாகிட்ட இருக்க போய் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன். ஒருவேளை இந்த வீட்ல இப்படிப்பட்ட மனுஷங்க கிட்ட வளர்ந்திருந்தா எப்படி வளர்ந்திருப்பேனோ? என்னால யோசிச்சுக் கூட பார்க்க...
    அத்யாயம் 21: உள்ளுக்குள் தோன்றிய அத்தனை கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்தவளுக்கு, வந்த அழுகையே அடக்குவதும் பெரும்பாடாய் இருந்தது. “போதும் இதோட நிறுத்திக்கங்க” என்றாள் பல்லைக் கடித்தபடி. “எதுக்குடி நிறுத்தனும்? அதான் ஊரே பேசி சிரிக்குதே? உன் வீட்டு லட்சணத்தையும், உன் அப்பனோட லட்சணத்தையும்” என்றார் விசாலாட்சி. பொறுமையை இழந்தவள், “இவர் உங்க புருஷனோட தம்பி தான?” என்றாள் மணிமேகலையைப் பார்த்து. “ஏன் தெரியாதா...
    அத்யாயம் 27: அனைத்து நிகழ்வுகளும் முடிந்து, சம்பிரதாயத்திற்கு சிவாவின் வீட்டிற்கு அனுப்பியவன், அன்றே சென்று அவளை மீண்டும் அழைத்து வந்து விட்டான். “நாளைக்கு கூட்டிட்டு வரேன் மாமா” என்று சொல்லியே அழைத்து சென்றிருந்தான். இதில் அறிவழகனுக்கும் காவேரிக்கும் கூட கொஞ்சம் வருத்தம் தான். “ஏன் மாமா? அப்பா பீல் பண்ணுவார்” என்றாள் சிணுங்கியபடி. “ஹேய் நானும் தான்டி பீல் பண்ணுவேன். மண்டபம் முழுக்க...
    அவளுடைய மனப்போராட்டம் அவருக்கும் புரியத்தான் செய்தது. இருந்தாலும் அவள் கூறிய அந்த மானங்கெட்ட சோறு என்ற வார்த்தைகள் அவரை பாதிக்க, கண் கலங்கியிருந்தார். அவர் எழுந்து வெளியே வர எத்தனிக்க, அவர்கள் பேசியதை எல்லாம் கோபத்துடன்  கேட்டுக் கொண்டு நின்றிருந்தான் ஆதி கேசவன். “ஆதி..! அது வேற ஒண்ணுமில்லை,ஏதோ கோபத்துல” என்று ரேணுகா அவனை கண்களால் அடக்கினார். “அம்மா...
    “டேய் ஆதி உங்க சுபா அத்தை பாப்பா பார்க்க பொம்மை மாதிரி பொசுபொசுன்னு அழகா இருக்குடா” என்று பாண்டி விளையாடும் போது சொல்லியிருக்க, யாருக்கும் தெரியாமல் சுபாவைப் பார்க்க சென்றிருந்தான் ஆதி கேசவன். “ஆதி” என்ற சுபா அவனை அணைத்துக் கொள்ள, அவனோ ஒரு திமிருடன் வீராப்பாய் முகத்தை திருப்பிக் கொண்டான். “அத்தைய பார்க்க மாட்டியா?” என்றாள்...
    அத்யாயம் 14: அன்று எடுத்த புகைப்படங்களை கவி சிவாவிற்கு அனுப்பியிருக்க, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவ தீர்த்தா. தன்னருகில் அமர்ந்திருந்த ஆதி கேசவனை நிறுத்தி நிதானமாய் பார்த்திருந்தாள். அழகும் கம்பீரமும் கலந்து அம்சமாய் தன்னருகில் இருந்தவனைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தாள். விசாலாட்சியின் பேரன் என்று மனதில் பதிந்திருந்த பிம்பத்தை தள்ளி வைத்துவிட்டு, ரேணுகா தேவியின் மகனாக மட்டும்...
    error: Content is protected !!