என் அலாதிநேசம் நீ!..
நீ என் அலாதி நேசம்!
9
இந்த வருடம் தொடங்கியது முதல்.. யோகிக்கு நிறைய போட்டிகள் இருந்தது கபடியில் அதனால் யோகியின் கவனம் எல்லாம் விளையாட்டில்தான் இருந்தது. வார இறுதியானால் வெளியூர் சென்றிடுவான் விளையாடுவதற்காக. இதனால், மிர்த்தியோடு பேசுவது என்பது குறைந்தது.
மிர்த்திக்காவிற்க்கு படிப்பது நிறைய இருப்பதால்.. அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. அதிகமாக மிர்த்தியின் உணவை, யோகி...
அலாதிநேசம்!
16
மிர்த்திக்கா, பஸ்சில் ஏறி அமர்ந்ததும்.. அவனின் நினைவுதான்.. ‘எதோ சொல்லனும்ன்னு கூப்பிட்டான்..’ என யோசித்துக் கொண்டே இருந்தாள்.
யோகிக்கு, மனது பாரமாகியிருக்க அவளுக்கு அழைப்பதா வேண்டாமா என.. உறங்கும் முன் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான். நேரம் கடந்தது. உறங்கியும்விட்டனர் இருவரும்.
நடு இரவில், யோகிக்கு விழிப்பு வந்துவிட.. மீண்டும் அவளின் தாக்கம் அவனுள். நேரத்தை பார்த்தான் இரண்டு....
மிர்த்திக்கா திரும்பிக் கொண்டு நடந்தாள். யோகி, அவளின் இடக் கையை பிடித்தான்.. மிர்த்திக்காவிற்கும் அவனின் வார்த்தைகள்.. இந்த அழுத்தமான பிடி இரண்டும் சேர்ந்து தாக்காத்தை கொடுத்திருக்க.. அவளால் நகர முடியவில்லை.. “போடா.. நீ போயிடு.. “ என்றாள்.
யோகி “எங்க போக.. சொல்லேன்..” என்றான் அவளின் முகத்தை நிமிர்த்தி..
மிர்த்திக்காவின் பார்வை கோவமானது இப்போது.. “நீ இல்லை.....
வாசு டூர் முடித்து வந்து சேர்ந்தார்.. இயல்பான நாட்கள் தொடங்கியது.
மிர்த்திக்கா அந்த ஒருநாளுக்கு பிறகு அதிகமாக யோகியிடம் அழுதாள். பேசும் போதெல்லாம் ‘நாம தப்பு பண்ணிட்டோம் பயமா இருக்கு..’ என நிறைய அழுதாள்.
யோகி, நிறைய சமாதானம் செய்தான்.. அவளுக்கு பிடித்த லட்டு, கார பொறி.. கைக்கு வளையல் என நிறைய வாங்கி கொடுத்தான். இரவில்.....
என் அலாதிநேசம் நீ!..
ஊரின் மத்தியில்.. அடர்ந்த ஜனத்திரள் கொண்ட மார்கெட் பகுதி. இரவு மணி எட்டு. பெருமாள் கோவில்.. சாரை சாரையாய் மக்கள்.. கோவில் நடை சாற்றுவதற்கு முன் பகவானை கண்டிட வேண்டும் என ஓடும் பக்தர்கள் ஒரு கூட்டம் என்றால்.. மறுபுறம் நிறைவாய் அந்த பரம்பொருளை கண்ணாற கண்டுவிட்டு.. அவனிடம் தன் குறைகளை...
யோகி “இல்ல, எனக்கு கேட்டுது.. நீ வேற எதோ சொன்ன” என்றான்.
மிர்த்திக்கா “சொல்ல முடியாது.. விஷ் செய்தால்.. மிரட்டுறீங்க.. அதனால், அதெல்லாம் இல்லை.. யோகி ஹாப்பி பர்த்டே மட்டும்தான்.” என்றாள்.
யோகி “போகுது போ.. எப்படி இருக்க” என்றான், பெருந்தனமையாக.
மிர்த்திக்கா ஏதும் சொல்லாமல்.. அமைதியாக அவனையே பார்த்தாள்.
யோகியால் ஓரளவுக்கு மேல் அவளின் பார்வையை தாங்க முடியவில்லை.....
யோகி கை காட்டினான் அங்கே என. ஜெகன் “கொடுத்துட்டு வரேன்..” என சொல்லிக் கொண்டே அக்காவிடம் சென்றான்.
யோகிக்கு என்னமோ அவளைவிட்டு செல்லவே மனதில்லை.. ஜெகன் இப்போது டேபிளில் வந்து அமரவும் யோகி “க்கும்.. கொஞ்சம் பேசணும் ஜெகா” என்றான்.
ஜெகன் “ம்.. பேசலாம் அண்ணா.. சொல்லுங்க” என்றான்.
யோகி “இல்ல.. வீட்டுக்கு போயிடலாம்” என்றான்.
ஜெகன் “ம்.. போலாம்.....
நீ என் அலாதிநேசம்
27
யோகிக்கு, மிர்த்தி திருச்சி சென்றது தெரியாது.
அவனின் கோவம் அவனுக்கு.. அலுவலகம் சென்றுக் கொண்டிருந்தான், காரில்.
மிதமான ஒலியில் “போ நீ போ...” என பாடல்.
யோகி இந்த பாடல் கேட்பது உண்டுதான்.. எப்போதாவது.. அவளிடம் பேசவேண்டும்.. அவளை மனமும் உடலும் தேடுகிறது எனும்போது.. பாடலை தேடுவான்.. எல்லாம் பாஸ்ட் பீட்தான். நிதானம் மெலடி.. எல்லாம்...
5
அன்று மிரித்தியின் பிறந்தநாள். முன்பெல்லாம் பிறந்தநாள் என்றால்.. முதலில் கோவிலுக்கு சென்றிடுவாள் தந்தையோடு. அதற்குள் இரண்டு இனிப்புகள் இருக்கும் வீட்டிற்குள்.. ஒன்று தன் அம்மா செய்தது இன்னொன்று தனம் அத்தை செய்து கொடுத்திருப்பார்.
அதென்னமோ எப்போதும் பிள்ளைகளுக்கு பக்கத்து வீட்டு உணவுதானே பிடிக்கும். அந்த வகையில், தனம் அத்தையின் அசோகா அல்வாதான் அவளின் விருப்பமான இனிப்பு....
அலாதிநேசம்!
15
யோகி, ஜெகன் வந்ததும்.. இருவரிடமும் விடைபெற்று வீடு வந்தான். மிர்த்தி என்ன மனநிலையில் இருக்கிறாள் என அவனால் உணரவே முடியவில்லை.. ‘அம்மா இல்லை அதனால் சோறு போடுகிறாளாம்’ என அவள் சொல்லியதை உணர்ந்து சிரித்துக் கொண்டான் இப்போது. இப்போதான் தெரியுதா அம்மா இல்லை எனக்குன்னு.. எங்கடி போன இத்தனை வருஷம்.. அப்போ தெரியாதா இவனுக்கு...
யோகி ரசித்து பார்த்தான்.. பின் தன் கைகளை மடக்கிக் கொண்டு பக்கவாட்டில் பெரிதாக்கிக் கொண்டே “குண்டாகிட்ட” என்றான்.
மிர்த்தி “இல்ல.. அப்படியேதான் இருக்கேன்..” என்றாள் சினுங்களாக.
யோகிக்கு, அந்த சினுங்களை செல்ல பிரியத்தை பற்றிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.. ம்.. அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போலவே அவனின் உணர்வுகள் கிளர்ந்தது. ம்கூம்.. சரியில்லை இது...
நீ என் அலாதிநேசம்!
20
மிர்த்திக்காவிற்கு, யோகியின் கோவம் புரிந்தாலும்.. தந்தையிடம் சொல்லாமல் இவ்வளவு தூரம் செய்ததே பயம் சங்கடம் அவளுக்கு. அதனால், தந்தையிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டாள் பெண்.
ஜெகனுக்கு அழைத்து முதலில் பேசினாள் மிர்த்திக்கா. நடந்தவைகளை சொல்லினாள். ஜெகன் “ஏன் அக்கா, என்கிட்டே சொல்லல” எனதான் கேட்டான்.
மிர்த்தி சமாதானம் செய்தாள். “நீ இப்போதானே...
2
வாசுதேவன் கண்ணகி தம்பதியின் மூத்த மகள் மிர்த்திகா, MBA இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்து மகன் ஜெகதீஷ் B.Tech இப்போதுதான் முடித்தான்.. வேலையும் கிடைத்துவிட்டது ஒரு IT கம்பெனியில். மிர்த்தி எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவளின் தாய் கண்ணகி ஒரு விபத்தில் உயிர்ழ்ந்துவிட்டார்.
கண்ணகி மட்டுமல்ல.. அந்த வீதியில் உள்ள பெண்கள் கூட்டாக.. ...
மிர்த்தி “என்ன அப்பா.. நா..ன்..” என தொடங்கினாள்.
வாசு “போதும்மா.. காதல் உன் கண்களை மறைக்குது. நடக்கட்டும் ம்மா.. உன் விருப்பபடியே நடக்கட்டும் எல்லாம்” என்றவர் எழுந்தார்.
மிர்த்தியும் எழுந்து நின்றாள் “அப்பா இது.. நீங்க முழு மனசாக சம்மதம் சொல்லலை” என்றாள்.
வாசு “நீயும் அதை எதிர்பார்க்கலையே டா..” என்றார்.
மிர்த்தி “அப்பா” என்றாள்.
வாசு இங்கும் அங்கும் நடந்தார்.....
அலாதிநேசம்!
11
தந்தையிடம் அடி வாங்கிக் கொண்டு.. இறுக்கமாக படுத்திருந்தவள் மனதில் புகையாய் தொடங்கிய அவன் நினைவு.. பற்றி எரிந்து.. தணலாக இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது அவனின் நினைவு. சொல்லி அழகூட ஆளில்லை. அவன் இப்படி என்னை விரும்பினான்.. இதெல்லாம் நடந்தது என காற்றிடம் சொன்னால் கூட குற்றம். வாய் திறந்து பேச முடியாது.. தம்பிக்கு கூட...
நீ என் அலாதிநேசம்!
19
மதியம் வரை பொறுப்பாக வீடுகள் பார்த்தனர் இருவரும். அதிகம் பேச்சில்லை.. தனி வீடு என்றால், யோகி வேண்டாம் என்றான்.. வசதிகள் பார்த்தான்.. அவளின் அலுவலக தூரம் கணக்கிட்டு.. நிறைய அலசினான்.
எப்படியும் இரண்டு வீடுகள் சரியாக இருக்கும் போல இருந்தது. மிர்த்திக்கா, அவனின் பேச்சுகளை கேட்டுகொண்டாள்.. அவளிற்கு, அவனின் அக்கறையில் குறிக்கிட தோன்றவில்லை.....
ஜெகன், அவசரமாக சென்று கதவை திறந்தான்.
யோகியும்.. தமிழரசியும் நின்றுக் கொண்டிருந்தனர்.
வாசு, யோகியை முதலில் மேலிருந்து கீழ் வரை பார்த்து அடையாளம் காண முயன்றார். நெடு நெடுவென உயரமாக.. அதற்கு தக்க திடமான உடல்வாகு.. இன்னும் நிறம் கூடி.. அளவெடுத்த மீசையும்.. பார்வையில் கூர்மையும்.. உடல்மொழியில் பவ்யமாகவும் ஒரு மாப்பிள்ளையின் சாயலில் யோகி நிற்பதை கண்டார்...
நீ என் அலாதிநேசம்!
25
வாசு, பெண்ணினை மேலும் மேலும் சோதித்தார் எனலாம்..
வாசு, மகனிடம் சொல்லி வைத்தார்.. தன் அக்காவிடம் சொல்லி வைத்தார். மகன் எப்படியும் அங்கே செல்ல கூடாது என்பது அவரின் விருப்பம். அதற்காக, கடுமையாக சொல்லி வைத்தார்.
ஜெகன் தன் அக்காவிடம் ஏதும் தந்தை சொன்னது பற்றி பேசிக் கொள்ளவில்லை. ஆனால், காமாட்சி அத்தை மிர்த்தியிடம்...
என் அலாதிநேசம் நீ!..
3
வாசு வெளியே சென்றவர்.. கடையில் கணக்கு பார்க்க கூட வரவில்லை, கடை அடைத்த பிறகுதான் வந்தார், தன் வீட்டிற்கு.
ஜெகதீஷ் காத்திருந்தான் தந்தைக்காக. தந்தை எங்கு சென்றிருப்பார்.. எப்படி வருவார்.. என்ன நடக்கும் என தெரியும். எனவே, காத்திருந்தான். மிர்த்திக்காவும் அவ்வண்ணமே.. நான்குமணி நேரம் முன் விரல்களில் மட்டும் இருந்த பயம் இப்போது...
ஜெகன் எண்ணிற்கு அழைத்தான் யோகி. ஜெகன் அழைப்பை ஏற்கவும்.. யோகி “எங்க இருக்க..” என கேட்டுக் கொண்டே லிப்ட்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.
ஜெகன் “ஆபீஸ்சில் அண்ணா..” என்றான்.
யோகி “நான் இப்போ உன் அப்பார்ட்மெண்டில்தான் இருக்கேன்.. மிர்த்தையை பார்க்க வந்தேன்.. நீ சீக்கிரம் வா” என சொல்லி அழைப்பை துண்டித்தான்.
ஜெகனுக்கு யோசனை. இப்போது இவரு இந்த நேரத்திற்கு...