Tamil Novels
தூறல் – 26
“பசங்க வந்து லவ் பண்றேன்னு நிக்கிறப்போ, அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத, நம்ம பசங்க நம்மள மீறி எந்த முடிவும் எடுத்திட மாட்டாங்கன்னு திடமா நம்பிட்டு இருக்க பெத்தவங்களுக்கு அந்த நிமிஷம் எப்படி இருக்கும்னு இப்போ உங்களுக்கு சொன்னா புரியாது. நீங்க எல்லாம் எங்களோட வயசுல இருக்கிறப்போ கால மாற்றம் ஆகிருக்கலாம்.. ஆனா.....
தூறல் – 25
கண்மணி வருணின் வருகையை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் உடல் நடுக்கத்திலேயே தெரிந்தது. ‘இவனா..’என்ற திகைத்த பார்வை. அவனைக் கண்டதுமே உள்ளமும் உடலும் சேர்ந்தே பதற, இறுக்கமாய் அதிரூபனின் கரத்தினை பற்றிகொண்டாள்.
கிளம்புகிறேன் என்றவள் இதென்ன கையை பிடிக்கிறாள் என்று அதிரூபன் அவளை ஏறிட, அவளின் பார்வையோ எதிரே இருந்த ஒருவன் மீது...
அவளின் குரலே சொல்லியது அவளின் மன உணர்வுகளை, இப்படியொரு சூழலை கையாள்வது கடினம்தான். ஆனால் என்ன செய்ய.. கடந்து வந்துதானே ஆகவேண்டும். அதிரூபனுக்கு இதெல்லாம் தெரியாமலும் இல்லை. அவன் வீட்டினில் மஞ்சுளா கொஞ்சம் திட்டுவார் தான் ஆனால் வேறெதுவும் பெரிதாய் இல்லை..
அவனின் எண்ணமெல்லாம் இப்போது சடகோபன் மட்டுமே, அதே எண்ணத்தில் “உன் அண்ணன்...
தூறல் – 24
“கண்மணி நீ உள்ள போ...” என்று கண்ணனும் சொல்ல, அவளோ சடகோபனை பார்த்தாள்.. போகட்டுமா என்று..
மகளின் பார்வை புரிந்த மனிதரோ ‘போ...’ என்று தலையை ஆட்ட,
வருணோ “கண்மணி ப்ளீஸ்..” என்று அவளின் முன்னே வந்து நின்றவன், “இப்படி எல்லாம் ஆகும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை.. யாரோ பண்ண தப்புக்கு நான் பலிகடா...
தூறல் – 23
“ஏன் ப்பா ஏன் இது ஒத்துவராது சொல்றீங்க??” என்று கண்ணன் மிக மிக தன்மையாகவேத்தான் கேட்டான் சடகோபனிடம். ஆனால் அவனின் பொறுமையும் எல்லை கடந்துகொண்டு இருப்பது அவனின் முகம் பார்த்தாலே சியாமளாவிற்கு தெரிந்தது.
கண்மணியோ எனக்கே தெரியாமல் இத்தனை நடந்திருக்கிறதா என்ற அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதிரூபனை அப்பா மறுப்பது...
“நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்.. நீதான் இப்படி உம்முன்னு இருக்க..”
“ம்ம்..”
“என் கண்மணில...” என்று அவன் கெஞ்ச,
“ஆமா நீங்க பேசினா பேசணும்.. இல்லையா நானும் அமைதியா இருந்துக்கனும்.. எல்லாருக்கும் அவங்கவங்க கோபமும் ரோசமும்தான் பெருசு...” என்று கண்மணி படபடக்க,
“சரி சரி நான் இனிமே ஒன்னும் சொல்லமாட்டேன் சரியா..”
“அப்.. அப்போ நானும் சொல்லக்கூடாதா??!!”
‘என்னடா இது எப்படி பேசினாலும்...
தூறல் – 22
கண்மணியின் குரல் கேட்டு கண்ணன் பதற்றமாக “என்னாச்சு கண்ஸ்??” என,
“என்னாகனும்?? நீ ஏன் இப்படி பண்ற??” என்றாள் கண்ணை கசக்கி..
நிஜமாகவே கண்மணிக்கு மிகுந்த வருத்தமாய் போய்விட்டது. அதிரூபனைப் பற்றி விசாரிப்பேன் எனக்கு திருப்தி ஆகவேண்டும் என்றெல்லாம் கண்ணன் சொல்லும்போது அமைதியாகத்தான் இருந்தாள். இது நடப்பது சகஜமும்தானே என்பதும் அவளின் எண்ணம்.....
தூறல் – 21
“ஹே கண்மணி... நான் இங்க இருக்கேன்.. நீ அங்க இருக்க.. ரொம்ப தூரத்துல இருக்கோம் ஒருத்தருக்கொருத்தர்... ” என்று அதிரூபன் பீடிகை போட,
“ஆமா..” என்றாள் இவளும்.
“பேசுறது கூட எப்பவோதான்...”
“ம்ம் ஆமா...”
“ஊருக்கு வந்தாலும் நினைச்சதுபோல டக்குனு மீட் பண்ணவும் முடியறதில்ல..”
“ம்ம்ம் ஆமா...”
“எல்லாரும் இப்படியா லவ் பண்றாங்க கண்மணி???” என்று அதிரூபன் குரலில்...
தூறல் – 20
கண்மணிக்கு, கண்ணன் என்றால், அதிரூபனுக்கு மஞ்சுளா. இருவருமே இருவரிடமும் நன்றாக மாட்டிக்கொண்டனர்.. அதிரூபன் கண்ணனை கவனிக்கவில்லை, நிவின் இழுக்காத குறையாய் இழுத்து சென்றமையால் அப்படியே சென்றுவிட, அவன் பார்க்கவில்லை. ஆனால் கண்ணன் பார்த்துவிட்டான்..
எப்போதுமே கண்ணன் ஊருக்குச் சென்றுவிட்டு வந்தால், “அண்ணா...” என்றபடி வேகமாய் அவனை நோக்கி வரும் கண்மணி இப்போதோ “அண்ணா..!!!”...
தூறல் – 19
“அந்த வருண் வில்லனா வருவான்னு பார்த்தா இப்படி வருண பகவான் வில்லனா வந்து விழறாரே..” என்று பொழிந்துகொண்டு இருக்கும் மழையை வெறித்துக்கொண்டு இருந்தான் அதிரூபன்.
கடையில் இருப்பவர்கள் எல்லாம் அவனை வித்தியாசமாய் பார்க்க, அதிலும் ஒருவரோ “சார்.. ஏன் இப்படி வந்து நிக்கிறீங்க..” என்று கேட்டேவிட்டார்.
“சும்மாதான் மழை வந்தே ரொம்ப நாள் ஆச்சுல்ல...”...
தூறல் – 18
“அதென்ன அவ்வளோ அவசரம்?? நான் ஊருக்கு வர்றதுக்குள்ள போயி பேச என்ன இருக்கு?? அதெல்லாம் இப்போ வேணாம்.. நான் வந்ததுக்கு அப்புறம் போயி பேச சொல்லு..” என்று கண்ணன், தீபாவிடம் கத்த,
“நீ சொல்றது எனக்கு புரியுது.. பட் எங்க வீட்ல சொல்றதும் நான் கேட்கணுமே.. அப்பா அம்மா கிளம்பி நிக்கிறாங்க.. அங்கிளை...
தூறல் – 17
“என்னடா இவனை இன்னும் காணோம்..” என்று மஞ்சுளா நிவினிடம் கேட்க,
“ம்ம் நீதான தொரத்தி விட்ட..” என்ற நிவினுக்கும் கவலை தான்.
அதிரூபன் எப்போதும் இரவு பத்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவான். கடையில் இருக்கும் ஆட்கள் இரவு ஒன்பது போல் கிளம்பிட, இவன் அன்றைய தினத்தின் கணக்கு வழக்குகள் எல்லாம் பார்த்து, அங்கேயே...
தூறல் – 16
அதிரூபனுக்கு காதல் நேரடி தாக்குதல் செய்தது போல் அல்லாது கண்மணிக்கு காதலென்பது மாறுவேடத்தில் வந்து தாக்கியதோ என்னவோ?? எது எப்படியானாலும் தாக்குதல் நிகழ்ந்தது என்பது நிஜம்தானே.. என்ன அதனை உணர்ந்துகொள்ள சில நேரம் பிடிக்கும்..
இங்கே கண்மணிக்கோ சில நாட்கள் பிடித்தது.. தனக்கு எது பிடித்திருக்கிறது.. யார் பிடித்திருக்கிறது என்று புரிந்துகொள்ள. ஆனாலும்...
தூறல் – 15
“பணத்திற்காக, மத்திய அரசாங்கத்தின் தகவல்களை சில தனியார் நிறுவனங்களுக்கு விற்றமைக்காக, சென்னையை சார்த்த வருண் என்ற இளைஞரும் அவனின் நண்பர்கள் சிலரும், மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் இன்று கையும் களவுமாக பிடிக்கப் பட்டனர்...”
என்ற தலைப்பு செய்தியே மாறி மாறி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்க, அதனைப் பார்த்த சடகோபனோ ஏற்கனவே பதற்றத்தின் உச்சத்தில்...
தூறல் – 14
கண்மணிக்கு மனதினில் பயம் வந்துவிட்டது எனலாம். ஒருவித குழப்பமும் கூட. அதிரூபனின் கோபத்தின் காரணம் புரியவில்லை. தன்னை ஏன் பார்க்கவேண்டும் என்று சொன்னான் என்பதும் தெரியவில்லை. இறுதியில் அவனின் உணர்வற்ற அந்த குரல்,
“ஓகே...” சொன்ன அந்த குரல் அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க, முதலில் அதிரூபன் கோபத்தில் கத்தியது எல்லாம் மறந்தே...
தூறல் – 13
வருண் வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்த வாரம் வருவான் என்று இருக்க, அவனோ அடுத்த இரண்டே தினங்களில் வந்துவிட்டான். அதுவும் மூர்த்தியோடு, இங்கே கண்மணியின் வீட்டிற்கு வர, யாரும் அவனின் வருகையை எதிர்பார்க்கவில்லை என்பது நன்கு தெரிந்தது.
“சாரி சாரி அங்கிள்.. ஆன்ட்டி... லீவ் போட்டு வரலாம் நினைச்சேன்.. பட் ஒரு...
தூறல் – 12
அதிரூபன் கண்மணியோடு பேசிக்கொண்டே நிற்க, எதேர்ச்சையாய் திரும்பியவன் சுப்பிரமணி நிற்பது கண்டு உள்ளே அதிர்ந்தாலும், “மா.. மாமா.. வாங்க...” என்றான் வேகமாய்..
கண்மணியும் அவரைப் பார்க்க, இருவரின் முகத்திலும் இருந்த இயல்பு கண்டு சுப்பிரமணிக்கு வித்தியாசமாய் எதுவும் தெரியவில்லை.
“உன்னை கூட்டிட்டு போலாம்னு வந்தேன்...” என்றவர், கண்மணியை கேள்வியாய் பார்க்க,
“நிவின் கிளாஸ்...
தூரிகை 22:
எப்பொழுதும் அருந்தாத மதுவை அருந்தியதால் தலைவலி தாங்க முடியாத அளவிற்கு இருந்தது தேவாவிற்கு.
கம்பெனியில் தனது இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகம் அஷ்ட்ட கோணலாய் மாற....தலையை இரு கைகளால் தாங்கியபடி.....எதுவும் செய்ய மனமின்றி அமைதியாய் இருந்தான்.
“என்னாச்சு தேவா...?ஏன் ஒரு மாதிரி இருக்க...?” என்றான் குணா.
“ஒண்ணுமில்லை குணா...! லேசா தலைவலி..!”என்று அவன் முகம் பார்க்காமல் சொல்ல...
“எதனால் வந்த...
தூரிகை 21 :
கீர்த்தனாவின் கைகளில் இருந்த தாலியைப் பார்த்த தேவா அதிர்ந்தான்.அவளோ அவனை உக்கிரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இது...இது...” என்று தேவா தடுமாற.....
“எது..?” என்றாள் கீர்த்தனா எகத்தாளமாய்.
அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவின் கண்கள் கலங்க.... தன் தலைமுடிக்குள் கையை விட்ட தேவா அழுந்த கோதினான்.
“இந்த தாலி யாருதுன்னு உங்களுக்குத் தெரியுமா...?” என்றாள் நக்கலாய்.
“ப்ளீஸ்..! கீர்த்தி...நடந்தது என்னன்னா..?”...
தூறல் – 11
‘கண்மணி நீ பேசாத.. நான் பேசிக்கிறேன்...’ என்று கண்ணன் தன், பார்வையிலேயே அவளுக்கு செய்தி சொல்ல, அவளோ அதெல்லாம் சரிவராது என்பதுபோல்,
“ப்பா நான் கொஞ்சம் பேசணும்...” என்றாள்..
எப்போதுமே பிறர் பேசுவதை கவனித்து, அவசியத்திற்கு மட்டுமே வாய் திறக்கும் மகள், இன்று ஒருவித பிடிவாதத்துடன் வந்தமர்ந்து பேசவேண்டும் என்று சொன்னது சியாமளா, சடகோபன்...