Nenjai Koithaal Vanji
தன்னை வந்து பார்க்க சொல்லி மேகநாதனிடமிருந்து இட உரிமையாளருக்கு செய்தி வரவும் மீண்டும் நம்பியிடம் வந்து நின்றான்.
அந்தப் பிரச்சனை பேசி முடித்தாகி விட்டது, நீ போக தேவையில்லை, என்ன பிரச்சனை என்றாலும் எந்நேரமாக இருந்தாலும் தர்மாவுக்கு சொல், அவன் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கை சொல்லி அனுப்பி வைத்து விட்டார் நம்பி.
அப்படி ஒரு நாள்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -11
அத்தியாயம் -11
திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருக்க, கனியும் ஃபேக்டரி செல்ல ஆரம்பித்திருந்தாள். எப்போதாவதுதான் தர்மாவும் அவளும் சேர்ந்து செல்வார்கள், பெரும்பாலும் தர்மா முன்னரே சென்று விடுவான், மாலையில் திரும்பும் நேரமும் மாறுபடும்.
அலுவலகத்துக்குள் பார்க்கும் வேலைகளை கனி கவனித்துக் கொள்ள, தர்மா தொழிற்சாலையிலும் வெளி வேலைகளுமாக இருப்பான்.
நம்பியுடன் முகம் கொடுத்து...
“உன் வீட்டுக்குள்ள வந்தா வேடிக்கை பார்க்கிறேன், ரோட்ல நிக்க உன் பெர்மிஸன் தேவையில்லை” என தர்மாவும் காட்டமாக சொன்னான்.
எங்கே அவர்களுக்குள் சண்டையாகி விட போகிறதோ என இருவருக்கும் இடையில் குழந்தையுடன் வந்து நின்றாள் மஹா. ரியா இப்போது அம்மாவின் தோளில் சோர்ந்து போய் படுத்திருந்தாள்.
குழந்தையை அப்படி பார்க்க பார்க்க தர்மாவுக்கு வேதனையானது.
“என்னாச்சு மஹா, ஏதும்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -10
அத்தியாயம் -10
கனிஹாவுக்கு மனமே சரியில்லை, தர்மாவோ சாதாரணமாகவே இருந்தான். விருந்து முடியவும் பெரும்பாலான விருந்தினர்கள் சென்று விட்டனர். தாமரையும் கனியின் பெரியம்மாவும் மட்டும் இருந்தனர்.
காவல்நிலையம் செல்ல தர்மாவை அழைத்தார் நம்பி.
“நீங்க எதுக்கு மாமா? நான் போய்ட்டு வர்றேன்” என தர்மா சொல்ல, அவர் கேட்பதாக இல்லை.
தாமரை தன் மகனுடன் நேருக்கு...
“அங்க டின்னர் எப்பவோ ரெடியாகிடுச்சு. இது உனக்காக மட்டும் அவங்களே ஆசையா பண்ணினாங்க. எல்லாம் சரியா இருந்திருந்தா நாம அங்க அவங்க கூடத்தானே மாமா இருந்திருப்போம்? அஜய் நிதி எல்லாம் உன் பொறுப்புல இருந்திருப்பாங்க, சின்ன வயசுல ஹஸ்பண்ட் இல்லாம கஷ்ட பட்டவங்க இந்த வயசுல மூத்த பையன் பொறுப்புல எல்லாத்தையும் விட்டுட்டு அக்கடான்னு...
“அப்புறம் எதுக்கு உன்னை அவனுக்கு கட்டி வச்சிருக்கேன், ஒழுங்கா இதை அவனை சாப்பிட வைக்கிற, இல்லைனா உனக்கு நாலு அடி”
“அடிக்கிற பழக்கம்லாம் உங்கள்ட்டருந்துதான் மாமாக்கு வந்திருக்கணும். அன்னிக்கு என்னா அடி வச்சீங்க?” எனக் கேட்டவளை முறைத்தவர் பன்னீரை வறுதெடுத்து வைத்தார்.
“இனிமே அப்படிலாம் அடி வைக்காதீங்க அத்தை, எனக்கு பார்க்க கஷ்டமா இருக்கு” என தயங்கிக்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -9
அத்தியாயம் -9
அத்தையை சமாதானம் செய்து, நாளை நடக்கவிருக்கும் விருந்துக்கு அழைத்து செல்லவென புதுக்கோட்டை வீட்டுக்கு வந்திருந்தாள் கனிஹா.
பேரன் வரவில்லையா என விசாரித்தார் அன்னலக்ஷ்மி பாட்டி. தர்மாதான் கனியை காரில் அழைத்து வந்தான், வாசலிலேயே இவளை இறக்கி விட்டு கிளம்பும் போது சொல் என கூறி சென்றிருந்தான்.
பாட்டியை வருந்த செய்ய மனமில்லாமல்...
ஃபேக்டரியில் இருந்த தர்மா மனைவியை அலட்சியம் செய்ய முடியாமல் ஏற்றான். “நான் சின்ன குழந்தை இல்லை கனி, ஏன் சும்மா கால் பண்ற?” என்றான்.
அப்பா தன் முன்னால் நிற்க அமைதியாக ஹால் சென்றாள் கனி.
“என்ன கால் பண்ணிட்டு அமைதியா இருக்க, லைன்ல இருக்கியா?” எனக் கேட்டான் தர்மா.
“எங்க மாமா சும்மா சும்மா உனக்கு கால்...
“அத்தை!” என அழைத்தாள் கனி.
“என் சொல் பேச்சு கேட்காம கட்டிக்கிட்டீல்லடி இவனை? ஆள் கடத்தல் செய்றான் உன் புருஷன். அந்த பையனோட பெத்தவங்க எனக்கு கால் பண்ணி கதறி அழுவுறாங்க” என்ற தாமரை உணர்ச்சிப் பெருக்கில் நிற்க முடியாமல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டார்.
“என்னடா ஆச்சு?” என பாட்டி கேட்க, கனியும் “என்ன...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -8
அத்தியாயம் -8
அசந்து உறங்கிக் கொண்டிருந்த கனிஹாவின் கன்னத்தை தட்டி, அவளை எழுப்பி விட்டான் தர்மா. கண் விழித்தவள் குளித்து தயாராகி அமர்ந்திருந்த தர்மாவை பார்த்து அதிர்ந்து விட்டு நேரத்தை கண்டாள்.
நேரம் எட்டாகியிருக்க “இனிமே ரெடியாகி கீழ போக ஒம்போது மணிக்கு மேலாகிடும். எல்லாரும் என்ன நினைப்பாங்க? நீ எந்திரிச்சிப்பவே என்னையும்...
தொழிற்சாலை ஊழியர் ஒருவரது மகள் அவளது வீட்டுக்கு தெரியாமல் அவளின் காதலனுடன் ஊரை விட்டு சென்று விட்டாள். அந்தப் பையன் நல்லவன் இல்லை, கெட்ட பழக்கங்கள் மற்றும் சகவாசம் உள்ளவன். தனது ஆட்கள் வைத்து அவர்களை கண்டுபிடித்து, அந்தப் பெண்ணை மீட்டு வீட்டில் விட்டு வர நேரமாகி விட்டது என அவளுக்கு விளக்கம் சொன்னான்.
சுவாரஷ்யமாக...
அதற்குள் வேறு சிலரும் வந்திருந்தனர். குழந்தையின் அழுகை நிற்கவும் நகர போன தர்மா, மஹாவின் கன்னத்தில் விரல் தடத்தை காணவும் திகைத்து நின்று விட்டான். அவனது பார்வை தன் முகத்தின் மீது படிவதை கவனித்த மஹாவும் வேகமாக வெளியேறி விட்டாள்.
சட்டென அவனது மனதை கனமான உணர்வுகள் அழுத்த ஆரம்பித்து விட்டன.
தர்மா விட்டுச் சென்ற இடத்திலேயே...
“ஹ்ம்ம்… என்ன?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் பக்கம் திரும்பிப் படுத்தான்.
“இல்லை, மதியமே ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. நல்ல வேளை ரிசப்ப்ஷன்ல எப்படியோ நின்னுட்டேன். எதையும் என்ஜாய் பண்ணவே இல்லை நான், எப்படா வீட்டுக்கு போவோம்னு ஆகிடுச்சு” என்றாள்.
“ஒழுங்கா தூங்கலைனா இப்படித்தான், அப்படியென்ன நேத்து நைட் தூக்கம் வராம போச்சு உனக்கு? கல்யாணம்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -7
அத்தியாயம் -7
தர்மா, கனிஹா இருவரின் திருமணமும் வெகு பிரமாதமாக நடந்திருந்தது. அன்று மாலையே வரவேற்பு. தொழிற் துறையினர், அரசியல் கட்சியினர் என வந்தவர்களை கண்டு மிரண்டு விட்டாள் கனி.
“எல்லாரும் கல்யாணத்துக்கு வந்திருக்க கெஸ்ட், சாதாரணமா இரு” என சொல்லி அவளை இயல்பாக்கினான் தர்மா.
தன் ஆசை மாமனை கல்யாணம் கட்டிக் கொண்டோம்...
மாமா அப்படி விசாரித்தது அவனுக்கு பிடிக்கவில்லை, இருந்த போதும் தவறாக ஏதுமில்லை என சொல்லி மஹாவின் தற்போதைய நிலையை சொன்னான்.
“அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? ஏன் அந்த பொண்ணுக்கு பெத்தவங்க, கூட பொறந்தவங்க யாரும் இல்லையா? ஸ்கூல்ல சேர்க்க ரெகமென்டேஷன் வேணும்னா அவங்க ஆளு இருக்கானே அதான் அந்த வாஞ்சிநாதன். அவன்கிட்ட போக...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -6
அத்தியாயம் -6
திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. கனிஹா ஆசையோடு எல்லாம் செய்து கொண்டாள்.
அழைப்பிதழில் தொடங்கி மணமேடையின் அலங்காரம், சமையல் மெனு, பூமாலை என எல்லாம் கனியின் விருப்பத்திற்கு ஏற்பதான். வரவேற்புக்கு லெஹங்கா அணிவேன் என அவள் சொன்னதற்கு மட்டும் நம்பி மறுத்து விட்டார்.
“அவளுக்காகத்தான் மாமா இந்த கல்யாணமே, சின்ன...
தயாராகி ஹால் வந்தார் தாமரை. மாமியாரிடம், “சாப்பிட்டு டேப்லெட்ஸ் எல்லாம் மறக்காம போட்ருங்க” என்றார். கனியிடம் “சாப்பிட்டு போ” என சொல்லி வெளியில் வந்தார்.
அம்மாவின் பாதங்கள் பார்வையில் விழ, கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலின் ஆட்டத்தை நிறுத்தினான் தர்மா.
தன் பக்கவாட்டில் இருந்த மகனை பாராமல் நேராக நின்றிருந்த தாமரை, “உங்கப்பா மாதிரி ஆபத்தை எல்லாம்...
வேலம்மாள் பாட்டி வேறு பேரனிடம், கனியை நீ மணந்து கொள்ளா விட்டால் இப்படியே தனியாகவே இவள் இருந்து விடுவாள் என சாடையாக பயமுறுத்திக் கொண்டிருந்தார்.
நம்பியும் ‘கனி சொல்லும் வரை எனக்கு இப்படி தோன்றியிறுக்கவில்லை, ஆனால் அவள் சொன்ன பின்பு அப்படி நடக்க வேண்டும் என ஆசைப் படுகிறேன்’ என்பதை வெளிப்படையாக சொல்லியிருந்தார்.
இயல்பாக இருப்பது போல...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -5
அத்தியாயம் -5
வெளிநாட்டு நிறுவனுங்களுடனான ஒப்பந்தங்கள் பற்றி கனிஹாவுக்கு விளக்கி கொண்டிருந்தான் தர்மா. அவனுடைய முகத்தை கவனித்தவள், “என்னாச்சு மாமா உடம்புக்கு முடியலையா?” என விசாரித்தாள்.
முதல் நாளிரவு நம்பியின் கட்சியை சார்ந்த ஒரு நபருக்கு அந்த பகுதியின் செல்வாக்கான ஆளால் ஒரு பிரச்சனை. தர்மாதான் சென்று பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டு...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -4
அத்தியாயம் -4
“என்னடா, அந்த பையனை பற்றி விசாரித்து விட்டாயா?” என தான் சொன்ன வரன் பற்றி தர்மாவிடம் கேட்க ஆரம்பித்து விட்டார் நம்பி.
தர்மா விசாரித்து விட்டான்தான், குறை சொல்ல ஏதுமில்லை, ஆனால் கனி இப்போதிருக்கும் மன நிலையில் உடனே திருமணம் பற்றி பேசுவது உகந்ததாக இருக்காது என நினைத்தான். ஆகவே,...