Nenjai Koithaal Vanji
தன் கடுமையை தூர வைத்து விட்டு நிதானமாக அவனை கையாள ஆரம்பித்தார் நம்பி. பதப் படுத்தும் தொழிற்சாலைக்கு தன்னுடன் அழைத்து செல்ல ஆரம்பித்தார்.
அப்பா எனும் உறவின்றி வளர்ந்த தர்மாவுக்கு நம்பியை பிடிக்க ஆரம்பித்து விட்டது. மனைவியின் இறப்புக்கு பின் மகளை கூட தள்ளி நிறுத்திவிட்ட நம்பிக்கும் தர்மா நெருக்கமானவாகிப் போனான்.
மாமன் இருக்கும் தைரியம் என்பதை...
தோழிகளுடன் வெளியே செல்லக் கூட கட்டுப்பாடுகள் உண்டு, அப்பாவிடமும் அத்தையிடமும் பொய் சொல்லவும் கனிக்கு வராது. இருவரும் அவர்களின் அடக்குமுறைகளை கொஞ்சம் தளர்த்த வேண்டுமென்றால் தர்மாவின் உதவியைத்தான் நாடுவாள்.
அவனும் சில எல்லைகளுக்கு உட்பட்டு அவளை சுதந்திரமாக இருக்க விடுவான். இல்லையென்றால் அவனே சென்னைக்கு நேரில் வந்து அவளை வெளியில் அழைத்து சென்று வேண்டியது செய்து...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -20 (final)
அத்தியாயம் -20
விசாகப்பட்டினத்தில் சொந்தமாக வாங்கியிருந்த அந்த வீட்டில் தர்மா மற்றும் கனியின் வரவுக்காக காத்திருந்தார் தாமரை. புகழரசன் ஏற்பாடு செய்திருந்த ஆட்களால் தர்மா தாக்கப் பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகியிருக்க, அந்த வழக்கில் நேற்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
முதலில் புகழரசன் கைது செய்யப் பட்டாலும் ஆறு மாத கால...
மகளுக்கென வரன் பார்த்திருந்தார் நம்பி. காலை உணவின் போது அம்மா, மகள், தர்மா என மூவருக்கும் பொதுவாக விவரம் சொன்னார்.
பாட்டிக்கு சரிதான் என்றே தோன்றியது. கனி தர்மாவை பார்த்தாள்.
“பார்க்க வர சொல்லலாம்னு இருக்கேன்” என்றார் நம்பி.
“அவசர பட வேணாம் மாமா, விசாரிச்சிட்டு சொல்றேன்” என தர்மா சொல்லவும், தள்ளி போடாமல் சீக்கிரம் செய் என...
மாமா அப்படி விசாரித்தது அவனுக்கு பிடிக்கவில்லை, இருந்த போதும் தவறாக ஏதுமில்லை என சொல்லி மஹாவின் தற்போதைய நிலையை சொன்னான்.
“அதுக்கு நீ என்ன பண்ண முடியும்? ஏன் அந்த பொண்ணுக்கு பெத்தவங்க, கூட பொறந்தவங்க யாரும் இல்லையா? ஸ்கூல்ல சேர்க்க ரெகமென்டேஷன் வேணும்னா அவங்க ஆளு இருக்கானே அதான் அந்த வாஞ்சிநாதன். அவன்கிட்ட போக...
அதற்குள் வேறு சிலரும் வந்திருந்தனர். குழந்தையின் அழுகை நிற்கவும் நகர போன தர்மா, மஹாவின் கன்னத்தில் விரல் தடத்தை காணவும் திகைத்து நின்று விட்டான். அவனது பார்வை தன் முகத்தின் மீது படிவதை கவனித்த மஹாவும் வேகமாக வெளியேறி விட்டாள்.
சட்டென அவனது மனதை கனமான உணர்வுகள் அழுத்த ஆரம்பித்து விட்டன.
தர்மா விட்டுச் சென்ற இடத்திலேயே...
“ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? கட்டிகிட்டவ மாசமா இருக்கும் போது அவளை இப்படியா போட்டு இம்சை பண்ணுவ?” என கோவப்பட்டார் பாட்டி.
“நடந்தது தெரியாம பேசாத அம்மாச்சி, அவளை எங்க?” எனக் கேட்டான் தர்மா.
“உன் அம்மாகிட்ட போயிட்டா” என இரைந்தார் பாட்டி.
“அங்கதானே போயிருக்கா, கூட்டிட்டு வர்றேன்” என்றவன் அறைக்கு சென்று விட்டான். உறக்கமில்லாமல் கண்கள்...
“அடிச்சிட்டு நிக்கிற இந்த ரெண்டு கோஷ்டில நீ யார் பக்கம் மாமா?” என சீண்டினாள் கனி.
“ரெண்டு பக்கமும் கனி” கண்கள் சிமிட்டி சொன்னான் தர்மா.
அவள் முறைக்க, “இப்பல்லாம் சண்டைங்கிற வார்த்தை கூட எனக்கு அலர்ஜியாகி போச்சு கனி. அந்தப் பக்க காத்து கூட வேணாம்னுதானே இந்த பக்கம் உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன்?” என்றான் அவன்.
கணவனின்...
ஃபேக்டரியில் இருந்த தர்மா மனைவியை அலட்சியம் செய்ய முடியாமல் ஏற்றான். “நான் சின்ன குழந்தை இல்லை கனி, ஏன் சும்மா கால் பண்ற?” என்றான்.
அப்பா தன் முன்னால் நிற்க அமைதியாக ஹால் சென்றாள் கனி.
“என்ன கால் பண்ணிட்டு அமைதியா இருக்க, லைன்ல இருக்கியா?” எனக் கேட்டான் தர்மா.
“எங்க மாமா சும்மா சும்மா உனக்கு கால்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -3
அத்தியாயம் -3
இரண்டு நாட்களாக கனிஹாவின் நேரம் நிதிலாவுடன் மிகவும் கொண்டாட்டமாக கழிந்திருந்தது.
ஏதோ வேலையாக புதுக்கோட்டை வந்திருந்த தர்மா, கனியையும் அழைத்து சென்று விடலாம் என வீட்டுக்கு வந்திருந்தான். கல்லூரி முடித்து முன்பே வீட்டுக்கு வந்திருக்க வேண்டிய அஜய் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.
நேரத்தை பார்த்தவன், “என்ன அவனை இன்னும் காணோம், ஏதும்...
தயாராகி ஹால் வந்தார் தாமரை. மாமியாரிடம், “சாப்பிட்டு டேப்லெட்ஸ் எல்லாம் மறக்காம போட்ருங்க” என்றார். கனியிடம் “சாப்பிட்டு போ” என சொல்லி வெளியில் வந்தார்.
அம்மாவின் பாதங்கள் பார்வையில் விழ, கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலின் ஆட்டத்தை நிறுத்தினான் தர்மா.
தன் பக்கவாட்டில் இருந்த மகனை பாராமல் நேராக நின்றிருந்த தாமரை, “உங்கப்பா மாதிரி ஆபத்தை எல்லாம்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -4
அத்தியாயம் -4
“என்னடா, அந்த பையனை பற்றி விசாரித்து விட்டாயா?” என தான் சொன்ன வரன் பற்றி தர்மாவிடம் கேட்க ஆரம்பித்து விட்டார் நம்பி.
தர்மா விசாரித்து விட்டான்தான், குறை சொல்ல ஏதுமில்லை, ஆனால் கனி இப்போதிருக்கும் மன நிலையில் உடனே திருமணம் பற்றி பேசுவது உகந்ததாக இருக்காது என நினைத்தான். ஆகவே,...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -6
அத்தியாயம் -6
திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. கனிஹா ஆசையோடு எல்லாம் செய்து கொண்டாள்.
அழைப்பிதழில் தொடங்கி மணமேடையின் அலங்காரம், சமையல் மெனு, பூமாலை என எல்லாம் கனியின் விருப்பத்திற்கு ஏற்பதான். வரவேற்புக்கு லெஹங்கா அணிவேன் என அவள் சொன்னதற்கு மட்டும் நம்பி மறுத்து விட்டார்.
“அவளுக்காகத்தான் மாமா இந்த கல்யாணமே, சின்ன...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -5
அத்தியாயம் -5
வெளிநாட்டு நிறுவனுங்களுடனான ஒப்பந்தங்கள் பற்றி கனிஹாவுக்கு விளக்கி கொண்டிருந்தான் தர்மா. அவனுடைய முகத்தை கவனித்தவள், “என்னாச்சு மாமா உடம்புக்கு முடியலையா?” என விசாரித்தாள்.
முதல் நாளிரவு நம்பியின் கட்சியை சார்ந்த ஒரு நபருக்கு அந்த பகுதியின் செல்வாக்கான ஆளால் ஒரு பிரச்சனை. தர்மாதான் சென்று பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டு...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -8
அத்தியாயம் -8
அசந்து உறங்கிக் கொண்டிருந்த கனிஹாவின் கன்னத்தை தட்டி, அவளை எழுப்பி விட்டான் தர்மா. கண் விழித்தவள் குளித்து தயாராகி அமர்ந்திருந்த தர்மாவை பார்த்து அதிர்ந்து விட்டு நேரத்தை கண்டாள்.
நேரம் எட்டாகியிருக்க “இனிமே ரெடியாகி கீழ போக ஒம்போது மணிக்கு மேலாகிடும். எல்லாரும் என்ன நினைப்பாங்க? நீ எந்திரிச்சிப்பவே என்னையும்...
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -7
அத்தியாயம் -7
தர்மா, கனிஹா இருவரின் திருமணமும் வெகு பிரமாதமாக நடந்திருந்தது. அன்று மாலையே வரவேற்பு. தொழிற் துறையினர், அரசியல் கட்சியினர் என வந்தவர்களை கண்டு மிரண்டு விட்டாள் கனி.
“எல்லாரும் கல்யாணத்துக்கு வந்திருக்க கெஸ்ட், சாதாரணமா இரு” என சொல்லி அவளை இயல்பாக்கினான் தர்மா.
தன் ஆசை மாமனை கல்யாணம் கட்டிக் கொண்டோம்...
வேலம்மாள் பாட்டி வேறு பேரனிடம், கனியை நீ மணந்து கொள்ளா விட்டால் இப்படியே தனியாகவே இவள் இருந்து விடுவாள் என சாடையாக பயமுறுத்திக் கொண்டிருந்தார்.
நம்பியும் ‘கனி சொல்லும் வரை எனக்கு இப்படி தோன்றியிறுக்கவில்லை, ஆனால் அவள் சொன்ன பின்பு அப்படி நடக்க வேண்டும் என ஆசைப் படுகிறேன்’ என்பதை வெளிப்படையாக சொல்லியிருந்தார்.
இயல்பாக இருப்பது போல...
மேடையிலிருந்து கீழே இறங்கும் போது இவனை பார்த்தவர்கள் பலர் வணக்கம் வைக்க, சிலர் சிறு குழந்தைகள் பூச்சாண்டியை கண்டால் பயம் கொள்வது போல இவனை கண்டு மிரண்டு அனிச்சையாக தள்ளி நின்றனர்.
இதெல்லாம் தினசரி வாழ்வில் தர்மா எதிர்கொள்ளும் சங்கடங்கள். சாதாரண மனிதனாக தன்னை பார்ப்பதில்லை யாரும் என எண்ணியவன் இதற்கு முழுக்க முழுக்க தான்...
“ஹ்ம்ம்… என்ன?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் பக்கம் திரும்பிப் படுத்தான்.
“இல்லை, மதியமே ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. நல்ல வேளை ரிசப்ப்ஷன்ல எப்படியோ நின்னுட்டேன். எதையும் என்ஜாய் பண்ணவே இல்லை நான், எப்படா வீட்டுக்கு போவோம்னு ஆகிடுச்சு” என்றாள்.
“ஒழுங்கா தூங்கலைனா இப்படித்தான், அப்படியென்ன நேத்து நைட் தூக்கம் வராம போச்சு உனக்கு? கல்யாணம்...
மகனை கவனித்து அவனுக்கு ஆடை மாற்ற விட்டவள், “டயப்பர் போடல, திரும்ப திரும்ப ஈரம் பண்ணினா போட்டு விட்ருவேன் பார்த்துக்க” என மிரட்டினாள்.
தா தா பா மா என மழலையில் பிதற்றினான் அதியன்.
“என்னடா சொல்ற?” எனக் கேட்டு மகனின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.
“ம்ம்… எந்த கவச குண்டலும் வேணாம், நான் சமத்து புள்ளைன்னு சொல்றான்”...