Ennavan
பகுதி - 11
மதிய நேர களைப்பிற்கு சற்று ஓய்வு எடுக்க ஆதி திவானில் சாய, அனுவையும் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
“நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?” என்று எதற்கோ அடித்தளம் போட்டாள் தன் முகத்தை அவன் மார்பிலிருந்து மேல் எழும்பி.
தலையசைத்து அவளை பேசத் தூண்டியவன், அவள் என்ன கேட்கப் போகிறாள் என்ற ஆர்வத்தோடு தன்...
பகுதி - 10
அவள் மனதை அரிக்கும் விஷயம் அறிய ஆவலாய் இருந்தாலும் அவள் சோர்வுற்றதை கண்டு ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான் ஆதி.
“வா, இங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.” என்று கூறி அவள் கரம் பற்ற முனைந்தவனை சிடுசிடுத்தாள் அனு, “என்ன பண்றிங்க? இப்படி வெளியில் எல்லாம் என்னை தொடாதீர்கள்.” என்று...
பகுதி - 9
அவர்கள் சென்ற பின் கிட்சனில் தனக்கு தோசை சுட்டுக் கொண்டிருந்தவளை சத்தம் இல்லாமல் பின்னிருந்து அணைத்தான் ஆதி. நேற்று இருந்த தயக்கங்கள் நேற்றோடு போயிற்று, இருவருக்கும்.
தன் இடை மேல் கரம் பட்டதும் பயந்து திரும்பியவள் “நான் பயந்தே போய் விட்டேன். ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று அவள் சீற சற்று சுதாரித்தவன்,...
பகுதி - 8
“கயல் இன்றைக்கு நான் உன்னுடன் இந்த ரூமில் தங்கிக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாக படுக்க பழகிக்கொள். அனுவிற்கு திருமணமாகி விட்டது. இனி அவள் கணவனுடன் தான் இருக்க வேண்டும். பயமாக இருந்தால் …” என்ற சாரதாவை குறுக்கிட்ட கயல் “பயம் எல்லாம் இல்லை ஆன்டி. எனக்கு நீங்கள் சொல்வது...
பகுதி - 7
அனுவின் விழிகள் அவன் அறியாமல் ஆதியை படம் பிடித்துக் கொண்டிருந்தன. இவர் ஏன் என் மேல் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்? நான் அவர் மனைவி என்பதனாலா இல்லை அவருக்கு என்னை பிடிக்க ஆரம்பித்து விட்டதா? சிறிது நாட்கள் கழித்து என்னை பிடிக்கவில்லை என்று கூறினால் என்ன செய்வது? இவருக்கு சற்றும்...
பகுதி-6
“எழுந்திருங்க…” என்று காப்பி ட்ரேயை கட்டில் பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு அவன் அருகில் சென்று சிணுங்கினாள் அனு. அவன் தனக்கும் இந்த உலகிற்கும் சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் ஆழ்ந்த நித்திரையில் இலயித்திருந்தான்.
வேறு வழி தெரியாமல் விழி பிதுங்கியவள் அவன் புறம் நெருங்கி அவன் தோள் பற்றி உளுக்கினாள். உடலில் எவ்வித அசைவும்...
பகுதி-5
“அக்கா நான் வரல, நீங்க போய்ட்டு வாங்க.” என்று களைப்புடன் கூறினாள் கயல். அனுவின் திடீர் கேள்வியால் வியர்த்து விறுவிறுத்த அந்த ஐந்து நிமிடங்கள், போதுமான தலைவலியை தேடிக்கொடுத்தது கயலுக்கு.
“என்னடி ஆச்சு உனக்கு?” உடல் சுருங்கி படுத்திருக்கும் கயலின் நெற்றியை மென்மையாக வருடி கேட்டாள் அனு.
“தலை வலிக்குது அக்கா.” என்றுவிட்டு தன் தலையை அனுவின்...
பகுதி-4
வீடு முதல் உணர்வுகள் வரை புதிதாய் துளிர்விட;
மாற்றங்களை வரவேற்கிறேன் என்னவனுடன்!
மறுநாளே புது வீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்தனர். அது இரண்டு அறை, ஒரு ஹால், சமையல் அறை கொண்ட தனி வீடு. பெரியதும் அல்ல சிறியதும் அல்ல, நால்வர் தங்கும் அளவு உள்ள மாடி வீடு. மாடி போர்ஷன் காலியாக இருந்தது.
“ஏன் சாப்பிடாம போறீங்க?...
பகுதி-3
புது உறவுகள் தேடி வர; புதிதாய் வாழ்க்கை தொடங்கியது என்னவனுடன்!
“நாம் ஏன் அவளை இங்கே அழைத்து வரக்கூடாது? நம்முடனே இருந்து விடட்டும்.” என்று ஆதி தன் யோசனையை களைந்து கூறினான்.
“அது எப்படி, ஏற்கனவே என்னால் உங்களுக்கு கஷ்டம். நீங்கள் என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்ற அனுவை பார்த்து தன்...