Ennavan
பகுதி - 10
அவள் மனதை அரிக்கும் விஷயம் அறிய ஆவலாய் இருந்தாலும் அவள் சோர்வுற்றதை கண்டு ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான் ஆதி.
“வா, இங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.” என்று கூறி அவள் கரம் பற்ற முனைந்தவனை சிடுசிடுத்தாள் அனு, “என்ன பண்றிங்க? இப்படி வெளியில் எல்லாம் என்னை தொடாதீர்கள்.” என்று...
பகுதி - 23
அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள், “என்ன சொல்கிறீர்கள்? நிஜமாகாவா?”
“ஆம்… இனி நிலா நம் வாழ்வுக்குள் வர மாட்டாள். ஆனால் அது தற்காலிகம் தான்…” என்றான் சற்று தயக்கத்துடன்.
“என்னை கீழே இறக்கி விடுங்கள்.” என்று அவன் தோள்களை குலுக்க ‘முடியாது’ என்று தலை அசைத்தான்.
“அப்பொழுது கதவையாவது மூட விடுங்கள்.” என்று சிணுங்க அவளை இறக்கிவிட்டான்....
பகுதி - 33
“என்ன அமைதியாகிவிட்டீர்கள்?” என்றவள் குரல் காட்டமாகவே வந்தது.
“என்ன சொல்ல வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?” என்றான் தனக்குள் இருந்த உணர்ச்சித் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு.
“நீங்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது.” என்று அதே கோபத்துடன் புருவத்தை உயர்த்த கயல் அவளருகில் சென்றாள்.
“அக்… அக்கா… சாரி… எல்லா தவறும்...
பகுதி-4
வீடு முதல் உணர்வுகள் வரை புதிதாய் துளிர்விட;
மாற்றங்களை வரவேற்கிறேன் என்னவனுடன்!
மறுநாளே புது வீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்தனர். அது இரண்டு அறை, ஒரு ஹால், சமையல் அறை கொண்ட தனி வீடு. பெரியதும் அல்ல சிறியதும் அல்ல, நால்வர் தங்கும் அளவு உள்ள மாடி வீடு. மாடி போர்ஷன் காலியாக இருந்தது.
“ஏன் சாப்பிடாம போறீங்க?...
பகுதி - 30
“இப்பொழுது எதற்கு ஆதியையும் குழப்பி விட்டுள்ளாய்? அவனாவது தெளிவாக இருந்தான்.” என்று ஆதி சென்ற பின் ரேகாவிடம் வினவினார் கோபால்.
“நான் என்ன குழப்பினேன்? எதார்த்தத்தை கூறினேன்.” என்று அதற்கு அசால்ட்டாக பதில் தந்தார் ரேகா.
“நீ இப்பொழுது நடிக்காதே... எனக்கு தெரியாதா உன்னை பற்றி. நீ வேண்டுமென்றே தான் அவனை இப்படி குழப்பி...
பகுதி - 28
“அத்தை…” தான் அழைப்பது ரேகாவிற்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதை உணர்ந்து மீண்டும் அழைத்தாள்.
“உனக்கு என்ன வேண்டும்?” என்று ரேகா மொட்டையாக கேட்க அனுவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன… என்ன கேட்கிறீர்கள் அத்தை? எனக்கு புரியவில்லை.” என்று பவ்யமாக வெளிவந்தது அனுவின் கேள்வி.
“என்னால் மரியாதையை விட்டெல்லாம் உன்னை என் வீட்டு மருமகளாய் ஏற்க...
பகுதி - 22
தன் பெயரை முதன்முதலாய் அவள் குரலில் கேட்டதும் தன் கோபமெல்லாம் எங்கோ பறந்தோடிய உணர்வு.
‘ம்ம்…’ என்று கண்களை திறவாமல் முணுகியவனை பார்த்தவளுக்கு வெற்றிப் புன்னகை அரும்பியது.
“என் மேல் கோபமா?” என்று மீண்டும் அவன் காதுகளில் அவள் முணுக அதற்கும் ம்… போட்டான். போடுவதை தவிர வேறெதுவும் செய்யும் நிலையில் அவன் இல்லை என்றே...
பகுதி - 14
“என்ன?” என்று முகம் சுளித்தவன், “போனுக்காகவா இவ்வளவு அழுகை?” என்று லேசாய் முறுவலித்து அவள் கன்னம் ஏந்தி உப்பு நீரை துடைத்தான், “சரி ஏன் உடைத்தாய்?” என்று வினவ மீண்டும் அவள் கண்கள் உவப்பு நீரை இறக்க தயாராகியது.
“இதற்கெல்லாம் ஏன்டி இவ்வளவு அழுகிறாய்?” என்று சலித்தவன் கோபம் கொள்வதற்குள் முந்திக்கொண்டாள், “எனக்கு...
பகுதி - 25
“என்ன புத்தகமெல்லாம் வாங்கியாயிற்றா?” என்று இரவு உணவை பரிமாறிக்கொண்டே இருவரையும் கேட்டாள் அனு.
கயல் ஒன்றும் புரியாமல், “என்ன புத்தகம் அக்கா?” என்றாள். ஏதோ யோசனையில் சாப்பிட்டு கொண்டிருந்தருந்த ஆதி அதை கவனியாமல் சுதாரிக்கும் முன் அனு பேச்சை வளர்த்தாள்.
“நீ ஏதோ புத்தகம் வாங்க வேண்டும் என்றவல்லவா இவர் சொன்னார். அதற்குத் தானே...
Epilogue
நான்கு வருடங்களுக்கு பின்...
“அனு அனு… நேரமாகிறது பார்... இப்போழுது கிளம்பினால் தான் கதிர் வீட்டில் இருந்து வருவதற்குள் நாம் மண்டபம் செல்லலாம்.” என்றபடியே அவர்கள் அறைக்கு வந்தார் ரேகா.
ஆதி வாக்களித்தது போலவே கயல் படித்து முடித்து வேலைக்கு சென்றவுடன் திருமண வேலைகள் ஆரம்பமாயிற்று. நாளை காலை திருமணம்...
“இதோ அத்தை… பாருங்கள் இவளை அழகாக ட்ரெஸ்...
பகுதி - 7
அனுவின் விழிகள் அவன் அறியாமல் ஆதியை படம் பிடித்துக் கொண்டிருந்தன. இவர் ஏன் என் மேல் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்? நான் அவர் மனைவி என்பதனாலா இல்லை அவருக்கு என்னை பிடிக்க ஆரம்பித்து விட்டதா? சிறிது நாட்கள் கழித்து என்னை பிடிக்கவில்லை என்று கூறினால் என்ன செய்வது? இவருக்கு சற்றும்...
பகுதி - 11
மதிய நேர களைப்பிற்கு சற்று ஓய்வு எடுக்க ஆதி திவானில் சாய, அனுவையும் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
“நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?” என்று எதற்கோ அடித்தளம் போட்டாள் தன் முகத்தை அவன் மார்பிலிருந்து மேல் எழும்பி.
தலையசைத்து அவளை பேசத் தூண்டியவன், அவள் என்ன கேட்கப் போகிறாள் என்ற ஆர்வத்தோடு தன்...
பகுதி - 34
அணைப்பிலிருந்து வெளிவந்தவள், “ஆமாம் அங்கு வெளியில் இருக்கும் போது கயலிடம் என்ன சொன்னீர்கள்? ஹான்… நினைவு வந்துவிட்டது... உன் அக்கா போல் மறை கழன்று விட்டதா என்றா கேட்டீர்கள். இரண்டு அடி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்.” என்று முறைக்க அவள் கரங்கள் ஏற்கனவே அவனை பதம் பார்த்தன.
“உனக்கு மறை டைட்டா இருக்கிறது...
பகுதி - 32
“எல்லாம் உங்களால் தான். இன்று எவ்வளவு கஷ்டமாகிவிட்டது தெரியுமா… பார்த்த எல்லோரும் என்ன விசேஷம் என்று கேட்கிறார்கள். இதில் கயல் வேறு... ப்ச்…” என்று சிணுங்கினாள் அனு அவன் மார்பை தலையணையாக்கி.
அவன் விரல்கள் அவள் தேகத்தை தீண்ட அவளின் குற்றச்சாட்டை சிரித்தபடியே ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“நான் என்ன செய்தேன்? நீ வெட்கப்பட்டு...
பகுதி-6
“எழுந்திருங்க…” என்று காப்பி ட்ரேயை கட்டில் பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு அவன் அருகில் சென்று சிணுங்கினாள் அனு. அவன் தனக்கும் இந்த உலகிற்கும் சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் ஆழ்ந்த நித்திரையில் இலயித்திருந்தான்.
வேறு வழி தெரியாமல் விழி பிதுங்கியவள் அவன் புறம் நெருங்கி அவன் தோள் பற்றி உளுக்கினாள். உடலில் எவ்வித அசைவும்...
பகுதி - 17
“என்ன சொல்கிறான் உங்கள் மகன்?” என்று வினவினார் ரேகா முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டு.
“அவன் வர மாட்டான்…” என்று கோபால் சொல்லி முடிப்பதற்குள் ரேகா குறுக்கிட்டார், “அதானே பார்த்தேன்... அவன் பெண்டாட்டி தான் அவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாளே. போதாகுறைக்கு நீங்களும் நேற்றிலிருந்து அவள் புராணம் பாடுகிறீர்கள்.” தன் பேச்சை யாரும்...
பகுதி - 21
“என்ன...?” என்று ஆதியும், கோபாலும் சேர்ந்து அதிர ரேகா இருவரையும் முறைத்தார்.
“நிலா இதெல்லாம் தவறு. வேண்டுமென்றால் அங்கு வந்து இரு, இங்கு எதற்கு?” என்றார் கோபால் முன்னெச்சரிக்கையாக.
“அத்தான் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நானும் இருப்பேன். இனியும் நீங்கள் என்னை ஏமாற்றமுடியாது.” என்றாள் நிலா தீர்க்கமாக.
“உமா… என்ன இதை எல்லாம் நீ...
பகுதி - 8
“கயல் இன்றைக்கு நான் உன்னுடன் இந்த ரூமில் தங்கிக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாக படுக்க பழகிக்கொள். அனுவிற்கு திருமணமாகி விட்டது. இனி அவள் கணவனுடன் தான் இருக்க வேண்டும். பயமாக இருந்தால் …” என்ற சாரதாவை குறுக்கிட்ட கயல் “பயம் எல்லாம் இல்லை ஆன்டி. எனக்கு நீங்கள் சொல்வது...
பகுதி - 27
“ஏன்டா… உனக்கே இது ஓவராக இல்லை. சிஸ்டெரை அப்படி பார்க்க முடியவில்லை என்றால் ஏன் அங்கு விட்டு வந்து இங்கு புலம்புகிறாய்?” என்றது யாருமல்ல முரளியே. ஆதி குறுக்கும் நெடுக்கும் நடந்து அறையை அளந்து கொண்டிருப்பதை பார்த்து தான் அவன் இப்படிக் கேட்டது.
“எனக்கும் ஒன்றும் புரியவில்லைடா… என்னுடைய காதல் தரும் அருகாமை...
பகுதி - 18
“ஓ… அப்பொழுது… முரளி அண்ணா இதைச் சொல்லத் தான் அன்று உங்களை அழைத்தாரா?” எனவும் அவன் தலை தன்னால் ஆடியது. இரண்டு நிமிடம் மௌனம் காத்தவள் மனம் நிலாவிற்காக வருந்தியது.
“பாவம் அவர்கள்… இவ்வளவு நாள் உங்களை விரும்பி இருப்பார்கள். ப்ச்...பெற்றோர்கள் செய்த தவறால் பாதிக்கப்பட்டது என்னவோ நிலா அக்கா தான். அவர்...