Monday, June 16, 2025

    நந்தவன தாகம்

    அவள் அவனைப் பார்க்க வில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஊதா நிறச் சுடிதாரில் உண்மையான சங்குப்பூ போல அவ்வளவு அழகாக இருந்தாள் அவனது ஜானு. “மிர்ச்சி ரொம்ப மாறிட்டா. அன்னைக்கு என்னனா சேலை. இப்ப சுடிதார். முகமும் ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்று எண்ணியவனுக்கு இப்போது அவள் முகத்தில் உள்ள புன்னகை உள் மனதில் இருந்து...
    அத்தியாயம் 3 துடிக்கும் போதும்  தவிக்கும் போதும்  என்னருகில் நீ!!! ஜானகி ரகு இருக்கும் இடம் தெரியாது என்று சொன்னதும் “உன் கதையைக் கேட்டு எனக்கு கஷ்டமா இருக்கு ஜானு. உன்னோட தியாகம் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா கூட எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்”, என்றான் நவீன்.  “அது தெரிஞ்சிருந்தா அவங்க எப்படி நிம்மதியா இருப்பாங்க? நான் கஷ்டப் படுறேனு அவங்களுக்கு குற்ற...
    ஆனால் அதில் இருந்த ஒரு எழுத்து கூட அவன் கருத்தைக் கவர வில்லை என்பது தான் நிஜம். அவன் நினைவுகள் அத்தனையும் ஜானு மட்டுமே. “இன்னைக்கு ஸ்கூல்க்கு வருவாளா? ஸ்கூல்க்கு சேலைல தானே வருவா? எப்படி பிள்ளைங்களுக்கு பாடம் எடுப்பா?”, என்று பல கேள்விகள் அவனுக்குள் எழுந்து மனது குறுகுறுத்தது.  “டேய் ரகு, குட்டிக்கு ஷூ...
         வீட்டுக்கு வந்து அதில் இருந்த எல்லா வீடியோக்களையும் பார்க்க கூசிப் போனாள். தன்னை தன்னுடைய உடலை பல பேர் பார்த்துக் கொண்டிருக்க இதை தானே இன்னொரு பெண்ணுக்கு செய்தோம் என்று அவளுக்கு அந்த நிமிடமும் உரைக்கவே இல்லை.      அடுத்த நாளே சைபர் கிரைம் ஆபீஸ் சென்று அந்த வீடியோக்களை நீக்கும் படி சொல்ல...
         அவனைப் பார்த்தது நூறு சதவீதம் சந்தோஷம் தான். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் கீர்த்தி முகமும் நினைவில் வந்து அவளை சோதித்தது. தன்னுடைய மனதை அடக்க முடியாமல் நவீனை அழைத்து விட்டாள்.      அதை எடுத்தவன் அருகில் இருந்த விஷ்ணுவை ஒரு பார்வை பார்த்து விட்டு “சொல்லு டி”, என்றான்.      “பக்கத்தில் அண்ணா...
    அத்தியாயம் 4 நீ தரும் வலியை உணர  முடிந்த எனக்கு அதை  உணர்த்த தெரிய வில்லை!!!      அடுத்த ஆறு மாதங்கள் எப்படி கடந்தது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் வேகமாக நகர்ந்தது. தினமும் ரகு தான் ஆதியை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். அதே போல தினமும் மறைந்திருந்து ஜானகியைப் பார்ப்பான். ஆனால் இது வரை அவளுக்கு எதிரே...
         பணக்காரர்கள் காணாமல் போனாலே தேடுவதற்கு மந்தமாக செயல் படும் போலீஸ் ஒரு ஏழைத் தாயின் புகாருக்கா செவி சாய்க்கும்? அதுவும் விக்ரம் கொடுத்த பிரசரில் “ஏமா பொறுமையா தான் கண்டு பிடிப்போம்? உன் பொண்ணு எங்க போனா யார் கூட போனான்னு எங்களுக்கு எப்படி தெரியும்? அவ ஆஃபிஸ்ல விசாரிச்சதுல அத்தனை பசங்க...
    அத்தியாயம் 5 கவிதை போல விண்ணில்  இரு மேகங்கள் நீயும் நானும்!!!      “என்னது ரகுவா? அவன் இங்கயா இருக்கான்? என்ன மா இதெல்லாம்?”, என்று மோகன் கேட்க “உண்மையைச் சொல்லு டி, அந்த ரகுவைப் பாத்து பேசுனியா? அவன் கிட்ட ஏன் பேசின? பட்டது எல்லாம் போதாதா?”, என்று கேட்டாள் தேவகி.      என்ன சொல்ல என்று தெரியாமல்...
         விஷ்ணுவும் ஜானகியும் அங்கே இருந்தே வேலைக்குச் செல்ல மோகனும் மேனேஜரிடம் ஒப்படைத்து இருந்த கார்மெண்ட்ஸ் பேக்டரியில் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். தேவகி எப்போதும் போல இல்லத்தரசியாக இருந்தாலும் கூடிய சீக்கிரம் பிள்ளைகள் திருமணம் விஷயம் பற்றி கணவரிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.      அன்று திங்கள் கிழமை... ஜானகி எப்போதும் வரும்...
    “உங்க காதல் உயிருக்கு உயிரான காதல் தான். உன் கூட வாழ என் தம்பிக்கு தான் கொடுத்து வைக்கலை. சரி நான் இப்ப என்ன பண்ணனும்?”, என்று கேட்டான் விக்ரம். “நீங்க ஆதியை கூட்டிட்டு போகப் போறீங்களாம்? ஆனா எனக்கு என் மகன் வேணும். வேணும்னா என்னையும் சேத்து கூட்டிட்டு போங்க. கடைசி வரை சுனில்...
    அத்தியாயம் 6 மரணமே இல்லை எனக்கு  உன் நெஞ்சில் வாழ்வதால்!!! அன்று ஆர்வமாக பள்ளிக்குச் சென்றாள் ஜானகி. ஆனால் அன்று ஆதி பள்ளிக்கு வரவில்லை என்றதும் அவள் புருவம் உயர்ந்தது. தினமும் அவனைப் பார்த்தால் மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் எழும். அதுவும் அவன் ரகுவின் மகன் என்று தெரிந்த பிறகு அந்த சந்தோஷம் அதிகமாக தான் ஆகி...
    அத்தியாயம் 7 மரணத்தை விட கொடுமையானது  உன்னால் நான் சிந்தும் கண்ணீர்!!!!      அன்று மாலை ஆதியை அழைத்துக் கொண்டு ஜானகி மருத்துவமனை செல்ல வீட்டில் உள்ளவர்கள் எரிச்சலுடன் இருந்தார்கள். மருத்துவமனை வந்ததும் அவள் சாதாரணமாக ரகுவைப் பார்க்க அவனோ ஏக்கம் நிறைந்த கண்களோடு அவளைப் பார்த்தான். கீர்த்தி இறந்து விட்டாள் என்று எண்ணிய பிறகு அவன் பார்வை...
    அத்தியாயம் 11 பொங்கி வரும் வெள்ளமோ  கண்ணைச் சிமிட்டிச் செல்லும்  கானலோ இரண்டுமே காதலே!!! காலை ஏழு மணி போல முதலில் கண் விழித்தது ஜானகி தான். தன்னுடைய புடவையை முகத்தில் போட்டுப் படுத்திருந்தவனின் கைகள் அவளை இறுகப் பிடித்திருந்தது. “எங்க போயிறப் போறேனாம்? இப்படி இறுக்கமா பிடிச்சிருக்கான்?”, என்று எண்ணி அவன் தூக்கத்தைக் கலைக்காமல் எழுந்து சென்றாள். குளித்து கிளம்பி...
         “என்ன மிஸ் நான் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்க அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டு அவன் கடுப்பேற்ற “என்னோட ஸ்ட்டுடண்ட்க்கு ஒரு பிரச்சனைன்னா நான் எப்படி பாத்துட்டு இருப்பேன் ரகு சார்? ஆதி இடத்துல வேற யாரா இருந்தாலும் நான் இப்படி தான் செஞ்சிருப்பேன் சார். இதை எல்லாம் பெரிய விஷயமா பேசக்...
    அத்தியாயம் 19 தழுவிச் செல்லும் தென்றல்  போல வருடிச் செல்கிறது  உந்தன் நினைவுகள்!!! தங்கள் வாழ்வில் நடந்த உண்மைகளை ஜானகி, ரகு, மோகன் மூவரும் பேசி முடித்தார்கள். நிர்மலா மற்றும் விக்ரம் சிங் இருவரும் அதிர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். கீர்த்தி இப்படி எல்லாம் செய்திருப்பாள் என்று யாராலும் நம்ப முடிய வில்லை. அத்தை அத்தை என்று தன்னிடம் பேசும் அந்த...
    அத்தியாயம் 10 உந்தன் அருகாமையில் எந்தன்  வார்த்தைகளும் தூரம் போனது!!!      ஜானகி போனை வைத்ததும் அவளது தந்தையை அழைத்தான் ரகு. “சொல்லு பா, இப்ப என்ன? அந்த கீர்த்தியைப் பத்தி மட்டும் பேசாதே”, என்றார் மோகன்.      “நான் அதைப் பத்தி பேச வரலை. எனக்கு ஜானு வேணும்”, என்று அவன் மொட்டையாக சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்தார்...
    தேவகியும் விஷ்ணுவும் ஆதியுடன் இயல்பாக பழக மோகனோ ஆதியை தொட்டுக் கூட பார்க்க வில்லை. அதை மற்றவர் கவனிக்க கூட இல்லை. ஆதி அந்த வீட்டில் இயல்பாக பொருந்த இரவு உணவு கொடுத்து அவனை தன்னுடைய அறையில் தூங்க வைத்து விட்டு சாப்பிட வந்தாள் ஜானகி. மூவரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று எண்ணி மனதுக்கு...
    மாமனாரும் மருமகனும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். மோகன் மகளைப் பற்றிய யோசனையில் தான் இருந்தார். ஆதியை அனுப்பி விடுவேன்னு சொன்னவன் அதை செய்ய வில்லை. இனியும் செய்வான் என்று அவருக்கு நம்பிக்கையும் இல்லை. அதுவும் ரகு நடந்து கொள்வதைப் பார்த்தால் வேண்டும் என்றே தான் செய்கிறான் என்று அவருக்கு புரிந்தது. “மாப்பிள்ளை”, என்று அழைத்தார். “சொல்லுங்க மோகன் சார்”,...
    அத்தியாயம் 9 சொப்பனமோ என்று தோன்றுகிறது  உன்னை கண்ணருகில் காணும் போது!!!      ரகுவைப் பற்றி எண்ணிக் கொண்டு தான் ஜானகியும் இருந்தாள். அவன் அழைப்பு வந்ததும் “அதான் ரொம்ப அசிங்கப் படுத்திட்டானே? இப்ப எதுக்கு கூப்பிடுறான்? மேலும் மேலும் காயப் படுத்தவா? இப்ப இவன் போனை எடுக்கவா வேண்டாமா?”, என்று பெரிய போராட்டம் மனதுக்குள் எழுந்தது.      பின்...
         ஜானகிக்கும் திருமணத்தில் சந்தோஷம் தான். ஆனாலும் கீர்த்தி வருவாளா? வந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுவாளா? தன்னை சந்தித்து “நாங்க மனசு வேறுபாட்டால பிரிஞ்சிட்டோம். உடனே நீ என் புருஷனை எடுத்துக்குவியா?”, என்று கேட்டு விடுவாளோ என்று பயந்து தான் இருந்தாள்.      ஏனென்றால் ஜானகியைப் பொறுத்த வரைக்கும் கீர்த்தியும் ரகுவும் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள்....
    error: Content is protected !!