நந்தவன தாகம்
“தேங்க்ஸ் ரகு”, என்று அவள் நெகிழ்ந்து போய் உரைக்க “இது எதுக்கு? எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா? சரி ரெஸ்ட் எடு, நாளைக்கு பாக்கலாம்”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான். அவனது அந்த கேள்வி அவளுக்கு புரிய வில்லை. ஆனால் ஏன் அப்படிச் சொன்னான் என்று குழப்பத்தைக் கொடுத்தது.
ரகுவின் சட்டையை கழட்டி...
அத்தியாயம் 4
நீ தரும் வலியை உணர
முடிந்த எனக்கு அதை
உணர்த்த தெரிய வில்லை!!!
அடுத்த ஆறு மாதங்கள் எப்படி கடந்தது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் வேகமாக நகர்ந்தது. தினமும் ரகு தான் ஆதியை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். அதே போல தினமும் மறைந்திருந்து ஜானகியைப் பார்ப்பான். ஆனால் இது வரை அவளுக்கு எதிரே...
தேவகியும் விஷ்ணுவும் ஆதியுடன் இயல்பாக பழக மோகனோ ஆதியை தொட்டுக் கூட பார்க்க வில்லை. அதை மற்றவர் கவனிக்க கூட இல்லை.
ஆதி அந்த வீட்டில் இயல்பாக பொருந்த இரவு உணவு கொடுத்து அவனை தன்னுடைய அறையில் தூங்க வைத்து விட்டு சாப்பிட வந்தாள் ஜானகி.
மூவரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று எண்ணி மனதுக்கு...
சிறிது நேரம் அமைதியில் கழிய அதுவும் அவனுக்கு கடுப்பாக இருந்தது. அவளிடம் காதலைச் சொல்ல அவன் தயாராக இல்லை தான். ஆனால் அவளுடன் சாதாரணமாக இயல்பாக பேசிப் பழக அவனுக்கு அவ்வளவு ஆசை. அதனால் “என்ன யோசிச்சிட்டு வர ஜானு?”, என்று கேட்டான்.
“ஒரு சின்ன டவுட், அதான்”
“என்ன?”, என்று அவள் முகம் பார்த்த படி...
ஆதனால் அவன் கைக்கு வாகாக வந்தவள் “என் புருஷன் எப்ப வெளிய வருவான், அவனை எப்படி கொஞ்சன்னு யோசிக்கென் போதுமா?”, என்று சிணுங்களாக சொன்னாள்.
“எப்படி வேணும்னாலும் கொஞ்சலாம். என்னைக் கொஞ்ச உனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு”, என்று ரகு காதலுடன் சொல்ல அதை அவள் புரிந்து கொள்ள வில்லை. ஆனால் அவளால் அவனை...
இப்படியுமா ஒருவன் ஏமாறுவான் என்று எண்ணி அந்த கீர்த்தியை தான் உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு அடுத்த நாள் அவளுக்கான நாளைக் குறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
பிளான் படி அடுத்த நாள் தன்னுடைய ஆளை வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து லாரியை அவள் மேல் மோத வைத்தார்.
தூக்கி...
விஷ்ணுவும் ஜானகியும் அங்கே இருந்தே வேலைக்குச் செல்ல மோகனும் மேனேஜரிடம் ஒப்படைத்து இருந்த கார்மெண்ட்ஸ் பேக்டரியில் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். தேவகி எப்போதும் போல இல்லத்தரசியாக இருந்தாலும் கூடிய சீக்கிரம் பிள்ளைகள் திருமணம் விஷயம் பற்றி கணவரிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அன்று திங்கள் கிழமை... ஜானகி எப்போதும் வரும்...
பணக்காரர்கள் காணாமல் போனாலே தேடுவதற்கு மந்தமாக செயல் படும் போலீஸ் ஒரு ஏழைத் தாயின் புகாருக்கா செவி சாய்க்கும்? அதுவும் விக்ரம் கொடுத்த பிரசரில் “ஏமா பொறுமையா தான் கண்டு பிடிப்போம்? உன் பொண்ணு எங்க போனா யார் கூட போனான்னு எங்களுக்கு எப்படி தெரியும்? அவ ஆஃபிஸ்ல விசாரிச்சதுல அத்தனை பசங்க...
“சார் எதுக்கு கீர்த்தி மேல இவ்வளவு வன்மம்? அவ பாவம். இனி ஒரு தடவை நீங்க அவளை பேசுனீங்கன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன். உங்க பொண்ணு என் பையனுக்காக தான் என்னைக் கட்டிக்க நினைச்சா. என் பையனை நான் வளத்துக்குறேன். நீங்க கிளம்பலாம்”, என்றவனை அட பைத்தியமே என்பது போல பார்த்தவர் “உங்க...
மாமனாரும் மருமகனும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். மோகன் மகளைப் பற்றிய யோசனையில் தான் இருந்தார். ஆதியை அனுப்பி விடுவேன்னு சொன்னவன் அதை செய்ய வில்லை. இனியும் செய்வான் என்று அவருக்கு நம்பிக்கையும் இல்லை. அதுவும் ரகு நடந்து கொள்வதைப் பார்த்தால் வேண்டும் என்றே தான் செய்கிறான் என்று அவருக்கு புரிந்தது.
“மாப்பிள்ளை”, என்று அழைத்தார்.
“சொல்லுங்க மோகன் சார்”,...
அவன் கால் சரியாகி பேங்க்கு வேலைக்குச் செல்லும் நாளும் வந்தது. அன்று எப்போதும் போல் வேலைக்கு கிளம்பிச் சென்றான். வீட்டுக்கு வந்ததும் அன்னையிடம் பேச வேண்டும் என்ற முடிவில் அவன் இருக்க காலை பதினொரு மணி அளவில் “ரகு சார் உங்களைப் பாக்க ஒருத்தர் வந்துருக்கார்”, என்று சொன்னான் பியூன்.
“யாரா இருக்கும்?”,...
“நானும் சீரியஸா தான் சொல்றேன். நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”
“நிஜமாவா டா?”
“ஆமா, பொண்ணும் பாத்தாச்சு”
“என்ன டா சொல்ற? யார்?”
“ஆதியோட டீச்சர்”
“அந்த ஜானு பொண்ணா?”
“ஆமா மா, ஏனோ அவளைப் பிடிச்சிருக்கு”
“அவங்க வீட்ல ரெண்டாந்தாரமா எப்படி ஒத்துக்குவாங்க? வாய்ப்பே இல்லை டா. பாத்தாலே பெரிய இடத்துப் பொண்ணு...
“உங்க காதல் உயிருக்கு உயிரான காதல் தான். உன் கூட வாழ என் தம்பிக்கு தான் கொடுத்து வைக்கலை. சரி நான் இப்ப என்ன பண்ணனும்?”, என்று கேட்டான் விக்ரம்.
“நீங்க ஆதியை கூட்டிட்டு போகப் போறீங்களாம்? ஆனா எனக்கு என் மகன் வேணும். வேணும்னா என்னையும் சேத்து கூட்டிட்டு போங்க. கடைசி வரை சுனில்...
சென்னையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி... அன்று தான் விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கப் படுகிறது என்பதால் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது. சீனியர்கள் அனைவரும் கெத்தாக உள்ளே நுழைய முதலாம் ஆண்டு மாணவர்கள் கனவுகளோடும் பயத்தோடும் தயக்கத்தோடும் உள்ளே அடி எடுத்து வைத்தார்கள்.
முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பறையில் ஐம்பது...
“ரகு, ஏன் டா இப்படி? என்னால முடியலை. எனக்கு கஷ்டமா இருக்கு. இனி நீ எனக்கு இல்லையா? உன்னோட குழந்தையை சுமக்குற பாக்கியம் எனக்கு இந்த ஜென்மத்துல இல்லாம போச்சே டா? இப்ப வரைக்கும் உன்னோட நினைவுகளோட தானே வாழ்ந்துட்டு இருக்கேன்? நீ தொட்ட ஒவ்வொரு தருணத்தையும் நினைச்சு நினைச்சு சந்தோஷப் பட்டுட்டு...
காலை உணவு உண்ண நிர்மலா இருவரையும் அழைக்க இருவரும் வந்தார்கள். ஜானகி ரகுவுக்கு பரிமாற ஆரம்பிக்கும் போது “இட்லி வைக்கவா? தோசை வைக்கவா ரகு?”, என்று கேட்டாள் ஜானகி.
“உன் கையால கொஞ்சம் விசத்தைக் கொடு. நிம்மதியா போவேன்”, என்று ரகு வெறுப்புடன் சொல்ல விக்கித்துப் போய் நின்றாள். அவளுக்கும் இப்போது கோபமாக...
“அதெல்லாம் முடியாது. ஜானகிக்கு பட்டர் ஸ்காட்ச் தான் பிடிக்கும். அது தான் எல்லாத்துக்கும்”, என்றான் வெங்கி. அவன் அப்படிச் சொன்னதே கீர்த்திக்கு எரிச்சலைக் கொடுத்தது.
“ஏன் அவளுக்கு பிடிச்சதை தான் வாங்கணுமா? எல்லாருக்கும் வெண்ணிலா வாங்க வேண்டியது தானே?”, என்று கேட்க “போடி, ஜானுக்கு பிடிச்சது தான் எல்லாருக்கும். உனக்கு வேண்டாம்னா என்...
இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை என்றாலும் பார்வைகள் மட்டும் பின்னிப் பிணைந்தது. இருவர் கண்களிலும் ரசனையும் காதலும் கொட்டிக் கிடக்க அது இருவருக்கும் குழப்பத்தை தான் கொடுத்தது.
“இவ என்ன, வச்ச கண்ணு எடுக்காம என்னைப் பாக்குறா? எப்பவும் இப்படி பாக்க மாட்டாளே? இல்லை, அவ சாதாரணமா பாக்குறதை நான் தான்...
அத்தியாயம் 16
மௌன மொழி பேசும்
உந்தன் கண்களில் மயங்கித் தான்
போகிறது எந்தன் மனம்!!!
என்ன தான் காதலை ரகு வந்து சொல்வான் என்று காத்திருந்தாலும் ஜானகியும் அவன் மீது உயிராக இருந்தாள். அவனுடன் தனித்து இருக்கும் தருணங்களை ஒரு நாளும் தவிர்க்க மாட்டாள்.
நண்பர்கள் வெளியே அழைத்தால் ரகுவுடன் இருக்க வேண்டும் என்றே செல்வாள். அதற்கு...
“என்ன மிஸ் நான் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்க அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டு அவன் கடுப்பேற்ற “என்னோட ஸ்ட்டுடண்ட்க்கு ஒரு பிரச்சனைன்னா நான் எப்படி பாத்துட்டு இருப்பேன் ரகு சார்? ஆதி இடத்துல வேற யாரா இருந்தாலும் நான் இப்படி தான் செஞ்சிருப்பேன் சார். இதை எல்லாம் பெரிய விஷயமா பேசக்...