Tuesday, April 23, 2024

    இரவல் சொந்தங்கள்.

         8      நாட்கள் வேகமாய் ஓடிற்று. சதாசிவம் மனதாலும், உடலாலும் சோர்ந்து கொண்டே வர, ஒரு விடுமுறை நாள் காலை எப்போதும் போல் மகளுக்கும், பேரனுக்கும் பூஸ்ட்டும், டீயும் போட்டு வந்து அவர் இருவரையும் எழுப்ப, கண்விழித்து அவரைப் பார்த்தவளின் மனம் ஏனோ பாரமாகிப் போனது. சற்று நாட்களாகவே அவரின் தோற்ற மெலிவும் நலிவும்...
                                   7      புதுவீட்டிற்கு குடி வந்தது அத்தனை சந்தோஷமாகவும் அசுவாசமாகவும் இருந்தது கீர்த்திக்கும் சதாசிவத்திற்கும். ஆனால் அந்த நிம்மதியெல்லாம் உங்களுக்குக் கொடுத்துவிட முடியுமா என்பது போல் கார்த்திகா குடிவந்த மூன்றாம் மாதத்திலேயே ஒன்றாக வந்து விடுவது பற்றி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள்.      வீடு ஆரம்பிக்கும் முன்பே சதாசிவம் தீர்மானமாய் சொல்லி இருந்தார். ஒன்றாக சேர்ந்து...
    வீடு கட்டுவது பாதியில் நின்றவுடன் அத்தனைக் கேலிப் பார்வைகள் பேச்சுக்கள், அடுத்த வருஷத்துலயாவது முடிஞ்சிடுமா என்று சொந்த பந்தங்களே நக்கலாய் கேட்கும் போது கீர்த்தியால் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. முடியாத நிலையில் அந்த உடம்பை வைத்துக் கொண்டு அலையாய் அலைந்தாள் பிரதம மந்திரி திட்டத்தின் உதவி பெற. அவள் அத்தனைக் கண்ணீருக்கும் போராட்டதிற்கும்...
      6 பிள்ளைகள் மூலமாக கார்த்திகாவிற்கு இங்கு நடந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரிய வர, கார்த்திகா, எதிர்பார்த்த தருணமாக அது அமைந்தது.      அவள் கீர்த்தி வீட்டுக்கு வந்து விவரம் கேட்க, அவளும் மனம் தாளாமல் நடந்ததைச் சொல்ல,      “இதுக்குத்தான் சொந்தகாரங்க கிட்ட எல்லாம் உதவி கேட்கக் கூடாது. உங்களுக்கு எல்லாம் பட்டாதான் புரியும்.” என்றவள்,      “வீடு...
    சொந்தம என்று நாடி வந்தக் குற்றத்திற்கு ஒவ்வொருவரும் பேச்சு செயல் என்று ஒவ்வொரு விதத்தில் சதாசிவத்தையும், கீர்த்தியையும் காயப்படுத்த நாட்கள் ரணமாகக் கழிந்தது இருவருக்கும்.     சதாசிவம், கீர்த்தி, இருவரது ஒரே ஆறுதல் சின்னவனும், டியுஷன் பிள்ளைகளும்தான். அந்தக் குட்டி உள்ளங்கள் தான் இன்னமும் உலகில் அன்பு சூழ்ந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.      ...
                                                                                    5      சின்னவனுக்கு என்னதான் தாத்தாவையும், சித்தியையும் பிடித்திருந்தாலும், அவர்களும் அவனை உயிருக்கு உயிராய் பார்த்துக் கொண்டாலும், வார இறுதிகளில் அம்மாவைத் தேடியே ஓடினான். அதிலிருந்தே தெரிந்தது கார்த்திகா அவனை வலுக்கட்டாயமாய் அவர்களுடன் தங்கச் சொல்லி இருக்கிறாள் என்று.      சதாசிவத்திற்கும், கீர்த்திக்கும் கொஞ்சமாய் அதில் வருத்தம் எழுந்தாலும், என்ன இருந்தாலும் தாய்ப் பாசம்...
    தருணின் இறுதி காரியங்களுக்கு தன்னிடம் எதுவுமே இல்லையென கையை விரித்த கார்த்திகா,       “என்னை இப்படி நடுத்தெருவில விட்டுட்டுப் போயிட்டாரே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, தருணின் நண்பர்கள், சதாசிவத்தின் உறவினர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற பணத்தைத் தருணின் இறுதி யாத்திரைச் செலவுகளை கவனித்துக் கொண்டிருந்த கீர்த்தியிடம் கொண்டு வந்து கொடுக்க அவளுக்குப் பெரும் சங்கடாமாய்ப்...
                                                                                 4      அவன் சென்ற பத்து நிமிடத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, அவள் உடல் மீண்டும் நடுங்கியது.      “ய யாரு?!” என்று அவள் உள்ளிருந்தே குரல் கொடுக்க,      “கீர்த்திம்மா” என்று குரல் கொடுத்தார் சதாசிவம்.      “அ அப்பா” என்று கத்தியபடியே எழுந்து வந்து கதவைத் திறந்தவள் அவரைக் கட்டிக்...
                                  3      சதாசிவம் பயந்தது போலவே, கீர்த்தனா கண்விழித்த நொடியே, “அ அப்பா.. ரவி ரவி எப்படி இருக்கான் ப்பா?! அவனுக்கு எதுவும் ஆகலையே?!” என்றாள் கலக்கமாக.      “ஹா ஹான் அதெல்லாம் ஒன்னும் ஆகலைம்மா. அ அவன் நல்லா இருக்கான்.” என்றார் சமாளிப்பாய்.      ஆனால் அவரது திணறல், அவளுக்கு பயத்தை  ஏற்படுத்த,              “நா...
                                   2      “ஹப்பா ஒரு வழியா பைனல் செம் முடிஞ்சுது! இனி நிம்மதியா ஊர் சுத்தலாம்!” என்றான் ரவி.      “சுத்துவடா சுத்துவ! ஒழுங்கு மரியாதையா ரெயில்வே எக்ஸாம்கு ப்ரிபேர் பண்ணு” என்றாள் கீர்த்தி கட்டளையாக.      “ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?! எப்போ பாரு அதிகாரம் பண்ணிக்கிட்டு! கொஞ்சமாச்சும் என் லைபை என்ஜாய்...
         “என்னடா எந்நேரமும் டிவியையே பார்த்துட்டு இருக்க? பைனல் செமஸ்டர்கு தயாரா இருக்கியா, இல்லையா?” என்றபடியே வீட்டினுள் நுழைந்தார் ஜெகன்நாதன்.      “அதெல்லாம் சூப்பரா ப்ரிபேர் பண்ணி இருக்கேன் பா” என்ற மகனை ஆசையாய் தலை கோதிவிட்டு அவர் அமர,      “என்னங்க வந்ததும் வந்தீங்க. அப்படியே முகம் கைகால் கழுவிட்டு வந்தா டிபனும் சாப்பிட்டுடலாம்...
    error: Content is protected !!