அழகியல்
ஜனக்நந்தினியை ஒரு நொடி அதிகமாகவே பார்த்தார் பத்மா. மகன் மனது இந்த பெண்ணிடம் உள்ளதா என்ற சந்தேகம் அவருக்கு உண்டு. அருணகிரி இவருக்கு எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் தாய் மனது கண்டுகொண்டது.
ஜனக்நந்தினி அவரை பார்த்து இயல்பாய் சிரிக்க, "ம்ஹ்ம்.. நடந்தா நல்லா தான் இருக்கும்" என்ற ஆசையும் எழுந்தது.
பாரதி தூங்கும் நேரம் வர, அறைக்குள்...
அழகியல் 3
"எட்டாக்கனி!" இது தான் பாரதியின் நிலை தற்போது.
எட்டாமல், கைக்கு கிடைக்காமல் போகும் பொருளுக்கு மதிப்பும், ஏக்கமும் அதிகம்.
எட்டிய கனியை ருசி பார்த்து தனக்கு அதை பிடிக்குமா, பிடிக்காதா, சேருமா, சேராதா என்று தெரிந்து கொள்ளலாம்.
எட்டாமல் போவதாலே அதற்கான முக்கியத்துவம் மாறுபட்டு விடுகிறது.
பாரதிக்கான அம்மா வீட்டு உறவும் இப்படியான முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அவருக்கு அமைந்துவிட்டது....
அழகியல் 22
ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். "நான் கிளம்பவா?" அவன் கேட்க, பெண் தலை மட்டுமே அசைத்தாள். "என்னடி" என்று அவள் கை பிடிக்க, அமைதி.
"நான் அதிகமா ஏதும் பேசிடலை தானே. அப்செட் ஆகிட்டியா?" என்று கேட்டான்.
மொத்த பேச்சு வார்த்தையிலும் மனைவி மௌனமாக இருந்ததை கவனித்து தான்...
"எங்களுக்கு தான்" மஞ்சுளா நேராக சொல்ல,
"நீங்களே தான் சொல்லிக்கணும் அதை. பகல் கனவு காணாம சீக்கிரமே உங்க பையனுக்கு பொண்ணு தேடுற வழியை பாருங்க. இப்போவே ஆரம்பிச்சா தான் உங்க வசதிக்கு ஒரு வருஷத்துக்குள்ள அமையும்" என்றார் ராஜேஸ்வரி.
"உறுதி பண்ண பொண்ணு இருக்க நாங்க ஏன் வெளியே தேடணும்?" என்று மஞ்சுளா கேட்க,
"உறுதி பண்றதுன்னா...
வழியில் மஞ்சுளாவிற்கு அழைத்து சண்டை வேறு. ஏன் என்கிட்ட சொல்லலை என்று. ராமமூர்த்தி போன் வாங்கி, "நீ நேர்ல வா உனக்கு இருக்கு" என்றார்.
பாரதி வீட்டுக்கு செல்லும் நேரம், ராமமூர்த்தியும் மனைவியுடன் வந்து விட்டிருந்தார். அண்ணா, அண்ணிக்கு பெரிய அடி இல்லை என்று பார்த்த பிறகே பாரதிக்கு நிம்மதியானது.
"எங்க மாமியாரால நீங்க வரலன்னு நினைச்சேன்...
அழகியல் 1
கந்தன் திருவுருவ படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு, பூ மாலை சூடினார் பாரதி. அடுத்து வெள்ளி சிலைகளில் வீற்றிருந்த தெய்வங்களுக்கு அலங்காரம் முடித்தவர், விளக்கேற்றினார்.
பிரம்மாண்ட மாளிகைக்கு ஏற்ப வெள்ளை நிற பூஜை அறை விளக்குகளின் ஒளியில் ஜொலித்து மனதை நிறைத்தது.
நொடி நின்று கண்ணார கண்டவர், நேரம் ஆவதை உணர்ந்து தீபாராதனைக்கான ஏற்பாடுகளை மடமடவென...
அருணகிரி தவிர்த்து, பத்மா, ராமமூர்த்தி தம்பதி வந்தனர். அதிலே பாரதிக்கு சுருக்கென இருந்தது. பத்மாவிற்கு அவ்வளவு கோவம். பணம் இருந்தால் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்று.
பாரதி வரவேற்க, முகம் காட்டவில்லை. அதே நேரம் பழையபடியும் இல்லை. மஞ்சுளாவும் அமைதியாக தான் இருந்தார். மருமகள் தன் வீட்டினரை தன்னுடன் வைத்துக்கொண்டாள்.
ரகுராமும் வந்துவிட, பாரதி வாசலுக்கே...
"சித்தப்பா"
"பின்ன என்ன ரகு. இதெல்லாம் ஒரு காரணம்ன்னு சொல்லிட்டிருக்கா" என்றார் அவர் அடங்கா கோபத்துடன்.
பாரதி அமைதியாய் இருக்க, "அத்தை.. நமக்காக நாம குரல் கொடுக்கும் போது கல்லடி படத்தான் செய்யும். கல்லடிக்கு பயந்து நீங்க வாயை மூடினா கல்லடி நின்னுடும் நினைக்கிறீங்களா?" என்று ரகுராம் கேட்டான்.
பாரதி இல்லையென்று தலையசைக்க, "நீங்க உங்க இடத்துல இருந்து...
அழகியல் 2
தன் கையில் இருக்கும் நோட்டீஸையே அதிர்ந்து பார்த்திருந்தார் அருணகிரி. பேச்சு வருவேனா என்றது. பாரதி இப்படி செய்வாள் என்று அவர் ஒரு சதவீதம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
நிச்சயம் முடித்து தேங்கி நின்றிருந்த நெருங்கிய உறவுகள் ஆளுக்கொன்று பேச, பத்மாவிற்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது. மஞ்சுளா அவரின் கை பற்றி கொள்ள, ரகுராம் அப்பாவிடம்...
ப்ரவீன், "நீங்க போய் ரெடி ஆகுங்க. நேரம் ஆச்சு" என்றான் ரகுராமிடம்.
ரகுராம் அறைக்கு செல்ல, அனுஷாவும், பத்மாவும் "எங்க போன? சீக்கிரம் கிளம்பு" என்றனர்.
ரகுராம் அங்கேயே ஒரு குளியல் போட்டு, புளூ பேண்ட், வொயிட் ஷார்ட் மட்டும் அணிந்து கொண்டான். மேல் கோட் அணியவில்லை. தணிகைவேல் எடுத்து கொடுத்த உடை. "அதையும் போட்டுக்கோங்க" என்று...
அழகியல் 9
மகன் குடும்பம் வீடு வரும் வரை ராஜேஸ்வரி ஹாலிலே அமர்ந்திருந்தார். உடன் வேணி குடும்பமும். சுந்தரம் கிளம்ப பார்க்க, ராஜேஸ்வரி விடவில்லை.
"எனக்காக இருங்க மாப்பிள்ளை. இன்னைக்கே இதுக்கு முடிவு தெரிஞ்சுக்கலாம்" என்றிருக்க, சுந்தரம் பொறுமையாக காத்திருந்தார்.
தணிகைவேல் குடும்பம் மண்டபத்தில் இருந்து ஒரே காரில் வீடு வர, பாரதியால் மகளிடம் எதுவும் கேட்க முடியவில்லை.
ப்ரவீனுக்கு...
அங்கு அருணகிரி முட்டி மோதி பார்த்துவிட்டு வேறு வழி இல்லாமல் தங்கையிடம் பேசும் முடிவினை எடுத்தார். இருக்கும் சில சொத்துக்கள் பரம்பரை சொத்து. எதில் கை வைத்தாலும் பாரதி வந்து நிற்பார். சேமிப்பு இல்லை. பிள்ளைகளின் படிப்பே கடினமாக தான் இருந்தது.
மகன் இப்போது தான் வேலைக்கு சேர்ந்திருக்க, அவனிடமும் எதிர்பார்க்க முடியாது.
முட்டு சந்து போல்...
அழகியல் 6
இப்போதே மணி காலை எட்டரை ஆகிவிட்டது. ரகுராம் நேரம் பார்த்து பதட்டம் கொண்டான். இன்னும் அரை மணி நேரம் போக வேண்டும். டிராபிக் வேறு. வண்டிகள் நகர்வேனா என்றது.
ஹெல்மெட்டை சரியாக இழுத்துவிட்டவன், கிடைத்த கேப்பில் எல்லாம் நுழைய ஆரம்பித்தான். எந்த சந்தில் யார் வருவார் என்று தெரியாமல், பாதுகாப்பான வேகத்திலே சென்றவன், சரியான...
அழகியல் 17
அதிகாலையில் ரகுராமின் மொபைல் ஒலிக்க, மணமக்களுக்கு ஆழ்ந்த உறக்கம். சில நிமிட இடைவெளியில் திரும்ப ஒலிக்க, அப்போதும் இருவரும் அசைய கூட இல்லை.
"நல்லா தூங்கிட்டிருக்காங்க போல" என்றாள் அனுஷா அம்மாவிடம்.
"பூஜைக்கு போகணுமே" அவர் கைகளை பிசைய,
"என்னாச்சு" என்று வந்தார் அருணகிரி.
எல்லாம் குளித்து தயாராக இருக்க, முக்கியமானவர்கள் இன்னும் எழவே இல்லை. "அது பிள்ளைங்க...
இன்று ஆர்த்தியை பார்க்க சென்ற போது அவன் மாமியார், "உங்க அம்மாக்கு அங்க வசதி எல்லாம் இருக்குமா மாப்பிள்ளை. நம்மளவு அவங்க இல்லைன்னு கேள்விப்பட்டேனே. பிறந்த வீடு எப்படியோ, உங்க அம்மாக்கு மாமியார் வீடு நல்லா வசதியா அமைஞ்சிடுச்சு" என்று கேட்டிருந்தார்.
அந்த கோவத்திலே சாப்பிட கூட மறுத்து தான் கிளம்பி வந்திருந்தான். இங்கு ராஜேஸ்வரி...
"ப்ரவீன்.. உன் அம்மாவை கொஞ்ச நாளைக்கு பெங்களூர் போக சொல்லு. இங்க வேணாம். கண்ணு நீ உன் அம்மாவை கூட்டிட்டு கிளம்பு " என்றார் தணிகைவேல் இடையிட்டு.
"ப்பா"
"இல்லை கண்ணு. என்னை கொஞ்ச நாளைக்கு விட்டுடுங்க. கிளம்புங்க" என்ற தணிகைவேல் வெளியே கிளம்பிவிட்டார்.
"போதுமா. இப்போ உனக்கு நிம்மதியா. வேணும் வேணும்ன்னு உன்னை கட்டிக்கிட்டு வந்ததுக்கு அவனை...
அழகியல் 15
சுந்தரம் சொன்னவற்றில் இரண்டு விஷயங்கள் தணிகைவேல்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஒன்று.. காதல் திருமணம் என்பது. இதுவும் கிட்டத்தட்ட அப்படி தானே?
பாரதி ஆரம்பித்து வைத்தது தான் என்றாலும், பின்னர் பாரதியுமே மகளிடம் தானே முடிவை விட்டுவிட்டார்.
எல்லா விதமான வேற்றுமையும் காதல் திருமணம் என்பதிலே அடிபட்டு போகிறதே!
பெரியவர்கள் தங்களுக்கு சமமாக பார்ப்பார்கள். இளையவர்கள் அப்படி இல்லையே?...
அழகியல் 24
தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து ஜனக்நந்தினியும் ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள்.
தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ என் பொண்ணு ஏன் பரிமாறனும் என்றெல்லாம் தோன்றவில்லை.
உணவு முடியவும் அருணகிரி வீட்டிற்கு வந்தனர். ஓய்வாக அமர, "நைட் சென்னை கிளம்பலாமா?"...
பெங்களூர் வீட்டில் தங்கி பிடெக் இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவளை கணவருக்கு தெரியாமல் வரவழைக்க வேண்டும். மகளோ அப்பா செல்லம். அவரிடம் சொல்லாமல் கிளம்ப மாட்டாள்.
எப்படி, எப்படி என்று யோசித்து கொண்டிருக்க, அவர் முன் வந்து நின்றான் ரகுராம். பத்மா மகனிடம் சொன்னார். உனக்கு வேணாம்ன்னா நீயே உன் அத்தைகிட்ட பேசு என்று.
பாரதி தன் யோசனையை...
அழகியல் 8
இன்னும் அம்மா வீட்டு ஆட்கள் வராததில் பாரதி கண்ணீரை அடக்கி நிற்க, ப்ரவீன் தொடர்ந்து ராமமூர்த்திக்கு அழைத்து கொண்டிருந்தான்.
அவர் எடுக்காததில், அருணகிரி எண்ணுக்கும் அழைத்துவிட்டான். அவரும் எடுக்கவில்லை. ப்ரவீன் புருவம் சுருங்கியது.
‘வரலைன்னா வரலைன்னு சொல்ல வேண்டியது தானே? இதென்ன போன் எடுக்காம இருக்கிறது?’
"ம்மா.. உடனே டவுன் ஆகாதீங்க. அவங்க வருவாங்க" என்று ஜனக்நந்தினி...