Sunday, April 28, 2024

    Ennai muththamittu mugizhthavaa

    முகிழ் – 9   மதியை நோக்கி வந்தவன் நேராக மதியின் அருகியில் இருக்கும் சிநேகனிடம் சென்று கைகுழுக்க, மதி அப்போது தான் மனதினுள், "ஒஹ் அப்ப அவன் நம்மள பார்க்கவில்லையா?... இல்லையே என்ன பார்த்தமாதி தோனுச்சே" என்று எண்ணிக் கொண்டே நின்று இருந்தவளை தாண்டி சிநேகனும், ஆதித்யனும் மணமக்களின் அருகில் சென்றனர்.   மணமக்களின் அருகில் சென்றதும்...
    முகிழ் - 8   இனியன் அவளை, அவளின் வீட்டு தெரு முனையில் விட்டு விட்டு, அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் இனியன் அகன்றான்.   மதி தாமதமாக வருவது வழக்கமென்றாலும் இன்றும் மணி இரவு 12.30 தொட்டது மதியின் அன்னைக்கு மட்டும் அல்லாமல், மதியின் தந்தைக்கும் கவலை அளித்தது. ஆயினும் மதியின் களைத்த முகம் கண்டு அவளிடம் ஏதும் கேட்காமல்,...
    முகிழ் - 7   அவன் மண்ணில் சரியவும், க்ரிஷ்ணவ்...என்ற அழைப்புடன் மதி சர்ர்ர்ர்ர்ர் என்று தனது வண்டியை பிரேக் போடவும் சரியாக இருந்தது.   சரட்டென்று வண்டி நிற்கவும் நிகழ் காலத்திற்கு வந்தவள், மெல்ல மெல்ல உணர்வு பெற்று கண்களை சுழல விட்டாள். முழுதும் உணர்வு பெற இயலாமல் தவித்த மதியை வேற்று கிரகவாசி போல பார்த்தான் சினேகன்....
    முகிழ் – 6   அவரிடம் இருந்து அந்த கேஸ் சம்மந்தப் பட்ட கோப்பை வாங்கி சென்றவள் உடனடியாக யாரிடமும் சொல்லாமல் ஒரு பூங்காவிற்கு சென்றாள். அங்கே தன்னை தனிமை படுத்திக்கொண்டு அந்த கோப்பை புரட்டியவள் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் திணறினாள்.   இறுதியாக பாதிக்கபட்டவரின் எண்ணிக்கையை கணக்கிட்டவள் திடுக்கிட்டாள், 47 நபர்கள் இதுவரையிலும்.   இந்த சம்பவத்தை...
    முகிழ் - 5 பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் கொண்டவை இந்த கொடைக்கானல், ஆதலால் முருகன் கோயிலான இக்கோயிலை குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்று வழங்குகிறார்கள்.   மதிக்கு முருகன் என்றால் அலாதி பிரியம். முருகனை விட்டு கண் எடுக்காமல் பார்ப்பவள், இன்று ஏனோ முருகனை தரிசித்தாலும் அவள் கண்கள் க்ரிஷ்ணவ்...
    முகிழ்  4   அன்றே ஆதித்யனை அடுத்தமுறையும் சந்திக்க நேர்ந்ததில் அடியோடு துவண்டாள் மதி. மேலும் அங்கு இருக்க மனம் இல்லாமல், அந்த பெண் அவனின் மனைவி என்று ஐயமற அறிந்துக்கொள்ளும் துணிவும் இல்லாததாலும் அவள் கோவில் விட்டு உடனடியாக கிளம்பிச் சென்றாள்.   என்றும் அவளுக்கு நிம்மதி அளிக்கும் அறுபடை சந்நதி, இன்று ஏனோ மன பாரத்தை...
    முகிழ் -  3   மதி, ஆதித்யனின் நேர்காணலுக்கு சென்ற நிமிடம் முதல், இங்கு இனியனோ அவன் கண்கள் கணினிய கவனித்தாலும் அவன் எண்ணமோ மதியை சுற்றியே சுழன்று கொண்டு இருந்தது. மதிக்கு யாரை மறக்க வேண்டும் என்று நினைத்தாளோ, அவனை மறுபடியும் சந்திக்க நேர்ந்த விதியை நொந்துக் கொள்ளமட்டும் தான் முடிந்தது. ஆதித்யன் ஆள் வரும்...
    முகிழ் – 2   இருசக்கர வாகனத்தில் வந்த, அந்த யுவதியை உரசி கொண்டு ஒரு மோட்டார் பைக் சென்றது. அதனால், அந்த பெண் (கண்டிப்பாக 20 வயதிற்கு மிகாமல் தான் இருப்பாள் போலும்) நிலைதடுமாறி, சாலையில் சரிந்தாள். அந்த இருச்சகர வாகனத்தை ஓட்டி சென்றவர்களுக்கு நிதானம் இருந்ததாக தெரியவில்லை, அதாவது குடிபோதையில் அவர்கள்.   அப்பொழுது கூட்டம்...
    என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா!!!   முகிழ்  1   இரவு 12.25 என்று கடிகாரம் யாருக்கும் காத்திராமல் தன் பணியை செய்து கொண்டு இருந்தது. மதியழகி மிகவும் படபடப்புடன் காணப்பட்டார். சாந்தமான முகமும் சாந்தியின் உருவான அவர், அவரின் வாழ்நாளில் இன்று தான் மிகவும் படப்படப்புடன் இருந்ததாக அவர் கணவன் இளமாறனுக்கு தோன்றியது.   அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது, அவர்களின்...
    error: Content is protected !!