Paarthiban Kanaa
உ
ஓம் வேதப் பொருளே ! வேந்தே போற்றி !
பார்த்திபன் கனா 11
“தப்பு செஞ்சுட்டோம்னு உணர்ந்தா மட்டும் போதாது... அதை சரி செய்யவும் வேணும் மாமா...” சிறு தயக்கம்... தடுமாற்றம் இன்றி தனக்குள் தோன்றிய கருத்தை தன் முன்னே அமர்ந்திருந்த தன் மாமானாரிடம் வைத்தாள் யாழ் மங்கை.
மங்கை மொழிக்கு மறுப்பின்றி மெல்ல தலையசைத்தார் பெரியசாமி. பார்வதி...
உ
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி !
பார்த்திபன் கனா 10
“ராஜா.....”
“..........”
“அத்தை இரண்டு முறை கூப்பிட்டாச்சு... நாம கிளம்பிட்டோமா இல்லையான்னு கேக்க...”
“............”
“டைம் ஆச்சுடா........”
மங்கையின் மொழிகளெல்லாம் மன்னவன் செவிமடல் தீண்டி... உள்ளே நுழைந்தது தான்... ஆனாலும் அவள் மடி சாய்ந்திருந்தவனுக்கு ம்ம் கொட்டவும் தோன்றவில்லை.
துளித் துளியாய்.... அவளோடான மணித்துளிகளை அக ஆழியில் சேர்த்தும் அனுபவித்தும் கழித்தான்...!
இரு சூரிய...
உ
ஓம் கங்கை சூடி மைந்தனே போற்றி!
பார்த்திபன் கனா 9
கரையும் காலம்..!!
வேனிற்காலம் வசந்தம் விதைத்து விடைபெற்றுச் சென்றிருக்க.. கார்காலம் வந்து நின்றது புனல் பாய்ச்ச..
கடந்த காலம் முழுவதும் அன்பு.. அக்கறை.. கொஞ்சம் ஊடல்.. கொஞ்சும் உவகை.. சிறு துளியாய் சினம்.. இவற்றின் கனம் தான்...! யாழுக்கு மட்டுமல்ல.. எல்லாருக்கும்.
மெல்லிய இருள் கவிழ்ந்த அந்த அறையினுள் மௌனம்...
உ
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி !
பார்த்திபன் கனா 7
துளிர்...! ராஜ பார்த்திபனின் பேரன்பில் துளிர்த்து.. தழைத்து.. செழித்து.. சிறந்து நிற்கும் நாற்றுப் பண்ணை.
பொறியியல் முடித்ததும்... அவன் நட்புக்கள் மென்பொருள்... மேலாண்மை என சென்றுவிட இவன் நாட்டம் நாற்றுபண்ணை மீது.
அக்ரி சீட் கிடைக்க வேண்டுமென அதீத முயற்சி செய்தும்.. கிடைக்கவில்லை.....
உ
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி !
பார்த்திபன் கனா 6
விஷ்ணுவர்த்தன்... ராஜலஷ்மியை மணம் முடிக்கவிருக்கும் மணவாளன்.. பொறியியல் முடித்து மென்பொருள் நிறுவனம் ஒன்றை கோவையில் நடத்தி வருபவன்.. வந்த வரன் வரமாய் அமைந்து விட நிச்சயத்திற்கு நாள் குறித்தனர் பெரியோர்.
மாப்பிள்ளை வீட்டினர் விடைபெற்று கிளம்ப... விஷ்ணு “நான் அவர்கிட்ட பேசிட்டு வரேன்...” என்றபடி ராஜாவிடம்...
உ
ஓம் ஓம்கார சொருபனே போற்றி..
பார்த்திபன் கனா 5
எவனோ ஒருவன் வாசிக்கிறான்.......
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்.......
சுவர்ணலதாவின் குரல் காற்றில் கசிந்து கொண்டிருக்க..... மெல்ல மெல்ல அதனுள் கரைந்து.. தொலைந்து போகவிருந்தவளை மீட்டெடுத்தது அந்தக் குறுஞ்செய்தி...! ஓர் அறிமுகமில்லா எண்ணிலிருந்து...!
ஒரு முகவரியை குறிப்பிட்டு உடனடியாக அவ்விடம் வரவேண்டும் யாழ் என்றிருக்க..... ‘யாராக இருக்கும்?’ என்ற யோசனை யாழிடம்.
“என்ன...
உ
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி !
பார்த்திபன் கனா 4
“மேடம்.... இன்டர்வியு செட்டியூல் பண்ணின நேரம் முடிஞ்சிடுச்சு... ஆனா நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... இன்னமும் எவ்வளவு நேரம் தான் எங்களை காத்திருக்க சொல்லிட்டே இருக்கப் போறீங்க....” யாழ் மங்கை குரலின் சத்தம் சற்றே கூடியிருக்க.. அந்த வரவேற்பு கூடத்தை கடந்து சென்றவர்களின் விழியோரப் பார்வை...
உ
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
பார்த்திபன் கனா 3
நிசப்தம்.... நிசப்தம்... நிசப்தம்.. மட்டுமே நின்று கோலோச்சிக் கொண்டிருந்தது அவ்விடத்தில்! நிதானமாக சுதந்திரம் பெற்ற சுவாசக்காற்றின் சத்தம் சுவர்களில் பட்டு தெறித்தது.
பகவதி ஒரு பக்க மூலையில் சாய்ந்திருக்க... யாழ்நிதி அவர் மடி சாய்ந்திருந்தாள். தொலைக்காட்சி தொல்லை கொடுக்காமல் இருக்க, மௌன மொழி...
உ
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி !
பார்த்திபன் கனா 2
இருவருக்கும் இடையில் இமைக்கா நொடிகள்......
திகைப்பும் அதிர்ச்சியும் அவளிடம் வரக் காரணம் நிச்சயம் அவனைப் பார்த்ததினால் அல்ல... அவனை அவ்விடம் பார்த்ததினால்....!
அவளைப்போலவே அவனுள்ளும் அதிர்வலைகள் வந்து போகிறதா??? அதை அறிந்து கொள்ள அவன் மனம் வைக்க வேண்டும்..! வைக்க மாட்டான்... உள்ளத்தில் உருவெடுத்த உணர்ச்சிகளை...
உ
பார்த்திபன் கனா 1 :
காக்க காக்க.. கனகவேல் காக்க..
நோக்க நோக்க.. நொடியினில் நோக்க..
தாக்க தாக்க.. தடையறத் தாக்க..
பார்க்க பார்க்க.. பாவம் பொடிபட..
“ஏய் மங்கம்மா... போதும் போதும்... உன் பக்தியைக் கண்டு அந்தப் பழனி மலை முருகனே படியிறங்கி வந்திடப் போறாரு...” என யாழ் மங்கையை வம்பிழுத்த யாழ்நிதியை “நிதி” என்ற பகவதியின் அதட்டல்...