Paarthiban Kanaa
உ
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி !
பார்த்திபன் கனா 7
துளிர்...! ராஜ பார்த்திபனின் பேரன்பில் துளிர்த்து.. தழைத்து.. செழித்து.. சிறந்து நிற்கும் நாற்றுப் பண்ணை.
பொறியியல் முடித்ததும்... அவன் நட்புக்கள் மென்பொருள்... மேலாண்மை என சென்றுவிட இவன் நாட்டம் நாற்றுபண்ணை மீது.
அக்ரி சீட் கிடைக்க வேண்டுமென அதீத முயற்சி செய்தும்.. கிடைக்கவில்லை.....
உ
ஓம் கங்கை சூடி மைந்தனே போற்றி!
பார்த்திபன் கனா 9
கரையும் காலம்..!!
வேனிற்காலம் வசந்தம் விதைத்து விடைபெற்றுச் சென்றிருக்க.. கார்காலம் வந்து நின்றது புனல் பாய்ச்ச..
கடந்த காலம் முழுவதும் அன்பு.. அக்கறை.. கொஞ்சம் ஊடல்.. கொஞ்சும் உவகை.. சிறு துளியாய் சினம்.. இவற்றின் கனம் தான்...! யாழுக்கு மட்டுமல்ல.. எல்லாருக்கும்.
மெல்லிய இருள் கவிழ்ந்த அந்த அறையினுள் மௌனம்...
உ
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி !
பார்த்திபன் கனா 12
எட்டுத் திசையும் எமக்கே என்ற எண்ணமோ என்னவோ... மூவரும் மாற்றி மாற்றி பார்த்து வைத்தார்கள்...
யாழ் மங்கையிடம் பிடிபட்டு நின்ற பொறுமை... இதோ... போகப்போகிறேன்.. இதோ... என இவளிடம் இருந்து விடை பெற ஆயத்தமாகியிருந்தது.
பார்வதி ஆரம்பிப்பார்... பார்த்திபன் ஆரம்பிப்பான்… என இவள் பார்த்து நிற்க... அவர்கள் மௌனம்...
உ
ஓம் உமையவள் மகனே போற்றி !
பார்த்திபன் கனா 16
இருள் அந்த அறையினுள் கவிழ்ந்து கிடக்க.. அதை விரட்டும் பொருட்டு விளக்கு ஒளிர வைக்கப்பட்டது.
சூழ்ந்திருந்த மொத்த இருளையும் இமைக்கும் நொடியில் விரட்டிய விளக்கு.. வெற்றிப் புன்னகையை தவழ விட்டது அறையினுள்.
“ப்ச்..”
தும்பை நிற தூய மெத்தையில் விழுந்து படுத்துக் கிடந்தவன் இமைகளை பிரிக்காமல் இதழ் பிரிக்க... சட்டென...
உ
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி !
பார்த்திபன் கனா 13
சாளரம் வழியே எட்டிப் பார்த்த கதிரவன் கதிர்கள் மெல்ல மெல்ல போர்வைக்குள் நுழைந்து மன்னவன் முகம் பார்த்துவிட முயல... அவனே போர்வை விலக்கி தன் திருமுகம் காட்டினான்.
பார்த்திபன் பார்வை பக்கத்து மேஜையில் இருந்த அவன் மங்கையிடம் தஞ்சம்..!
மணக்கோலத்தில் அலர்ந்த அகத்துடன் மலர்ந்த முகத்துடன் விழிகள்...
உ
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி !
பார்த்திபன் கனா 2
இருவருக்கும் இடையில் இமைக்கா நொடிகள்......
திகைப்பும் அதிர்ச்சியும் அவளிடம் வரக் காரணம் நிச்சயம் அவனைப் பார்த்ததினால் அல்ல... அவனை அவ்விடம் பார்த்ததினால்....!
அவளைப்போலவே அவனுள்ளும் அதிர்வலைகள் வந்து போகிறதா??? அதை அறிந்து கொள்ள அவன் மனம் வைக்க வேண்டும்..! வைக்க மாட்டான்... உள்ளத்தில் உருவெடுத்த உணர்ச்சிகளை...
உ
பார்த்திபன் கனா 1 :
காக்க காக்க.. கனகவேல் காக்க..
நோக்க நோக்க.. நொடியினில் நோக்க..
தாக்க தாக்க.. தடையறத் தாக்க..
பார்க்க பார்க்க.. பாவம் பொடிபட..
“ஏய் மங்கம்மா... போதும் போதும்... உன் பக்தியைக் கண்டு அந்தப் பழனி மலை முருகனே படியிறங்கி வந்திடப் போறாரு...” என யாழ் மங்கையை வம்பிழுத்த யாழ்நிதியை “நிதி” என்ற பகவதியின் அதட்டல்...
உ
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி !
பார்த்திபன் கனா 4
“மேடம்.... இன்டர்வியு செட்டியூல் பண்ணின நேரம் முடிஞ்சிடுச்சு... ஆனா நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... இன்னமும் எவ்வளவு நேரம் தான் எங்களை காத்திருக்க சொல்லிட்டே இருக்கப் போறீங்க....” யாழ் மங்கை குரலின் சத்தம் சற்றே கூடியிருக்க.. அந்த வரவேற்பு கூடத்தை கடந்து சென்றவர்களின் விழியோரப் பார்வை...
உ
ஓம் அவ்வையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி !
பார்த்திபன் கனா 10
“ராஜா.....”
“..........”
“அத்தை இரண்டு முறை கூப்பிட்டாச்சு... நாம கிளம்பிட்டோமா இல்லையான்னு கேக்க...”
“............”
“டைம் ஆச்சுடா........”
மங்கையின் மொழிகளெல்லாம் மன்னவன் செவிமடல் தீண்டி... உள்ளே நுழைந்தது தான்... ஆனாலும் அவள் மடி சாய்ந்திருந்தவனுக்கு ம்ம் கொட்டவும் தோன்றவில்லை.
துளித் துளியாய்.... அவளோடான மணித்துளிகளை அக ஆழியில் சேர்த்தும் அனுபவித்தும் கழித்தான்...!
இரு சூரிய...
உ
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி !
பார்த்திபன் கனா 6
விஷ்ணுவர்த்தன்... ராஜலஷ்மியை மணம் முடிக்கவிருக்கும் மணவாளன்.. பொறியியல் முடித்து மென்பொருள் நிறுவனம் ஒன்றை கோவையில் நடத்தி வருபவன்.. வந்த வரன் வரமாய் அமைந்து விட நிச்சயத்திற்கு நாள் குறித்தனர் பெரியோர்.
மாப்பிள்ளை வீட்டினர் விடைபெற்று கிளம்ப... விஷ்ணு “நான் அவர்கிட்ட பேசிட்டு வரேன்...” என்றபடி ராஜாவிடம்...