Thursday, May 9, 2024

    Ilakkanam Marumo 2

    IM 12

    IM

    IM 17

    IM 18

    Ilak Mar

    IM 22

    இலக்கணம் – 22 வீணா சொன்ன விஷயங்களை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே யோசனையுடன் அமர்ந்திருந்தான் விக்ரம். வினோத்தும் அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா. “என்னண்ணா... எதுவும் சொல்லாம யோசிச்சிட்டு இருக்கீங்க... நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாத்தையுமே ஒரு மாதிரி இலக்கியாவோட மூளைக்குள்ளே திணிச்சி...

    IM 1

    இலக்கணம் – 1 கறுப்பு சிலையொன்று கால் கொண்டு நடந்ததோ.... கறுப்பான தோலுக்குள் குருதி நிறம் சிவப்பன்றோ..... கள்ளமில்லா சிரிப்புக்குள்ளே கலந்திருக்கும் வெள்ளையன்பு.... கறுப்பென்றும் சாபமல்ல.... கடவுளுக்கும் அதே நிறம்.... கலங்காதே கண்மணியே..... கருணை உந்தன் குணமானால் கறுப்பு வெறும் நிறம் மட்டுமே.... அவசர அவசரமாய் கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் இலக்கியா. “அம்மா..... என்னோட கண்மையைப் பார்த்திங்களா.... இங்கே காணோம்.....” மேசை வலிப்பில் தேடிக் கொண்டே குரல் கொடுத்தாள். “எனக்குத் தெரியலைம்மா.... அங்கே தான்...

    IM 25

    இலக்கணம் – 25 இலக்கியாவை துப்பாக்கி முனையில் நடத்திக் கொண்டு வெளியே சென்ற சத்யா வெளிப்பக்கமாய் கதவைத் தாளிட்டான். அவர்கள் உள்ளிருந்து கூக்குரல் இட வெற்றிக் களிப்புடன் திரும்பியவனின் கையை இலக்கியா தட்டி விடவும் துப்பாக்கி கீழே விழ அவள் எடுத்துக் கொண்டாள். ஒரு நிமிடம் திகைத்துப் போனாலும் அவனை நோக்கி அவள் துப்பாக்கி நீட்டியதைக் கண்ட...

    Ilakkanam Marumo 2

    இலக்கணம் – 2 புல்லட்டை செங்கல் சூளை அலுவலகத்தின் முன்னில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் சத்யா. அவனைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தார் கணக்கர் குமரேசன். “வாங்க தம்பி....... மாமா உள்ளே தான் இருக்கார்...... நீங்க வந்ததும் வர சொன்னார்.....” என்று தகவலையும் கொடுத்தார். அவரிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்த சிறிய அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். மேசைக்குப்...

    IM 17

    இலக்கணம் – 17 நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்கி இருந்தது. லலிதாவும் பாட்டியும் அவ்வப்போது இளமாறனின் நினைவில் கலங்குகையில் அவர்களை இலக்கியா தான் சமாதானப் படுத்துவாள். சத்யாவோ வீட்டில் இருப்பதே இல்லை.... எப்போதும் வேலை, அலுவலகம் என்று வெளியே தான் சுற்றிக் கொண்டிருப்பான். அன்றும் காலையில் நேரமாய் புறப்பட்டுக் கொண்டிருந்தவனின் பின்னில் வந்து நின்றாள்...

    IM 20

    இலக்கணம் – 20 குழந்தை சங்கவி நல்ல உறக்கத்தில் இருக்க கவலையும் சோர்வுமாய் நடந்த விஷயங்களை நண்பன் வினோத்திடம் கூறிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனது இலக்கியாவின் வார்த்தைகளின் தாக்கத்தில் பொசுங்கிப் போயிருந்தது. “இப்படி எல்லாம் நடந்திடுமோன்னு நினைச்சு தான் நான் அவகிட்டே சத்யா பத்தி சொல்லத் தயங்கினேன் வினோ... நடுவுல அந்த வீணா வேற லூசு...

    IM 7

    இலக்கணம் – 7 மதிய உணவு முடிந்து மரத்தடியில் ஏதோ சூன்யத்தில் கண்ணைப் பதித்து யோசனையில் அமர்ந்திருந்த விக்ரம், அருகில் தயக்கத்துடன் ஒலித்த குரலில் திரும்பினான். இலக்கியாவும், வீணாவும் தயங்கிக் கொண்டே அவனுக்கு முன்னில் வந்து நின்றனர்.                                  இலக்கியாவின் விலாவில் இடித்த வீணா, “ஏய்.... சொல்லுடி.....” என்று தோழியின் காதைக் கடித்தாள். “உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்ல வந்தேன்......”...

    IM 4

    இலக்கணம் – 4 நாட்கள் அழகாய் நகர்ந்து கொண்டிருந்தது. சத்யாவுக்கு பிசினஸில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவனிடமே சில பொறுப்புகளை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் இளமாறன். இலக்கியாவுக்கு சத்யாவின் மீதுள்ள ஈடுபாடு பெற்றோர்களுக்கும் புரிந்ததால் படிப்பு முடிந்ததுமே கல்யாண விஷயத்தை முடிவு செய்துவிடக் காத்திருந்தனர். அன்று ஒரு வேளை விஷயமாய் சத்யா வெளியூர் சென்றிருக்க இளமாறனும் நேரத்திலேயே...

    IM 26

    இலக்கணம் – 26 இரு மாதங்களுக்குப் பிறகு... “அம்மா.... நான் கிளம்பறேன்...” கைப்பையை எடுத்துக் கொண்டே அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தாள் இலக்கியா. இப்போது அவள் தான் தந்தையின் தொழில் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள். தந்தை இருக்கும்போது அவருக்கு விசுவாசமாய் இருந்த கணக்கர் கனகை சத்யா வேலையை விட்டு நிறுத்தி இருந்தான். அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டவள் ஒவ்வொரு...

    IM 8

    இலக்கணம் – 8 தேர்வுக்காய் கிளம்பிக் கொண்டிருந்தனர் விக்ரமும் வினோத்தும். “டேய் விக்ரம்...... இன்னைக்காவது உன்னோட மனசில் உள்ளதை இலக்கியாகிட்டே சொல்லப் போறியா... இல்லை சொல்லாம திரும்ப வந்திடுவியா....” என்றான் வினோத். “ம்ம்..... எக்ஸாம் முடிஞ்சதும் அவகிட்டே பேசறேன் டா.... இன்னைக்கு கண்டிப்பா சொல்லிடறேன்....” என்றான் விக்ரம். “ம்ம்.... சரிடா..... உன் மனசுல உள்ளதை ஓபனா சொல்லிடு..... அப்புறம் அவ...

    IM 18

    இலக்கணம் – 18                         விக்ரம் திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க அவன் கையில் இருந்த குழந்தை பொக்கை வாயுடன் இலக்கியாவைப் பார்த்து சிரித்தது. கள்ளம் கபடமற்ற அந்த சிரிப்பில் மனதைத் தொலைத்தவள் ஆசையோடு குழந்தையை நோக்கி கை நீட்டினாள். “அட... என்னைப் பார்த்ததும் குழந்தை எவ்ளோ அழகா கியூட்டா சிரிக்குது... வாடா செல்லம், ஆண்ட்டி...

    IM 30 1

    இலக்கணம் – 30 மனதுக்கு பிடித்தவர்களிடமே கோபம், ஆற்றாமை நம்மை மீறி கண்ணீராக வெளிப்படுகிறது... பிறகு கண்ணீர் கரைந்து சிரிக்கவும் வைக்கிறது. இலக்கியாவும் அந்த மனநிலையில் தான் இருந்தாள். தன்னுடைய வேதனை தாயையும், பாட்டியையும், துக்கத்தை மறைத்துக் கொண்டு குழந்தையுடன் வளைய வரும் வினோதினியையும் பாதித்து விடக் கூடாது என்பதற்காய் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளுக்குள்ளேயே உருகிக்...

    IM 21

    இலக்கணம் – 21                     இலக்கியா அவளை எதிர்பாராத பார்வை பார்க்க புன்னகைத்த வீணா, “என்னடி முழிக்கறே... என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கலையா… வீட்டுல போர் அடிச்சது, சரி கொஞ்ச நேரம் உன்னோட இருந்துட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்றவள், ஹாலில் இருந்த பாட்டியைக் கண்டதும் அவரிடம் சென்றாள். “ஹாய் பாட்டி எப்படி இருக்கீங்க... உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு...”...

    IM 29 1

    இலக்கணம் – 29 இலக்கியா வினோதினியை வீட்டுக்கு அழைத்து வந்ததில் பெரிதாய் உடன்பாடு இல்லாவிட்டாலும் யாருமில்லாத அவளை, பழையதெல்லாம் மறந்து போயிருந்த சூழலில் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட லலிதாவின் மனமும் இடம் கொடுக்கவில்லை. என்னதான் அண்ணன் தங்கை என்று சொன்னாலும் விக்ரமின் வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்வது ஊராரின் வாய்க்கு அவலாக மாறவும் கூடும்....

    IM 27

    இலக்கணம் – 27 “அங்கிள், கொஞ்சம் உள்ளே வாங்க...” என்றதும் கனகு உள்ளே வர, “இந்த அப்ளிகேஷன்ல உள்ள வரிசைப்படி ஒவ்வொருத்தரா வர சொல்லுங்க...” என்றாள். “சரிம்மா...” என்றவர் ஹாலில் காத்திருந்தவர்களிடம் சென்று, ஒவ்வொருத்தராய் உள்ளே அனுப்பினார். கனகை அங்கேயே இருக்கும்படி சொல்ல அவரும் தொழில் சம்மந்தமான சில கேள்விகளை வந்தவர்களிடம் கேட்டார். குவாரி, கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் அவர்களின்...

    IM 24

    இலக்கணம் – 24 “என்னை விடுங்கடா பாவிங்களா.......” கத்தினான் விக்ரம். “விடணுமா, கொஞ்சம் இரு... விட்டுர்றோம்...” சொல்லிக் கொண்டே அவன் இரண்டு கைகளையும் பின்னில் கொண்டு சென்று மடக்கிப் பிடித்த சத்யா வாயில் ஒரு பிளாஸ்டரை ஒட்டவும் திமிறினான். விக்ரமை சத்யாவும் அவன் நண்பனுமாய் நாற்காலியில் சேர்த்துக் கட்டி வைத்தனர். அவன்  முன்னில் வந்து நின்றான் சத்யா. “ஏண்டா...

    IM 5

    இலக்கணம் – 5 மேடையில் இருந்து கீழே வந்த விக்ரமிடம் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவிக்க, நம்ப முடியாமல் அதே திகைப்புடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளை இழுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்ற வீணா, “நாட்டு நடப்பை அருமையா கவிதைல சொல்லிருக்கீங்க அண்ணா..... வாழ்த்துகள்.....” என்றாள். சிறு புன்னகையுடன் தலையசைத்தவன் அவளுக்கு அருகில் நம்ப முடியாத...

    IM 28

    இலக்கணம் – 28 இலக்கியாவின் அதிர்ந்த குரலையும், கோபமான முகத்தையும் கண்ட விக்ரம் தொடர்ந்தான். “இளா... நான் ஒண்ணும் பெரிய தியாகியோ, ஆசையை துறந்த புத்தனோ இல்லை... என்னோட காதலும் வாழணும்னு சுயநலமா யோசிக்குற சாதாரண மனுஷன் தான்... ஒரு நிமிஷம்... நான் சொல்லுறதை நிதானமா கேட்டுக்கோ... அப்புறம் உன் பதிலை சொல்லு...” என்றவன் அழுகையை அடக்க...

    IM 30 2

    “என்ன... யாரும் எதுவும் பேசாம இருக்கீங்க... இளா எங்கேம்மா...” லலிதாவை அவன் அம்மா என்றே அழைத்தான். “உங்க ரூமுல இருப்பா மாப்பிள்ளை... அவகிட்டயே கேளுங்க...” என்றவர் அமைதியாகி விட, “என்னடா இது... யாருமே வாயைத் திறக்க மாட்டேங்கிறாங்க...” யோசித்துக் கொண்டே அவர்களின் அறையை நோக்கி நகர்ந்தான். தாளிட்டிருந்த கதவை மென்மையாய்த் தட்ட, கதவைத் திறந்த இலக்கியாவை...

    IM 9

    இலக்கணம் – 9 நிலவுத் தோழிக்கு நிச்சயதார்த்தம்.... நெஞ்சம் நிறைய வாழ்த்திடவே நான் விண்மீன்கள் வாங்கி வந்தேன்.... உன் குறும்பாலும் குணத்தாலும் எங்கள் மனம் நிறைத்தது போல் நின் நெஞ்சம் நிறைந்தவர் மனதிலும் புன்னகை தீபத்தை ஏற்றிவைப்பாய்..... மணமகளாய்.... மனம் படிக்கும் தோழியாய்..... தாயாய்..... தாரமாய்.... தமக்கையாய் எல்லாமுமாய்.... அரவணைக்க அவதாரம் எடுத்து அன்பால் புது சாம்ராஜ்யம் அமைக்க ஆவலோடு வாழ்த்துகிறேன் தோழி..... ஆனந்தமாய் சுமங்கலியாய் அன்புப் பதியின் ஆருயிரில் கலந்து நீடூழி நீ வாழ்க...
    error: Content is protected !!