Ilak Mar
இலக்கணம் – 6
ரொமான்ஸ் நாட்டின் பேரழகன் அவன்......
புன்னகை மாநிலத்தின் பேரரசன் அவன்....
கற்பனை தேசத்தின் காவலன் அவன்.....
உலகின் எட்டாம் அதிசயமாய் - எனை
நொடிக்கு நொடி வியக்க வைக்கும்
அதிசயங்களின் நாயகன் அவன்......
கட்டிலில் படுத்துக் கொண்டு மனம் நிறையக் கனவுகளுடன் கண்களில் வழிந்த காதலுடன் சத்யாவின் புகைப்படத்துக்குக் கீழே மனதில் தோன்றியதை எழுதி முடித்த இலக்கியா, அவனை ரசித்துக்...
இலக்கணம் – 17
நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்கி இருந்தது. லலிதாவும் பாட்டியும் அவ்வப்போது இளமாறனின் நினைவில் கலங்குகையில் அவர்களை இலக்கியா தான் சமாதானப் படுத்துவாள். சத்யாவோ வீட்டில் இருப்பதே இல்லை.... எப்போதும் வேலை, அலுவலகம் என்று வெளியே தான் சுற்றிக் கொண்டிருப்பான். அன்றும் காலையில் நேரமாய் புறப்பட்டுக் கொண்டிருந்தவனின் பின்னில் வந்து நின்றாள்...
இலக்கணம் – 5
மேடையில் இருந்து கீழே வந்த விக்ரமிடம் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவிக்க, நம்ப முடியாமல் அதே திகைப்புடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளை இழுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்ற வீணா, “நாட்டு நடப்பை அருமையா கவிதைல சொல்லிருக்கீங்க அண்ணா..... வாழ்த்துகள்.....” என்றாள். சிறு புன்னகையுடன் தலையசைத்தவன் அவளுக்கு அருகில் நம்ப முடியாத...
இலக்கணம் – 10
மகளின் கல்யாண விஷயத்தில் மனம் நிறைந்திருக்க எல்லாவற்றையும் தானே பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார் இளமாறன். லலிதாவும் கூட கணவனைக் கிண்டல் செய்தார்.
“மகளுக்கு கல்யாணம்னு வந்தா எல்லா அப்பாக்களுக்கும் பத்து வயசு கூடின போல முதுமையும் கவலையும் வந்து ஒட்டிக் கொள்ளும்.... உங்களுக்கு என்ன பத்து வயசு குறைஞ்சாப் போல சந்தோஷமா...
“உள்ள வா இலக்கியா... விக்ரம்க்கு கொஞ்சம் உடம்பு முடியலை... அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும்...” என்றான்.
“ஓ... விக்ரம்க்கு என்னாச்சு... நேத்து ஈவினிங் கூட நல்லாதானே இருந்தார்... காய்ச்சலா...” கேட்டுக் கொண்டே இறங்கியவளிடம் சிறு பதட்டம் வந்திருந்தது.
“இல்லை... கால் வலிக்குதுன்னு சொல்லுறான்... நேத்து கருங்கல் குவாரில பாலன்ஸ் கிடைக்காம விழப் போயிட்டானாம்... உள்ளே வச்ச பிளேட்...
இலக்கணம் – 29
இலக்கியா வினோதினியை வீட்டுக்கு அழைத்து வந்ததில் பெரிதாய் உடன்பாடு இல்லாவிட்டாலும் யாருமில்லாத அவளை, பழையதெல்லாம் மறந்து போயிருந்த சூழலில் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட லலிதாவின் மனமும் இடம் கொடுக்கவில்லை. என்னதான் அண்ணன் தங்கை என்று சொன்னாலும் விக்ரமின் வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்வது ஊராரின் வாய்க்கு அவலாக மாறவும் கூடும்....
இலக்கணம் – 21
இலக்கியா அவளை எதிர்பாராத பார்வை பார்க்க புன்னகைத்த வீணா, “என்னடி முழிக்கறே... என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கலையா… வீட்டுல போர் அடிச்சது, சரி கொஞ்ச நேரம் உன்னோட இருந்துட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்றவள், ஹாலில் இருந்த பாட்டியைக் கண்டதும் அவரிடம் சென்றாள்.
“ஹாய் பாட்டி எப்படி இருக்கீங்க... உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு...”...
இலக்கணம் – 4
நாட்கள் அழகாய் நகர்ந்து கொண்டிருந்தது. சத்யாவுக்கு பிசினஸில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவனிடமே சில பொறுப்புகளை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் இளமாறன். இலக்கியாவுக்கு சத்யாவின் மீதுள்ள ஈடுபாடு பெற்றோர்களுக்கும் புரிந்ததால் படிப்பு முடிந்ததுமே கல்யாண விஷயத்தை முடிவு செய்துவிடக் காத்திருந்தனர்.
அன்று ஒரு வேளை விஷயமாய் சத்யா வெளியூர் சென்றிருக்க இளமாறனும் நேரத்திலேயே...
இலக்கணம் – 11
இளமாறனின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, முன்னில் அமைதியாய் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்க, ஊதுபத்தியின் புகையில் அந்த வீட்டின் சந்தோஷமும் புதைந்து போயிருந்தது. ஐந்தாவது நாள் காரியமாய் இளமாறனின் அஸ்தியைக் கரைத்துவிட்டு வந்திருந்தனர்.
கன்னத்தில் கண்ணீரின் அடையாளம். கண்கள் அழுதழுது வீங்கி இருக்க சோகமே வடிவாய் அமர்ந்திருந்தாள் இலக்கியா. எந்த நேரமும் அழுது...
இலக்கணம் – 13
கோபத்துடன் எழுந்த விக்ரம் அந்தப் பையன்களின் சட்டையைப் பிடித்திருந்தான்.
“ஒழுங்கு மரியாதையா என்னோட வாங்க.....” என்றவன் திருதிருவென்று அச்சத்தோடு முழித்த இருவரையும் இழுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் சென்ற பகுதிக்கு சென்றான். என்ன நடந்திருக்கும் என வினோத் ஊகித்து அங்கு செல்லும் முன்பு அவர்கள் கன்னத்தில் இடியென அடி இறங்கியிருந்தது.
“எ... எதுக்கு எங்களை...
இலக்கணம் – 23
“என்னடி சொல்லற, உன் அத்தான் விக்ரம் பத்தி விசாரிச்சாரா... அதுக்கு என்ன அவசியம்...” அலைபேசியில் இலக்கியா சொன்ன விஷயங்களைக் கேட்டு ஆச்சர்யக் கேள்வி கேட்டாள் வீணா.
“ஆமாண்டி, நான் எப்பவோ ஒரு நாள் சொல்லி இருந்தேன் விக்ரம்க்கு ஏதாவது நல்ல வேலை வேணும்னு... அதை இப்போ கேக்குறார்... ஆனா அவர் குடும்பத்தைப் பத்தி...
இலக்கணம் – 20
குழந்தை சங்கவி நல்ல உறக்கத்தில் இருக்க கவலையும் சோர்வுமாய் நடந்த விஷயங்களை நண்பன் வினோத்திடம் கூறிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனது இலக்கியாவின் வார்த்தைகளின் தாக்கத்தில் பொசுங்கிப் போயிருந்தது.
“இப்படி எல்லாம் நடந்திடுமோன்னு நினைச்சு தான் நான் அவகிட்டே சத்யா பத்தி சொல்லத் தயங்கினேன் வினோ... நடுவுல அந்த வீணா வேற லூசு...
இலக்கணம் – 15
சூரியன் மெல்ல கிழக்கில் உதிப்பதற்கான ஆயத்தப் பணியில் இருக்க, அந்த பெரிய கல்யாண மண்டபம் மேளதாளம் எதுவுமில்லாததால் கலகலப்பு எதுவுமின்றி அமைதியாய் இருந்தது. காலையில் ஆறு முதல் ஏழு மணிக்குள் முகூர்த்த நேரம் ஆதலால் சொந்த பந்தங்களும், நட்புகளும் வரத் தொடங்கி இருந்தனர்.
அய்யர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க கல்யாண மாப்பிள்ளை சத்யா...
இலக்கணம் – 2
புல்லட்டை செங்கல் சூளை அலுவலகத்தின் முன்னில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் சத்யா. அவனைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தார் கணக்கர் குமரேசன்.
“வாங்க தம்பி....... மாமா உள்ளே தான் இருக்கார்...... நீங்க வந்ததும் வர சொன்னார்.....” என்று தகவலையும் கொடுத்தார். அவரிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்த சிறிய அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
மேசைக்குப்...
இலக்கணம் – 30
மனதுக்கு பிடித்தவர்களிடமே கோபம், ஆற்றாமை நம்மை மீறி கண்ணீராக வெளிப்படுகிறது... பிறகு கண்ணீர் கரைந்து சிரிக்கவும் வைக்கிறது. இலக்கியாவும் அந்த மனநிலையில் தான் இருந்தாள்.
தன்னுடைய வேதனை தாயையும், பாட்டியையும், துக்கத்தை மறைத்துக் கொண்டு குழந்தையுடன் வளைய வரும் வினோதினியையும் பாதித்து விடக் கூடாது என்பதற்காய் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளுக்குள்ளேயே உருகிக்...
இலக்கணம் – 18
விக்ரம் திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க அவன் கையில் இருந்த குழந்தை பொக்கை வாயுடன் இலக்கியாவைப் பார்த்து சிரித்தது. கள்ளம் கபடமற்ற அந்த சிரிப்பில் மனதைத் தொலைத்தவள் ஆசையோடு குழந்தையை நோக்கி கை நீட்டினாள்.
“அட... என்னைப் பார்த்ததும் குழந்தை எவ்ளோ அழகா கியூட்டா சிரிக்குது... வாடா செல்லம், ஆண்ட்டி...
இலக்கணம் – 1
கறுப்பு சிலையொன்று
கால் கொண்டு நடந்ததோ....
கறுப்பான தோலுக்குள்
குருதி நிறம் சிவப்பன்றோ.....
கள்ளமில்லா சிரிப்புக்குள்ளே
கலந்திருக்கும் வெள்ளையன்பு....
கறுப்பென்றும் சாபமல்ல....
கடவுளுக்கும் அதே நிறம்....
கலங்காதே கண்மணியே.....
கருணை உந்தன் குணமானால்
கறுப்பு வெறும் நிறம் மட்டுமே....
அவசர அவசரமாய் கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் இலக்கியா.
“அம்மா..... என்னோட கண்மையைப் பார்த்திங்களா.... இங்கே காணோம்.....” மேசை வலிப்பில் தேடிக் கொண்டே குரல் கொடுத்தாள்.
“எனக்குத் தெரியலைம்மா.... அங்கே தான்...
இலக்கணம் – 9
நிலவுத் தோழிக்கு நிச்சயதார்த்தம்....
நெஞ்சம் நிறைய வாழ்த்திடவே
நான் விண்மீன்கள் வாங்கி வந்தேன்....
உன் குறும்பாலும் குணத்தாலும்
எங்கள் மனம் நிறைத்தது போல்
நின் நெஞ்சம் நிறைந்தவர் மனதிலும்
புன்னகை தீபத்தை ஏற்றிவைப்பாய்.....
மணமகளாய்.... மனம் படிக்கும்
தோழியாய்..... தாயாய்..... தாரமாய்....
தமக்கையாய் எல்லாமுமாய்....
அரவணைக்க அவதாரம் எடுத்து
அன்பால் புது சாம்ராஜ்யம் அமைக்க
ஆவலோடு வாழ்த்துகிறேன் தோழி.....
ஆனந்தமாய் சுமங்கலியாய் அன்புப் பதியின்
ஆருயிரில் கலந்து நீடூழி நீ வாழ்க...
“என்ன... யாரும் எதுவும் பேசாம இருக்கீங்க... இளா எங்கேம்மா...” லலிதாவை அவன் அம்மா என்றே அழைத்தான்.
“உங்க ரூமுல இருப்பா மாப்பிள்ளை... அவகிட்டயே கேளுங்க...” என்றவர் அமைதியாகி விட, “என்னடா இது... யாருமே வாயைத் திறக்க மாட்டேங்கிறாங்க...” யோசித்துக் கொண்டே அவர்களின் அறையை நோக்கி நகர்ந்தான். தாளிட்டிருந்த கதவை மென்மையாய்த் தட்ட, கதவைத் திறந்த இலக்கியாவை...
இலக்கணம் – 3
“விக்ரம்.... என்னடா இது.... இப்பல்லாம் நீ ரொம்ப கோபப்படறே....... எதுக்கு அந்தப் பையனைப் போட்டு அப்படி அடிச்சே......” கேட்டுக் கொண்டே விளையாட்டு மைதானத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த நண்பனின் அருகில் அமர்ந்தான் வினோத்.
கோதுமை நிறத்தில் ஆறடி உயரத்தில் லட்சணமாய் இருந்த விக்ரமின் கண்களில் ஒரு வேட்டைப் புலியின் தீட்சண்யம் இருந்தது. அழகான முடியை...