Ilak Mar
இலக்கணம் – 19
கோபத்திலும் வெறுப்பிலும், விக்ரம் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்திலும் நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது இலக்கியாவின் மனது. சத்யாவைப் பற்றி அவன் சொன்ன விஷயங்கள் மனதை காயப் படுத்தியிருக்க, அதை நம்புவதையும் மீறி தன் நண்பன் விக்ரம் சொல்லி விட்டானே... என்ற எண்ணம் அந்தக் காயத்தின் வேதனையை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.
காலையில் சந்தோஷமாய்க் கிளம்பிச் சென்ற...
இலக்கணம் – 27
“அங்கிள், கொஞ்சம் உள்ளே வாங்க...” என்றதும் கனகு உள்ளே வர, “இந்த அப்ளிகேஷன்ல உள்ள வரிசைப்படி ஒவ்வொருத்தரா வர சொல்லுங்க...” என்றாள்.
“சரிம்மா...” என்றவர் ஹாலில் காத்திருந்தவர்களிடம் சென்று, ஒவ்வொருத்தராய் உள்ளே அனுப்பினார். கனகை அங்கேயே இருக்கும்படி சொல்ல அவரும் தொழில் சம்மந்தமான சில கேள்விகளை வந்தவர்களிடம் கேட்டார்.
குவாரி, கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் அவர்களின்...
இலக்கணம் – 15
சூரியன் மெல்ல கிழக்கில் உதிப்பதற்கான ஆயத்தப் பணியில் இருக்க, அந்த பெரிய கல்யாண மண்டபம் மேளதாளம் எதுவுமில்லாததால் கலகலப்பு எதுவுமின்றி அமைதியாய் இருந்தது. காலையில் ஆறு முதல் ஏழு மணிக்குள் முகூர்த்த நேரம் ஆதலால் சொந்த பந்தங்களும், நட்புகளும் வரத் தொடங்கி இருந்தனர்.
அய்யர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க கல்யாண மாப்பிள்ளை சத்யா...
இலக்கணம் – 23
“என்னடி சொல்லற, உன் அத்தான் விக்ரம் பத்தி விசாரிச்சாரா... அதுக்கு என்ன அவசியம்...” அலைபேசியில் இலக்கியா சொன்ன விஷயங்களைக் கேட்டு ஆச்சர்யக் கேள்வி கேட்டாள் வீணா.
“ஆமாண்டி, நான் எப்பவோ ஒரு நாள் சொல்லி இருந்தேன் விக்ரம்க்கு ஏதாவது நல்ல வேலை வேணும்னு... அதை இப்போ கேக்குறார்... ஆனா அவர் குடும்பத்தைப் பத்தி...
இலக்கணம் – 8
தேர்வுக்காய் கிளம்பிக் கொண்டிருந்தனர் விக்ரமும் வினோத்தும்.
“டேய் விக்ரம்...... இன்னைக்காவது உன்னோட மனசில் உள்ளதை இலக்கியாகிட்டே சொல்லப் போறியா... இல்லை சொல்லாம திரும்ப வந்திடுவியா....” என்றான் வினோத்.
“ம்ம்..... எக்ஸாம் முடிஞ்சதும் அவகிட்டே பேசறேன் டா.... இன்னைக்கு கண்டிப்பா சொல்லிடறேன்....” என்றான் விக்ரம்.
“ம்ம்.... சரிடா..... உன் மனசுல உள்ளதை ஓபனா சொல்லிடு..... அப்புறம் அவ...
இலக்கணம் – 1
கறுப்பு சிலையொன்று
கால் கொண்டு நடந்ததோ....
கறுப்பான தோலுக்குள்
குருதி நிறம் சிவப்பன்றோ.....
கள்ளமில்லா சிரிப்புக்குள்ளே
கலந்திருக்கும் வெள்ளையன்பு....
கறுப்பென்றும் சாபமல்ல....
கடவுளுக்கும் அதே நிறம்....
கலங்காதே கண்மணியே.....
கருணை உந்தன் குணமானால்
கறுப்பு வெறும் நிறம் மட்டுமே....
அவசர அவசரமாய் கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் இலக்கியா.
“அம்மா..... என்னோட கண்மையைப் பார்த்திங்களா.... இங்கே காணோம்.....” மேசை வலிப்பில் தேடிக் கொண்டே குரல் கொடுத்தாள்.
“எனக்குத் தெரியலைம்மா.... அங்கே தான்...
இலக்கணம் – 5
மேடையில் இருந்து கீழே வந்த விக்ரமிடம் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவிக்க, நம்ப முடியாமல் அதே திகைப்புடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளை இழுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்ற வீணா, “நாட்டு நடப்பை அருமையா கவிதைல சொல்லிருக்கீங்க அண்ணா..... வாழ்த்துகள்.....” என்றாள். சிறு புன்னகையுடன் தலையசைத்தவன் அவளுக்கு அருகில் நம்ப முடியாத...