Tuesday, June 18, 2024

    முள்வேலியா? முல்லைப்பூவா?

    அத்தியாயம் – 3 காலையில் எழுந்த ரேகா, அருகில் வருண் இல்லாதது கண்டு பெரிதாக எண்ணவில்லை. பாதி நாட்கள் அவன் விடியலிலேயே தோட்டத்திற்கு சென்றுவிடுவது வழக்கம்தான். அவசர கதியில் தன்னை சுத்தம் செய்தவள், கைப்பேசியை எடுத்து, அவள் நட்பு வட்டத்திற்கு அழைத்தாள்.  நேற்று சஹானாவைப் பார்த்ததைக் கூறி விவரம் சேகரிக்க சொல்லிவிட்டுத்தான் காலை உணவிற்கே கீழே இறங்கினாள். கேட்ட...
    அத்தியாயம் – 6 காலையில் வழக்கமாக தேயிலை தோட்டத்தின் எதாவது ஒரு பகுதியை பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்தான் சுதர்ஷன். அன்றும் அதைப் போல முடித்துவிட்டு உள்ளே நுழையவும், சண்முகம் எதிர்பட்டார். “சர்… பாட்டிம்மா வந்திருக்காங்க” என்றார் பவ்யமாக. அவரை ஆச்சரியப்பார்வை பார்த்தவன், “என்ன திடீர்னு? போன் கூட செய்யலை? நல்லா இருக்காங்கதானே?”, என்று விசாரித்தப்படியே விச்ராந்தையாக சோஃபாவில் அமர்ந்தான். “நல்லாத்தான்...
    சப்பாத்தி, அடுத்து சாம்பார் , கூட்டு என்று சாப்பிட்டவள், அதற்கு மேல் முடியாது என்பது போல தயிர் கப்பை கையிலெடுத்து பின்னுக்கு நகர்ந்து அமர்ந்தாள். “என்ன அவ்வளவுதானா? குழந்தை கூட இதைவிட அதிகமா சாப்பிடும். ரசம் சாப்பிடு”, என்று உபசரித்தான். “இல்லை. அதிகமா சாப்பிட முடியாது, இப்படியே பழகிருச்சு. பட் சாப்பாடு வேஸ்ட் பண்ண வேணாம். பாக்...
    அத்தியாயம் – 8 மதியம் உணவருந்த வந்த சுதர்ஷன் பார்த்தது, சோகமாக அமர்ந்திருக்கும் அவன் அம்மம்மாவைத்தான். “எந்த சமஸ்தானம் உங்களுக்கு கப்பம் கட்டலை அம்மம்மா? இவ்வளவு சோகமா இருக்கீங்க?”, என்று புன்னகையுடன் அமர்ந்தான். “ம்ப்ச்… போடா பேராண்டி!”, முகம் திருப்பினார். “அச்சோ…அவ்வளவு சோகமா? என்னாச்சு சொல்லுங்க!”, மெல்ல அவர் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டான். சஹானாவைப் பத்தி நேரடியாக எப்படி...
    அத்தியாயம் – 5 சஹானா இந்த ஒரு வாரமாக உற்சாகமாக இருந்தாள். அயத்தானா ரிசார்ட், ஊட்டியின் உயர்தர ரிசார்ட் வகை ஹோட்டல்.   ஹாஸ்பிட்டாலிடி எக்சிகீயுட்டிவ் வேலை. அதே வருவோரை வரவேற்று, புக்கிங் பார்த்து என்ற வழக்கமான வேலைகள்தான், பெயரில், அணியும் உடையில், பேசும் தொனியில் கொஞ்சம் பந்தா, கொஞ்சம் நாகரிகப் பூச்சு. உணவு, தங்குமிடம், பாதுகாப்பு எல்லாம்...
    “சார்… நீங்க அந்த சர்வர் பொண்ணு பத்தி கேட்ட விவரம்..”, என்று வந்து நின்றார் சண்முகம். “சொல்லுங்க சண்முகம்”, என்று நடப்பிற்கு வந்தான் சுதர்ஷன். வீடு வரை வந்த ரேகாவிற்கு சஹானாவின் மேல் ஆத்திரம் பொங்கியது. சுதிர் ட்ரைவரை அனுப்பியவள், அடுத்த நிமிடம் சஹானாவின் வீடு நோக்கி காரெடுத்துச் சென்றாள். வருண் குருவிடமிருந்து தகவலைப் பெற்றான். சஹானா...
    அத்தியாயம் – 7 சஹானாவிற்கு அன்றைக்கு நைட் ஷிஃப்ட். வேறு ஒருவர் செய்ய வேண்டியது. அவர் குழந்தைக்கு திடீரென்று முடியாமல் போய்விட்டதால், சஹானா ஏற்றுக் கொண்டாள். இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. சண்முகம் கிளம்ப இருந்தவர், ரிசெப்ஷனில் அவளைப் பார்த்து திரும்பி வந்தார். “சஹானா, ம்ப்ச் இன்னிக்கு நீ எதுக்குமா இந்த ஷிஃப்ட் எடுத்த, லீவ் எடுத்தவனுக்கு பதிலா...
    அத்தியாயம் – 9 வருண் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. கஹுத்தில் காலரைப் போடுக்கொண்டு வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தான். சற்றே பயந்து போயிருந்த அவனை ஆதரிக்கும் சிறிய எஸ்டேட் முதலாளிகளுடன் பேசி இது எதேர்சையாக நடந்து விபத்து.  பாண்டி ப்ரதர்ஸ் தாங்களால் என்று சும்மா கிளப்பிவிட்டு பயப்படுத்துகிறார்கள் என்று நம்பிக்கையாகப் பேசினான். ஆனாலும்...
    அயாத்தனாவின் லாபியில் அமர்ந்தார் கமலம். செம்பருத்தி ஒரு வடக்கத்திய தம்பதியிடம் பேசிக்கொண்டு நின்ற சஹானாவை அளையாளம் காட்டியதும், ‘நீ போய் கார்ல இரு. நான் வேணும்னா போன் பண்றேன்”, என்று துரத்திவிட்டார். அமைதியாக சஹானாவை பார்த்தும் பார்க்காமலும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். அந்த மனிதர் கேட்டதற்கு புன்னகை மாறாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு வழியாக அவர் மனைவி...
    “எங்க இருக்க சஹானா?”, கைபேசி அழைப்பை எடுத்தவுடன் சுதர்ஷனனின் குரல் அதிகாரமாக வந்தது. “ஏன்”, மொட்டையாகக் கேட்டாள் சஹானா. “ம்ப்ச்… பேசணும். சொல்லு” என்றான் சற்று எரிச்சலாக. “சரி… சொல்லு”, என்றாள் வேண்டுமென்றே. “சஹானா…” எச்சரிக்கும் குரலில் அழைத்தான் சுதர்ஷன். “ஹே… என்ன? போன் பண்ணது நீ. என்ன விஷயமோ சொல்றதுன்னா சொல்லு. இல்லையா ஆளை விடு” எரிந்து விழுந்தாள் சஹானா. இனிமையாகச்...
    அத்தியாயம் – 10 விடியற்காலை ஐந்து மணி. சஹானா ஒரு ட்ராக் சூட், ஷூ சகிதம் கையில் போனோடு வெளியே வந்தாள். சூரியன் இருட்டை ஊடுறுவும் முயற்சியில் இருக்க, பனிப் படலம் அதோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தது. சன்ரைஸ் படம் எடுக்க முயலும் ஹோட்டல் கெஸ்ட் போல ஹூடியை இழுத்து தலைக்கு போட்டிருந்தவள் போட்டோ எடுக்க தோதான இடமாக பார்ப்பதுபோல...
    “ம்க்கும்…கேட்டுட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க!”, நொடித்தாள் ரேகா. “நீ ஏண்டா அவங்களை பேசவிட்டுட்டு அப்பறம் ப்ளீஸ் போட்டு கெஞ்சற? லிமிட் க்ராஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சா அதட்ட மாட்ட? எப்ப முதுகெலும்பு வளரப்போது உனக்கு?”, சஹானா முறைக்கவும், “சஹானா, அவரை திட்டாதே”, என்று அதட்டினாள் ரேகா. “ம்க்கும்… அவனுக்கு இல்லைன்னா, நீயாச்சம் கொஞ்சம் முதுகெலும்பு வளர்த்துக்கலாம். உன் மாமியாரை திரும்ப...
    அத்தியாயம் – 14 கோவை மருத்துவமனையின் ஐ.சி.யூ வாசலில் காத்திருந்தார்கள் சுதர்ஷனும் சஹானாவும். கடந்த மூன்று மணி நேரம் திக் திக் நொடிகளாகக் கடந்திருந்தது. பாட்டி சரிந்திருந்த விதத்தைப் பார்த்ததும் ஸ்ட்ரோக் என்பது புரிந்தது. கோல்டன் ஹவர் என்று சொல்லப்படும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் போட வேண்டிய ஊசியைப் போட்டால்தான் இதன் வீரியத்திலிருந்து தப்ப முடியும். ஊட்டியின்...
    “பாண்டி ப்ரதர்ஸ்சை மாட்டி விடலை, நீ எம்.எல்.ஏவையும் சேர்த்து மாட்டிவிடற புரியுதா? நம்ம சிக்கினா விளைவு மோசமா இருக்கும்.  எம்.எல்.ஏவோட லிங்க் இருக்குன்னு எங்களுக்கும் தெரியும். இப்ப எதுக்குன்னும் தெரிஞ்சிடுச்சு.  வருண் என்னவோ, அந்த எம்.எல்.ஏகிட்ட ஆதரவு கேட்கலாம்னு சொல்லிட்டு இருந்தான்.என்ன டொனேஷன் நாம குடுத்தாலும், மாச மாசம் படியளக்கற அவனுங்களை பகைச்சிக்க மாட்டார்....
    அத்தியாயம் -12 ‘அட நீதானா அந்தக் குயில் ‘ என்று நினைத்த சஹானா அழகான ஒரு புன்னகையை சிந்தி, “வெல்க்கம் சர், ஹால் இங்க இருக்கு”, என்று இராஜவேலை அழைத்துச் சென்றாள். “ஹ்ம்ம்… நீ தான் மும்பையிலர்ந்து வந்திருக்க புதுப்பொண்ணா? பங்கஜ் சொன்னார் அவர் கூட லன்ச் சாப்பிட்டியாமே? என்ன பேர் உனக்கு?”, ஏளனமான ஒரு புன்னகையை...
    “என்னோட லன்ச் சாப்பிட வரியா பேபி? சும்மா கம்பனி குடு”, என்று பங்கஜ் கேட்கவும் நொடியும் தாமதிக்காமல், “சாரி சர். கெஸ்ட் கூட நாங்க பழகக் கூடாது”, என்றாள் ஒரு வருத்தப் புன்னகையோடு. “ஹே…அதெல்லாம் மத்தவங்களுக்கு. டேனி…எனக்கு எங்க ஊர்காரியோட பேசிகிட்டே சாப்பிடணும். லன்ச் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லு. சீ யூ பேபி”, என்று லிஃப்ட்டை நோக்கி...
    அத்தியாயம் - 11 சுதிர் வருணின் அலுவலக அறையில் இருந்தான். வருண் அந்த வார இறுதியில் வைக்கப் போகும் பார்ட்டிக்கான திட்டமிடலுக்காக என்று எண்ணி வந்திருந்தான் சுதர்ஷன். அதைப் பற்றி எதுவுமே பேசாமல் வருண் நேரடியாக சுதர்ஷனிடம் தன் பிடித்தமின்மையைக் காட்டினான். “சுதிர், நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா? எதுக்கு சஹியை இதுல இன்வால்வ் பண்ணீங்க? என்னென்னவோ சொல்றா?...
    அத்தியாயம் – 15 “தர்ஷூவா? அது யாரு”, வருண் கேட்கவும், “ம்ம்… அவருக்கு நான் வெச்ச செல்ல பேரு”, என்று அடிக்கண்ணால் ஒரு பார்வை சஹானா சுதர்ஷனைப் பார்க்க, ஒரு நொடி அவனுக்கே ஜெர்க்கானது. “அஹ்… அம்… யா சனா”, என்று அவனும் அவன் பங்குக்குத் தோன்றியதை அடித்து விட, “இருங்கப்பா… நான் கொஞ்சம் ஸ்டெடியாகிக்கறேன்”, என்று நெஞ்சில் கைவைத்தபடியே...
    செல்லும் வழியிலேயே வருணை கைப்பேசியில் அழைத்தாள். அவன் எடுத்ததும், “ஏண்டா… அறிவை அடமானம் வெச்சிட்டியா?” “மார்னிங் சஹி…எப்படி இருக்க?”, வருண் அவள் சொன்னது காதிலேயே விழாதது போல உற்சாகமாக பேசினான். “டேய்… உன் மொக்க ஐடியாவை இப்பத்தான் சுதர்ஷன் சொன்னான். அப்பறம்தான் நல்லாயிருந்த மார்னிங் கெட்டுப்போச்சு”, என்றாள் எரிச்சலாக. இவன் பேசி இரண்டு நாட்களாகியிருக்க, “என்ன ஐடியா சஹி?”, என்றான்...
    சஹானா சொன்னதைக் கேட்டு, “பொறுப்பான பொண்ணு கண்ணு நீ” என்று நெட்டி முறித்தார். அதைப் பார்த்து ஒற்றை புருவம் தூக்கியவன், ஒரு லேசான தலையசைப்புடன் அவன் அறைக்குத் திரும்பிவிட்டான். அவள் குடும்பம், பெற்றோர், வருண் என்று பேச்சு சென்றது. சுதர்ஷன் பெற்றோரை சிறு வயதிலேயே விபத்தில் பறி கொடுத்தது, கமலம் வளர்த்தது, அவனது அமெரிக்கா வாழ்க்கை...
    error: Content is protected !!