கொடிச்சி
6
அன்று
மெல்லினா தன் கணினியில் அவளுக்கென்று தனியாக ஒரு போல்டரை மறைத்து வைத்திருந்தாள். அவளின் பொக்கிஷங்கள் எல்லாம் அதில் தானிருக்கின்றன. அவள் நினைக்கும் போதெல்லாம் அதைத்தான் எடுத்து பார்த்துக் கொள்வாள்.
தந்தையின் ஆசைக்காகவும், அன்னையின் விருப்பத்திற்காக மட்டுமின்றி அவள் தனக்காகவும் தான் காவல்துறையை தேர்ந்தெடுத்தாள் அப்போது. வேலைக்கு சென்ற புதிதில் பிடிக்காது போனாலும் அவள் மனதிற்கு பிடித்தவன்...
“ஹ்ம்ம் பண்ணலாம் பண்ணலாம்”
“உனக்கு முப்பது வயசாக போகுது ஆதி. ரெட்டையில கல்யாணம் பண்ண மாட்டாங்க. இந்த வருஷம் உனக்கு எப்படியும் கல்யாணம் பண்ணிடணும்”
“உனக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னா ஒண்ணு ஜாதகம் செட் ஆக மாட்டேங்குது இல்லை பொண்ணு பிடிக்கலை, அதுவும் இல்லைன்னா அவங்க வீடு பிடிக்கலைன்னு இதுவரை இருபது பேரை தள்ளி வைச்சாச்சு”
“எனக்கு தெரியாம இவ்வளவு...
5
அன்று
மெல்லினாவிற்கு பதினாறு பதினேழு வயதிருக்கும் அப்போது. அவள் தந்தை ஸ்டேஷனுக்கு சென்றிருந்தார். தங்கை பள்ளிக்கு சென்றிருந்தாள். மெல்லினாவிற்கு பன்னிரண்டாவது என்பதால் படிப்பதற்கு அவளுக்கு விடுமுறை இருந்தது.
மெல்லினாவும் படித்து முடிந்து அமர்ந்திருந்தாள். அப்போது தான் மகேஸ்வரி சமையல் முடித்து அவளருகே வந்து அமர்ந்தார். “மெல்லினா டிவி போடுடா” என்றவாறே.
“என்னம்மா சீரியலா??”
“நானெங்கே சீரியல் பாக்குறேன், இன்னைக்கு எனக்கு...
இன்று
“டேய் இவ எதுக்குடா இப்போ என்னை திட்டினா??” என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான் அவன்.
நித்தேஷோ “அடேய் அவ திட்டினது மட்டும் தான் உன் மண்டையில இருக்கா?? வேற ஒண்ணும் கவனிக்க மாட்டியா நீ??”
“நித்தேஷ் நீ சொன்னது நிஜமா??”
“எதை நிஜமான்னு கேட்கறே நீ??”
“அவ மனசுல நான் இருக்கேன்னா சொன்னா அவ”
“அதை சொல்லி தான் இம்புட்டு...
4
அன்று
“டேய் ஆதி உனக்கென்ன தலையெழுத்தாடா இப்படி கான்ஸ்டபிள் வேலை பார்க்கறேன்னு எங்க உயிரையும் சேர்த்து எடுக்கறே. ஒழுங்கா வீட்டில இரேன்டா ரிசல்ட் வர்ற வரைக்கும்” என்று அங்கலாய்த்தது ஆத்திரேயனின் அன்னை வாசவி.
“அம்மா உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது இனிமே இப்படி சொல்லாதீங்க. எதையும் ஆதியில இருந்து படிக்கணும்மா அடி மட்டத்துல இருந்து மேல வந்தா...
‘அவர் இருந்தா என்னை காப்பாத்துவார்ல’ என்று குருட்டு தைரியத்தை மனதில் வைத்து அவள் அங்கு செல்ல அந்தோ பரிதாபம் அவன் அங்கில்லை. இது போல திட்டமிட்டு காரியம் செய்பவர்கள் உடனிருப்பவர்களை அப்புறப்படுத்தி தான் காரியம் நிகழ்த்துவர் என்பதை அவள் யோசித்திருக்கவில்லை.
அவள் அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருக்க கதவை திறந்த ராஜன் போதையுடன் கதவை திறந்தான்....
3
அன்று
“என்னை வரச்சொன்னீங்களாமே சார், சொல்லுங்க என்ன விஷயம்??” என்று முறைப்போடே தயாளனின் முன் வந்து நின்றாள் மெல்லினா.
“என்னடி திமிரா??” என்றார் அவர் எடுத்த எடுப்பிலே.
“மரியாதையா பேசுங்க, இல்லைன்னா...”
“இல்லைன்னா என்னடி செய்வே??” என்றார் அவர் இன்னும் எகத்தாளமாய்.
“உங்ககிட்ட நான் பேசுறது வேஸ்ட்” என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க “ஹேய் நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு...
2
அன்று
“அம்மா எதுக்கு இப்படி உம்முன்னு உட்கார்ந்து இருக்கீங்க??”
“பின்ன என்ன பண்ண சொல்றே என்னை, நீ ஒரு ஊர்ல நாங்க ஒரு ஊர்ல இருக்கறதா” என்று பேசிக்கொண்டே ஸ்வெட்டரை அவள் எடுத்து செல்ல வேண்டிய பெட்டியில் வைத்தார் அவளின் அன்னை மகேஸ்வரி.
“அம்மம்மா ஸ்வெட்டர் எதுக்கும்மா எடுத்து வைக்கறீங்க?? அதெல்லாம் வேணாம் மதுரைல எல்லாம் இது தேவைப்படாதும்மா”...
இரவு மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தின் வெளியே இருந்த நிறுத்தத்தில் மோகனும் மெல்லினாவும் தனித்தனியே வந்திறங்கினர். மோகன் பெண் வேடம் அணிந்திருந்தார், பார்க்க அச்சு அசலாய் பெண்ணாகவே இருந்தார்.
“அண்ணே நான் ஓகே நீங்க எதுக்குண்ணே??” என்று கேட்டே விட்டாள் மெல்லினா.
மோகனின் முகமே சரியில்லை. “நான் தான் சொன்னேன்ல மெல்லினா தயாளன் சார் சரியில்லைன்னு”
“நம்ம இன்ஸ்பெக்டரையா சொல்றீங்க??”
“வேற...
“யோவ் ஐபிஎஸ் முடிச்சுட்டு டைரக்ட்டா வந்திருக்காரு,ரெண்டு வருஷமா இங்க தான் இருக்காரு. நீ தான் நேத்து வந்திருக்க இங்க”
“நிஜமாவா இவன் ஐபிஎஸ்ஆ”
“என்னய்யா உன் பிரச்சனை ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க??”
“அதில்லை சரவணா இவன் அங்க இருக்கும் போது நான் கூட குறைய செஞ்சுட்டேன். இப்போ என்னைப் பார்த்தா என்ன செய்வானோ அதான்...
1
அன்று
-----------
வீட்டில் இருந்து கிளம்பும் போதே மணி ஏழரை ஆகியிருந்தது. ‘கடவுளே கிளம்பும் நேரமே சரியில்லையே, முதல் நாளே அந்த ஏட்டு சொல்லியிருந்தாரே. நாளைக்கு இன்ஸ் வருவாரு சீக்கிரம் வந்திடுங்கன்னு’
‘எஸ்ஐ வேற லீவுல இருக்காரு. இவரு வந்து என்ன சொல்லப் போறாரோ’ என்று மனதில் ஓட தன்னுடைய ஸ்வெட்டரை இழுத்துவிட்டுக் கொண்டு வேக எட்டுக்கள் போட்டாள்...