Tuesday, June 17, 2025

    Tamil Novels

    வல்லவன் 35 ஏர்ப்போர்ட்டில் ஆத்விக் தலைகவிழ்ந்து கவலையுடன் அமர்ந்திருந்தான். அருகே அமர்ந்திருந்த குட்டிப் பொண்ணு அவனை பார்த்து, அங்கிள்..சாக்லெட் நீட்டியது. பாப்பா தலையை தடவி, வேண்டாம்மா என்றான். “அங்கிள், சாக்லெட் சாப்பிட்டால் அழுகையே வராது” அந்த பொண்ணு சொல்ல, ஆரவ்வும் கவினும் அவன் முன் வந்து சீற்றமுடன் அவனை முறைத்தனர். அவர்களை கண்டு எழுந்த ஆத்விக், “நீங்க எப்படி...
    வல்லவன் 34 நேசன் அம்மா கனிகா அருகே அமர்ந்தார். அவள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள். “கனிம்மா, நீ இங்க வேலை பார்க்கணும்ன்னு நினைக்கிறியா?” அவர் கேட்டாள். “இல்லை” தலையசைத்தாள். உனக்கு அண்ணா, தம்பி, அக்கா, தங்கை யாரும் இருக்காங்களா? ம்ம்..என்று அவரை பார்த்து, அம்மாவுக்கு உடல்நலமில்லை என்று பணம் கேட்டு விடுவானோன்னு அவங்க பேசுவதை மொத்தமாக நிறுத்தீட்டாங்க.. “இப்ப மேரேஜூக்கு...
    வல்லவன் 33 என்னடா சொன்ன? அம்மாவை விட்டு வந்துட்டியா? அவங்க திட்டியதை அமைதியாக இத்தனை நாள் கேட்டுக் கொண்டிருந்தது நம்ம நட்புக்காக மட்டுமல்ல உன் அம்மாவுக்காகவும் தான். அவங்களுக்கு உன்னோட மாமாவும் நீயும் தான் உலகமே! ஆனால் நீ இப்படி பேசுற? என்னோட அம்மா, அப்பா எப்படி என்னை தனிமையில் தவிக்க விட்டாங்களோ? அதே போல உன்னோட...
    வல்லவன் 32 அபிமன் நிகிதாவை செக் அப்பிற்காக அழைத்து சென்றிருந்தான். ஆரவ்வும் சுவேராவும் ஆத்விக் அறைக்குள் சென்றனர். “டேய், அவகிட்ட என்ன பேசுன? வினு முகமே சரியில்லை” ஆரவ் கேட்க, அவன் நிமிர்ந்து கூட பாராது “என்ன பேசினேனா? கேஷ் விவரம் தான் பேசினேன். அவள் சரியாக விளக்கவில்லை. அதனால் திட்டினேன். கோபத்துல்ல விடுப்பு எடுப்பதாக சொல்லீட்டு போயிட்டா”...
    வல்லவன் 31 விடியல் பிறக்க உற்சாகமுடன் எழுந்தான் ஆரவ். அனைவரும் தயாரானார்கள். சாப்பிட அமர்ந்த நேரம் கார் சத்தம் கேட்டு ஆர்வமுடன் துருவினி வாசலை பார்த்தாள். ஆத்விக் வந்தான். ஆது..வா வா..ஏன்டா கால் பண்ணா எடுக்க மாட்டியா? ஆரவ் அவனை அணைத்தான். எல்லாரையும் பார்த்தவாறு துருவினியை பார்க்காதது போல ஆரவ்வுடன் அமர்ந்தான். அதியா ஆத்விக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் போல...
    வல்லவன் 30 “அத்து” அவள் அழைக்க, நிமிர்ந்து பார்த்த ஆத்விக் வேகமாக எழுந்தான். “அத்து” அவள் அவனை அணைக்க அவளை தள்ளி விட்ட ஆத்விக், “ஏதாவது திட்டுடா. அவள் உன் பக்கம் வரக் கூடாது” மனதில் எண்ணினான். “என்ன பண்ற?” முகத்தை சிடுசிடுவென வைத்து ஆத்விக் கேட்டான். “அத்து, நீங்க என்னோட அழைப்பை எடுக்கவில்லை” அவள் கண்கலங்க கேட்டாள். நான் சும்மாவா...
    அத்தியாயம் 32 மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே …………………. தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும் நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும்...
    வல்லவன் 29 இப்பரந்த உலகில் தன் பொற்கரங்களை போர்வையாக விரித்து ஆதவன் வெளியே வந்தார். லாவண்யா கண்ணை விழித்தாள். பக்கத்தில் மிருதுவாக தெரிய நகர்ந்து அதனை பார்த்தாள். சார்லி, நீ எப்படா வந்த? எப்படி வந்த? புதிய தனிய அறையில் இருந்த அவள் சிரித்துக் கொண்டே அவனை தூக்கினாள். மியாவ்..மியாவ்..பூனை கத்த, எப்படி வந்த? அவள் கேட்க, சன்னலருகே...
    அத்தியாயம் 31 சடங்கு, சம்ப்ரதாயம், குலதெய்வப்பூஜை என்று எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே ரகுராம் மோகனாவோடு அவன் வீட்டில் குடியேறினான். "இருக்கிறதே ஒரு பேரன், ஒரு பேத்தி. இவன் வீட்டுலையே தங்கல. வீட்டுல இருந்தவளும் வீட்டை விட்டுப் போனா எப்படி?" ஆளவந்தானோடு இருக்க மாட்டேனென்று விக்ரம் பாரதியை அழைத்துக்கொண்டு சென்று விடுவான். மோகனாவும் இல்லையென்றால், வீடே அமைதியாகும். தன்னால்...
    வல்லவன் 28 சுவேரா வீட்டிற்குள் செல்லவும் சாய் லாவண்யா ஹாஸ்ட்டலுக்கு வந்து பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். “உள்ளே விட மாட்டாங்களே! கடவுளே! லாவா எந்த விபரீத முடிவும் எடுத்துக்காம பார்த்துக்கோங்க” என்று கும்பிட்டு நகர்ந்தான். விழியான் நேராக ஹாஸ்ட்டலுக்குள் சென்றான். விடுதி காப்பாளர் அவனை பார்த்து, யார் வேணும்? கேட்டார். லாவண்யா.. அவளா? அழுதுட்டு இருப்பா.. மேம், அந்த பொண்ணோட அறையை மாற்ற...
    வல்லவன் 27 ஆத்விக் அறைக்கதவை தாழிட்டு அவனை நெருங்கினாள் துருவினி. . “வினு” எச்சிலை விழுங்கி ஆத்விக் அழைத்தான். அவனை நெருங்கிய துருவினி, “மாமா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் ஆத்விக். “வினு, நீ நிஜமாக தான் சொல்றீயா?” அவன் கேட்க, அவன் மடியில் அமர்ந்து..ம்ம்..கண் சிமிட்டி தலையை வேகமாக ஆட்டினாள். மடியில் அமர்ந்த அவளை தன்னுடன் நெருக்கி,...
    வல்லவன் 26 தாராவிற்கும் மாப்பிள்ளைக்கும் நிச்சயம் நடந்தது. தாராவின் சொந்தங்களின் ஊடே சுவேராவும் இருந்தாள். பின் இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டனர். இருவரும் வெளிநாட்டு இசைப்பேற்ப நடனமாட மற்றவர்களையும் அழைத்தனர். அதியா ஆரியனை ஓரப்பார்வை பார்த்தாள். அவன் புருவத்தை உயர்த்த, “ஆரு நாமும்” நடனமாடும் ஜோடியை பார்த்தாள். அவன் கையை நீட்ட, அதியா புன்னகையுடன் அவன் கையை...
    வல்லவன் 25 பாஸ், அவன் சந்தோசமா இருக்கான் இருட்டடைந்த அறையில் இருந்த ஒருவனிடம் அடியாள் ஒருவன் வந்து சொன்னான். எப்படிடா? அவன் இருக்கக் கூடாது. நாளைக்கு அந்த தாரா நிச்சயம் முடியவுமே அவனை போடுங்க..அவன் உயிரோட இருக்கவே கூடாது சீற்றமுடன் கத்தினான் அவன். பாஸ், முக்கிய ஆட்கள், நீதிபதி, போலீஸ், வக்கீல், பிசினஸ் ஆட்கள் பெரிய ஆட்களெல்லாம் வருவாங்க....
    வல்லவன் 24 அதியாவை ஆரியன் அவன் மடியில் அமர்த்தி அமர்ந்தான். அதி, நீ கண்டிப்பா விளையாட்டு தனமா இருக்கக்கூடாது. கவனமா இருக்கணும். எனக்கு உன்னை அந்த கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் விசயத்தில் பயமா இருக்கு. அனுப்பவே பிடிக்கலை. ஆனால் உன் அக்காவை எண்ணும் போது என்னால அனுப்பாமல் இருக்க முடியாது வருந்தினான். நான் பத்திரமாகவும் கவனமாகவும் இருப்பேன்...
    அத்தியாயம் 30 ஆனந்தமாக நுழைய வேண்டிய முதலிரவு அறைக்குள் பாரதி பதைபதைப்போடுதான் வந்தாள். தனக்கும் விக்ரமுக்கும் திருமணமாகிவிட்டது என்பது கூட கனவா? நனவா? என்ற குழப்பம். இதில் விக்ரம் பேசாதது வேறு அவளை யோசிக்க வைத்திருக்க, அனல் தெறிக்க விக்ரம் பேசினால் மேலும் ஒரு ரணத்தை தன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்ற அச்சம் அவள் உடலில் ஊடுருவி...
    வல்லவன் 23 எதுக்கு சார் வெயிட் பண்ண சொன்னீங்க? துருவினி கேட்க, எல்லாரும் சென்று விட்டார்களா? என கன்பார்ம் செய்து கொண்டு, வினுக்கு மாலை கூட போட  முடியலையா?ஆத்விக்  கேட்டான். துருவினி ஏதும் பேசாமல் நின்றாள். அவளை நெருங்கிய ஆத்விக், அவள் எதிர்பாராத நேரம் அவளை இழுத்து தன் கைக்குள் வைத்து, “மாலை போட முடியாதாடி” உரிமையுடன்...
    வல்லவன் 22 வெய்யோன் தன் சுடரொளியை மறைக்க, துருவினியும் கையில் பையுடன் சக்தி என்ற சுவேராவும் வந்தனர். ஆத்விக்கும் வெளியே வந்தான். காஃபியை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்த அதிவதினி அதிர்ந்து சக்தியை பார்த்தார். “சக்தி, நீ நிஜமாகவே போகப் போறீயாம்மா?” அதிவதினி வருத்தமுடன் கேட்க, ஆரியன் எழுந்து அவள் கையிலிருந்த பையை வாங்கினான். "அண்ணா" துருவினி அழைக்க, சக்தி ஆத்விக்கை...
    அத்தியாயம் 29 பாரதிக்காக தனதறையில் காத்திருக்கலானான் விக்ரம். இந்த ஒருவாரமாக அவள் அவனது அறையில்தான் இருக்கின்றாள். அலங்காரத்திற்காக சூடப்பட்ட மலர்களையும் தாண்டி அவள் சுகந்தம் அறை முழுவதும் பரவியிருப்பது போல் பிரம்மை தோன்ற மூச்சை ஆழமாக இழுத்து விட்டான். தான் பேசியதற்கு அவள் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடிக்கக் கூடும் என்றுதான் அவளறியாமலையே அதிரடியாக...
    வல்லவன் 21 கண்ணை மூடி படுத்திருந்த துருவினிக்கு ஏதோதோ எண்ணங்கள் வர, கீழே வந்தாள். ஆத்விக் அவனறையில் இருந்தான். அதியாவும் பசங்களும் படம் வரைவதில் மும்பரமாகி இருந்தனர். ஆரியன் சோபாவில் கண்ணை மூடி படுத்திருந்தான். “துரும்மா, இங்க வா” உத்தமசீலன் அழைத்தார். சமையலறையிலிருந்து குரல் வந்தது. “உள்ளே அப்பாவா?” சென்று பார்த்தாள். அவர் குரல் கேட்டு எல்லார் கவனமும் அவர்...
    வல்லவன் 20 காலை எழுந்த ஆத்விக் அவனருகே உறங்கிக் கொண்டிருந்த உத்தமசீலனை பார்த்து விட்டு அவ்வறையை பார்த்து தலையை பிடித்தான். “மாப்பிள்ள, தலை ரொம்ப வலிக்குதா?” உத்தமசீலன் எழுந்து அமர்ந்தார். நீங்க தூங்கலையா அங்கிள்? நீங்க எழவும் எனக்கும் முழிப்பு தட்டிருச்சு. அதான் எழுந்துட்டேன். “அங்கிள், நான் தயாராகி வாரேன்” அவன் குளியலறைக்கு செல்லவும் உத்தமசீலன் துருவினி அறைக்கு சென்று தயாராகி...
    error: Content is protected !!