Iragaai Parakkuthu Maname
அத்தியாயம் 17
மீண்டும் மீண்டும் தவறுகள்
செய்தாலும் மன்னிக்கப்பட்டும்
திருத்தப்பட்டுக் கொண்டும்
இருப்பது காதல் மட்டுமே!!!
மாப்பிள்ளை வீட்டு பக்கம் தண்டாயுதபாணி மற்றும் சத்யாவதிக்கு அழைப்பு இல்லாமல் சென்றாலும் பெண் வீட்டுப் பக்கம் சவுந்தர்யா அவர்களை அழைக்க தான் செய்தார். விஷ்ணுவிற்கு விருப்பம் இல்லை தான். ஆனாலும் மனைவிக்காக அமைதியாக உடன் நின்றார். அழைக்க வில்லை என்றால் சவுந்தர்யாவிற்கு சந்தேகம் வரும்...
“எனக்கும் அதி மாமாவுக்கும் கல்யாணம் வச்சிருக்காங்க மேடம். நான் கல்யாணத்துக்கு அப்புறம் வரட்டுமா மேடம்?”
“இன்னும் என்ன டி மேடம்? ஒழுங்கா அத்தைன்னு கூப்பிடு”
“அது உங்க மருமக கூப்பிடுவா. நான் அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன். வேணும்னா அம்மான்னு கூப்பிடுறேன் மா. ஏன் உங்களுக்கு மருமகளா மட்டும் தான் இருக்கணுமா? மகளா இருக்கக் கூடாதா?”, என்று...
அத்தியாயம் 16
தென்றல் வந்து தீண்டிச்
செல்லும் நொடிகளில்
தானாக வருகிறது உன் நினைவுகள்!!!
தாய் தந்தை சென்றதும் தனது அறைக்கு வந்த யாழி உடனே அதிபனை தான் அழைத்தாள். “டேய் மாமா”
“சொல்லு பாப்பு”
“நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன் டா. ரொம்ப ரொம்ப”
“பாரு டா, என்னை பாக்காம அழுது வடிவன்னு தான் நான் நினைச்சேன்”
“ஹா ஹா அந்த ஃபீலிங்க் இருக்குது...
அவள் மன உணர்வுகள் புரிந்த இனியன் “டி நிலைமை இப்ப சரி இல்லை. மாமா எங்க அப்பாக்கு நல்லா உரைக்கிற மாதிரி புத்தி புகட்டிக்கிட்டு இருக்கார். நல்ல புளோல போய்க்கிட்டு இருக்கு. வேடிக்கை மட்டும் பாரு செல்லம்”, என்றான்.
“இருந்தாலும் என் அப்பா செம ஷார்ப் டா. என் மனசுல இருந்த பாரமே இறங்கிருச்சு. அன்னைக்கு...
அனைவரும் எதையோ மறைப்பது போலவே அவருக்கு பட்டது. நேராக இனியன் அறைக்கு சென்று கதவை தாழிட்டவர் அவனை பேச வைக்க அவர் பேச்சில் இருந்து தப்பிக்க முடியாமல் தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லி விட்டான்.
அதைக் கேட்டு மனுஷன் உண்மையிலே நடுங்கி தான் போனார். கூடவே இந்த விஷயம் தெரிந்தால் தன்னுடைய மனைவிக்கு என்ன...
அத்தியாயம் 15
இரு முனை கொண்ட காதல் நூல்
அறுந்து போகாத வரை
அழகு தான்!!!
கோவிலுக்குச் சென்ற சவுந்தர்யா மற்றும் அவரின் கணவர் விஷ்ணு இருவரும் சேகருக்காக வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கே இருந்த யாழி மற்றும் அதிபனைக் கண்டு இருவரும் முகம் மலர்ந்தனர்.
அங்கே ஒரு பாசப் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்க சேகர் இருக்கும் அறைக்குள் அனைவரும்...
அனைவருக்கும் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. சத்யாவதியால் மகனை நிமிர்ந்து கூட பார்க்க முடிய வில்லை. இப்படி ஒரு விஷயம் அதுவும் தங்கள் வீட்டில் நடந்திருக்கிறது என்று அவர்களால் நம்பவே முடிய வில்லை. இனியன் திக் பிரம்மை பிடித்தது போல நின்றான்.
“ஒவ்வொரு நாளும் ஊசியா அந்த மனுசனை குத்தி இருந்திருக்கா, அதை தாங்க முடியாம தான்...
இனியன் தான் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். சிகிச்சைக்கு பிறகு கண் விழித்தாலும் யாரிடமும் பேச வில்லை. அனைவரிடமும் பேசினால் சத்யாவதியிடமும் பேச வேண்டி வரும். அவரைக் கவனித்துக் கொள்ள அவள் தான் வருவாள் என்பதால் அனைவரையுமே தவிர்த்து விட்டார்.
இதை எல்லாம் எண்ணிக் கலங்கிய படியே யாழியைப் பார்த்தார் சேகர். அப்போது உள்ளே வந்தார்...
அத்தியாயம் 14
பறந்து பறந்து செல்கிறது
பட்டாம்பூச்சி, தேனின்
மீதான காதலால்!!!
ஜானும் யாழியும் பேசிக் கொண்டிருந்த அதே நேரம் வெளியே நின்றிருந்த அதிபன் தன்னுடைய தந்தைக்கு தான் அழைத்தான்.
“சொல்லு அதிபா, இனியன் சொன்னானா?”, என்று கேட்டார் செழியன்.
“ஆமா பா, நைட் கிளம்புறோம்”
“சரி பத்திரமா வாங்க. நான் போய் பாத்தேன். எதுவும் பேசலை டா. சிஸ்டர் மட்டும் தான் அவரை...
“ஆச்சிக்கு அவ்ளோ சீக்கிரம் எது மேலயும் விருப்பம் வந்திடாது, வந்தா மாறவே மாறாதுன்னு உனக்கு தெரியாதா? அவ அப்படியே இருக்கட்டும். அவனே இறங்கி வருவான்” என சாதாரணமாக சொல்லி விட்டார் தாத்தா. பாட்டிக்குதான் கவலை அகலவே இல்லை.
சுஹானா தன் சொல்படி பார்த்தியிடம் காதல் பற்றி ஏதும் பேசுவதில்லை, ஆனால் அவளின் எண்ணம் மாறவே இல்லை...
அவள் முகச்சிவப்பு இன்னும் அவனை போதை ஏற்ற “அப்படியே உன்னை இறுக்கி அனைச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு டி”, என்று அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் அவனை இறுக அணைத்தவள் அவன் இதழ்களை தன் இதழ்களால் இறுக்கமாக மூடி இருந்தாள்.
அழுத்தமான முத்தம் எல்லாம் இல்லை. லேசான இதழ் ஒற்றல் தான். ஆனால்...
அவனது மாற்றம் அவனுக்கே வியப்பாக தான் இருந்தது, இது வரை எழாத ஹார்மோன் மாற்றம் இப்போது எழுகிறது என்றால் பிரகாஷ் சொன்னது போல நானும் அவளை விரும்புகிறேனோ என்று எண்ணிக் கொண்டிருந்தவன் பிரட்டை கருக்கி இருந்தான்.
“போ மாமா, வேஸ்ட்டா போச்சு”
“சாரி டி கவனிக்கலை”, என்று அவன் மன்னிப்பு வேண்ட “சரி விடு மாமா”, என்று...
அத்தியாயம் 13
காதலின் மின்னல்கள் உணர்வு
பூர்வமானது, அதை உணர
மட்டுமே முடியும்!!!
அடுத்த நாளும் அதிபனுக்கு லேசாக காய்ச்சல் இருக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று டிரிப்ஸ் போட்டு விட்டாள். அவன் வேண்டாம் என்று சொல்லியும் அவள் கேட்க வில்லை.
அன்று மாலை காச்சல் நன்றாக இறங்கி இருக்க இருவரும் ஜானிடம் சொல்லி விட்டு வெளியே வந்தார்கள்.
“ஏதாவது சாப்பிட்டு போகலாமா மாமா?”,...
“நான் டுவல்த் படிக்கும் போது நீ காலேஜ் படிச்சிட்டு இருந்த. அப்ப தான் நளினி உன்னை லவ் பண்ணுறதா சொன்ன. எனக்கு அப்படி ஒரு அழுகை வந்துச்சு. உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தோணுச்சு. அப்ப வர்ஷா தான் இதை லவ்ன்னு சொன்னா”
“ஏது அப்பவே வா?”
“ஆமா என்னை வெறுப்பேத்த தான் அவ உன்...
அத்தியாயம் 12
மீசைக்குள் ஒளிந்து கொள்கின்றன
பல ஆண்களின் உண்மைக் காதல் கூட!!!
அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் இயல்பாக கடந்தன. வெண்ணிலா மற்றும் வருண் திருமணமும் நல்ல முறையில் முடிந்திருந்தது. செழியன் குடும்பத்திற்கு சேகர் சென்று பத்திரிக்கை வைத்தார் தான். ஆனால் “நாங்க வரலை மாப்பிள்ளை எங்களை தப்பா நினைக்காதீங்க”, என்று சொல்லி விட்டார் செழியன். அவர்கள்...
அப்போது ஏதோ புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்க சந்தேகமே இல்லாமல் முகப்பு புத்தகத்தில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் ஜான்.
வேறு வழி இல்லாமல் அந்த எண்ணை ‘கிறுக்கு ஜே’ என்று பதிந்து வைத்தான். அதன் பின்னும் கடுப்பை கிளப்பும் விதமாக அவனது ஸ்டேட்டசில் நேற்று அவர்கள் வெளியே சென்ற போது எடுத்த புகைப்படங்களை வைத்திருந்தான்....
“ஆமா இப்ப அதுக்கு என்ன?”, என்று கேட்ட அதிபனின் குரலில் அவ்வளவு எரிச்சல்.
“உன்னைப் பாத்தா எனக்கு ஒரு பழமொழி தான் டா நினைவுக்கு வருது”
“சொல்லித் தொலை பிரகாஷ்”
“காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போனானான்”, என்று அவன் சொல்ல அதிபன் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தான். அவன் மனநிலையை ஒரே பழமொழியில் உணர்த்தியது போல...
“கண்டிப்பா பாஸ்”
“ஒரு வேளை எங்க வீட்ல ஒத்துக்கலைனா என்ன பண்ணுவ?”
“என்னை மறுக்க வாய்ப்பிருக்கா பாஸ்? நானும் ழி மாதிரியே டாக்டர். வருங்காலத்துல நானும் அவளும் சேந்து ஹாஸ்பிட்டலை ரன் பண்ணுவோம்”, என்றான் பெருமையாக.
“சரி தான், ஆனா எங்க வீட்ல ஒத்துக்கலன்னு வச்சிக்கோ அப்ப என்ன பண்ணுவ? ஏன்னா முக்கியமான காரணம் இருக்கு ரீலிஜியன்”
“ஆமால்ல? ஆனா...
அத்தியாயம் 11
சொல்லித் திருத்துவது காதல் இல்லை
பட்டு திருந்துவதே காதலின் அகராதி!!!
அதிபன் குளித்து முடித்து வெளியே வந்ததும் “ஹாய் பாஸ்”, என்ற படியே உள்ளே வந்த ஜான் அவனை தூக்கிக் கொள்ள “டேய், யாரு டா நீ. என்னை இறக்கி விடு டா”, என்று அலறினான் அதிபன்.
சத்தம் கேட்டு அங்கே வந்த யாழி “ஹாய் ஜா...
அடுத்து மூவரும் ரேவதியைக் காணச் சென்றார்கள். நடந்த விஷயத்தைக் கேட்டு அவருக்கும் அதிர்ச்சி தான். “டேய் குட்டா அந்த பொண்ணு உன் மேல பாசமா இருக்குறது எல்லாம் சரி தான். உனக்காக உயிரையே கொடுக்க முன் வந்திருக்குறது எல்லாம் பெரிய விஷயம் தான். ஆனா இப்படி சின்ன பிள்ளை தனமா நடந்துக்குறா. அவ தான்...