Saturday, May 10, 2025

    புல்லாங்குழல் தள்ளாடுதே

    புல்லாங்குழல் தள்ளாடுதே 16   ஷ்யாமை சந்தித்து ஒருவாரம் கடந்திருந்த நிலையில் அன்று காலை பரபரப்பாக தன் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீகன்யா. ஷ்யாமும் அன்று இரவு அழைத்து பேசியதோடு சரி அதன்பின் அவளை அவன் அழைக்கவே இல்லை. தினமும் அழைப்பானோ என்று முதலில் யோசித்திருந்தவள் அவன் அழைக்காமல் போகவும் அந்த விஷயத்தை அதோடு விட்டிருந்தாள்.   மேலும் வேதவதி...
    அத்தியாயம் 09                          காரில் தன் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு மந்தகாசமான புன்னகை. 'என்ன பண்ணிட்டு வந்திருக்கடா?' என்று அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்க, "என்ன இப்போ என் கன்யா தானே" என்று சமாதானம் கூறிக் கொண்டான் அவன்                          கன்யா அவனை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம்தான் அவனுக்கு.அதுவும் காதல்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 30 அன்று காலை கன்யா எப்போதும் போலவே பள்ளிக்கு தயாராகி கீழே இறங்க, வேதா அவளை கோபத்துடன் பார்த்தார். நிச்சயம் முடிந்து இருப்பதால் சில நாட்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று அவர் நேற்றே கூறி இருந்தார். ஆனால் அடுத்த நாள் காலையே அவள் பள்ளிக்கு தயாராகி வந்தால் அவரும் தான் என்ன...
    கன்யாவை திருப்தியாக பார்த்தவர், அனுவின் கழுவி துடைத்த முகத்தையும் குறித்துக் கொண்டார். ஆனால் வெளியில் காத்திருப்பவர்கள் நினைவு வர, எதுவும் பேசிக் கொள்ளாமல் கன்யாவை அழைத்துக் கொண்டு அவர் வெளியே வர, வசுவும்,அனுவும் அவர் பின்னால் வந்தனர். பத்மினி கன்யாவை ஷ்யாமின் அருகில் அமர்த்தி, அவர் கொண்டு வந்திருந்த வைர அட்டிகையை தன் மருமகளுக்கு தன்...
    இரவுவரை அவர்களை தவிக்கவிட்டவன் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் தான் லேசாக விழித்து பார்த்திருந்தான். மருத்துவர்களும் அவன் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்று கூறிவிட்டிருக்க, உண்மையில் அப்போதுதான் உயிர் வந்தது அவனின் சொந்தங்களுக்கு. மாலையிலிருந்து அவனுக்காக அவர்கள் பட்ட வேதனைக்கு பரிசாக உயிருடன் மீண்டு வந்திருந்தான் அவனும். ஆனால் உடலின் காயங்கள் பெரிதும் வலி கொடுக்க, அவனின்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 15 தேவகி கன்யாவை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை, அவர் தன் வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, அவரை சுற்றி அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். நேற்று பேரனும்,பாட்டியும் கன்யாவை சந்தித்துவிட்டு வந்தது பாலகிருஷ்ணனுக்கு தெரிந்து விட்டிருக்க அதன் பொருட்டே இந்த வட்டமேசை மாநாடு. பாலகிருஷ்ணன் வலைவிரித்த குற்றவாளிகளில் ஒருவன் காலையே...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 18                             ஆதி நாராயணன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு உடல் நலம் பெற்றிருந்தார் அவர். அப்போதும் கூட அவர் உடல்நிலை குறித்து பல அறிவுறுத்தல்களை மருத்துவர்கள் வழங்கி இருக்க, அதன் பொருட்டே இரண்டு நாட்களாக வீட்டிலேயே இருக்கிறார்.                           வேதா உடனிருந்து...
    அத்தியாயம்  13                      அன்று இரவு கன்யாவிடம் யோசிக்க சொல்லி போனை வைத்தவன் தான் ஷ்யாம். அதன் பின் அவளை எந்த வகையிலும் நெருங்கவே இல்லை அவன். ஐந்து நாட்கள் ஓடியிருக்க தனது அன்றாட வேளைகளில் பிசியாகி விட்டான் அவன்.                 அரசாங்க ஒப்பந்தம் ஒன்றில் அவன் பிசியாகி இருக்க, எதைப்பற்றியும் யோசிக்க முடியாமல் அவனை...
    அத்தியாயம் 06 தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்துக்க கொண்டு விட்டதை வெறித்திருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அன்று அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்ரீகன்யாவை பார்த்ததுதான், அதன்பிறகு இவன் கண்களில் படவே இல்லை அவள். இவனும் அவளை காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு வாரம் கடந்திருந்தது. ஆனால் அவன் மனம் மட்டும் அவனை கேளாமல் சில கிலோமீட்டர்கள்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 12                          தன் அறையில் உள்ள பால்கனியில் அத்தனை கோபமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். காலையிலிருந்து இன்னும் தண்ணீர் கூட குடித்திருக்கவில்லை அவன். காலையிலும் ஒருமுறை அன்னைக்கு அழைத்திருக்க, எடுத்தவர் இவன் ஏதும் பேசும் முன்பாகவே மதியம் வருவதாக கூறி போனை வைத்திருந்தார்.                   அத்தனை கோபம் வந்தது அவரின் செயலில், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்...
    அத்தியாயம் 08 ஷியாம் கிருஷ்ணா தன் அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயாவின் வாசலில் இருந்தான். வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே செல்ல அத்தனை தயக்கமாக இருந்தது. எப்படி அவளை எதிர்கொள்வது? என்ன கேட்பாள்? என்று யோசனையாக இருக்க காரிலேயே அமர்ந்துவிட்டான். சில நிமிடங்களுக்கு பிறகு என்னவானாலும் பார்த்துக் கொள்வோம் என்று...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 14                       சென்னையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கம். அன்று அத்தனை அலங்காரமாக காட்சியளிக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. அந்த இடத்தை சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டிருக்க, அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர் அவர்கள்.                     சென்னையில் நடைபெறும் மார்கழி உத்சவத்தின் ஒரு மாலை பொழுது அது. அன்றைய தினம் ஸ்ரீகன்யாவின் கச்சேரி ஏற்பாடாகி இருக்க, விழா...
    அத்தியாயம் 10                          தன் அறையில் கட்டிலுக்கு அருகில் இருந்த தன் தாயின் சிறிய படத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீகன்யா. இருகால்களையும் மடித்து கைகளை கட்டிக்கொண்டு தன் கால்களில் முகத்தை புதிது இருந்தவள் அவள் அன்னையின் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அன்று மதியம் நடந்தவை அவள் நினைவில் வலம்வர நான் என்ன செய்யறதுமா?...
    அத்தியாயம் 03                      தன் அலுவலக அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ ஒரு பைலில் மூழ்கி இருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அவன் நண்பன் மற்றும் அவனின் மேனேஜர் ராகவ். ஷ்யாமுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன் மற்றும் அவனின் உயிர்த்தோழன் தான் ராகவ்.                     அவன் குடும்பம் பொருளாதாரத்தில்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 28 ஸ்ரீதர் அனுவிடம் சண்டையிட்டு முடித்து ஒரு வாரம் கடந்திருக்க, இன்று வரை அவனை வந்து பார்த்திருக்க வில்லை அவள். அன்று அத்தனை கோபமாக கத்திவிட்டு வைத்தவனும் அவளுக்கு மீண்டும் அழைக்கவே இல்லை. அவள் வராததில் அத்தனை ஆத்திரம் வந்தாலும், நீ செய்த வேலைக்கு அவள் உன் போனை எடுத்ததே பெரிய விஷயம்" என்று...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 24 அந்த நட்சத்திர விடுதியின் மீட்டிங் ஏரியாவில், கண்கள் சிவக்க அமர்ந்திருந்தார் ராஜவேல். அவரின் மகனுக்காக அவர் கன்யாவை பெண் கேட்டிருக்க, அதை பெண்ணுக்கு விருப்பமில்லை என்று கூறி ஏற்கனவே மறுத்திருந்தார் ஆதி நாராயணன். அதையும் ராஜன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டிருந்தார். என்ன பொண்டாட்டிக்கு பொறந்த பொண்ணா?? இவளுக்கு என் பையன...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 21                                               கன்யா தன் அறையில் உறங்கி கொண்டிருந்தவள், உறக்கம் களைந்து எழும்போதே நன்றாக இருட்ட தொடங்கி இருந்தது வெளியே. எழுந்து கொண்டவள் முகம் திருத்தி, உடையை சரி செய்துகொண்டு கீழே இறங்க அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தார் வேதவதி.                                        அவரை கண்டதும் முதலில் அவளுக்கு ஷியாம் தான் நினைவுக்கு வந்தான்....
    புல்லாங்குழல் தள்ளாடுதே 23 ஸ்ரீதர் தந்தையின் வார்த்தைகளில் உடைந்து அவர் தோள்களை கட்டிக்கொண்டு கண்ணீர்விட தந்தைக்கு தாங்கி கொள்ள முடியவில்லை. அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி அவன் தோளில் தட்டிக் கொடுத்து, தன் கட்டிலில் அமர வைத்தவர் தானும் அவன் அருகில் அமர்ந்துகொள்ள ஸ்ரீதருக்கு தான் அவர் முகத்தை பார்க்கவே முடியவில்லை. அவன் பேசிய வார்த்தைகளின் அழுத்தம்...
    புல்லாங்குழல் தள்ளாடுதே 26 அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வெளியே கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்றிருந்தாள் கன்யா. அவளின் உடை முழுவதும் ஸ்ரீதரின் ரத்தம் ஆங்காங்கே தெறித்து இருக்க, எதுவுமே பாதிக்கவில்லை அவளை. அவளின் நினைவு முழுவதும் உள்ளே படுத்திருப்பவனையே சுற்றி வந்தது. எத்தனை மகிழ்ச்சியாக ஆரம்பித்த காலை பொழுது இப்படியா முடிய...
    "பொண்டாட்டியா... யாரு... அதெல்லாம் சொல்லாதீங்க... ரொம்ப கேவலமா பீல் பண்ண வச்சிட்டீங்க என்னை... பொண்டாட்டியாம்.. பொண்டாட்டி.. என்னை ஒரு மனுஷியா கூட நினைச்சதில்ல நீங்க... அதுதான் உண்மை..." "நான் வேணும்ன்னாலும் உங்க விருப்பம்தான்.. பின்னாடியே சுத்தி, என்னென்னவோ செஞ்சு ஒத்துக்க வைப்பிங்க.. அப்புறம் நான் வேண்டாம்ன்னாலும் அதையும் நீங்களே முடிவு செய்விங்க... அப்போ நான் எதுக்கு......
    error: Content is protected !!