Tuesday, April 30, 2024

    Viral Theendidu Uyirae

    தீண்டல் – 34(1)               திருமண வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து அவ்வளவாய் உறக்கமில்லாமல் இருந்தவருக்கு அலைச்சலில் அசதியாய் உறங்க சூர்யா வந்ததும் தெரியவில்லை. தன்னை அணைத்ததும் தெரியவில்லை. ஏசி அறையில் குளிருக்கு இதமாய் அவர் உறங்க இவனோ கையை வைத்துக்கொண்டு இருக்கமுடியாமல் உறக்கமும் வராமல் அவரின் முகத்தை விரல்களால் அளந்துகொண்டிருந்தான். அறையில் கசிந்துகொண்டிருந்த மெல்லிய விளக்கொளியில், “செல்லமே உன்னோட அழகே...
    ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தனியே இருக்க இருக்க இதன் நினைவுகள் அதிகமாக கனம் தாளமாட்டாது இறங்கி கீழே வந்து தோட்டத்தில் நின்றுகொண்டாள். தூறல் ஓய்ந்து மெல்லிய காற்று வீசிக்கொண்டிருக்க அந்த குளுமையை ரசித்து அனுபவித்தபடி நின்றிருக்க சத்தமில்லாமல் அவளின் பின்னால் வந்து நின்றான் வசீகரன். கேட்டிற்கு வெளியேயே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வர முல்லைக்கொடி...
    தீண்டல் – 19                  ஒரு வருடம் ஆகிவிட்டது சந்நிதி சென்னையிலிருந்து வந்து. அதன் பின்னர் அங்கு செல்வதையே தவிர்த்துவிட்டாள். ராதா எத்தனை சொல்லியும், அழைத்தும் ஏதாவது காரணங்களை சொல்லி மறுத்துவிடுவாள்.   அங்கு ரேவதியின் குழந்தை பிறப்பு முடிந்து மூன்று மாதங்கள் வரை மட்டுமே இருந்தாள். ரேவதியை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற பின் கையோடு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டாள் சந்நிதி...
    தீண்டல் – 12 (2) “ஹ்ம்ம் அம்மாவை கண்டுபிடிச்சாச்சு...” என தலையாட்ட, “இத்தனை மெனக்கெடனுமான்னு அப்பா கேட்கார் வசீ...” தன் வாட்டதிற்கான காரணத்தை சொல்ல, “அப்பாவும் வந்தாரா?...” “ஹ்ம்ம், உன்கிட்ட நம்ம ப்ரெஸ் பத்தி பேசனும்னு வந்தார். நீ போன்ல புகழ் கூட பேசிட்டு இருக்கறதை பார்த்து கேட்டுட்டு என்கிட்டே இதை சொல்லிட்டு போய்ட்டார்...” “என்கிட்டயும் தான் இதை கேட்டார். நான்...
    தீண்டல் – 30 (1)               பார்கவி அம்பிகாவிடம் பேசிவிட்டு அழுதுகொண்டிருக்க புகழ் தான் அவரை சமாதானம் செய்து தண்ணீர் கொடுத்து அமரவைத்தான். “என்ன சித்தி இதெல்லாம்?...” “என்னை என்ன செய்ய சொல்லற புகழ்? என் பொண்ணு இங்க எப்படி இருக்கா தெரியுமா? அவருக்கிட்ட கெஞ்சி கூட பார்த்துட்டேன். கேட்கவே இல்லை...” “நிதியை கூட்டிட்டு போகலாம்ன்னா மாப்பிள்ளை வந்து கூப்பிடாம...
    தீண்டல் – 16               “வாட்?...” சந்நிதி அவன் சொல்ல வருவது என்னவென புரியாமல் பார்க்க, “இதுவரை உனக்கும் எனக்குமா இருந்த இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னையோட முடிஞ்சதுன்னு சொல்றேன்...” என்ற வசீகரன் சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவன் அவளின் கையை பற்றி கூட்டிக்கொண்டு தனதறைக்குள் சென்றான். “கையை விடுங்க, விட போறீங்களா இல்லையா? என் பர்மிஷன் இல்லாம என்னை...
    தீண்டல் – 3(1)                  அம்பிகா போட்டோ எடுப்பது என்னவோ மணமக்களை எடுப்பதை போலதான் இருந்தது. ஆனால் அவருக்கு தெரியுமல்லவா ஏன் எதற்கென்று. “பெரியம்மா எப்படியிருக்கீங்க?...” என்ற குரலில் மொபைலை உள்ளே வைத்துக்கொண்டிருந்தவர் திரும்பி பார்க்க அங்கே அபிராமி தன் கணவனுடன் நின்றாள். “நீ அபியில்ல...” “நான் அபிராமி தான். வேற யாரும் இல்லை...” என அவளும் சிரித்தபடி சொல்ல, “ஹேய்...
    error: Content is protected !!