Puthu Puthu Arthangal
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 27
அத்தியாயம்
விஸ்வா மெதுவாக மருத்துவர் சொன்ன விவரங்களைச் சொன்னான் . “பின் எனக்குப் பயமாக இருக்கிறது அப்பா . மனநல மருத்துவர் என்றெல்லாம் பேசுகிறார்…” என்று கண்கலங்க ,
“முதலில் தைரியமாக இரு , மனநல மருத்துவரைப் பார்ப்பது ஒன்றும் பெரிய குற்றமோ , தப்போ இல்லை . உடலுக்கு வருவது...
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 26
அத்தியாயம் 75
விஸ்வா அனைத்தையும் விவரமாகச் சொல்ல , ரகு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக பொறுமையாக உள்வாங்கிக் கொண்டான் .
“அடுத்து என்ன செய்யனும் என்று புரியாமல் நிற்கிறேன் ரகு? சந்தியாவைப் பார்க்கும் பொழுது , நான் அவளுக்குச் சரியான கணவனாக நடக்கவில்லையோ? என்ற குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது..”...
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் _ 25
அத்தியாயம் 72
இரவு வந்த விக்ரம் சந்தியாவின் முகத்தை பார்த்தே , ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டான் . அம்மாவிடம் கேட்டால் பெரிய பிரச்சனையாகும் என்பதை உணர்ந்து , அமைதியாக உண்டு விட்டு, உள்ளே சென்றான் .
சந்தியா உள்ளுக்குள் வெதும்பிக் கொண்டிருந்தாள் . இதுவரை வீட்டு மனிதர்கள்...
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் -24
அத்தியாயம் 68
பெற்றவர்களே புரிந்து கொள்ள வில்லை என்பது சந்தியாவை விரக்தியின் உச்சத்தில் நிறுத்தியிருந்தது . பேசி , போராடி என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் வலுத்தது . கண்ணீர் வழிய அப்படியே படுத்துக் கிடந்தாள் .
அறைக்குள் வந்த விஸ்வா அவளைப் பார்த்து அதிர்ந்தான் . அழுதழுது முகமெல்லாம் வீங்கியிருந்தது...
புதுப்புது அர்த்தங்கள்….. நாள். - 23
அத்தியாயம் 65
மறுநாள் தகவல் சந்தியாவின் பெற்றோருக்குச் சொல்லப்பட , அவர்கள் புறப்பட்டனர் . விந்தியாவிற்குப் தேர்வு என்பதால் இவர்களுடன் சந்தியாவின் அத்தை இணைந்து கொண்டார் .
அத்தை துருவித் துருவிக் கேட்க , “எல்லாம் மாமியார் மருமகள் பிரச்சனைதான்…” என்று முடித்துக் கொண்டார் அம்பிகா .
“இதை ஏன் நீ போன ...
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் - 22
அத்தியாயம் 62
ரகு வந்து அழைத்ததாலும் , தொழில் ரீதியான சந்திப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதாலும் , கூட்டத்தில் சந்தித்து விட்டால் பின்னால் சந்திக்க நேரிட்டால் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து விஸ்வா வரவேற்பிற்குச் செல்லலாம் என்று முடிவு செய்தான் .
மேலும் ரகு வரவேற்பிற்குச் செல்லவில்லை என்றால் சந்தியாவிற்குப்...
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 21
அத்தியாயம் 60
ரஞ்சனி……
தன் பெற்றோர்கள் வர , மதியமாகிவிடும் என்பதாலும் ஏற்கனவே விடுமுறை எடுத்தாலும் ரஞ்சனி வேலைக்குக் கிளம்பினாள் . ஆனால் மனதில் சின்ன பரிதவிப்புடனே இருந்தாள் .
அவள் பதட்டத்தைக் கண்ட ரகு , யாருக்கும் தெரியாமல் கண்களால் ஆறுதல் சொன்னான் .
ஆனாலும் ரஞ்சனி தெளிவில்லாமலே இருந்தாள் .
இனி, சைகையோ...
புதுப்புது அர்த்தங்கள்… நாள் - 20
அத்தியாயம் -57
வீட்டிற்கு வந்த ரஞ்சனி வானில் பறப்பதைப் போல் உணர்ந்தாள் . வரையறுக்க முடியாத , வார்த்தையில் வடிக்க முடியாத மகிழ்ச்சியில் திளைத்தாள் .
பின் தன்னை நிதானித்து கொண்டு அப்பாவை அழைத்தாள் .
“சொல் ரஞ்சும்மா” என்றார் ராமநாதன் .
“அப்பா…..” என்று தயக்கத்துடன் அழைக்க , ராமதாதனுக்குப் பதட்டமாக ,
“டேய்...
புதுப்புது அர்த்தங்கள்… நாள் -19
அத்தியாயம் 55
அப்படியே அந்த வழியில் வந்த நல்ல ஹோட்டலில் காரை நிறுத்தினாள் . கூட்டம் குறைவாகவே இருக்க , தனிமையான இடத்தில் போய் அமர்ந்தனர் .
மெனு கார்ட் வர , இனிப்புடன் ஆரம்பிப்போம் என சுடசுட வெளியே நெய்யில் குளித்துக் கொண்டிருந்த ஜிலேபியை ஆர்டர் செய்தான் .
“பின் மழைக்குச் சூப்பராக...
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் – 18
அத்தியாயம் 51
சந்தியா……
தூத்துக்குடியிலும் சந்தியா பெரிதாக யாருடனும் பேசவில்லை . அமைதியாகவே இருந்தாள் . முதல் வாரங்களில் சாப்பிடவே மிகவும் சிரமப்பட்டாள் .
ரத்த சோகையால் மிகவும் சோர்வாகவே இருந்தாள் . பெரும்பாலும் ஆகாஷை அம்பிகாவும் விந்தியாவும் பார்த்துக் கொண்டார்கள் .
நலம் விசாரிக்க வரும் உறவினர்களோடு கூட அளவாகத் தான் பேசினாள்...
பதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 17
அத்தியாயம் 48
ரஞ்சனி……
ராகவ்விற்குச் சீக்கரமே பெண் அமைய , மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவாகியது . திருமண வேலை வேகம் எடுத்தது .
ரஞ்சனி, ராகவ்வைச் சீண்ட , ராகவ் வெட்கப்பட என்று
பிள்ளைகளின் கேலி கிண்டல்களை, ராமநாதனும் , கோகிலாவும் ரசித்தனர்.. வீட்டிற்குப் பழைய கலை வந்திருந்தது .
ராகவ்வின் மாமனார்...
புதுப்புது அர்த்தங்கள்…. நாள்-16
அத்தியாயம் 46
ரஞ்சனி……
ரஞ்சனி என்னதான் தைரியமான பெண்ணென்றாலும் , மாலை வீட்டுக்கு போய் கால்களை கலட்டும் போது ஏற்படும் வலி , வீட்டில் ஸிடிக்கின் துணையோடு உலா வரும்போது , தூங்கி இழுந்த பின் கழிப்பறைக்குப் போக ஸிடிக்கின் துணையை நாடும் போது துவண்டு தான் போனாள்.
சில நேரங்களில் வெளியே செல்லும்...
புதுப்புது அர்த்தங்கள்….. நாள் - 15
அத்தியாயம் 43
ரகு வந்த பின் , நிறைய புது வாடிக்கையாளர்கள் வர , அலுவலகத்தைப் பெரிதாக்க நினைத்தார்கள் . பக்கத்தில் இருந்து காலி இடத்தில் கட்டிடம் கட்ட தொடங்கினர் . எல்லா வசதிகளுடன் உடைய கட்டிடமாக , விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது .
இந்த புது கட்டிடத்தில் மாற்று திறனாளிகளுக்கும்...
புதுப்புது அர்த்தங்கள்… நாள் - 14
அத்தியாயம் 40
சந்தியா……
மேலும் மூன்று மாதங்கள் போக , சந்தியா மாசமானாள் .
ஏற்கனவே ஒரு வருடமாகிவிட்டதே என்று ராஜி கவலைப்பட்டுக் கொண்டிருக்க , விசயம் அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர் . ராஜியைக் கையில் பிடிக்க முடியவில்லை .
அன்று மாலையே மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர் .
அவர் பரிசோதித்து விட்டு , கொஞ்சம்...
புதுப்புது அர்த்தங்கள்…. நாள்-13
அத்தியாயம் 36
சந்தியா…..
மாலை வரவேற்பிற்குப் போக வேண்டும் என்று விஸ்வா சொல்லியிருக்க , சந்தியாவும் கிளம்பத் தொடங்கினாள் .
விஸ்வாவும் வர , இப்போதைய டிரண்டான , தம்பதியர் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிவது போல் தாங்களும் உடை அணிய ஆசைப்பட்டாள் . அதை விஸ்வாவிடம் கேட்க ,
“நிச்சயமாக அணியலாம் , நீயே...
புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-12 (1)
அத்தியாயம் 33
சந்தியா…..
இங்கே விஸ்வாவிற்குத் திருமணம் , வரவேற்பு , விருந்து என்று எல்லாம் முடிந்தது . சந்தியா விருப்பப்பட்டது போல் தேனிலவுக்கு சுவிஸ் சென்று ஒரு வாரம் தங்கி வந்தனர் . புதுமண தம்பதிகளுக்கான அனைத்துக் கொண்டாட்டங்களுடன், மகிழ்வுடன் முதல் மூன்று மாதங்கள் சென்றன .
இயல்பு வாழ்கைக்குத் திரும்பினர் ....
புதுப்புது அர்த்தங்கள்…. நாள். - 11
அத்தியாயம் 31
ரஞ்சனி….
இங்கே ரஞ்சனி வேலை தேடத் தொடங்கினாள் . இரண்டு, மூன்று தேர்வுக்கு ராகவ்வுடன் சென்னை சென்று வந்தாள் . அப்படி வரும் பொழுது ராமலிங்கம் வீட்டில் தங்கினாள்.
இப்படியாக வேலை தேடும் படலம் நடந்து கொண்டிருக்க , ஒருநாள் ராமலிங்கம் சுவாமிநாதனைச் சந்திக்க , “பேச்சு எப்படியோ விஸ்வா...
புதுப்புது அர்த்தங்கள்…. நாள்-10
அத்தியாயம் 29
ரஞ்சனி வீட்டுக்குச் சென்ற பின் , மருத்துவர் அறிவுறுத்திய அனைத்தையும் தவறாது கடைபிடித்தாள் .
அஞ்சலி வலியால் சோர்வாகும் போது, அவளை ஊக்கப்படுத்தினர் .
ஓடி ஆடி விளையாடிய மகள் , கட்டை உதவியோடு வலம் வருவதைக் கண்டு நொந்தனர் . கண்ணீர் விட்டனர். ஆயினும் அவள் முன் தைரியமாக இருப்பது போல்...
புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-9
அத்தியாயம் 26
மாலை சங்கரன் எழுந்து வரும் பொழுது வீடு அமைதியைத் தத்தெடுத்திருக்க ,
காபியுடன் வந்த சுதாவிடம் , “அம்மா எங்கே?” என்று விசாரித்தார்
“கோவிலுக்கு போயிருக்கிறார்கள் ஐயா .”
“விஸ்வா?”
“அண்ணன் கடைக்குக் கிளம்பிவிட்டார்.”
“ஓ…. !”:என்று மட்டும் சொன்னவர், பின் அவர் மருத்துவமனைக்குச் சென்றார் .
இவர் உள்ளே நுழைந்தவுடனே , அனைவரின் பார்வையும் அவர் பின்னால்...
புதுப்புது அர்த்தங்கள்…. நாள் - 8
அத்தியாயம் -22
அதிகாலை அவள் பெற்றோர்கள், அவளைப் பார்க்க சென்ற போது,, அவளிடம் காலைப் பற்றி பேசாமல் , “சீக்கிரம் சரியாகிவிடும்..” என்று நம்பிக்கையூட்டி விட்டு வந்தார்கள்.
அவளும் அரை மயக்கத்தில் இருக்க , அவளுக்குக் காலைப் பற்றித் தெரிந்திருக்க வில்லை, ‘சரி’ என்று மட்டும் தலையாட்டினாள்
“பத்துமணிக்கு டாக்டரைப் பார்க்கலாம்…”...